இன, மத ரீதியில் அரசியல் செய்து அடிப்படைவாத அரசியலாக்கிவிட்டனர்

கெஹலிய ரம்புக்வெல குற்றச்சாட்டு

0 601

முன்னாள் அமைச்­சர்கள் பதி­யுதீன் மஹ்மூத், ஏ.சி.எஸ். ஹமீத், எம்.எச். மொஹமட், பாக்கிர் மாக்கார் போன்­ற­வர்கள் மீது பெரும்­பான்மைச் சமூகம் நம்­பிக்கை கொண்­டி­ருந்­தது. அவர்கள் அடிப்­ப­டை­வா­தத்­துடன் தொடர்­பு­பட்­டி­ருக்­க­வில்லை. பின்பு அர­சி­ய­லுக்கு வந்­த­வர்கள் இனம் மற்றும் மத ரீதி­யி­லான அர­சி­யலைச் செய்து அடிப்­ப­டை­வாத அர­சி­ய­லாக்கி விட்­டார்கள். அர­சியல் அடிப்­ப­டை­வாதக் குப்­பை­யாக மாறி­விட்­டது என இரா­ஜாங்க அமைச்சர் கெஹ­லிய ரம்­புக்­வெல்ல தெரி­வித்தார்.

பொது­ஜன பெர­மு­னவின் கண்டி மாவட்ட அமைப்­பாளர் ஏ.எல்.எம். பாரிஸின் கண்டிக் காரி­யா­ல­யத்தை கண்­டியில் திறந்­து­வைத்து அங்கு இடம்­பெற்ற வைப­வத்தில் உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார். கடந்த வெள்­ளிக்­கி­ழமை மாலை இடம்­பெற்ற இந்­நி­கழ்வில் அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்;

‘பொது­ஜன பெர­முன அடிப்­ப­டை­வா­தத்தை முற்­றாக நிரா­க­ரிக்­கி­றது. நாம் அடிப்­ப­டை­வா­தத்தை ஒழிக்கும் அர­சி­யலை கண்­டி­யி­லி­ருந்து ஆரம்­பிக்­க­வுள்ளோம். அன்று முஸ்­லிம்­க­ளுக்கும் நாட்டு மக்­க­ளுக்கும் இடையில் நில­விய நல்­லி­ணக்கம் மீண்டும் நிலை­நி­றுத்­தப்­ப­ட­வுள்­ளது.

அன்று பதி­யுதீன் மஹ்­மூ­துக்கு கல்வி அமைச்சு வழங்­கப்­பட்­டது. அந்த அமைச்சு அவ­ருக்கு வழங்­கப்­பட்­டதை எவரும் எதிர்க்­க­வில்லை. அனை­வரும் ஏற்­றுக்­கொண்­டார்கள். அன்று அவர் அடிப்­ப­டை­வா­தத்­துடன் தொடர்­பு­பட்­டி­ருக்­க­வில்லை. அடிப்­ப­டை­வாதக் கருத்தைக் கொண்­டி­ருக்­க­வில்லை. இன்று முஸ்லிம் அர­சியல்­வா­திகள் மீது இவ்­வா­றான குற்­றச்­சாட்­டுகள் இருக்­கின்­றன.

தமிழ் சமூ­கத்தைச் சேர்ந்த கதிர்­கா­மரை பிர­த­ம­ராக்­கும்­படி பெளத்­தர்கள் கூடக் கூறி­னார்கள். அன்று நில­விய நல்­லி­ணக்கம், இனங்­க­ளுக்கு இடை­யி­லான ஒற்­றுமை இதுதான். இதனை பொது­ஜன பெர­முன மற்றும் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவி­னா­லேயே உரு­வாக்க முடியும்.

நாம் அனை­வரும் ஒன்­று­பட வேண்டும். இன­ரீ­தி­யி­லான வாக்குப் பலத்­தையும் பிர­தி­நி­தித்­து­வத்­தையும் காட்டி பேரம் பேசும் அர­சியல் இல்­லாமல் செய்­யப்­பட வேண்டும். எங்­க­ளுக்கு வடக்கில் ஒரு பிரிவைத் தாருங்கள் என்று பேரம் பேசு­வ­தனால் நல்­லி­ணக்­கத்தை நிலை­நி­றுத்த முடி­யாது. அடிப்­ப­டை­வா­த­மற்ற அர­சி­யலை உறு­தி­செய்து கண்­டியில் நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்கி இப்­ப­குதி மக்கள் நாட்­டுக்கு முன்­னு­தா­ர­ண­மாக இருக்க வேண்டும்.

இரா­ஜாங்க அமைச்சர் மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே உரை­யாற்­று­கையில்;
‘ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் மீது சில முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் தவ­றான கருத்­து­களைப் பரப்பி வரு­கி­றார்கள். ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரா­ன­வர்­க­ளல்லர்.

