19 ஆவது திருத்தத்தை நீக்குவதும் ஜனநாயகத்திலிருந்து வெளியேறுவதும்!

0 650

வேண்­டு­மென்றே திட்­ட­மிட்டு 19 ஆவது திருத்தச் சட்டம் பெரும் சிக்­க­லொன்­றாகக் கட்­ட­மைக்­கப்­பட்­டது. 19 ஆவது திருத்­தத்தின் மூலம் பிர­தமர் ரணில் சக்­தி­மிக்­க­வ­ராக மாற்­றப்­பட்­டுள்­ள­தாக நினைத்துப் பொறா­மையும் காழ்ப்­பு­ணர்வும் கொண்ட ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே இதைப் பெரும் பிரச்­சி­னை­யாக்­கினார். அதன் செயல்­வ­டி­வ­மா­கவே 2018 ஒக்­டோபர் 26 சதியின் மூல­மாக ரணி­லி­ட­மி­ருந்த பிர­தமர் பதவி பிடுங்கி எடுக்­கப்­பட்டு மஹிந்த ராஜபக் ஷவிடம் கைய­ளிக்­கப்­பட்­டது.

ஜனா­தி­பதி சிறி­சே­ன­வினால் பிர­தமர் பத­வியைப் பறிக்க முடி­யாமல் போய்­விட்­ட­தனால், எந்த நேரத்­திலும் பிர­த­மரைப் பத­வி­நீக்கம் செய்யும் அதி­காரம் ஜனா­தி­ப­திக்கு இருக்க வேண்­டு­மென சிலர் சொல்லத் தொடங்­கினர்.

19 ஆவது திருத்­தத்தை எப்­ப­டி­யா­வது நீக்­கியே ஆக­வேண்­டு­மெனத் தற்­போ­தைய அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. அதற்­கான ஒரே­யொரு தடை­யாக இருப்­பது தற்­போ­தைய பாரா­ளு­மன்­றத்தில் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை இல்­லா­மை­யாகும். அதனால் அடுத்து அமை­ய­வுள்ள நாடா­ளு­மன்­றத்தில் எப்­ப­டி­யா­வது மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மைப் பலத்தைக் கைப்­பற்றிக் கொள்­வ­தற்­கான எல்லா வழி­வ­கை­க­ளையும் கோத்­தா­பய அர­சாங்கம் முன்­னெ­டுக்கத் தொடங்­கி­யுள்­ளது.

கடந்த திங்­க­ளன்று (2019.12.16) ஊடக நிறு­வ­னங்­களின் தலை­வர்­க­ளோடு நடந்த பத்­தி­ரி­கை­யாளர் மாநாட்டில் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ, 19 ஆம் திருத்­தத்தை நிச்­ச­ய­மாக நீக்கப் போவ­தாகச் சொல்­லி­யி­ருந்தார். அதற்­கான மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மைப் பலத்தை நாடா­ளு­மன்­றத்தில் பெற்­றுக்­கொள்ளத் தன்­னா­லான அனைத்­தையும் செய்­ய­வி­ருப்­ப­தா­கவும் சொல்­லி­யி­யிருந்தார்.

19 ஆம் திருத்தம் மிகவும் பல­வீ­ன­மா­ன­தென அவர் சொல்­லி­யி­ருந்தார். 19 பல­வீ­ன­மா­னதா? அது எப்­படிப் பல­வீ­ன­மாகும்? இது ஒரு தெளி­வில்­லாத கூற்­றாகும். “அவ்­வா­றான பல­வீ­ன­மான ஒரு யாப்பு ஒரு நாட்டில் இருக்க முடி­யாது. அதன் மூல­மாக அந்த அர­சாங்­கத்தில் ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்­கு­மி­டையே பிணக்­குகள் எழத் தொடங்­கின. ஒரு நாடென்ற வகையில் அதை வருங்­கா­லத்தில் திருத்­தி­யாக வேண்டும். அதில் எந்­த­வொரு நன்­மையும் இருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. அது நிரூ­ப­ண­மாகி விட்­டுள்­ளது” என்று அவர் பேசி­யுள்ளார்.

19ஐ முழு­வதும் நீக்க வேண்­டுமா அல்­லது குறிப்­பிட்ட சில பகு­தி­களை நீக்க வேண்­டுமா எனப் பத்­தி­ரி­கை­யாளர் ஒருவர் எழுப்­பிய கேள்­விக்கு, “முழு­மை­யாக நீக்க வேண்டும்” என்று கோத்­தா­பய ராஜபக் ஷ பதி­ல­ளித்தார்.
இந்தப் பேச்­சி­லி­ருந்து 19 ஆம் திருத்தம் குறித்த இந்த அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு தெளி­வா­கி­றது. அதா­வது, 19 ஐ முழு­மை­யாக நீக்க வேண்டும் என்­ப­தாகும்.

