காதுகளை மூடுவதை சட்டம் தடுக்கிறதா? பரீட்சை மண்டபங்களில் குறிவைக்கப்படும் ஹிஜாப்

0 726

ஒரு சில அடிப்­ப­டை­வா­தி­க­ளினால் கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலை குண்டுத் தாக்­குதல் அனர்த்­தங்­க­ளை­ய­டுத்து இன்று முஸ்லிம் சமூகம் பல்­வேறு சோத­னை­க­ளுக்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. முஸ்லிம் சமூ­கத்தின் ஒரு சில இளை­ஞர்­களால் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்­க­ளினால் முழு முஸ்லிம் சமூ­கத்தினரும் சந்­தேகக் கண் கொண்டு நோக்­கப்­ப­டு­கி­றார்கள்.

இஸ்­லா­மி­யர்­க­ளாக தங்­களை அடை­யா­ளப்­ப­டுத்தி ஆடை அணிந்து செல்லும் முஸ்­லிம்கள் பெரும்­பான்மை இனத்­த­வர்­களால் புறக்­க­ணிக்­கப்­ப­டு­வதை பல்­வேறு பகு­தி­களில் காணக் கூடி­ய­தாக உள்­ளது. தங்­க­ளது கட­மை­களை நிறை­வேற்றிக் கொள்ள அரச அலு­வ­ல­கங்­க­ளுக்குச் செல்லும் முஸ்­லிம்கள் சில இடங்­களில் அரச அதி­கா­ரி­க­ளினால் புறக்­க­ணிக்­கப்­ப­டு­வ­தா­கவும் முறைப்­பா­டுகள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன.

அத்­தோடு கல்விப் பொதுத் தரா­தர சாதா­ரண தரப் பரீட்சை மற்றும் இலங்கை பரீட்சைத் திணைக்­க­ளத்­தினால் நடத்­தப்­படும் ஏனைய பரீட்­சை­க­ளின்­போது பரீட்சை மண்­டப மேற்­பார்­வை­யா­ளர்­க­ளாலும் பரீட்சைத் திணைக்­கள உயர் அதி­கா­ரி­க­ளாலும் பர்தா மற்றும் ஹிஜாப் அணிந்து பரீட்சை எழுதச் செல்லும் முஸ்லிம் பரீட்­சார்த்­தி­கள் இலக்கு வைக்­கப்­ப­டு­கி­றார்கள்.

2019 டிசம்பர் க.பொ.த. (சா/த) பரீட்­சையின் போது சம்­ப­வங்கள்

கடந்த வருடம் டிசம்பர் 2 ஆம் திகதி கல்விப் பொதுத் தரா­தர சாதா­ரண தரப் பரீட்சை ஆரம்­ப­மான முத­லா­வது தினம் கெக்­கி­ராவ – மடாட்­டு­க­மயில் பாட­சாலை சீரு­டை­யுடன் பர்தா அணிந்து பரீட்சை எழுதச் சென்ற மாண­விகள் பரீட்சை நிலைய பொறுப்­ப­தி­கா­ரி­யினால் பர்­தாவைக் களைந்­து­விட்டு பரீட்சை எழு­து­வ­தற்கு சமு­க­ம­ளிக்­கு­மாறு திருப்­பி­ய­னுப்­பப்­பட்­டனர்.

இச்­சம்­பவம் கெக்­கி­ராவ கல்வி வலயத்­துக்­குட்­பட்ட மடாட்­டு­கம ஜாயா முஸ்லிம் மகா வித்­தி­யா­ல­யத்தில் இடம்­பெற்­றது. அன்­றைய தினம் பரீட்சை எழு­து­வ­தற்­காக பாட­சாலை சீரு­டையில் பர்தா அணிந்து சென்ற சுமார் 80 பரீட்­சார்த்­திகள் பரீட்சை நிலைய பொறுப்­ப­தி­கா­ரி­யினால் திருப்பி அனுப்­பப்­பட்­டனர். அவர்கள் தங்­க­ளது பர்­தாவை களைந்து விட்டு பரீட்சை மண்­ட­பத்­துக்கு சென்­ற­போதே பரீட்சை எழுத அனு­ம­திக்­கப்­பட்­டார்கள். அவர்கள் தங்கள் முந்­தா­னை­யினால் தலையை மறைத்து பரீட்சை எழு­தி­னார்கள்.

