பாரா­ளு­மன்ற சம்­பி­ர­தா­யத்தை மீறியே சம்­பிக்க கை­தானார்

சபாநாயகர் அலுவலகம் சுட்டிக்காட்டு

0 660

பாராளுமன்ற சம்­பி­ர­தா­யத்தை மீறிக் கைது­செய்­யப்­பட்­ட­மையால் சம்­பிக்க ரண­வக்­க­வுக்கு பாரிய அநீ­தி­யேற்­பட்­டுள்­ளது. அத­னாலே சிறைச்­சா­லைக்கு சென்று சுகம் விசா­ரிக்க சபா­நா­யகர் நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்­தா­ரென சபா­நா­யகர் அலு­வ­லகம் தெரி­வித்­துள்­ளது.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சம்­பிக்க ரண­வக்க கைது­செய்­யப்­பட்­டமை தொடர்­பாக சபா­நாயர் தெரி­வித்த கருத்­துக்கள் மற்றும் அவரை சிறைச்­சா­லைக்கு சென்று பார்த்­தமை தொடர்­பாக பல்­வேறு தரப்­பினர் தெரி­வித்­து­வந்த கருத்­துக்­க­ளுக்குப் பதி­ல­ளிக்­கும்­வ­கையில் சபா­நா­யகர் அலு­வ­லகம் விடுத்­துள்ள அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சம்­பிக்க ரண­வக்க, கைது செய்­யப்­ப­டும்­போது இது­வரை பின்­பற்­றப்­பட்­டு­வந்த சம்­பி­ர­தா­யத்­துக்கு மாற்­ற­மாக கைது­செய்­யப்­பட்­டமை தொடர்பில் சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய அது தொடர்பில் தனது நிலைப்­பாட்டை தெரி­வித்­தி­ருந்­தமை மற்றும் சம்­பிக்க ரண­வக்­கவை சுகம் விசா­ரிக்க சிறைச்­சா­லைக்கு சென்­றமை தொடர்­பாக பல்­வேறு தரப்­பி­னர்­களால் தெரி­விக்­கப்­பட்­டு­வந்த கருத்­துக்கள் எமது கவ­னத்­துக்கு வந்­தி­ருக்­கின்­றன.

இந்த சம்­ப­வத்­தின்­போது சபா­நா­ய­க­ரினால் கவனம் செலுத்தி இருப்­பது, சட்­டத்தை நிலை­நாட்­டும்­போது, எந்­த­வொரு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒரு­வரை சாதா­ரண காரணம் ஒன்­றுக்­காக கைது­செய்­வ­து­தொ­டர்பில் எந்த தர்க்­கமும் இல்­லா­விட்­டாலும் அது­தொ­டர்­பான நடை­மு­றையை பின்­பற்­ற­வேண்டும்.
இதற்கு முன்னர் முறை­யற்ற விதத்தில் கைது­செய்­யப்­பட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் வரப்­பி­ர­சா­தங்கள் தொடர்பில் கவ­னம்­செ­லுத்­தும்­போது சபா­நா­யகர் அவ்­வா­றா­ன­வர்­களின் அர­சியல் கட்சி தொடர்பில் கவனம் செலுத்­த­வில்லை என்­பது அந்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் மன­சாட்­சிக்கு இர­க­சி­ய­மாக இருக்­காது.

என்­றாலும், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சம்­பிக்க ரண­வக்­கவை கைது­செய்த பின்னர் அது­தொ­டர்பில் விசேட அவ­தானம் செலுத்­தி­யதும் சிறைச்­சா­லைக்கு சென்று அவரின் சுகம் விசா­ரிக்க நட­வ­டிக்கை எடுத்­ததும், தற்­போது நடை­மு­றையில் இருக்கும் சம்­பி­ர­தா­யத்தை மீறி அவரை கைது­செய்­யும்­போது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் என்­ற­வ­கையில் அவ­ருக்கு பாரிய அநீதி ஏற்­பட்­ட­மைக்­காகும். இதற்கு முன்னர் கைது­செய்­யப்­பட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தொடர்பில் உதா­ர­ண­மாகத் தெரி­விக்க முடியும் என்­ப­துடன் தற்­போது கைது செய்­யப்­பட்­டி­ருக்கும் ஐக்­கிய தேசிய கட்சி புத்­தளம் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இது­வரை 50 நாட்­க­ளுக்கும் அதி­க­மான காலம் சிறையில் இருந்து வரு­கின்றார். என்­றாலும் அவ­ரது சுகம் விசா­ரிக்க சபா­நாயர் ஒரு­போதும் சிறைச்­சா­லைக்கு சென்­ற­தில்லை.

சம்­பி­ர­தா­யத்­துக்கு மாற்­ற­மாகக் கைது­செய்­யப்­பட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி சபா­நா­யகர் பாது­காக்க முயற்­சித்­தது, ஒரு கட்­சி­யி­னதோ அல்­லது தனி நப­ரது வரப்­பி­ர­சா­தத்­தை­யல்ல என்­பதை கவ­னத்­திற்­கொள்வோம். தற்­கா­லத்­திலும் எதிர்­கா­லத்­திலும் அனைத்துக் கட்சிகளினதும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கான ஜன­நா­யக பாரா­ளு­மன்ற முறை­மையில் முக்­கி­ய­மான சம்­பி­ர­தா­யங்கள் ஊடாக கிடைக்­கப்­பெறும் வரப்­பி­ர­சா­தங்­களை பாதுக்கும் பொறுப்பு இதன்மூலம் ஏற்படும்.எவ்வாறான விமர்சனங்கள் மற்றும் சவால்களை எதிர்கொண்டாலும் இந்தப் பொறுப்பை நிறைவேற்றி ஜனநாயகத்துக்காக மேலும் அர்ப்பணிப்புடன் செயற்பட சபாநாயகர் ஒருபோதும் பின்வாங்கமாட்டார்.-Vidivelli

  • எம்.ஆர்.எம்.வஸீம்

Leave A Reply

Your email address will not be published.