தொடர்ந்தும் சீரற்ற காலநிலை

34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு ,16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முகாம்களில் ,6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை ,பல நீர் தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

0 628

நாட்டின் பல பாகங்களிலும் கடந்த ஓரிரு வாரங்களாக நிலவும் சீரற்ற காலநிலை இன்றும் தொடரும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இம் மாதத்தில் மாத்திரம் கடும் மழை, வெள்ளம், மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களால் மூவர் உயிரிழந்துள்ளதோடு, 9962 குடும்பங்களைச் சேர்ந்த 34, 842 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்தங்களால் 49 குடி­யி­ருப்­புக்கள் முழு­மை­யா­கவும் 1017 குடி­யி­ருப்­புக்கள் பகு­தி­ய­ள­விலும் சேத­ம­டைந்­துள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது. அத்­தோடு அனர்த்­தங்­களால் பாதிக்­கப்­பட்­டுள்ள 4904 குடும்­பங்­களைச் சேர்ந்த 16 ஆயி­ரத்து 892 பேர் 120 நலன்­புரி முகாம்­களில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளனர். 

மாத்­தளை, கண்டி, நுவ­ரெ­லியா, பதுளை, மொன­ரா­கலை மற்றும் இரத்­தி­ன­புரி ஆகிய மாவட்­டங்­க­ளுக்கு மண்­ச­ரிவு அபாய எச்­ச­ரிக்கை விடுக்­கப்பட் டுள்­ள­தோடு, சில மாவட்­டங்­களில் 150– – 200 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதி­வாகக் கூடும் என்றும் தெரிவிக் கப்­பட்­டுள்­ளது.

மழை வீழ்ச்சி

நாட்டில் நிலவும் கடும் மழை­யு­ட­னான சீரற்ற கால­நிலை இன்றும் தொடரும் என்று இலங்கை வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. அநு­ரா­த­புரம், பொல­ன­றுவை, திரு­கோ­ண­மலை மற்றும் வவு­னியா ஆகிய மாவட்­டங்­களில் கடும் மழை பெய்யும் என்றும் தெரிவிக் கப்­பட்­டுள்­ளது.

இம் மாவட்­டங்­களில் 150 -– 200 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதி­வாகக் கூடும். அதே வேளை மேல், சப்­ர­க­முவ மற்றும் ஊவா மாகா­ணங்­க­ளிலும், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, நுவ­ரெ­லியா, மாத்­தளை, புத்­தளம் மற்றும் மன்னார் ஆகிய மாவட்­டங்­களில் 100 –- 150 மில்லி மீற்றர் மழை வீழ்ச்­சியும் பதி­வாகும் என்று கூறப்­பட்­டுள்­ளது. இப் பிர­தே­சங்கள் தவிர தென் மாகா­ணத்­திலும் கண்டி, குரு­நாகல் , முல்­லைத்­தீவு மற்றும் கிளி­நொச்சி ஆகிய மாவட்­டங்­களில் 100 மில்லி மீற்­றரை அண்­மித்த மழை வீழ்ச்சி பதி­வாகும்.

மன்னார், வவு­னியா, திரு­கோ­ண­மலை, அநு­ரா­த­புரம், புத்­தளம், பொல­ன­றுவை, மாத்­தளை, மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, கம்­பஹா, கேகாலை, கொழும்பு, களுத்­துறை, இரத்­தி­ன­புரி, பதுளை, நுவ­ரெ­லியா, மொன­ரா­கலை, அம்­பாந்­தோட்டை, காலி மற்றும் மாத்­தறை ஆகிய மாவட்­டங்­க­ளுக்கு பலத்த மழை தொடர்பில் கடும் எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

மண்­ச­ரிவு எச்­ச­ரிக்கை

மாத்­தளை, கண்டி, நுவ­ரெ­லியா, பதுளை, மொன­ரா­கலை மற்றும் இரத்­தி­ன­புரி ஆகிய மாவட்­டங்­க­ளுக்கு மண்­ச­ரிவு அபாய எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

மாத்­தளை

மாத்­தளை மாவட்­டத்தில் அம்­பன்­கங்க கோரள, உக்கு­வெள, பல்­லே­பொல, மாத்­தளை, லக்­கல – பல்­லே­கம, யட­வத்த, நாவுல, வீல்­க­முவ, இறத்­தோட்டை ஆகிய பிர­தே­சங்­க­ளுக்கு மண் சரிவு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