இச்­சம்­ப­வத்தை அன்று இலங்கை ஆசி­ரியர் சங்கம் வன்­மை­யாகக் கண்­டித்­தது. இவ்­வா­றான சம்­ப­வங்கள் இன முரண்­பா­டுகள் அதி­க­ரிப்­ப­தற்கு கார­ணமாய் அமையும் எனவும் அச்­சங்கம் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தது. இது பிழை­யான நடை­மு­றை­யாகும் என அச்­சங்­கத்­தின் தலைவர் பிரி­யந்த பர்­ணாந்து தெரி­வித்­தி­ருந்தார். இச்­சம்­பவம் குறித்து தொடர்ந்து விசா­ரணை நடத்­து­மாறு மாகாண கல்விப் பணிப்­பா­ள­ருக்கு முறைப்­பாடும் செய்­தி­ருந்தார்.

கொழும்­பிலும் சம்­பவம்

கொழும்­பிலும் பரீட்சை நிலை­ய­மொன்றில் பர்தா அணிந்து பரீட்சை எழு­து­வ­தற்குச் சென்ற முஸ்லிம் பெண் பரீட்­சார்த்­தி­க­ளுக்கு பரீட்சை எழுத தடை விதிக்­கப்­பட்­டது. டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி பர்தா அணிந்து பரீட்சை எழுத அனு­ம­திக்­கப்­பட்­டாலும் 3 ஆம், 4 ஆம், 5 ஆம் திக­தி­களில் தடை விதிக்­கப்­பட்­டது. முஸ்லிம் பெண் பரீட்­சார்த்­திகள் பர்­தாவைக் களைந்து V வடிவில் முந்­தா­னை­யிட்டே அவர்கள் பரீட்சை மண்­ட­பத்­துக்குள் அனு­ம­திக்­கப்­பட்­டனர்.
பொலிஸ் அதி­ர­டிப்­படை வீரர்கள் இரு­வரே அங்கு கட­மையில் இருந்­துள்­ளனர். அவர்­க­ளா­லேயே இந்த உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இதற்­கான கார­ணத்தை பரீட்­சார்த்­தி­களின் பெற்றோர் சம்­பந்­தப்­பட்ட அதி­ர­டிப்­படை வீரர்­க­ளிடம் கோரி­ய­போது அமைச்சின் சுற்று நிரு­பத்­துக்கு அமை­வா­கவே இந்த உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கொழும்பு – பொரளை சி.டபிள்யூ. கன்­னங்­கரா வித்­தி­யா­ல­யத்­தி­லேயே இச்­சம்­பவம் இடம்­பெற்­றது. இவ்­வித்­தி­யா­லய பரீட்சை மண்­டப மேற்­பார்­வை­யாளர் பரீட்­சார்த்­திகள் தங்­க­ளது தேசிய அடை­யாள அட்­டையில் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள போட்­டோவின் பிர­கா­ரமே அனு­ம­திக்­கப்­ப­டுவர் என்று குறிப்­பிட்டார். தேசிய அடை­யாள அட்­டையில் காதுகள் தெரி­யும்­ப­டியே புகைப்­படம் இருக்­கி­றது. அதனால் அதன்­ப­டியே பரீட்சை எழுத அனு­ம­திக்க முடியும், பரீட்சை திணைக்­க­ளத்தின் சுற்­று­நி­ருபம் இவ்­வாறே தெரி­விக்­கி­றது என்று கூறி­யுள்ளார்.

தேசிய அடை­யாள அட்­டையில் புகைப்­படம் காது­களை மறைக்காமல் காணப்­பட்டால் பரீட்சை மேற்­பார்­வை­யா­ளர்கள் காது­களை மறைக்­காமல் பர்­தாவை சரி செய்து கொள்­ளு­மாறு பரீட்­சார்த்­தி­களைக் கோரி­யி­ருக்க வேண்டும்.