2015 ஏப்ரல் 28 ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்­தி­லுள்ள எல்லாக் கட்­சி­க­ளி­னதும் ஆத­ர­வோ­டுதான் 19 ஆம் திருத்தம் கொண்­டு­வ­ரப்­பட்­டது. தற்­போது பொது­ஜன முன்­ன­ணி­யென அறி­யப்­படும் அணியில் அப்­போது நாடா­ளு­மன்­றத்­தி­லி­ருந்த சகல எம்.பி.க்களும் இத்­தி­ருத்­தத்­திற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­தனர்.

19 ஆம் திருத்­தத்தின் மூலம் நிகழ்ந்­தி­ருப்­பவை குறித்துப் புதி­தாகச் சொல்ல வேண்­டி­ய­தில்லை. அது எல்­லோ­ருக்கும் தெரியும்.

19க்கு எதிர்ப்­புகள் கிளம்­பி­யி­ருப்­பது 19 குறித்த தெளி­வின்மை கார­ண­மாக அல்ல. அதை நன்கு புரிந்­து­கொண்டே அதை எதிர்க்­கின்­றனர்.

19ஆம் திருத்தம் குழப்­ப­க­ர­மா­ன­தல்ல. அது மிகவும் தெளி­வா­னதே. அத­னூ­டாக மிகவும் தெளி­வான அர­சியல் அமைப்புத் திருத்­த­மொன்றே மேற்­கொள்­ளப்­பட்­டது.

உதா­ர­ண­மாக, ஜனா­தி­ப­தியின் பத­விக்­கா­லத்தை வரை­ய­றுப்­பது, ஜனா­தி­பதித் தேர்­தலில் வேட்­பா­ள­ரா­வ­தற்­கான வாய்ப்­பு­களை வரை­ய­றுப்­பது, நாடா­ளு­மன்­றத்தைக் கலைப்­ப­தற்கு ஜனா­தி­ப­திக்கு இருக்கும் அதி­கா­ரத்தை வரை­ய­றுத்து நான்­கரை ஆண்­டுகள் கழிய முன்­பாகக் கலைக்க முடி­யாது என வரை­ய­றுத்­தி­ருப்­பது, அமைச்­ச­ரவை உறுப்­பி­னர்கள் 30 எனத் தீர்­மா­னித்­தி­ருப்­பது, ஜனா­தி­பதி தனக்­கென்றோர் அமைச்சை வைத்­துக்­கொள்ள முடி­யாமல் செய்­யப்­பட்­டி­ருப்­பது, ஜனா­தி­பதிப் பத­வியில் இருக்கும் நப­ருக்கு எதி­ராக சட்­டமா அதி­பரைப் பெயர்­கு­றிப்­பிட்டு அடிப்­படை உரி­மைகள் வழக்­கு­களைத் தாக்கல் செய்ய முடி­யு­மான சந்­தர்ப்பம் கிடைத்­தி­ருப்­பது போன்­றன 19 ஆம் திருத்­தத்தின் மூலம் ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்கள் தெளி­வாக மாற்றி அமைக்­கப்­பட்­டுள்­ளன.

அது­த­விர, தக­வ­ல­றியும் உரிமை சட்­டமும் 19ஆம் திருத்­தத்தின் இன்­னொரு முக்­கிய விட­ய­மாகும். ஆனாலும், இது­கு­றித்து அநே­க­ருக்குத் தெளி­வில்­லாமல் உள்­ளது. அர­சி­ய­ல­மைப்பின் 14(அ) படி, தங்­களைப் பாதிக்­கக்­கூ­டிய ஏதா­வது செயற்­பா­டுகள், தக­வல்­களை அறிந்­து­கொள்ள அரசு, அமைச்­ச­ரவை, திணைக்­க­ளங்கள், மாகாண சபைச் சட்­டத்தின் கீழான நிறு­வ­னங்கள், உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் மற்றும் சபை­களை அணுகி அதற்­கான முறையில் விண்­ணப்­பித்து, தக­வல்­களைப் பெற்­றுக்­கொள்­ளலாம். அதன்­படி தான் தக­வ­ல­றியும் சட்டம் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

