சகல ஜீவராசிகளும் சொகுசாக வாழுமாக!

0 647

2012 ஆம் ஆண்டு முதல் சிங்­கள தீவி­ர­வா­தத்தால் முஸ்­லிம்கள் பெரிதும் பாதிக்­கப்­பட்ட போது அதற்கு எதி­ராக முதலில் நானே குர­லெ­ழுப்­பினேன். இந்­நாடு இங்கு வாழும் எல்லா இனத்­தி­ன­ருக்கும் உரி­ய­தாகும். முஸ்லிம், தமிழர், சிங்­க­ளவர் அனை­வரும் சம­மா­கவே ஆளப்­பட வேண்டும். எமக்குள் பிள­வுகள் இருக்­க­லா­காது. நாம் எல்­லோரும் இந்­நாட்டு மக்­களே என்று கூறி­ய­தா­லேயே பொது­ப­ல­சேனா போன்ற அமைப்­புகள் எனக்கு உயிர் அச்­சு­றுத்தல் விடுத்­தன.

நான் குற்­ற­மெ­துவும் செய்­யாத நிலை­யி­லேயே கைது செய்­யப்­பட்டு 11 நாட்கள் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்தேன். இதற்­கான நஷ்­ட­ஈட்டைப் பெறவே நான் சட்­டத்­த­ர­ணி­களின் ஆலோ­ச­னையைக் கோரி­யுள்ளேன். பெளத்த தீவி­ர­வா­தத்­துக்கு எதி­ரான எனது போராட்டம் இனியும் தொடரும். அதற்கு இந்­நாட்டை நேசிக்கும், இனக்­க­ல­வ­ரங்­களை எதிர்க்கும் பெளத்த, இந்து, முஸ்­லிம்கள் ஒத்­து­ழைப்பு வழங்க வேண்­டு­மென வட்­ட­ரக்க விஜித்த தேரர் கூறி­யுள்ளார்.

பேரி­ன­வா­தி­களால் நான் கொல்­லப்­ப­டலாம், என் உடல்­துண்டு துண்­டாக வெட்­டப்­ப­டலாம் எனினும் நான் எனது கொள்­கை­யி­லி­ருந்தும் மாறப்­போ­வ­தில்லை எனவும் அவர் கூறினார். இவர் ஜாதிக பல­சேனா என்னும் அமைப்பின் பொதுச் செய­லா­ள­ராவார். கல­கொட அத்தே ஞான­சார தேரர் பொது­பல சேனாவின் செய­லாளர். இவர் ஜாதிக பல­சே­னாவின் செய­லாளர். இரு­வரும் பிக்­குகள்.

பிக்கு அமைப்­பு­க­ளுக்கே இரு­வரும் செய­லா­ளர்­க­ளாக இருக்­கின்­றார்கள். இவ்­வி­ரு­வ­ரி­னதும் கொள்­கைகள் இவர்­களின் அமைப்­புகள் நேர் எதி­ரா­ன­வை­யாகும். கல­கொட அத்தே ஞான­சார தேரர் மத இன­மே­லா­திக்­கத்தை முதன்மைப் படுத்­து­கையில் வட்­ட­ரக்க விஜித்த தேரர் மனி­த­நே­யத்­தையே முதன்மைப் படுத்­து­கிறார் என்­பது இங்கே குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

பொது­பல சேனா­வாலும் சில பெளத்த அமைப்­பு­க­ளாலும் தனது உயி­ருக்கு அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டுள்­ள­தா­கக்­கூறி வட்­ட­ரக்க விஜித்த தேரர் முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் முன்னாள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும் கடிதம் எழுதி பதில் கிடைக்­கா­ததால் 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி ஜனா­தி­பதி செய­லகம் முன்னால் பதாகை ஏந்தி உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்­த­போது ஞான­சா­ர­தே­ரரும் மாகல்­கந்தே சுதந்த தேரரும் சில பிக்­கு­களும் அங்கு வாக­னத்தில் வந்து பொலி­ஸாரின் மத்­தி­யி­லேயே அச்­சு­றுத்தி விட்டுப் போயி­ருந்­தார்கள்.