கண்டி

கண்டி மாவட்­டத்தில் பாத­ஹே­வா­ஹெட்ட , உடு­தும்­பர மற்றும் மெத­தும்­பர ஆகிய பிர­தே­சங்­க­ளுக்கு மண் சரிவு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

நுவ­ரெ­லியா

நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் ஹங்­கு­ராங்­கெத்த மற்றும் வலப்­பனை பிர­தே­சங்­க­ளுக்கு மண்சரிவு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

பதுளை

பதுளை மாவட்­டத்தில் பதுளை, பண்­டா­ர­வளை, வெலி­மட, ஹாலி­எல, ஊவா­ப­ர­ண­கம, எல்ல, ஹல்­து­முல்ல, பசரை , அப்­பு­தளை, சொர­ன­தோட்ட மற்றும் லுனு­கம ஆகிய பிர­தே­சங்­க­ளுக்கு மண்சரிவு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

மொன­ரா­கலை

மொன­ரா­கலை மாவட்­டத்தில் படல்­கும்­புர, மெத­கம, பிபில ஆகிய பிர­தே­சங்­க­ளுக்கு மண் சரிவு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

இரத்­தி­ன­புரி

இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் பலாங்­கொடை மற்றும் இம்­புல்பே ஆகிய பிர­தே­சங்­க­ளுக்கு மண் சரிவு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

ஆறு­களின் நீர்­மட்டம்

மீஓயா

மீஓயா கல்­க­முவ ஆற்றின் நீர்­மட்டம் உயர்­வ­டையும் பட்­சத்தில் வெள்ளம் ஏற்­படக் கூடிய வாய்ப்­புக்கள் காணப்­ப­டு­வ­தாக எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. இதன் நீர்­மட்டம் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை வரை 4.84 மீற்­ற­ராக காணப்­பட்­டது. இந்­நீர்­மட்டம் 5.94 மீற்றர் வரை அதி­க­ரித்தால் சிறி­ய­ள­வி­லான வெள்­ளமும் 7.00 மீற்றர் வரை அதி­க­ரித்தால் பாரி­ய­ள­வி­லான வெள்­ளமும் ஏற்­படக் கூடும். 

மாணிக்­க­கங்கை

மாணிக்க கங்­கையின் நீர்­மட்டம் நேற்று மாலை வரை 3.50 மீற்­ற­ராகக் காணப்­பட்­டது. இந்­நீர்­மட்டம் 4.00 மீற்றர் வரை அதி­க­ரித்தால் சிறி­ய­ள­வி­லான வெள்­ளமும் 5.00 மீற்றர் வரை அதி­க­ரித்தால் பாரி­ய­ள­வி­லான வெள்­ளமும் ஏற்­படக் கூடும்.

மகா­வலி கங்கை

மகா­வலி கங்­கையின் மன்­னம்­பி­டிய ஆற்றின் நீர் மட்டம் நேற்று மாலை வரை 3.50 மீற்­ற­ராகக் காணப்­பட்­டது. இந்­நீர்­மட்டம் 3.70 மீற்­ற­ராக அதி­க­ரிக்கும் போது சிறி­ய­ள­வி­லான வெள்­ளமும், 4.00 மீற்றர் வரை அதி­க­ரிக்கும் போது பாரி­ய­ள­வி­லான வெள்­ளமும் ஏற்­படும்.

வான்­க­த­வுகள் திறப்பு

கவு­டுல்ல நீர் தேக்­கத்தின் இரு வான்­க­த­வுகள் நேற்றை தினம் திறக்­கப்­பட்­டுள்­ளன.

பொலன்­ன­று­வையில் பராக்­கி­ரம சமுத்­தி­ரத்தின் 4 வான்­க­த­வுகள் திறக்­கப்­பட்­டுள்­ளன.

அநு­ரா­த­பு­ரத்தில் இரா­ஜாங்­கனை நீர்­தேக்­கத்தின் 30 வான்­க­த­வு­களில் 22 உம், அங்­க­முவ நீர்­தேக்­கத்தின் இரு வான்­க­த­வு­களும், கலா வாவியின் இரு வான்­க­த­வு­களும் , மஹ­க­ன­த­ராவ நீர்­தேக்­கத்தின் இரு வான்­க­த­வு­களும், நாச்­சா­துவ நீர்­தேக்­கத்தின் 6 வான்­க­த­வு­களும், யான் ஓயா நீர்­தேக்­கத்தின் 5 வான்­க­த­வு­களும் திறக்­கப்­பட்­டுள்­ளன.