தக­வல்­களை அறிந்­து­கொள்­வற்­கான உரிமைச் சட்டம் பின்னர் சட்­ட­மாக்­கப்­பட்­டுள்ள போதிலும் 19 ஆம் திருத்­தத்தின் மூல­மாக அது ஓர் அடிப்­படை உரி­மை­களில் ஒன்­றாக உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது. அத­னூ­டாகத் தக­வல்­களை அறிந்­து­கொள்­வ­தற்கு அப்பால் பிர­ஜை­களின் உரி­மைகள் பாதிக்­கப்­ப­டும்­போது அதற்­கெ­தி­ராக மீயுயர் நீதி­மன்­றத்தில் அடிப்­படை உரி­மைகள் மீறல் வழக்­கு­களைத் தாக்கல் செய்­யவும் முடி­யு­மாக அமைந்­துள்­ளது. (அத்­த­கைய அடிப்­ப­டையில் தான் கொழும்புத் துறை­முக நகரம் அமைப்­ப­தற்கு எதி­ராக ஓர் அடிப்­படை உரிமை மீறல் வழக்குத் தொட­ரப்­பட்டு விசா­ர­ணையில் உள்­ளது). அத­னூ­டாகத் தக­வ­ல­றியும் சட்­டத்தை மீறிப் பிரஜை ஒரு­வரின் உரி­மை­களை மீறி செயற்­படும் ஒரு­வ­ரி­ட­மி­ருந்து இழப்­பீடு கோரும் உரி­மை­கூடக் கிடைக்­கத்­தக்க வகையில் 19 ஆம் திருத்­தத்தின் மூலம் விரி­வு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

அது­போன்ற இன்­னொரு முக்­கி­ய­மான விடயம் சுயா­தீன ஆணைக்­கு­ழுக்கள் ஸ்தாபிக்­கப்­பட்­டி­ருப்­ப­தாகும். இது 19 இன் மூலம் புதி­தாக ஸ்தாபிக்­கப்­ப­ட­வில்லை. 17 ஆம் திருத்­தத்தின் மூலம் ஸ்தாபிக்­கப்­பட்டு, 18 ஆம் திருத்­தத்தின் மூலம் சுயா­தீ­னத்­தன்மை இல்­லா­ம­லாக்­கப்­பட்­டி­ருந்த இவ்­வா­ணைக்­கு­ழுக்கள் 19 ஆம் திருத்­தத்தின் மூலம் மீண்டும் சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­க­ளாக ஸ்தாபிக்­கப்­பட்­டுள்­ளன. அதன்­படி, ஜனா­தி­பதி தனது அதி­கா­ரங்­களை அர­சி­ய­ல­மைப்பு நிர்­ணய சபை­யோடு பகிர்ந்­து­கொள்ள வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது. சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­களின் தலை­வர்கள் மற்றும் உறுப்­பி­னர்­களை நிய­மிப்­பது, பிர­தம நீதி­ய­ரசர், மீயுயர் நீதி­மன்ற நீதி­ய­ர­சர்கள் உள்­ளிட்ட மேல்­நீ­தி­மன்ற நீதி­ப­தி­களை நிய­மிப்­பது, அரச உயர் பத­வி­க­ளுக்கு ஆட்­களை நிய­மிப்­பது போன்ற விட­யங்கள் யாவும் இந்த 19 ஆவது திருத்­தத்தின் மூல­மான அர­சி­ய­ல­மைப்பு நிர்­ணய சபை ஊடா­கவே மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

இத்­த­கைய ஜனா­தி­பதி அதி­கா­ரங்­களின் பகிர்வின் ஊடாக ஜனா­தி­ப­தியின் கைகள் கட்­டப்­பட்­டுள்­ளமை தெளி­வாகத் தெரி­கி­றது. ஆயினும், அது மிகவும் அவ­சி­ய­மான ஒன்­றே­யாகும். உதா­ர­ண­மாக நாட்டின் பிர­தம நீதி­ய­ரசர் நேர­டி­யாக ஜனா­தி­ப­தியின் தற்­று­ணி­பின்­படி நிய­மிக்­கப்­ப­டு­மி­டத்து அதனால் நீதித்­துறைச் சுயா­தீ­னத்தின் மீது எழக்­கூ­டிய அழுத்­தங்­களைப் புதி­தாகச் சொல்ல வேண்­டி­ய­தில்லை. 19ஆம் திருத்­தத்தின் மூல­மான அர­சி­ய­ல­மைப்பு நிர்­ணய சபை ஊடாக 2015 முதல் செய்­யப்­பட்ட நிய­ம­னங்­களை அவ­தா­னிக்­கும்­போது அப்­ப­த­வி­க­ளுக்கு மிகவும் பொருத்­த­மான, பக்­கச்­சார்­பற்ற நபர்­களே பெரும்­பாலும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர் எனக் காண­மு­டி­கி­றது.

