பூஜிக்கும் போதே சாப்பிடும் பேய்

0 1,149

புதிய ஜனா­தி­பதி அதி­கா­ரத்­திற்கு வந்து பெரும்­பான்­மை­யற்ற அர­சாங்கம் ஒன்றை அமைத்து ஒரு வாரம் தான் ஆகி­றது. ‘பேட் மேன், வேன் மேன்’, ‘கெட்ட மனிதன், வேன் மனிதன்’ என்­றெல்லாம் தேர்தல் மேடை­களில் முழங்­கிய வார்த்­தைகள் யதார்த்­த­மா­னவை என்­பது இப்­போதே நிரூ­ப­ண­மா­கி­யுள்­ளது. அதுவும் சர்வ சாதா­ர­ண­மான இடத்­தி­லல்ல. இராஜதந்­திர முக்­கி­யத்­துவம் வாய்ந்த இடத்­தி­லாகும்.

மீண்டும் வராது என்று கூறிய, வெள்ளை வேனும் வந்து விட்­டது. கடத்­தப்­பட்­டி­ருப்­பதோ இங்­குள்ள சுவிட்­சர்­லாந்து நாட்டு தூத­ரக அலு­வ­ல­கத்தில் வீஸா அதி­கா­ரி­யாக கட­மை­யாற்றும் ஒரு­வரே. குறித்த அதி­கா­ரி­யான அப்­பெண்ணைக் கடத்­திய கொலைக் கும்பல் அச்­சு­றுத்தி அப்­பெண்­ணி­ட­மி­ருந்த கைப்­பே­சியைக் கைப்­பற்றி, பல­வந்­த­மாக அதனை இயக்­கி­யுள்­ளனர். அதன்­போது அதில் பதி­வா­கி­யி­ருந்த தக­வல்­க­ளையும் பெற்­றுள்­ளனர். அவற்றுள் அண்­மையில் சுவிட்­சர்­லாந்தில் அர­சியல் புக­லிடம் பெற்ற நபர் மற்றும் அவ­ருக்கு உத­வி­யவர் குறித்த விப­ரங்­களும் அடங்­கி­யி­ருந்­துள்­ளன.

சுவிட்­சர்­லாந்தில் அண்­மையில் அர­சியல் புக­லிடம் பெற்­றுள்ள இர­க­சிய பொலிஸ் பரி­சோ­தகர் நிஷாந்த அல்விஸ் தொடர்­பான விப­ரங்­களைக் கண்­ட­றி­வ­தற்கே கடத்தல் குழு­வுக்கு தேவை­யாக இருந்­த­தாக நியூயோர்க் டைம்ஸ் பத்­தி­ரிகை அறிக்கை வெளி­யிட்­டி­ருந்­தது.

ஜனா­தி­பதித் தேர்­தலின் போது ராஜ­பக்­ ­ஷாக்­களின் பிர­சாரப் பணி­க­ளுக்­காகசெயற்­பட்டுக் கொண்­டி­ருந்த இணை­யத்­தளம் ஒன்று மேற்­படி கடத்தல் சம்­பவம் நடந்த தினத்­தன்றே இது தொடர்­பாக அறிக்­கை­யொன்றை வெளி­யிட்­டி­ருந்­தது. அதில் நிஷாந்த சில்­வா­வுக்கு சுவிஸ் செல்­வ­தற்கு கிரி­சாந்த குரே என்­ப­வரே உத­வி­யுள்ளார் என்று குறிப்­பிட்­டுள்­ளது. இவர், சிறி­சே­ன–­ரணில் ஆட்­சியின் போது லேக்­ஹவுஸ் நிறு­வ­னத்தின் தலை­வ­ராக அமர்த்­தப்­பட்­டி­ருந்­த­வ­ராவார்.