பின்னர் வட்­ட­ரக்க விஜித்த தேரர் தமது கட­மை­க­ளுக்கு இடை­யூறு செய்­த­தாகப் பொலிஸார் குற்­றஞ்­சாட்டி அவரைக் கைது செய்து கோட்டை நீதி­மன்­றத்தில் நிறுத்­தி­யதால் 11 நாட்கள் கழித்தே பிணையில் விடு­விக்­கப்­பட்­டி­ருந்தார். இந்த வழக்கு 2020 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 17 ஆம் திகதி விசா­ர­ணைக்கு எடுக்­கப்­பட்டு வழக்கிலிருந்து விடு­விக்­கப்­பட்­டி­ருந்தார். அதன்­பி­றகு தான் எந்த குற்­றமும் செய்­யாமல் அநி­யா­ய­மாக கைது செய்­யப்­பட்டு 11 நாட்­க­ளுக்கு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்­த­தற்­காக நஷ்­ட­ஈடு கோரும் நிலைக்கு வட்­ட­ரக்க விஜித்த தேரர் வந்­தி­ருக்­கிறார். இவர் அதி­உயர் பாது­காப்பு வல­ய­மான ஜனா­தி­பதி மாளி­கைக்கு முன் பதா­கையை ஏந்­திக்­கொண்டு உண்­ணா­வி­ரதம் இருந்­ததும் குற்றம் மாற்று தரப்­பினர் வாக­னத்தில் வந்து இவர்­களை அச்­சு­றுத்­தி­யதும் குற்­ற­மே­யாகும். எனினும் கூட இவரை அச்­சு­றுத்­தியோர் மீது குற்­றச்­சாட்டும் இல்லை, தண்­ட­னையும் இல்லை. இதில் பார­பட்சம் காணப்­ப­டவே செய்­கி­றது.

தனது உயி­ருக்கு அச்­சு­றுத்­த­லென ஒரு பிக்­குவே ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்கும் கூறி­யும்­கூட அது புறக்­க­ணிக்­கப்­பட்­டி­ருக்­கு­மாயின் சாதா­ரண மனி­த­ருக்­கு­ரிய பாது­காப்­புக்­கு­ரிய உத்­த­ர­வாதம் தான் என்ன?

யாப்பில் பெளத்த தர்­மத்­துக்கும் சாச­னத்­துக்கும் முன்­னு­ரிமை இருக்­கையில் ஒரு பிக்­குவே தெருவில் பதாகை ஏந்தி உண்­ணா­வி­ர­தத்தில் ஈடு­படும் நிலை இருக்­கு­மாயின் அத்­த­கைய முன்­னு­ரி­மை­களின் அர்த்தம் தான் என்ன? கல­கொட அத்தே ஞான­சார தேர­ருக்கும் மாகல் கந்தே சுதந்த தேரருக்கும் வித்­தி­யாசம் காட்­டப்­பட்­டி­ருக்­கி­றதே?

திபேத்­திய ஆன்­மிகத் தலைவர் தலாய் லாமா­வுக்குப் பின் காலஞ்­சென்ற மாது­ளு­வாவே சோபித்த தேரரும், தம்­பர அமில தேரரும், வட்­ட­ரக்க விஜித்த தேரரும் புத்­த­பெ­ரு­மானின் சத்­திய சாட்­சி­யா­ளர்­க­ளாவர். அதற்கு மாறான மியன்­மாரின் துஷானா தேர­ரி­னதும் அசின் விராது தேர­ரி­னதும் வழி­வா­று­களே கல­கொட அத்தே ஞான­சார தேரரும் மாகல் கந்தே சுதந்த தேரரும் அது­ர­லியே ரதன தேர­ரு­மா­வார்கள். அண்­மையில் அஸ்­கி­ரிய பெளத்த பீட மகா­நா­யக்க தேரரே முஸ்­லிம்­க­ளோடு கவ­ன­மாக இருங்கள். அவர்­களின் கடை­களில் எதையும் வாங்­கா­தீர்கள் எனக் கூறி­யி­ருக்­கையில் இவர்கள் எம்­மாத்­திரம், அவ­ரது கருத்தை தலாய்­லாமா ஆட்­சே­பித்­தி­ருந்தார்.