புத்­த­ளத்தில் தப்­போவ நீர்­தேக்­கத்தின் 20 வான்­க­த­வு­களும், இங்­கி­னி­மிட்­டிய நீர்­தேக்­கத்தின் 4 வான்­க­த­வு­களும் திறக்­கப்­பட்­டுள்­ளன.

குரு­நா­கலில் தெதுரு ஓயாவின் 8 வான்­க­த­வு­களும், அம்­ப­கொ­லவெல நீர்­தேக்­கத்தின் 2 வான்­க­த­வு­களும், ஹக்­வட்­டுன ஓயாவின் 3 வான்­க­த­வு­களும் திறக்­கப்­பட்­டுள்­ளன.

அம்­பா­றையில் ரம்­புக்­கன்­ஓ­யாவின் 2 வான்­க­த­வு­களும் திறக்­கப்­பட்­டுள்­ளன.
அம்­பாந்தோட்டையில் லுணு­கம்­வெ­ஹர நீர்த்­தேக்­கத்தின் 6 வான்­க­த­வு­களும், மவ்­வார நீர்­தேக்­கத்தின் 2 வான்­க­த­வு­களும், முரு­தவெல நீர்­தேக்­கத்தின் 1 வான்­க­தவும், வெஹெ­ர­கல நீர்­தேக்­கத்தின் 6 வான்­க­த­வு­களும், பத­கி­ரிய நீர்த்­தேக்­கத்தின் 10 வான்­க­த­வு­களும், உட­வ­லவ நீர்­தேக்­கத்தின் 3 வான்­க­த­வு­களும் திறக்­கப்­பட்­டுள்­ளன.

மட்­டக்­க­ளப்பில் உன்­னிச்­ச­கு­ளத்தின் 3 வான்­க­த­வு­களும் திறக்­கப்­பட்­டுள்­ளன.
மாத்­தளை மாவட்­டத்தில் மொர­க­ஹா­கந்தை நீர்­தே­கத்தின் வான்­க­த­வு­களும் திறக்­கப்­பட்­டுள்­ளன.

பாதிப்­புக்கள்

பதுளை

பதுளை மாவட்­டத்தில் கடும் மழை மற்றும் மண்­ச­ரி­வினால் 650 குடும்­பங்­களைச் சேர்ந்த 2565 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். இங்கு 11 குடி­யி­ருப்­புக்கள் முற்­றா­கவும் 302 குடி­யி­ருப்­புக்கள் பகு­தி­ய­ள­விலும் சேத­மi­டைந்­துள்­ளன. இவ்­வாறு பாதிக்­கப்­பட்ட 327 குடும்­பங்­களைச் சேர்ந்த 1308 பேர் 17 நலன்­புரி முகாம்­களில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

மொன­ரா­கலை

மொன­ரா­கலை மாவட்­டத்தில் வெள்­ளித்­தினால் 973 குடும்­பங்­களைச் சேர்ந்த 3350 பேர் பாதிக்­கப்­பட்டு ள்ளதோடு, 4 குடி­யி­ருப்­புக்கள் பகு­தி­ய­ள­விலும் 163 குடி­யி­ருப்­புக்கள் முழு­மை­யா­கவும் சேத­ம­டைந்­துள்­ளன. பாதிக்­கப்­பட்ட 633 குடும்­பங்­களைச் சேர்ந்த 2362 பேர் 11 நலன்­புரி முகாம்­களில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

மட்­டக்­க­ளப்பு

மட்­டக்­க­ளப்பில் வெள்­ளத்­தினால் 1043 குடும்­பங்­களைச் சேர்ந்த 3293 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தோடு, ஒரு குடி­யி­ருப்பு முழு­மை­யா­கவும், 3 குடி­யி­ருப்­புக்கள் பகு­தி­ய­ள­விலும் சேம­டைந்­துள்­ளன. பாதிக்­கப்­பட்ட 677 குடும்­பங்­களைச் சேர்ந்த 1997 பேர் 8 நலன்­புரி முகாம்­களில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

அம்­பாறை

அம்­பா­றையில் வெள்­ளத்­தினால் 1633 குடும்­பங்­களைச் சேர்ந்த 5690 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். இங்கு 9 குடி­யி­ருப்­புக்கள் முழு­மை­யா­கவும், 68 குடி­யி­ருப்­புக்கள் பகு­தி­ய­ள­விலும் சேம­டைந்­துள்­ளன. பாதிக்­கப்­பட்ட 105 குடும்­பங்­களைச் சேர்ந்த 389 பேர் நலன்­புரி முகா­மொன்றில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

