மத்திய கிழக்கில் போர் மூளும் சூழல் தவிர்க்கப்பட வேண்டும்

0 597

ஈரானின் குத்ஸ் படை­ய­ணியின் தள­பதி ஜெனரல் காசிம் சுலை­மானி, அமெ­ரிக்­காவின் ஆளில்லா விமானத் தாக்­குதலில் கொல்லப்பட்ட சம்­ப­வத்­தை­ய­டுத்து இரு நாடு­க­ளுக்கும் இடையில் முறுகல் நிலை உச்­சக்­கட்­டத்தை அடைந்­துள்­ளது.

ஈராக்­கி­லுள்ள அமெ­ரிக்க இரா­ணுவ நிலை மீது கடந்த வாரம் நடத்­தப்­பட்ட ஏவு­கணைத் தாக்­கு­தலில் அமெ­ரிக்­காவைச் சேர்ந்த தனியார் பாது­காப்­புப்­படை வீரர் உயி­ரி­ழந்தார். அந்தத் தாக்­கு­தலை ஈரான் ஆத­ர­வு­பெற்ற கதாயிப் ஹிஸ்­புல்லா படை­யினர் நடத்­தி­யி­ருந்­தனர். அப்­ப­டை­யினர் மீது அமெ­ரிக்கா நடத்­திய தாக்­கு­தலில் 25 வீரர்கள் கொல்­லப்­பட்­டனர். இத்­தாக்­கு­த­லுக்கு எதிர்ப்புத் தெரி­வித்து பக்தாதி­லுள்ள அமெ­ரிக்கத் தூதரகம் ஹிஸ்­புல்லா போராட்­டக்­கா­ரர்­களால் சூறை­யா­டப்­பட்­டது.

இதற்குப் பதி­ல­டி­யா­கவே கடந்த வெள்­ளிக்­கி­ழமை அமெ­ரிக்க இரா­ணுவம் ஆளில்லா விமானம் மூலம் ஏவு­கணைத் தாக்­குதல் நடத்­தி­யது. இதில் ஈரான் புரட்­சி­கரப் பாது­காப்புப் படையின் தள­பதி காசிம் சுலை­மானி மற்றும் ஈராக், ஈரான் இரா­ணுவ உயர் அதி­கா­ரிகள் உட்­பட 10 பேர் கொல்­லப்­பட்­டனர்.

அமெ­ரிக்­காவின் தாக்­குதல் சம்­ப­வத்­தை­ய­டுத்து ஈரான், ஈராக் உட்­பட மத்­திய கிழக்கு நாடு­களில் பீதி­யான நிலைமை உரு­வா­கி­யுள்­ளது. சர்­வ­தே­சமும் ஈரான் –அமெ­ரிக்க நகர்­வு­களை உன்­னிப்­பாக அவ­தா­னித்து வரு­கின்­றன. இலங்கை உட்­பட ஆசிய நாடு­களும் அச்ச நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளன. இரு நாடு­க­ளுக்கும் இடையில் போர் மூளும் அபாய நிலை உரு­வா­கி­யி­ருப்­பதே இதற்குக் கார­ண­மாகும். அவ்­வாறு போர் தவிர்க்க முடி­யா­தி­ருந்தால் எமது நாடும் பொரு­ளா­தார ரீதியில் பெரிதும் பாதிக்­கப்­படும். எண்ணெய் விலை அதி­க­ரிப்பு எம்மில் பல தாக்­கங்­களைச் செலுத்தும். மத்­திய கிழக்கில் பணி­பு­ரியும் இலங்­கை­யர்கள் நாடு திரும்ப வேண்­டிய சூழலும் உரு­வா­கலாம்.

அமெ­ரிக்­காவின் நேச நாடான சவூதி அரே­பியா இரு தரப்­பி­ன­ருக்கும் இடையில் சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்­து­வதில் மும்­மு­ர­மாக ஈடு­ப­ட­வேண்டும். கட்டார் வெளி­வி­வ­கார அமைச்­சரும் ஈரா­னுக்கு விஜயம் செய்து சமா­தான முயற்­சி­களில் ஈடு­பட்­டுள்ளார்.