இலங்­கையில் வாழ்ந்த பிக்­கு­களில் மாபிட்­டி­கம புத்­த­ர­கித்த தேர­ரையும் கல்­வ­துவ சோம­ராம தேர­ரையும் விடத் தரம் தாழ்ந்­த­வர்கள் எவரும் இல்லை.

காரணம் அவர்­களே 1959 ஆம் ஆண்டு பிர­தமர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்­டா­ர­நா­யக்­கவைக் கொலை செய்­த­வர்கள். இதற்கு மாறாக மாது­ளு­வாவே சோபித தேரரைப் போல் சிரேஷ்­டரும் எவரும் இல்லை. இவரே 2015 ஆம் ஆண்டு சர்­வா­தி­காரம், மனித உரிமை மீறல் ஆகி­ய­வற்றை எதிர்த்து சமூக நீதிக்­காக முன்­நின்று ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யவர். இவர் கால­னித்­துவக் கொடியை எரித்த சுமங்­கலத் தேர­ருக்கு நிக­ரா­னவர். ஆங்­கி­லே­யரின் ஆட்­சிக்­கா­லத்தில் அவர்­களின் கொடியை ஒரு பிக்கு எரிப்­ப­தாயின் அதற்கு எந்த அள­வுக்கு தைரியம் வேண்டும்? அது­போல்தான் தனி­ம­னித நிறை­வேற்று ஜனா­தி­பதி அதி­கா­ரமும் வலிமை பொருந்­திய 18 ஆம் ஷரத்தும் 2015 ஆம் ஆண்டு இருக்­கையில் அவற்­றுக்கு எதி­ராக இவர் முன்­வந்து தலைமை வகித்­த­து­மாகும்.

அன்று சுமங்­கல தேரரின் செய்கை, கரணம் தப்­பினால் மரணம் என்­றி­ருந்­தது போன்றே பின்பு மாது­ளு­வாவே சோபித்த தேரரின் செய்­கையும் அமைந்­தி­ருந்­தது. திபேத்­திய பெளத்­தரின் சுய­நிர்­ண­யத்­துக்­கா­கவும் இறை­மைக்­கா­கவும் சீனா­வையே எதிர்த்து இந்­தி­யாவில் தஞ்சம் புகுந்த தலாய்­லா­மாவை இன்­ற­ளவும் உலகம் புகழ்­கி­றது.

ஒரு­முறை டி.பி.ஜாயாவின் நினை­வு­தின கூட்­டத்தில் மாது­ளு­வாவே சோபித தேரர் பேசு­கையில் 1948 ஆம் ஆண்டு ஆங்­கி­லேயர் இலங்­கைக்கு டொமி­னியன் சுயா­தீனம் வழங்­கவும் தயங்­கி­னார்கள். அதற்கு என்ன காரணம்?

தமிழ் தரப்­பினர் தமக்­கு­ரிய பங்கை உத்­த­ர­வா­தப்­ப­டுத்­தாது வழங்­கக்­கூ­டா­தெனக் கூறி­ய­தே­யாகும். அப்­போது டி.பி.ஜாயா இந்த முக்­கிய இக்­கட்­டான கால­கட்­டத்தில் அத்­த­கைய கோரிக்கை சுயா­தீ­னத்­துக்கு முட்­டுக்­கட்­டை­யா­கி­விடும். எனவே முதலில் சுயா­தீனம் அதன் பிறகே இன ரீதி­யி­லான ஒத்­தொ­ரு­மிப்பு என்றார். அதன் பிறகே சுயா­தீனம் கிடைத்­தது எனவும் மாது­ளு­வாவே சோபித தேரர் குறிப்­பிட்­டி­ருந்தார். அந்த வகையில் முஸ்­லிம்கள் இல்­லா­தி­ருந்தால் இலங்­கைக்கு உரி­ய­நே­ரத்தில் சுதந்­தி­ரமே கிடைத்­தி­ருக்­காது என்றும் விளக்­கி­யி­ருந்தார். இந்த உண்மை மறக்­க­டிக்­கப்­ப­டக்­கூ­டாது. முஸ்­லிம்­க­ளுக்­கு­ரிய அதற்­கான நன்றிக் கடனை செலுத்­து­வது போன்றே தம்­பர அமில தேர­ரி­னதும் வட்­ட­ரக்க விஜித்த தேர­ரி­னதும் முஸ்­லிம்­க­ளோ­டுள்ள நல்­லு­றவு அமைந்­தி­ருக்­கி­றது.