ஹலீம் மற்றும் கபீர் ஹாஷிம் ஆகி­யோ­ருக்கு பெரு­ம­ளவில் சிங்­கள மக்கள் வாக்­க­ளிக்­கி­றார்கள். இவ்­வா­றான நிலையில் ஏன் முஸ்­லிம்கள் எமக்கு வாக்­க­ளிக்க முடி­யாது. பொது­ஜன பெர­மு­னவில் எதிர்­வரும் தேர்­தலில் பாரிஸ் ஹாஜியார் போட்­டி­யி­ட­வுள்ளார். அவரை வெற்­றி­ய­டையச் செய்ய வேண்டும்.

ஜனா­தி­பதித் தேர்­தலில் முஸ்­லிம்கள் கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு வாக்­க­ளிக்­க­வில்லை என்­றாலும் தற்­போது நிலைமை மாறி­விட்­டது. ஜனா­தி­ப­தியின் பக்கம் முஸ்­லிம்கள் அணி­தி­ரள்­கி­றார்கள். ரஞ்சன் ராம­நா­யக்­கவின் குரல் பதிவு ஐக்­கிய தேசிய கட்­சியின் அழி­வுக்கு கார­ண­மா­கி­விட்­டது. இலட்­சக்­க­ணக்­கான குரல் பதி­வுகள். இதில் முன்னாள் அமைச்­சர்­களும் நீதி­ப­தி­களும் சம்­பந்­த­ப­்பட்­டி­ருக்­கி­றார்கள். நீதி சுயா­தீ­னத்­துக்கு இது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

முஸ்லிம் சமூகம் வியா­பார சமூ­க­மாகும். வர்த்­தகத் துறையில் முஸ்­லிம்கள் உயர்­நி­லையை அடை­வ­தற்கு ஜனா­தி­ப­தியின் கரங்­களைப் பலப்­ப­டுத்த வேண்டும். கண்­டியில் பொது­ஜன பெர­முன முஸ்லிம் அபேட்­ச­கரை வெற்­றி­பெறச் செய்ய வேண்டும் என்றார்.

இரா­ஜாங்க அமைச்சர் லொஹான் ரத்­வத்த பேசு­கையில்;

‘ஜனா­தி­பதி ஒரு கட்­சி­யிலும் அர­சாங்கம் ஒரு கட்­சி­யிலும் அமைந்தால் அது எமது அர­சி­யலில் பாதிப்­பாக அமையும். கடந்த நல்­லாட்சி அர­சாங்­கத்தை இதற்கு உதா­ர­ண­மாகக் குறிப்­பி­டலாம். எனவே எதிர்­வரும் பொதுத் தேர்லில் பொது­ஜன பெர­மு­னவை வெற்­றி­பெறச் செய்­ய­வேண்டும்.

கண்டி அதி­வேக நெடுஞ்­சாலைப் பணிகள் விரை­வு­ப­டுத்­தப்­படும் என்றார்.
கண்டி மாவட்ட பொது­ஜன பெர­முன அமைப்­பாளர் ஏ.எல்.எம். பாரிஸ் உரை­யாற்­று­கையில்;

‘அர­சி­யலில் முஸ்­லிம்கள் இன்று தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளார்கள். முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் ஜனா­தி­பதித் தேர்­தலில் வழங்­கிய தவ­றான வழி­காட்­டல்கள் அவர்­களைத் தனி­மைப்­ப­டுத்­தி­யுள்­ளன. ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ தனக்கு முஸ்­லிம்கள் வாக்­க­ளிக்­க­வில்லை என்று கூறி­யுள்ளார். என்­றாலும் தனக்கு ஆத­ரவு வழங்க 2 ஆவது சந்­தர்ப்பம் உள்­ளது எனத் தெரி­வித்­துள்ளார்.

எமக்கு இரண்­டா­வது சந்­தர்ப்பம் கிடைத்­துள்­ளது. எனவே இரண்­டா­வது சந்­தர்ப்­ப­மாகப் பொதுத் தேர்­தலை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஜனாதிபதிக்கு ஒரு தூரநோக்குண்டு. நாம் ஜனாதிபதியுடன் நெருக்கமாக வேண்டும். தற்போது முஸ்லிம் சமூகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதியின் திட்டங்களில் நாம் பயன்பெற வேண்டும்.

ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக் ஷ தெரிவு செய்யப்பட்டால் முஸ்லிம் சமூகம் பாதிக்கப்படும் என்றார்கள். ஆனால் இன்று முஸ்லிம்கள் மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள். ஜனாதிபதியை முஸ்லிம்கள் 100 வீதம் நம்பலாம் என்றார்.

நிகழ்வில் மெளலவி பஸ்ருல் ரஹ்மான் உட்பட பலர் உரை நிகழ்த்தினர்.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ. பரீல்
  • ஜே.எம். ஹாபிஸ்

Leave A Reply

Your email address will not be published.