கடத்தல் சம்­பவம் இடம்­பெ­று­வ­தற்கு முதல் நாள், பெல்­லன்­வில விகா­ரையில் நடந்த களி­யாட்ட நிகழ்­வொன்றில் கலந்து கொண்­டி­ருந்த கோத்­தா­பய ராஜபக் ஷ, பொலிஸ் பரி­சோ­தகர் நிஷாந்த சில்வா நாட்டை விட்டு வெளி­யே­றி­யமை தொடர்­பாக மிகவும் ஆவே­ச­மாகப் பேசும் பாங்கு இறு­வட்டு பதி­வொன்றில் காண முடி­கி­றது. தம்மை விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­திய ஒரு மனி­த­னா­கவே பொலிஸ் பரி­சோ­தகர் நிஷாந்த சில்­வாவை ஜனா­தி­பதி கோத்தா நோக்­கி­யுள்ளார். பிரகீத் எக்­னெ­லி­கொட கடத்­தப்­பட்டு கொலை செய்­யப்­பட்­டமை, கப்பம் கோரு­வ­தற்­காக கடற்­படை அதி­கா­ரி­களால் 11 வாலி­பர்கள் கடத்திச் செல்­லப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்­டமை போன்ற விசா­ர­ணை­களே நிஷாந்த சில்­வா­வினால் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன. தமக்­கென்றே மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணை­க­ளா­கவே ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ இவ்­வி­சா­ர­ணை­களைக் கரு­து­கிறார்.

சுவிஸ் தூத­ரக வீஸா அதி­காரி கடத்­தப்­பட்­டதும் மேற்­படி தூத­ரக அலு­வ­ல­கத்தில் விப­ரங்கள் திரட்­டப்­பட்­டதும் தற்­போது சர்­வ­தேச மயப்­ப­டுத்­தப்­பட்ட தலைப்புச் செய்­தி­க­ளா­கி­யுள்­ளன. சுவிட்­சர்­லாந்­தி­லுள்ள இலங்கைத் தூது­வரை, கடந்த மாதம் 27 ஆம் திகதி பர்ன் நக­ரி­லுள்ள வெளி­நாட்டு விவ­கார அமைச்­சுக்கு அழைத்து உரை­யா­டி­யுள்­ளனர்.

அதேபோன்றே கொழும்­பி­லுள்ள சுவிஸ் தூதுவர், எமது பிர­தமர் மற்றும் வெளி­நாட்­ட­மைச்சர் ஆகி­யோரைச் சந்­தித்து, மேற்­படி கடத்தல் விவ­காரம் தொடர்­பாக கார­ணி­களை முன்­வைத்­துள்­ளனர். சர்­வ­தேச ஊட­கங்கள், கடந்த ஒரு வாரத்­திற்குள் இடம்­பெற்ற மற்­றொரு அடக்கு முறை­யொன்­றா­கவே இச்­சம்­பவம் குறித்து அறிக்­கை­யிட்­டுள்­ளன.

மிகவும் துரி­த­க­தியில் இத்­த­கைய அடக்­கு­முறை நிலை­மை­யொன்று உரு­வாகும் என்று எவரும் எதிர்­பார்க்­காத நிலை­யிலே இச்­சம்­பவம் நிகழ்ந்­துள்­ளதால் எல்லோர் மத்­தி­யிலும் பேசு­பொ­ரு­ளா­கவும் பலரும் வினா எழுப்பும் விட­ய­மா­கவும் இச்­சம்­பவம் மாறி­யுள்­ளது.

