பசுக்களை இறைச்சிக்காக கொலை செய்வதை நிறுத்த இந்து மற்றும் பௌத்த மக்கள் ஒன்றிணைய வேண்டும்

பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் அழைப்பு

0 920

தைப்­பொங்கல் பண்­டி­கையின் கருப்­பொ­ருளை மைய­மாகக் கொண்டு தாய்­நாட்டைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­காக தமிழ் – சிங்­கள மக்கள் ஒன்­றி­ணைய வேண்­டு­மெனத் தெரி­வித்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அதுரலியே ரதன தேரர், பசுக்­களை கொல்­வ­தற்கு எதி­ராக ஒன்­றி­ணைந்து செயற்­பட இந்து பௌத்த மக்கள் முன்­வ­ர­ வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார். தைப்­பொங்கல் பண்­டி­கையை முன்­னிட்டு நேற்று புதன்­கி­ழமை வெளி­யிட்­டி­ருக்கும் வாழ்த்துச் செய்­தி­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்­துள்ளார். அந்த வாழ்த்துச் செய்­தியில் அவர் மேலும் கூறி­யுள்­ள­தா­வது,

சூரிய நமஸ்­காரம் என்­பது பண்­டைய காலத்­தி­லி­ருந்து முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. இந்­திய கலா­சா­ரத்­திற்­க­மைய சூரிய பக­வா­னுக்கு நன்­றி­செ­லுத்தும் நிகழ்­வா­னது இன்­றி­ய­மை­யாத ஒன்­றாகும். அந்­த­வ­கையில், இந்து -– பௌத்த வழி­பாட்டு முறை­களில் சூரியன் முக்­கி­ய­மா­ன­தொன்­றாகக் காணப்­ப­டு­கின்­றது.

தமிழ் மக்கள் தைப்­பொங்கல் தினத்தை புது­வ­ரு­ட­மாக அனுஷ்­டிக்­கின்­றனர். சிங்­கள புது­வ­ருடம் போன்­ற­தொரு தினத்­தையே தமிழ் மக்­களும் தைப்­பொங்கல் தினத்தில் கொண்­டா­டு­கின்­றனர். அதே­போன்று சில நாட்­க­ளுக்கு இந்தப் பண்­டிகை நீடிக்கும். அதன்­போது உழ­வுத்­தொ­ழி­லுக்கு கைகொ­டுக்­கின்­ற­மைக்கு நன்­றி­கூறும் வகையில் மாட்­டுப்­பொங்­கலும் கொண்­டா­டப்­ப­டு­கின்­றது.

இந்­நி­லையில் பசுக்கள் கொல்­லப்­ப­டு­கின்­றமை மிகவும் பார­தூ­ர­மா­ன­தொரு விட­ய­மாகும். இவ்­வா­றாக பசுக்­களை கொல்­வது மர­ண­தண்­ட­னைக்கு நிக­ரான குற்­ற­மாகும். ஆகவே, கடந்த சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் மிரு­க­வதை எதிர்ப்பு சட்­டத்­திற்­க­மைய இவ்­வாறு பசுக்­களை இறச்­சிக்­காக கொலை செய்­வ­தற்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மென்று பாரா­ளு­மன்­றத்தில் பிரே­ர­ணை­யொன்றை கொண்­டு­வந்தேன்.

ஆயினும் எந்த அர­சாங்­கமும் இது தொடர்பில் கவனம் செலுத்­த­வில்லை. ஆகவே, இந்து –- பௌத்த மக்கள் ஒன்­றி­ணைந்து பசுக்­களை கொலை செய்­வதை நிறுத்­து­வ­தற்கு நட­வ­டிக்­கைளை எடுக்­க­வேண்டும். இந்­துக்கள் பசுக்­களை கட­வு­ளாக வழி­ப­டு­கின்­றனர்.

ஆகவே, அந்தக் கலா­சா­ரத்தில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­து­வது முறை­யற்ற விட­ய­மாகும். அத்­துடன், மற்­றைய மதத்தவரின் கலாசாரத்தை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு மதிக்க கற்றுக்கொள்ளும் பட்சத்தில் இந்துக்கள் கடவுளாக வழிபடும் பசுக்ளை கொலை செய்யும் நடவடிக்கையை முற்றிலுமாக நிறுத்தக் கூடியதாகவிருக்குமென அவர் தெரிவித்துள்ளார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.