19ஆம் திருத்தம் எவ்­வ­ளவு முக்­கி­யத்­துவம் மிக்­கது என்­பதை மதிப்­பீடு செய்­வ­தற்கு 2015 ஏப்ரல் – 2019 காலப்­ப­கு­தியில் நடந்த நிகழ்­வு­களை அல­சு­வது பொருத்­த­மா­னது. அதில் பிர­தா­ன­மா­னது, 19 இல் குறை­பா­டுகள், தெளி­வின்­மைகள் இருப்­ப­தாக வெளிப்­ப­டாமை ஆகும். தனக்குத் தேவை­யா­ன­ப­டி­யெல்லாம் அதி­கா­ரங்­களைப் பாவிக்க முடி­யா­தென்­பதைத் தெரிந்­து­கொண்ட ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, 19 உட்­பட மொத்த அர­சி­ய­ல­மைப்­பை­யுமே மீறிச்­செ­யற்­பட்டார் என்­பதை அக்­கா­லப்­ப­குதி தெளி­வாகக் காட்­டி­விட்­டது.

19ஆம் திருத்­தத்தைக் கொணர்ந்து செயற்­ப­டுத்­து­வதில் தானே முக்­கிய புள்­ளி­யாகப் பிர­சாரம் செய்­து­வந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, தனது பத­விக்­கா­லத்தின் முடிவில் 19ஆம் திருத்­தத்தின் பரம வைரி­யா­கவே மாறி­விட்டார். 19ஆம் திருத்­தத்தை நீக்­கியே தீர­வேண்­டு­மெனும் நிலைக்கு அவர் தள்­ளப்­பட்­டு­விட்டார். அது­கு­றித்துப் பேசும்­போது, “பிரேத பரி­சோ­தனை செய்­ய­வேண்­டிய ஒரு காலம் வந்­து­விட்­டது. நான்­கரை ஆண்­டுகள் அர­சாங்கம் மோச­மாக இருந்­தது எனச் சொல்­வ­தாயின் அதற்­கான காரணம் 19ஆம் திருத்­தமே ஆகும். 19ஆம் திருத்தம் வந்­தி­ருக்­கா­விட்டால் இவ்­வ­ர­சாங்கம் சிறந்­ததோர் அர­சாங்­க­மாகத் திகழ்ந்­தி­ருக்கும். நானும் பிர­த­மரும் இரண்டு பக்­கங்­க­ளுக்கு இழுக்கும் இழு­பறிச் சண்­டையில் இருந்­த­தாக நாட்டு மக்கள் குற்றம் சாட்­டினர். அவ்­வாறு இரண்டு பக்­கங்­க­ளுக்கு இழு­பறி நிகழக் கார­ண­மாக அமைந்­தது இந்த 19ஆம் திருத்­தமே ஆகும்” எனச் சொன்னார்.

ஜனா­தி­ப­தி­யான தனது அதி­கா­ரங்­களை 19ஆம் திருத்­தத்தின் மூலம் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பறித்துத் தன்னைப் பலப்­ப­டுத்­திக்­கொண்டு சதி­செய்­துள்ளார் எனக் கரு­தியே மைத்­தி­ரி­பால சிறி­சேன இவ்­வாறு கூறினார்.

ஆயினும் நுணுக்­க­மாகப் பரி­சீ­லிக்­கும்­போது 19ஆம் திருத்­தத்தின் மூலம் ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்கள் அதி­க­மாக நீக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கவோ பிர­தமர் மிகவும் அதி­க­மாகப் பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார் என்றோ சொல்ல முடி­யாது. 19ஆம் திருத்­தத்தின் மூல­மாக ஜனா­தி­பதிப் பத­வி­யா­னது வில்­லியம் கோபல்­லாவவின் பெய­ர­ள­வி­லான ஜனா­தி­பதி போல ஆக்­கப்­பட்டு விட்­டது போன்ற கருத்­துக்­களை மக்­க­ளி­டையே முன்­வைப்போர் 19இன் யதார்த்­தத்தைச் சரி­யாக உண­ரா­ம­லேயே இவ்­வாறு பேசு­கின்­றனர்.
அத­னா­லேயே 19 குறித்த சர்ச்­சைகள் செயற்­கை­யாக சித்­த­ிரிக்­கப்­பட்­டவை,