உதா­ர­ணத்­திற்கு சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு ஆத­ரவு வழங்­கிய இணையத் தள­மொன்றை சோத­னைக்­குட்­ப­டுத்­து­வ­தற்­காக கடந்த 26 ஆம் திகதி, காலம் கடந்த விறாந்து ஒன்­றுடன் 14 பொலிஸ் அதி­கா­ரி­களும் நான்கு சிவில் நபர்­களும் குறித்த இணை­யத்­தள நிறு­வ­னத்­திற்குள் பிர­வே­சித்­துள்­ளனர். மேலும் அதே போன்­ற­தொரு இணை­யத்­த­ளத்தின் செய்தி அறி­விப்­பாளர் ஒரு­வ­ரிடம் இர­க­சியப் பொலிஸார் சுமார் 8 மணி­நேரம் விசா­ரணை நடத்­தி­யுள்­ளனர். அரச தமிழ் அலை வரி­சை­யொன்றின் ஊட­க­வி­ய­லா­ள­ருக்கு ஐக்­கிய தேசியக் கட்சி தொடர்­பான எந்த நிகழ்ச்சி நிரல்­களும் நடத்­தக்­கூ­டா­தென அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டுள்­ளது. கொழும்பில் அமைந்­துள்ள அரச சார்­பற்ற மனித உரி­மைகள் அமைப்பு அலு­வ­ல­கத்­திற்குள் நுழைந்த பொலிஸ் புல­னாய்வுப் பிரி­வினர் அங்­கி­ருந்த ஏரா­ள­மான ஆவ­ணங்­களை எடுத்துச் சென்­றுள்­ளனர். அதே தினம் மற்­றொரு அரச சார்­பற்ற அமைப்­பொன்­றுக்குள் சென்று அங்கு தொண்டர் அடிப்­ப­டையில் உத­வி­யா­ள­ராகப் பணி­யாற்றிக் கொண்­டி­ருந்த சுவிஸ் பிரஜை ஒருவர் தொடர்­பாக விசா­ரணை செய்­துள்­ளனர்.

தற்­போது காலிக்கு இட­மாற்றம் செய்­யப்­பட்­டுள்ள குற்­ற­வியல் விசா­ரணைத் திணைக்­க­ளத்தின் சிரேஷ்ட பொலிஸ் பரி­சோ­தகர் ஷானி அபே­சே­கர, அவ­ரா­கவே நினைத்து விசா­ர­ணை­களை மேற்­கொள்­ளக்­கூ­டிய ஒருவர் என்றே ஜனா­தி­பதி ராஜ­பக் ஷ பெல்­லன்­வில மகிழ்ச்சிக் களி­யாட்ட வைப­வத்தில் ஷானி அபே­சேக்­கர குறித்து அறி­முகம் செய்­துள்ளார்.

அண்மைக் கால­மாக இந்­நாட்டின் பொலிஸ் சேவையில் கட­மை­யாற்­றிய மிகவும் திறமைவாய்ந்த ஓர் உயர் அதி­கா­ரி­யா­கவே ஷானி அபே­சேக்­க­ரவைக் குறிப்­பி­டலாம். அவர் விசா­ரணை அதி­கா­ரி­யாக இருந்து மேற்­கொண்ட குற்­ற­வியல் விசா­ர­ணை­களில் சில கீழே தரப்­ப­டு­கின்­றன.

பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குண­வர்­த­னவின் வழக்கு, இரண்டு கோடி ரூபா கப்பம் கோரப்­பட்டு எய்ட்கன்ஸ் ஸ்பென்ஸ் தலைவர் விக்­கி­ர­ம­சிங்க கடத்­தப்­பட்­டமை தொடர்­பான விடயம், ரோயல் பாக் இவொன் படு­கொலை, கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் எல்.ரீ.ரீ.ஈ மேற்­கொண்ட தாக்­குதல், சந்­தி­ரிகா குமா­ர­துங்க மீது நடத்­தப்­பட்ட குண்டுத் தாக்­குதல், சரத் பொன்­சேக்கா மீதான கொலை முயற்சி, மைத்­தி­ரி­பால சிறி­சேன மீது இலக்கு வைக்­கப்­பட்ட இரண்டு குண்டுத் தாக்­கு­தல்கள், அங்­கு­லான வாலி­பர்­களின் படு­கொலை, பாரத லக் ஷ்மன் கொலை…. போன்­ற­வற்றைக் குறிப்­பி­டலாம்.