சிங்­களத் தீவி­ர­வாதம் கூடாது. சிங்­கள தீவி­ர­வா­தத்தால் முஸ்­லிம்கள் பாதிக்­கப்­ப­டக்­கூ­டாது. இலங்கை, சிங்­க­ள­வ­ருக்கும் தமி­ழ­ருக்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் சொந்­த­மா­ன­தாகும். இவர்கள் சம­மாக ஆளப்­பட வேண்டும். இவர்­க­ளுக்குள் பேதங்கள் இருக்­கக்­கூ­டாது என்­பதே வட்­ட­ரக்க விஜித்த தேரரின் கொள்­கை­யாகும். இதற்­கா­கவே இவர் ஜாதிக பல­சேனா என்னும் அமைப்பை உரு­வாக்கி செயற்­ப­டுத்தி வரு­கிறார்.

இலங்கை, சிங்­கள பெளத்­த­ருக்கு மட்­டு­மான நாடாகும். சிங்­கள பெளத்­தர்­க­ளுக்கு மட்­டு­மான யாப்பு வேண்டும். சிங்­கள பெளத்­த­ருக்கு மட்­டு­மே­யு­ரிய பாரா­ளு­மன்­றமே வேண்டும் என்­பதே பொது­பல சேனாவின் கல­கொட அத்தே ஞான­சார தேரரின் கொள்­கை­யாகும். எனினும் அரசும் தேசிய ஊட­கங்­களும் பொது­ப­ல­சே­னா­வுக்கு முக்­கி­யத்­துவம் வழங்கி ஜாதிக பல­சே­னாவைக் கண்டு கொள்­வ­தில்லை என்­பதே வட்­ட­ரக்க விஜித்த தேரரின் ஆதங்­க­மாகும். அதற்­கா­கவே அர­சையும் ஊட­கங்­க­ளையும் ஈர்க்க ஜனா­தி­பதி மாளி­கைக்கு முன் உண்­ணா­வி­ரதம் இருந்­தி­ருக்­கிறார் என நினைக்­கிறேன். எனி­னும்­கூட இது தவ­றான முன்­னெ­டுப்­பே­யாகும். அதுபோல் பாது­காப்­புத்­துறை பார்த்­தி­ருக்க ஜனா­தி­பதி மாளி­கைக்கு முன்னால் கல­கொட அத்தே ஞான­சார தேரரும் மாகல்­கந்தே சுதந்த தேரரும் சில பிக்­கு­களும் வந்து இவரை எச்­ச­ரித்­து­விட்டுப் போன­தும்­கூட தவ­றான செயற்­பா­டே­யாகும். மொத்­தத்தில் பதா­கையை ஏந்­திக்­கொண்டு இருக்கும் இட­மாக வட்­ட­ரக்க விஜித்த தேரர் அதை ஆக்­கி­யி­ருக்­கவே கூடாது.

பாது­காப்­புத்­து­றைக்கு முன்னால் வந்து ஞான­சார தேரரும் மாகல் கந்தே சுதந்த தேரரும் சில பிக்­கு­களும் வட்­ட­ரக்க விஜித்த தேரரை எச்­ச­ரிக்க யார் அவர்­க­ளுக்கு தைரியம் கொடுத்­தது? அவர்­களைக் கண்­டிக்­காமல் இவரை மட்டும் கண்­டிக்கக் காரணம் என்ன? விளக்­க­ம­றி­ய­லிலும் கூடப் பார­பட்­சமா?