உரு­வாக்­கப்­பட்­டவை என்­கிறோம். ரணில் விக்­கி­ர­ம­சிங்க பலப்­ப­டுத்­தப்­பட்டு விட்டார் எனும் காழ்ப்­பு­ணர்வில் 19ஆம் திருத்தம் பாரி­ய­தொரு சிக்­க­லென ஆக்­கப்­பட்­டி­ருப்­பது ஜனா­தி­பதி சிறி­சே­ன­வி­னால்தான். அதன் விளை­வா­கவே 2018 ஒக்­டோபர் 26 ஆம் திகதி சதி­மு­யற்­சி­யாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நீக்­கப்­பட்டு மஹிந்த ராஜபக் ஷ பிர­த­ம­ராக்­கப்­பட்டார்.

இது நிகழ்ந்­தது 19ஆம் திருத்­தத்­தி­லி­ருந்த குழப்­பத்தால் அல்ல. ஜனா­தி­பதி சிறி­சேன வேண்­டு­மென்றே 19ஆம் திருத்­தத்தை மீறிச் சதி செய்­த­தால்தான் இது நடந்­தது. 19ஆம் திருத்­தத்­திற்கு ஏற்ப, அதா­வது தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்­பின்­படி பிர­த­மரைப் பதவி நீக்கம் செய்யும் அதி­காரம் ஜனா­தி­ப­திக்கு இல்லை. 19ற்கு முன்­புதான் ஜனா­தி­ப­திக்கு அந்த அதி­காரம் இருந்­தது. ஆயினும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அதை மீறிச் செயற்­பட்டார்.

பிர­த­ம­ராக மஹிந்த ராஜபக் ஷவை ஜனா­தி­பதி நிய­மித்த போதிலும் அதற்­கான பெரும்­பான்மைப் பலம் மஹிந்த ராஜபக் ஷவுக்கு நாடா­ளு­மன்­றத்தில் இல்­லாமல் இருந்­ததால் சிறி­சேன, அர­சாங்­கத்தைக் கலைத்­து­விட்டுப் பொதுத் தேர்­த­லுக்குத் திகதி குறிப்­பிட்டார். அதுவும் அர­சி­ய­ல­மைப்­புக்கு எதி­ரான, முற்­றிலும் முர­ணான நட­வ­டிக்­கை­யாகும். அதற்குக் காரணம் 19ஆம் திருத்­தத்தில் இருந்த குழப்­ப­நி­லை­யல்ல. நாடா­ளு­மன்­றத்தைக் கலைத்­தமை தொடர்பில் மீயுயர் நீதி­மன்­றத்தில் தொட­ரப்­பட்ட வழக்கில், “ஜனா­தி­பதி நாடா­ளு­மன்­றத்தைக் கலைத்­தது அர­சி­ய­ல­மைப்பை மீறும் செய­லாகும்” என வழங்­கப்­பட்ட தீர்ப்பு இதை மிகவும் தெளி­வாகப் பிர­க­டனம் செய்­து­விட்­டது. அப்­போது மீயுயர் நீதி­மன்றம் 19 ஆம் திருத்­தத்­தின்­ப­டியே தெளி­வாகத் தீர்ப்பு வழங்­கி­யது.

19ஆம் திருத்­தத்­தின்­படி நாடா­ளு­மன்­ற­மா­னது தொடங்­கப்­பட்ட முதல் தினத்­தி­லி­ருந்து நான்­கரை ஆண்­டுகள் முழுமை அடை­யும்­வரை நாடா­ளு­மன்­றத்தைக் கலைக்கும் அதி­காரம் ஜனா­தி­ப­திக்கு இல்லை. இந்த அடிப்­படைச் சட்­ட­வி­தியைப் படு­மோ­ச­மாக மீறி, அர­சி­ய­ல­மைப்பு சட்­டத்­துக்கு விரோ­த­மாக செயற்­பட்ட ஜனா­தி­பதி 19ஐ விமர்­சிக்கத் தொடங்­கினார். தனக்குத் தேவை­யா­ன­வா­றாக அர­சி­ய­ல­மைப்பை வளைத்­துப்­போட முடி­ய­வில்­லையே எனும் கோபத்­தில்தான் அவர் இப்­ப­டி­யெல்லாம் விமர்­சிக்கத் தொடங்­கினார் என்­ப­துதான் உண்மை. அதனால் 19இல்தான் கோளா­றுள்­ளது எனச் சொல்ல வேண்­டுமா?