கண்டி

கண்­டியில் மண்­ச­ரிவு கடும் காற்று என்­ப­வற்றால் 93 குடும்­பங்­களைச் சேர்ந்த 347 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். இங்கு ஒரு குடி­யி­ருப்பு முழு­மை­யா­கவும், 13 குடி­யி­ருப்­புக்கள் பகு­தி­ய­ள­விலும் சேம­டைந்­துள்­ளன. பாதிக்­கப்­பட்ட 47 குடும்­பங்­களைச் சேர்ந்த 181 பேர் 2 நலன்­புரி முகாம்­களில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

நுவ­ரெ­லியா

நுவ­ரெ­லி­யாவில் மண்­ச­ரிவு, பாறை இடிந்து வீழ்ந்­தமை உள்­ளிட்ட அனர்த்­தங்­களால் 115 குடும்­பங்­களைச் சேர்ந்த 389 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். இங்கு 2 வீடுகள் முழு­மை­யா­கவும் 73 வீடுகள் பகு­தி­ய­ள­விலும் சேத­ம­டைந்­துள்­ளன. மேலும் பாதிக்­கப்­பட்ட 152 குடும்­பங்­களைச் சேர்ந்த 433 பேர் 15 பாது­காப்­பான முகாம்­களில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

மாத்­தளை

மாத்­தளை மாவட்­டம் கடும் மழை மற்றும் காற்று என்­ப­வற்றால் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. இங்கு 484 குடும்­பங்­களைச் சேர்ந்த 1592 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். அத்­தோடு ஒரு குடி­யி­ருப்பு முழு­மை­யா­கவும் 225 குடி­யி­ருப்­புக்கள் பகு­தி­ய­ள­விலும் சேத­ம­டைந்­துள்­ளன. அனர்த்­தங்­களில் பாதிக்­கப்­பட்ட 111 குடும்­பங்­களைச் சேர்ந்த 414 பேர் 7 பாது­காப்­பான முகாம்­களில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

அம்­பாந்­தோட்டை

அம்­பாந்­தோட்­டையில் வெள்­ளத்­தினால் 829 குடும்­பங்­களைச் சேர்ந்த 3362 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தோடு 9 வீடுகள் பகு­தி­ய­ளவில் சேத­ம­டைந்­துள்­ளன.

குரு­நாகல்

குருநாகல் மாவட்­டத்தில் வெள்­ளத்­தினால் 311 குடும்­பங்­களைச் சேர்ந்த 939 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தோடு ஒருவர் உயி­ரி­ழந்­துள்ளார். அத்­தோடு 4 வீடுகள் பகு­தி­ய­ளவில் சேத­ம­டைந்­துள்­ளன. வெள்­ளத்தில் பாதிக்­கப்­பட்ட 124 குடும்­பங்­களைச் சேர்ந்த 327 பேர் 5 பாது­காப்­பான முகாம்­களில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

புத்­தளம்

புத்­த­ளத்தில் கடும் மழை கார­ண­மாக 1777 குடும்­பங்­களைச் சேர்ந்த 6218 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 29 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. பாதிப்புக்களுக்கு உள்ளான 1184 குடும்பங்களைச் சேர்ந்த 4263 பேர் 15 பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கேகாலை

கேகாலையில் கடும் காற்று, மழை, மின்னல் தாக்கம் மற்றும் மரம் முறிந்து வீழ்ந்தமையால் 6 குடும்பங்களைச் சேர்ந்த 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 6 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

அநுராதபுரம்

அநுராதபுரத்தில் வெள்ளத்தினால் 1272 குடும்பங்களைச் சேர்ந்த 4341 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 குடியிருப்புக்கள் முழுமையாகவும் 34 குடியிருப்புக்கள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. பாதிப்புக்களுக்கு உள்ளான 1022 குடும்பங்களைச் சேர்ந்த 3367 பேர் 26 பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பொலனறுவை

பொலனறுவையில் வெள்ளத்தினால் 776 குடும்பங்களைச் சேர்ந்த 2731 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 4 குடியிருப்புக்கள் முழுமையாகவும் 88 குடியிருப்புக்கள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்த 522 குடும்பங்களைச் சேர்ந்த 1851 பேர் 13 பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.