இதே­வேளை, மடாட்­டு­கம ஜாயா முஸ்லிம் மகா வித்­தி­யா­லய பரீட்சை மண்­ட­பத்தில் இவ்­வா­றான சம்­பவம் இடம்­பெ­ற­வில்லை என கல்­வி­ய­மைச்சர் டலஸ் அழ­கப்­பெ­ரும மறுத்­தி­ருந்­த­மையும் குறிப்­பி­டத்­தக்­கது.

அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­தர்களின்பதவி உயர்­வுக்­கான பரீட்­சையில் சம்­பவம்

பரீட்சை எழுதும் முஸ்லிம் பெண்­களும் மாண­வி­களும் தொடர்ந்து பல்­வேறு அசெ­ள­க­ரி­யங்­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு வரு­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது. பரீட்சை மேற்­பார்­வை­யா­ளர்­களும் பரீட்சைத் திணைக்­கள அதி­கா­ரி­களில் ஓரி­வரும் முஸ்லிம் பெண் பரீட்­சார்த்­திகள் மீது பல்­வேறு அழுத்­தங்­களைப் பிர­யோ­கிக்­கி­றார்கள். பரீட்சைத் திணைக்­க­ளத்தின் சுற்று நிரு­பத்தின் அடிப்­ப­டை­யி­லேயே தாங்கள் செயற்­ப­டு­வ­தாக தெரி­விக்­கி­றார்கள். முஸ்லிம் பெண்­களின் கலா­சார உடை தொடர்பில் வெளி­யி­டப்­பட்­டுள்ள விஷேட அர­சாங்க வர்த்­த­மா­னி­களை நாம் அரச அதி­கா­ரி­க­ளதும் பரீட்சைத் திணைக்­க­ளத்­தி­னதும் கவ­னத்­திற்குக் கொண்­டு­வர வேண்­டி­ய­வர்­க­ளாக இருக்­கிறோம்.

பரீட்சைத் திணைக்­க­ளத்­தினால் கடந்த 19 ஆம் திகதி நடத்­தப்­பட்ட அரச அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­தர்­களின் பதவி உயர்­வுக்­கான தடை­தாண்டல் பரீட்­சை­யின்­போது காது­களை மூடி ஹிஜாப் அணிந்து பரீட்சை எழுதிக் கொண்­டி­ருந்த முஸ்லிம் பெண்கள், இடை­ந­டுவில் பரீட்சை மண்­ட­பத்­துக்குள் நுழைந்த பரீட்­சைகள் திணைக்­கள உயர் அதி­கா­ரி­யொ­ரு­வரால் சப்­த­மிட்டு அச்­சு­றுத்­திய சம்­ப­வ­மொன்று இடம்­பெற்­றுள்­ளது.

ஆணை­யாளர் தரத்­தி­லான அவ் அதி­காரி ‘நான் உங்­க­ளுக்குப் பாட­மொன்று படிப்­பிக்­கிறேன்’ எனக் கூறி தனது கைய­டக்­கத்­தொ­லை­பே­சி­யினால் முஸ்லிம் பெண் பரீட்­சார்த்­தி­களை புகைப்­ப­டமும் எடுத்­த­தாக முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. இச்­சம்­பவம் கொழும்பு – மிலா­கி­ரிய புனித போல்ஸ் மகளிர் கல்­லூ­ரியின் 1 ஆம் மண்­டபம் 5 ஆம் இலக்க பரீட்சை அறையில் இடம்­பெற்­றுள்­ளது. இதனால் பாதிக்­கப்­பட்ட முஸ்லிம் பெண் பரீட்­சார்த்­திகள் பம்­ப­லப்­பிட்டி பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பா­டொன்­றையும் பதிவு செய்­துள்­ளனர். அடிப்­படை உரிமை மீறல் மனு­வொன்றும் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

இந்தப் பரீட்­சையை பரீட்­சைகள் திணைக்­க­ளமே நடத்­தி­யது. பரீட்சை ஆரம்­ப­மா­வ­தற்கு முன்பு இரு மேற்­பார்­வை­யா­ளர்­களால் பரீட்­சார்த்­தி­க­ளுக்கு உரிய அறி­வு­றுத்­தல்கள் வழங்­கப்­பட்­டன. முஸ்லிம் பெண் பரீட்­சார்த்­திகள் காது­களை மூடி ஹிஜாப் அணிந்­தி­ருப்­பதில் பிரச்­சினை எதுவும் இல்லை எனத் தெரி­விக்­கப்­பட்­டது. அத்­தோடு அனைத்துப் பரீட்­சார்த்­தி­க­ளுக்கும் பரீட்சை எழு­து­வ­தற்கு அனு­மதி வழங்­கப்­பட்­டது.