நான்­கரை ஆண்­டுகள் கழியும் முன்னர் நாடா­ளு­மன்றம் கலைக்­கப்­பட முடி­யாது எனும் விதி சேர்க்­கப்­பட்­டதே, ஜனா­தி­பதி ஒருவர் தான் நினைத்த மாதிரி நினைத்த நேரத்தில் நாடா­ளு­மன்­றத்தைக் கலைக்க இருந்த அதி­கா­ரத்தை ஜனா­தி­ப­தி­யி­ட­மி­ருந்து பிடுங்­கு­வ­தற்­குத்தான். ஜனா­தி­பதி மக்­க­ளா­ணையைத் தேர்­தலில் பெற்­றி­ருப்­பதைப் போலவே 225 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் மக்­க­ளா­ணையைத் தேர்­தலில் பெற்றே உள்­ளனர். ஜனா­தி­ப­திக்கு இருக்கும் பொறுப்­பு­களும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு இருக்கும் பொறுப்­பு­களும் வித்­தி­யா­ச­மா­னவை. நாடா­ளு­மன்­ற­மென்­பது ஜனா­தி­ப­தியின் கீழுள்ள ஓர் அமைப்­பல்ல. அது முற்­றிலும் வேறான, சுயா­தீ­ன­மான, அதி­காரம் கொண்ட உயர் சபை­யாகும். அந்த அமைப்பை ஜனா­தி­பதி தான் நினைத்­த­வா­றெல்லாம் கலைத்­து­விடும் அதி­காரம் தனக்கு இருக்க வேண்­டு­மென நினைப்­பவர் ஓர் எதேச்­ச­தி­கா­ரியே ஆவார். அவ­ருக்கு / அவ­ளுக்கு அத்­த­கைய மட்­டற்ற அதி­கா­ரங்கள் இருக்க வேண்­டு­மெனச் சொல்­வோரும் அவ்­வா­றா­னதோர் எதேச்­ச­தி­கா­ரியை உரு­வாக்க நினைப்­போரும் எதேச்­ச­தி­கா­ரத்தின் அடி­மை­களே தவிர ஜன­நா­ய­கத்தைப் பாது­காப்போர் அல்லர்.

52 நாள் அர­சி­ய­ல­மைப்புச் சதியின் தோல்­விக்குப் பிறகு விரும்­பியோ விரும்­பா­மலோ மீண்டும் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவைப் பிர­த­ம­ராக நிய­மிக்­கவும் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பரிந்­து­ரைப்­போரை அமைச்­சர்­க­ளாக நிய­மிக்­கவும் சிறி­சேன தள்­ளப்­பட்டார். ஆயினும், அவ்­வாறு செய்­யும்­போ­து­கூட மீண்டும் யாப்பை மீறித் தன்­னிடம் பாது­காப்பு, சட்ட ஒழுங்கு அமைச்­சுக்­க­ளையும் வைத்­துக்­கொண்டார். அதுவும் பட்­ட­வர்த்­த­ன­மான யாப்பு மீற­லாகும். நமது யாப்­பின்­படி ஜனா­தி­பதி எந்­தவோர் அமைச்சுப் பொறுப்­பையும் வைத்­துக்­கொண்­டி­ருக்க முடி­யாது. சிறி­சேன ஜனா­தி­ப­திக்கு மட்டும் வரை­ய­றுக்­கப்­பட்ட வகையில் அவ­ரது காலப்­ப­கு­திக்கு மட்டும் அவர் தன்­வசம் மூன்று அமைச்­சுக்­களை வைத்­தி­ருப்­ப­தற்­கான அனு­ம­திக்­கான ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டி­ருந்­தன.