பொலி­ஸாரின் கட­மை­க­ளுக்கு இடை­யூறு செய்­ததும் குற்றம். சண்­டி­யர்­களைப் போல் குழு­வாக வந்து பாது­காப்புத் துறைக்கு முன்னால் ஏசு­வது அதை­வி­டவும் பெருங்­குற்றம். இன­வா­தி­களால் என் உயிர் பறிக்­கப்­ப­டலாம், எனது உடல் துண்டு துண்­டாக வெட்­டப்­ப­டலாம். எனினும் நான் கொள்­கை­யி­லி­ருந்து மாற மாட்டேன் எனவும் வட்­ட­ரக்க விஜித்த தேரர் குறிப்­பிட்­டி­ருந்­தாரே என்ன அர்த்தம்? அது­பற்றி நீதித்­துறை சிந்­திக்க வேண்டும். ஏனெனில் இது ஒரு பார­தூ­ர­மான விட­ய­மாகும். இவ­ருக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்கள் வழக்குத் தொடர ஏற்­பு­டை­ய­தல்ல என சட்­டமா அதிபர் நீதி­மன்­றுக்குக் கூறி­யதால், இவர் அனைத்து குற்­றச்­சாட்­டுக்­க­ளி­லி­ருந்தும் விடு­விக்­கப்­பட்­டாரே. அப்­ப­டி­யானால் குற்­றங்கள் இல்­லா­மலா இவர் 11 நாட்கள் விளக்­க­ம­றி­யலில் இருந்­தி­ருக்­கிறார்.

குற்­றச்­சாட்­டுக்கள் உண்­மைதான் ஆனால் வழக்குத் தொடர ஏற்­பு­டை­ய­தல்ல என்றே தீர்ப்பு வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது எனலாம். எனினும், வட்­ட­ரக்க விஜித்த தேரர் நான் குற்­ற­மெ­துவும் செய்­யா­ம­லேயே கைதாகி 11 நாட்கள் விளக்­க­ம­றி­யலில் இருந்தேன். இதற்­காக நஷ்­ட­ஈட்டைப் பெற சட்­டத்­த­ர­ணி­களின் ஆலோ­ச­னை­களைக் கோரி­யுள்ளேன். பெளத்த தீவி­ர­வா­தத்­துக்கு எதி­ரான எனது போராட்டம் தொடரும் என்றார்.

ஆக, பிக்­குகள் புத்­த­பெ­ரு­மானின் உண்மைப் போத­னை­களை வலி­யு­றுத்­து­வோ­ரா­கவும் அதை புத்­தரின் பெய­ரா­லேயே எதிர்ப்­போ­ரா­கவும் பிரிந்து நிற்­பது தெரி­கி­றது. முதல் தரப்­பினர் மனங்­க­ளையும் இரண்டாம் தரப்­பினர் இடங்­க­ளை­யுமே குறி­யாகக் கொண்­டி­ருக்­கி­றார்கள். உள்­ளமே உலகம் என முதற் தரப்­பினர் குறிப்­பி­டு­கையில் நிலமே உள்ளம் என மறு­த­ரப்­பினர் எண்­ணிக்­கொண்­டி­ருக்­கி­றார்கள்.

பெளத்த மதம் நிலைக்க வேண்­டு­மெனில் அதைக்­காக்க ஒரு இனமும் ஒரு மொழியும் முழு­மை­யான ஒரு நாடும் அவ­சியம் என்றே அடம்­பி­டிக்­கி­றார்கள். அத­னா­லேயே பெளத்த மத சாசன சிங்­கள மொழி முன்­னு­ரி­மை­களைக் கோரு­கி­றார்கள்.

*பண்­டைய காலத்தில் பல்­வேறு படை­யெ­டுப்­பு­களும் நிகழ்ந்­த­னவே. அப்­போது இவை யாவும் அழிந்­தி­ருந்தால் இப்­போது எஞ்­சி­யி­ருக்­குமா?

*ஏறத்­தாழ 450 ஆண்­டுகள் அந்­நிய விதே­சிய ஆட்­சி­யாளர் விதே­சிய மொழி­களில் இலங்­கையின் கரை­யோ­ரங்­களை ஆட்சி புரிந்­த­னரே இவை­யாவும் அழிந்து போயி­னவா?

* இப்­போது பெளத்த சாசன முன்­னு­ரி­மைகள் யாப்பில் இருக்­கையில் முதன்­மொழி சிங்­க­ள­மாக இருக்­கையில் இவை யாவும் அழி­யுமா?

* முன்பு தலதா மாளிகை தாக்­கப்­ப­டு­கை­யிலும் அரந்­த­லா­வையில் 200 பிக்­குகள் கொல்­லப்­ப­டு­கை­யிலும் ஞான­சார தேரரும் மாகல்­கந்தே சுதந்த தேரரும் எங்­கி­ருந்­தார்கள்?