முத­லா­வது வினாத்தாள் காலை 9.00 மணிக்கு வழங்­கப்­பட்டு காலை 11.00 மணிக்கு நிறை­வுற்­றது. முத­லா­வது வினாத்­தாளுக்கு விடை­ய­ளிக்கும் சந்­தர்ப்­பத்தில் எவ்­வித பிரச்­சி­னையும் உரு­வாக்­கப்­ப­ட­வில்லை. இரண்­டா­வது வினாத்தாள் 12 மணிக்கு வழங்­கப்­பட்­டது. சில முஸ்லிம் பெண் பரீட்­சார்த்­திகள் அங்­கி­ருந்­தனர். இரண்­டா­வது வினாத்­தா­ளுக்­கான பரீட்சை ஆரம்­பித்து இடை­ந­டுவில் பரீட்சை திணைக்­க­ளத்தைச் சேர்ந்­தவர் எனக் கூறப்­படும் உய­ர­தி­கா­ரி­யொ­ருவர் திடீ­ரென பரீட்சை மண்­ட­பத்­தினுள் நுழைந்தார்.

காது­களை மூடி ஹிஜாப் அணிந்­தி­ருந்த முஸ்லிம் பெண் பரீட்­சார்த்­தி­க­ளிடம் சென்று சப்­த­மிட்டு அவர்­களை அச்­சு­றுத்­தினார். காது­களை மூடி ஆடை அணிய முடி­யாது என்றார். உங்­க­ளுக்குப் பாடம் படிப்­பிக்­கிறேன் எனக் கூறி முஸ்லிம் பெண் பரீட்­சார்த்­தி­களை தனது கைய­டக்கத் தொலை­பே­சியில் படம் எடுத்தார். அத்­தோடு ஒரு கட­தா­சியில் முஸ்லிம் பெண் பரீட்­சார்த்­தி­களின் பரீட்சை இலக்­கங்­களைக் குறித்­துக்­கொண்டார். இதனால் முஸ்லிம் பெண் பரீட்­சார்த்­திகள் மாத்­தி­ர­மல்ல ஏனைய பரீட்­சார்த்­தி­களும் அசெ­ள­க­ரி­யங்­க­ளுக்கு உள்­ளா­கினர்.

பரீட்சை திணைக்­க­ளத்தின் உய­ர­தி­கா­ரி­யொ­ருவர் பரீட்சை நடை­பெற்றுக் கொண்­டி­ருக்கும் போது இவ்­வாறு திடீ­ரெனத் தோன்றி முஸ்லிம் பெண் பரீட்­சார்த்­திகள் மீது சப்­த­மி­டு­வதும், நட­வ­டிக்கை எடுப்பேன் என்­பதும் ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது. தான் சுற்று நிரு­பத்­திற்கு அமை­யவே செயற்­ப­டு­வ­தாக அவர் தெரி­வித்­தி­ருக்­கிறார். பரீட்சை எழுதி முடிந்­ததும் குறிப்­பிட்ட சுற்று நிரு­பத்தைக் காண்­பிக்­கு­மாறு பரீட்­சார்த்­திகள் கோரியும் அவர் மறுத்­தி­ருக்­கிறார்.

அவரது பெயர், பதவி எனும் விபரங்களைத் தெரிவிப்பதற்கும் மறுப்புத் தெரிவித்திருக்கிறார்.