ஆயினும், அந்த மூன்று அமைச்­சுக்­க­ளுக்குள் பாது­காப்பு அமைச்சும் சட்ட ஒழுங்கு அமைச்சும் அடங்­காது. ஆயினும் யாப்­புக்கு முர­ணாக அவர் இவ்­விரு அமைச்­சுக்­க­ளையும் தன்­வசம் வைத்­துக்­கொண்­டி­ருந்தார். எனினும் அன்று நாட்டில் நில­விய அர­சியல் சூழ்­நிலை கார­ண­மாக அது­கு­றித்து மீண்டும் மீண்டும் சர்ச்­சை­களைத் தொடர விரும்­பா­ததால் ஜனா­தி­பதி, பதவி வில­கும்­வரை அவ்­விரு அமைச்­சுக்­க­ளையும் தன்­வ­சமே வைத்துக் கொண்­டி­ருந்தார்.
புதிய ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவும் இவ்­வாறு பாது­காப்பு அமைச்சைத் தன்­வசம் வைத்­து­கொண்­டி­ருப்­பது அர­சி­ய­ல­மைப்­புக்கு முர­ணா­ன­தே­யாகும். அது­தொ­டர்­பி­லான அர­சி­ய­ல­மைப்பு ஏற்­பா­டுகள் மிகவும் தெளி­வா­னவை. தற்­போ­தைய யாப்­பின்­படி ஜனா­தி­பதி ஒருவர் எந்­தவோர் அமைச்­சையும் தன்­வசம் வைத்­துக்­கொண்­டி­ருக்க அதி­கா­ரமோ அனு­ம­தியோ கிடை­யாது.

19ஆம் திருத்­தத்­தின்­படி, அத்­தி­ருத்தம் நடை­மு­றைக்கு வரும்­போது ஜனா­தி­ப­தி­யாக இருக்கும் நபர் – அதா­வது, அப்­போ­தைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மாத்­திரம் – அவர் பத­வியில் நீடிக்கும் காலத்­துக்கு மாத்­திரம் அரச பாது­காப்பு, மகா­வலி அபி­வி­ருத்தி மற்றும் சுற்­றுச்­சூழல் ஆகிய மூன்று அமைச்­சுக்­களை மட்டும் தன்­வசம் வைத்­தி­ருக்­கவும் அத்­து­றை­களைக் கொண்டு நடத்­து­வ­தற்குத் தேவை­யான ஏனைய துறை­களைத் தன்­னகப் படுத்­திக்­கொள்­ளவும் முடியும்.

இதன்­மூலம் கரு­தப்­ப­டு­வது யாதெனில், அப்­போ­தைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் பிறகு வரக்­கூ­டிய வேறெந்த ஜனா­தி­ப­திக்கும், மீண்டும் சிறி­சே­னவே இரண்டாம் தட­வை­யாக ஜனா­தி­ப­தி­யா­னாலும் அவர் எந்­தவோர் அமைச்­சையும் தன்­வசம் வைத்­தி­ருக்க முடி­யாது என்­ப­தாகும்.

இந்தத் திருத்­தத்­திலே எவ்­வி­த­மான வாத விவா­தங்­களும் இல்லை. அமைச்­ச­ர­வையின் தலை­வ­ரா­கவும், அதில் ஓர் உறுப்­பி­ன­ரா­கவும் ஜனா­தி­பதி இருப்­பா­ரென யாப்பில் சொல்­லப்­ப­டு­வதால் ஜனா­தி­ப­தியும் அமைச்சுப் பொறுப்­பொன்றை வைத்­துக்­கொள்ள முடி­யு­மென சிலர் சொல்­கின்­றனர். ஆயினும் அவ்­வா­றா­ன­தொரு நிலை இருந்­த­போ­திலும் ஜனா­தி­பதி ஒருவர் அமைச்­சொன்றைத் தன்­வசம் வைத்­தி­ருக்­கக்­கூ­டா­தெனும் அபி­லா­ஷையே 19ஆம் திருத்தம் நாடா­ளு­மன்­றத்தில் அங்­கீ­க­ரிக்­கப்­ப­டும்­போது நிலைப்­பா­டாக இருந்­தது. 19ஆம் திருத்­த­மா­னது மீயுயர் நீதி­மன்­றத்தில் சவா­லுக்­குட்­ப­டுத்­தப்­பட்டபோது அவ்­வா­றான அபிப்­பி­ராய பேதங்கள் 19இல் இருப்­ப­தாக நீதி­மன்றம் கரு­த­வில்லை. எனவே, ஜனா­தி­ப­தி­யாக நிய­ம­ன­மாகும் ஆணோ பெண்ணோ அமைச்சுப் பத­வி­யொன்றைத் தன்­வசம் வைத்­துக்­கொண்­டி­ருக்க முடி­யா­தென்­பது தெளி­வா­னது.