இத்­தாக்­குதல் ஈராக்கில் இடம்­பெற்­றதால் ஈராக் வெளி­வி­வ­கார அமைச்சு தனது ­நாட்­டி­லுள்ள அமெ­ரிக்க தூதர் மெதிப் டியு­லரை அழைத்து கண்­டனம் தெரி­வித்­துள்­ளது. இத்­தாக்­குதல் சர்­வ­தேச சட்­டங்­க­ளுக்கு முர­ணா­னது எனவும் தெரி­வித்­துள்­ளது.

அமெ­ரிக்க அதிபர் ஈரானின் 52 கலா­சார மையங்­களை இலக்கு வைத்­துள்­ள­தாக தனது டுவிட்­டரில் பதி­விட்­டுள்ளார். இதற்குப் பதி­ல­ளித்­துள்ள ஈரான் வெளி­நாட்­ட­மைச்சர் ஜவாத் சரீப் அவ்­வாறு தாக்­குதல் நடத்­து­வது யுத்­தக்­குற்றம் என்று தெரி­வித்­துள்ளார்.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை கூடிய ஈரா­னிய பாரா­ளு­மன்­றத்தில் ‘அமெ­ரிக்­கா­வுக்கு மரணம்‘ என உறுப்­பி­னர்கள் கூச்­ச­லிட்­டுள்­ளனர். ‘நாங்கள் வெள்ளை மாளி­கையைத் தாக்­குவோம். அமெ­ரிக்க மண்ணில் எம்மால் அவர்­க­ளுக்கு பதி­ல­ளிக்க முடியும். அல்லாஹ் விரும்­பினால் நாம் பொருத்­த­மான நேரத்தில் பதி­ல­ளிப்போம் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அபுல்பஸ்ல் அப்துர் ­ராபி தெரி­வித்­துள்ளார். அமெ­ரிக்க துருப்­பு­களை ஈராக்­கி­லி­ருந்து வெளி­யே­று­மாறும் ஈராக் பாராளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதே­வேளை, அமெ­ரிக்கா உட்­பட வெளி­நாட்டுப் படை­யி­னரை ஈராக்­கி­லி­ருந்து வெளி­யே­று­மாறு அந்­நாட்டு பாரா­ளு­மன்றம் பிரே­ர­ணை­யொன்­றினை நிறை­வேற்­றி­யுள்­ளது.

ஈராக்­கி­லுள்ள அமெ­ரிக்கப் படை­யி­னரை ஈரான் தாக்­கலாம் என அமெ­ரிக்­காவின் இரா­ஜாங்க செய­லாளர் மைக் பொம்பியோ தெரி­வித்­துள்ளார்.

ஈரான் தள­பதி காசிம் சுலை­மானி கொல்­லப்­பட்­ட­மைக்கு பாகிஸ்தான் ஆழ்ந்த கவலை தெரி­வித்­துள்­ளது. இக் கொலைச் சம்­பவம் மத்­திய கிழக்கில் அமை­தி­யின்­மையை உரு­வாக்­கி­யுள்­ள­தாக பாகிஸ்தான் பிர­தமர் தெரி­வித்­துள்ளார்.

ஈரா­னுக்கும் அமெ­ரிக்­கா­வுக்கும் இடையில் நிலவும் முறுகல் நிலை நீடித்து போர் மூளும் சூழல் உருவாகக்கூடாது. இதுவே அனைவரதும்

பிரார்த்தனையாகும். யுத்தமொன்று உருவானால் அதனால் அழிவுகளையே மக்கள் எதிர்கொள்வார்கள். இந்த விவகாரத்தை அடிப்படையாக வைத்து மூன்றாம் உலகப் போர் வெடிக்கலாம் என சிலர் எச்சரித்துள்ளனர்.

அவ்வாறான நிலை ஏற்படாதிருக்க பிரார்த்திப்போமாக.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.