குறிப்பிட்ட உயரதிகாரியின் நடவடிக்கை ஒருபோதும் அனுமதிக்கப்பட முடியாததாகும். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ அரச நிறுவனங்களின் உயரதிகாரிகள் எவ்வாறான சேவை வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ள நிலையில் பரீட்சைத் திணைக்கள அதிகாரிகள் சிலரின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட வேண்டும். முஸ்லிம் பெண் பரீட்சார்த்திகள் காதுகளை மறைக்காது ஆடை அணிந்திருக்க வேண்டுமென்றால் அதற்கான சுற்று நிருபத்தை பரீட்சை ஆரம்பிப்பதற்கு முன்பே காட்டி உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். அதிகாரியின் செயல் முஸ்லிம் பெண் பரீட்சார்த்திகளை அசெளகரியங்களுக்கு உட்படுத்தியதாகவே அமைந்துள்ளது.

குறிப்பிட்ட உயரதிகாரி கடந்த வருடம் ஜூன் மாதம் நடைபெற்ற தகவல் தொழிநுட்பம் தொடர்பான போட்டிப் பரீட்சையொன்றின் போதும் இவ்வாறு செயற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் தொடர்ந்தும் இனவாதமாக செயற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வர்த்­த­மானி அறி­வித்­தல்கள் என்ன தெரி­விக்­கின்­றன

உயிர்த்த ஞாயிறு தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி அணியும் நிகாப், புர்­கா­வுக்கு மாத்­தி­ர­மல்ல அபாயா, ஹிஜா­புக்கும் பலத்த எதிர்ப்பு தெரி­விக்­கப்­பட்­டது.

முகத்தை மூடி ஆடை அணி­வதை இலங்­கையில் தடை­செய்ய வேண்­டு­மென பல்­வேறு தரப்­புகள் ஜனா­தி­ப­திக்கு அழுத்­தங்­களைப் பிர­யோ­கித்­தன.

முகத்தை மறைத்து ஆடை­ய­ணிந்து தீவி­ர­வா­திகள் மேலும் தாக்­குதல் நடத்­தலாம் என அதற்குக் காரணம் கூறப்­பட்­டது. அன்­றைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கடந்த மே மாதம் விசேட வர்த்­த­மானி அறி­வித்தல் மூலம் முகத்­திரை அணிய தடை­வி­தித்தார்.

‘ஒரு­வ­ரது அடை­யா­ளத்தை மறைக்கும் வகையில் முழு முகத்­தையும் மூடக்­கூ­டிய எந்­த­வொரு ஆடை­யையும் பொது இடங்­களில் அணி­ய­மு­டி­யாது. முழு­முகம் என்­பது ஒரு­வ­ரது காதுகள் உள்­ளிட்ட முழு முகத்­தையும் குறிப்­ப­தாக அமையும்.

பொது இடம் எனக் குறிப்­பி­டு­வது பொது வீதிகள், கட்­ட­டங்கள், அடைக்­கப்­பட்ட அல்­லது திறந்­த­வெ­ளிகள், வாக­னங்கள் அல்­லது ஏனைய போக்­கு­வ­ரத்துச் சாத­னங்­களைக் குறிப்­ப­தாக அமையும்.

பொது வீதிகள் என்­பது வீதி­க­ளுடன் தொடர்­பு­படும் பொதுப்­பா­லத்தின் மேலான ஏதேனும் வீதிகள், நடை­பா­தைகள், வாய்க்கால், ஏரிக்­கரை, சாக்­கடை என்­ப­வற்­றையும் உள்­ள­டக்கும்’ என ஜனா­தி­ப­தியின் விசேட வர்த்­த­மானி அறி­வித்தல் தெரி­வித்­தது.

‘காதுகள் வெளித்­தெ­ரிய வேண்டும்’ என்ற வர்த்­த­மானி அறி­வித்தல் பெண்­களின் ஹிஜா­புக்கு தடை­யாக அமைந்­தது. இத­னை­ய­டுத்து அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை மற்றும் முஸ்லிம் அமைச்­சர்கள் அன்­றைய ஜனா­தி­ப­தியைச் சந்­தித்து வர்த்­த­மா­னியில் திருத்­தங்­களைச் செய்­யு­மாறு கோரிக்கை விடுத்­தனர். முகத்தை மூடி ஆடை அணி­வ­தற்­கான தடை­யினை வர­வேற்ற முஸ்லிம் சிவில் சமூக பிர­தி­நி­தி­களும் அர­சியல் தலை­மை­களும் காது­களை மூடி ஹிஜாப் அணியும் வகையில் வர்த்­த­மா­னியில் திருத்­தங்­களைச் செய்­யு­மாறு ஜனா­தி­ப­தியை வேண்டிக் கொண்­டார்கள்.

