உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: முன்னாள் பிரதமர் ரணிலிடம் சி.ஐ.டி. சிறப்பு விசாரணை

0 585

21/4 உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்பில் முன்னாள் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­விடம் விஷேட விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வாக்கு மூலம் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. உயிர்த்த ஞாயிறு தொடர் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களை தடுப்­ப­தற்கு அல்­லது அதன் தாக்­கங்­களை குறைத்­துக்­கொள்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­காமை தொடர்பில் இடம்­பெறும் சி.ஐ.டி. விசா­ர­ணை­க­ளுக்கு அமைய இந்த விசா­ரணை நடாத்­தப்­பட்டு வாக்கு மூலம் பெறப்­பட்­ட­தாக பொலிஸ் ஊடகப் பிரிவின் பணிப்­பாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ஜாலிய சேனா­ரத்ன தெரி­வித்தார். கடந்த சனிக்­கி­ழ­மை­யன்று இவ்­வி­சா­ர­ணைகள் இடம்­பெற்­ற­தா­கவும் அவர் கூறினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலில் 250 இற்கும் அதி­க­மானோர் பலி­யா­கவும் பாரிய சொத்து சேதம் ஏற்­ப­டவும் உதவி ஒத்­தாசை புரியும் வகையில் செயற்­பட்­டுள்­ள­தாக கூறி மேற்­படி விவ­கா­ரத்தில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­த­ரவும் முன்னாள் பாது­காப்பு செயலர் ஹேம­சிறி பெர்­ணான்­டோவும் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் உள்­ளனர். அவர்­க­ளுக்கு எதி­ராக தண்­டனை சட்டக் கோவையின் 250, 296, 298, 326,327,328 , 329 மற்றும் 410 ஆம் அத்­தி­யா­யங்­களின் கீழ் இரு­வரும் தண்­ட­னைக்­கு­ரிய குற்றம் ஒன்­றினை புரிந்­துள்­ள­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

இந் நிலை­யி­லேயே அந்த விடயம் தொடர்பில் மேல­திக விசா­ர­ணைகள் இடம்­பெறும் நிலையில், ஐ.தே.க. கட்சித் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­த­வுக்கு சென்­றுள்ள சி.ஐ.டி.யின் பிர­தான பெண் பொலிஸ் பரி­சோ­தகர் தலை­மை­யி­லான குழு இந்த வாக்­கு­மூ­லத்தை முன்னாள் பிர­த­ம­ரிடம் பதிவு செய்­துள்­ள­தா­கவும் இதன்­போது விசா­ர­ணை­களை மேற்­பார்வை செய்யும் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சரும் அங்கு சென்­ற­தா­கவும் அறிய டம் பதிவு செய்துள்ளதாகவும் இதன்போது விசாரணைகளை மேற்பார்வை செய்யும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரும் அங்கு சென்றதாகவும் அறிய முடிகின்றது.-Vidivelli

  • எம்.எப்.எம்.பஸீர்

Leave A Reply

Your email address will not be published.