* பாது­காப்­புத்­து­றையில் 100 வீதம் சிங்­க­ள­வரே இருக்­கையில் இவை­யாவும் அழிந்­து­வி­டுமா?

* ஜனா­தி­பதி பிர­தமர் உட்­பட கெபினட் அமைச்­சர்கள் மற்றும் அமைச்­சர்­களும் எதிர்க்­கட்­சி­யி­னரும் 85 வீத­மாக இருக்­கையில் இவை யாவும் அழிந்­து­வி­டுமா?

எனவே, சிறு­பான்­மை­க­ளுக்கு அடிப்­படை உரி­மை­களை வழங்­கினால் பெளத்த சிங்­கள மக்­களின் சுய­நிர்­ணய உரி­மையும் இறை­மையும் இருப்பும் வர­லாறும் வாழ்­வா­தா­ரங்­களும் கலை கலா­சா­ரமும் பிர­தேச ஒருங்­கி­ணைப்பும் பாதிக்கும் என்­பது சுத்த அபத்­த­மாகும்.

எனவே, “சக­ல­வித ஜீவ­ரா­சி­களும் சொகு­சாக வாழு­மாக!” என்னும் புத்­த­பி­ரானின் அடிப்­படைக் கோட்­பாட்டை நடை­மு­றைப்­ப­டுத்தும் பாக்­கியம் இலங்­கைக்கும் வாய்த்­தி­ருக்­கி­றது என்னும் உண்­மையை பிக்கு பீடங்­களும் ஏனைய பிக்­கு­களும் ஆட்­சி­யா­ளரும் உணர்ந்து கொண்டு ஆவ­ன­செய்ய வேண்டும்.

மனித உரிமை பற்றி ஐ.நா. சபை கூறுவதற்கு ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கு முன்பே புத்தபிரான் சப்பேசத்தாபவன்து (சகல வித ஜீவராசிகளும் சொகுசாக வாழுமாக) எனக்கூறியிருக்கிறார். ஜீவராசி என்றால் மனிதன் மட்டுமல்ல, எல்லா உயிரினங்களும் என்றே கருத்தாகும். மனிதனை இனம், மொழி, குலம், பிரதேசம் என்றெல்லாம் புத்தபிரான் பிரிக்கவில்லை. எனினும் கலகொட அத்தே ஞானசார தேரரும், மாகல்கந்தே சுதந்த தேரரும், அதுரலியே ரதன தேரரும் மனிதன் எனவும் பாராது முஸ்லிம்களையும் தமிழரையும் கழிக்கிறார்கள்.

புத்தபிரான் இலங்கையரா? சிங்கள மொழி பேசியவரா? இலங்கைக்கு மட்டுமே சொந்தமானவரா? ஏனைய மொழிகளைப் பேசுவோருக்கு சொந்தமற்றவரா? பிக்குகள் எனக் கூறிக்கொண்டு அவரது மானுடநேய சிந்தனையைக் கட்டுக்குள் வைத்திருக்க யாருக்கும் உரிமை இல்லை.

புத்தரைத் தனி நாட்டுக்குள்ளும் பெருந்தேசியத்துக்குள்ளும் பேரினவாதத்துக்குள்ளும் செருகியதால் தான் சிறுபான்மைகள் அடிப்படை உரிமைகளை இழந்து இம்சிக்கப்படுகிறார்கள். அசோக சக்கரவர்த்தி இந்தியாவிலிருந்து தனது மகன் மகிந்த மூலமும் மகள் சங்கமித்தை மூலமும் அனுப்பியிருந்த பெளத்த மத தத்துவம் இதுவல்ல. தமிழரை யுத்தத்திலும் சமாதானத்திலும் தோற்கடித்து துட்டகைமுனு மன்னனின் சிலைக்கு மாலை சூடி வணங்கும் நிலைப்பாடே காணப்படுகிறது. பொதுபல சேனாவும் சிங்ஹலேயும் மெளனித்து விட்டன. பொதுத் தேர்தலின் முடிவுக்குப் பின்பே அவை கலைக்கப்படுமாம்.-Vidivelli

  • ஏ.ஜே.எம்.நிழாம்

Leave A Reply

Your email address will not be published.