இந்­நி­லையில் முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி அணியும் ஆடைக்கு தடை­வி­தித்து வெளி­யி­டப்­பட்ட வர்த்­த­மானி அறி­வித்­தலில் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

திருத்­தப்­பட்ட விசேட வர்த்­த­மானி

கடந்த மே மாதம் 13 ஆம் திகதி ஜனா­தி­ப­தியின் கையொப்­பத்­துடன் மீண்­டு­மொரு விஷேட வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­யி­டப்­பட்­டது.

முகத்­திரை அல்­லது முகத்தை மறைக்கும் வண்ணம் ஆடை அணிதல் மற்றும் தலைக்­க­வசம் அணியும் விடயம் தொடர்­பாக ஏற்­க­னவே வெளி­யி­டப்­பட்ட வர்த்­த­மானி அறி­வித்­தலில் திருத்தம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.
இது விடயம் தொடர்­பாக பொது­மக்கள் பாது­காப்புச் சட்­டத்தின் 5 ஆம் பிரிவின் கீழ் மீண்­டு­மொரு வர்த்­த­மானி அறி­வித்தல் ஜனா­தி­ப­தியின் கையொப்­பத்­துடன் வெளி­யி­டப்­பட்­டது. அந்த வர்த்­த­மானி பின்­வ­ரு­மாறு அமைந்­துள்­ளது.

‘ஏதா­வது ஆடை, உடுப்பு அல்­லது துணி­ம­ணிகள் ஒரு­வரை அடை­யாளம் காண ஏதேனும் வகையில் சிர­ம­மாக்கும் வகையில் முழு முகத்­தையும் மறைக்கும் வண்ணம் பொது இடத்தில் இலங்கை பிர­ஜையால் அணி­யப்­ப­ட­லா­காது. இவ்­வாறு அணி­ப­வர்கள் இலங்கை இரா­ணுவம், இலங்கை கடற்­படை, இலங்கை விமா­னப்­படை, பொலிஸ் அதி­கா­ரிகள் அல்­லது சிவில் பாது­காப்புப் படை உறுப்­பினர் கேட்டுக் கொள்ளும் பட்­சத்தில் ஒரு­வரை அடை­யாளம் காண, காதுகள் உட்­பட முழு முகத்தை மறைக்கும் எந்த ஒன்­றி­னையும் அகற்­ற­வேண்டி நேரிடும்.

இங்கு ‘முழு­முகம்’ எனக் குறிப்­பி­டு­வது, நெற்­றியில் இருந்து வாய்க்குக் கீழுள்ள நாடி­வரை என்­ப­தாகும். இங்கு காதுகள் உள்­ள­டங்­காது என வர்த்­த­மா­னியில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. எனவே முஸ்லிம் பெண்கள் காது­களைத் திறந்து ஆடை­ய­ணி­ய­வேண்டும் என்­கிற விதி­யொன்று இல்லை என்­பது தெளி­வா­கி­றது. முகம் மாத்­தி­ரமே திறந்­தி­ருக்க வேண்டும்.

தெளி­வு­ப­டுத்­தப்­பட வேண்டும்

முஸ்லிம் பெண்கள் மற்றும் முஸ்லிம் பெண் பரீட்­சார்த்­திகள் அணி­ய­வேண்­டிய ஆடை தொடர்பில் தொடர்ந்தும் தெளிவற்ற நிலையே காணப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய தெளிவுகள் வழங்கப்படாமையே இதற்குக் காரணமாகும். எனவே சம்பந்தப்பட்ட அமைச்சு அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் குறிப்பாக பரீட்சைத் திணைக்களத்துக்கும் இது தொடர்பிலான தெளிவுகளை வழங்கவேண்டும். அவ்வாறான தெளிவுகள் வழங்கப்பட்டாலே முஸ்லிம் பெண்கள் எதிர்நோக்கும் அசெளகரியங்களுக்குத் தீர்வு கிடைக்கும்.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.