யாப்பு விதி 4(ஆ) ‘நாட்டின் பாது­காப்பு உள்­ளிட்ட மக்­களின் நிறை­வேற்று அதி­காரம் ஜனா­தி­ப­தி­யினால் செயற்­ப­டுத்­தப்­பட வேண்டும்’ எனக் குறிப்­பி­டு­வ­தாலும், ஜனா­தி­ப­தியே முப்­ப­டை­களின் தலை­வ­ரா­கவும் இருப்­பா­ரென சொல்­லப்­பட்­டி­ருப்­ப­தாலும் ஜனா­தி­ப­தியே பாது­காப்பு அமைச்­ச­ரா­கவும் இருக்க வேண்­டு­மெ­னவும் சிலர் வாதிக்­கின்­றனர். ஆயினும், ஜனா­தி­பதி நாட்டின் பாது­காப்­பையும் மக்­களின் நிறை­வேற்­ற­தி­கா­ரத்­தையும் கொண்டு நடாத்­துவார் என்­பதன் மூல­மாக அவர் பாது­காப்பு அமைச்­சையும் தன்­வசம் வைத்துக் கொள்ள வேண்­டு­மெனத் தெளி­வா­க­வில்லை என்­பதே உண்­மை­யாகும். முப்­ப­டை­களின் தலை­வ­ரெ­னினும் பாது­காப்பு அமைச்சுப் பதவி அதிலிருந்து வேறுபட்டதாகும். அவ்விரு பதவிகளும் வெவ்வேறானவை, அவையிரண்டும் ஒரே நபர் வசமே இருக்க வேண்டும் என்றோ அது அவசியமென்றோ எந்தக் குறிப்புமே இல்லை.

இவை அனைத்தையும் அலசிப்பார்க்கும்போது, 19ஆம் திருத்தத்தில் எந்தக் குழப்பமோ கோளாறோ இல்லையென்பதும் மிகவும் தெளிவாகிறது. 19ஐக் குறைசொல்லி மக்களிடையே தவறான பிரசாரங்களை முன்னெடுப்போர் அரசியலமைப்பை மீறிச் செயற்படத் தொடங்கித் தோற்றுப் போனோர்களே !
ஜனாதிபதி சிறிசேன தன்னிஷ்டப்படி பிரதமரை நீக்கிவிட முடியாமல்போன காரணத்தால் பிரதமரை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்க வேண்டுமென சிலர் சொல்கின்றனர். ஜனாதிபதி சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைக்கப்போய் அந்த முயற்சியும் தோற்றுப் போனதால்தான், நினைக்கும்போது நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்க வேண்டுமென சிலர் சொல்கின்றனர். இந்தப் பேச்சுக்களிலிருந்து வெளிப்படுவது என்னவென்றால், தனக்குத் தேவையான விதத்தில் கலைத்துவிடக்கூடிய கைப்பொம்மையாக, நாடாளுமன்றத்தை ஆட்டுவிக்கக்கூடிய, தன்னிச்சைப்படி பிரதமரைப் பதவி நீக்கம் செய்து தனக்குத் தேவையான ஒருவரைப் பிரதமராக்கிக் கொள்ளக்கூடிய, நினைத்தவாறெல்லாம் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட 225 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரத்தைப் பறித்து மிதித்துப் பந்தாடக்கூடிய, நாடாளுமன்றத்தை எந்த நேரத்திலும் கலைத்துவிடக்கூடிய எதேச்சதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்க வேண்டும் என்பதா? அவ்வாறான அதிகாரத்தால் உருவாக்கப்படுவது ஜனநாயக ரீதியானதோர் ஆட்சியாளரா? எதேச்சதிகாரியா? என்பதுதான்!

19ஆம் திருத்தத்தை முழுவதுமாக நீக்குவதனூடாக, அதன்மூலம் உருவாக்கப்பட்டுள்ள சுயாதீன ஆணைக்குழுக்களும் இல்லாமலாக்கப்பட்டு நீதித்துறை உள்ளிட்ட சகல துறைகளுக்கும் நிறுவனங்களுக்கும் தனக்குத் தேவைப்பட்டோரைத் தனது கைப்பொம்மைகளாக நியமித்துக்கொள்ளும் அதிகாரம் ஜனாதிபதிக்குக் கிடைத்துவிடும். அவ்வாறான எதேச்சதிகார ஆட்சிக் கட்டமைப்பொன்று ஏற்படுவதைத் தடுக்க வேண்டுமெனில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தற்போதைய அரசாங்கத்துக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் நாடாளுமன்றத்தில் கிடைப்பதைத் தடுத்தேயாக வேண்டும் !-Vidivelli

  • நன்றி: அனித்தா சிங்கள வார இதழ்
  • 22.12.2019
  • தமிழில்: அஜாஸ் முஹம்மத்

Leave A Reply

Your email address will not be published.