அதன் பின்னர் பரி­சோ­தனை மீளாய்வு அதி­கா­ரி­யாக இவர் தலைமை வகித்து மேற்­கொண்ட குற்­ற­வியல் பரி­சோ­த­னை­களில் சில…

பிரகீத் எக்­னெ­லி­கொட கடத்தல், உபாலி தென்­னக்கோன் மீது தொடுக்­கப்­பட்ட தாக்­குதல், கீத் நொயர் கடத்தல், போத்­தல ஜயந்த கடத்தல் மற்றும் சித்­திர­வ­தைக்­குள்­ளாக்­கப்­பட்ட சம்­பவம், நாமல் பெரேரா கடத்தல் முயற்சி, விமல் வீர­வன்­ஸவின் கட­வுச்­சீட்டு மோசடி, ரது­பஸ்­வ­லயில் நடத்­தப்­பட்ட படு­கொ­லைகள், ரொஷான் சானக படு­கொலை, கொட்­டாஞ்­சேனை 11 வாலி­பர்கள் கடத்தி படு­கொலை செய்­யப்­பட்­டமை, சம்பத் லக்மால் கொலை, தாஜுதீன் கொலை, கோட்டை புகை­யி­ரத நிலை­யத்தின் முன்­னி­ருந்து செஞ்­சி­லுவைச் சங்கப் பணி­யா­ளர்கள் இருவர் கடத்திச் செல்­லப்­பட்ட விடயம், வெலிக்­கடைச் சிறைச்­சாலை கைதி­களின் கூட்டுக் கொலை, ஷாபி சஹாப்தீன் தொடர்­பான முறைப்­பா­டுகள், மூதூரில் அரச சார்­பற்ற பணி­யா­ளர்கள் 16 பேர்­க­ளது படு­கொ­லைகள் போன்­ற­வற்றைக் குறிப்­பி­டலாம்.

மேற்­படி விசா­ர­ணை­களில் இரண்டு விசா­ர­ணைகள் குறித்து தற்­போது விமர்­ச­னங்கள் எழுந்து கொண்­டி­ருக்­கின்­றன. டாக்டர் ஷாபி சஹாப்தீன் மற்றும் பாரத லக் ஷ்மன் கொலை வழக்கு என்­ப­னவே அவை­யி­ரண்­டு­மாகும்.

ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு முன்னர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சார்பு பத்­தி­ரி­கை­யா­க­வி­ருந்த ‘தின­மின’ தற்­போது அது ராஜபக் ஷ சார்பு பத்­தி­ரி­கை­யா­கி­யுள்­ளது. கடந்த 27 ஆம் திகதி தின­மின பத்­தி­ரிகை வெளி­யிட்ட அறிக்­கை­யொன்றில் துமிந்த சில்வா மீது தொடுக்­கப்­பட்ட துப்­பாக்கிச் சூட்டுச் சம்­பவம் குறித்து விசா­ர­ணை­யேதும் மேற்­கொள்­ளாது, நீதி­மன்­றத்­திற்கு மூடி­ம­றைக்­கப்­பட்­ட­தாக அப்­பத்­தி­ரி­கை­ய­றிக்கை குறிப்­பிட்­டுள்­ளது. அது வரு­மாறு:

‘குற்­ற­வியல் விசா­ரணை திணைக்­க­ளத்தின் முன்னாள் பணிப்­பாளர் ஷானி அபே­சே­கர ஊடாக துமிந்த சில்வா தொடர்­பான விசா­ரணை மேற்­கொள்­ளப்­பட்­டது. அதன்­போது துமிந்த சில்­வா­வுக்கு இழைக்­கப்­பட்ட பாதிப்­புக்கள் குறித்து கவனம் செலுத்­தாது, அடுத்த தரப்பின் முறைப்­பாடு தொடர்­பாக மட்­டுமே விசா­ரணை நடத்தி நீதி­மன்­றத்­திற்கு கார­ணிகள் மூடி மறைக்­கப்­பட்டே தக­வல்கள் வெளி­யி­டப்­பட்­டுள்­ள­தா­கவும் அதனால் முறை­யான நீதி­யொன்றைப் பெற்றுத் தரு­மாறு அர­சாங்­கத்­திடம் முறைப்­பா­டொன்று முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. இதற்­க­மைய இம்­மு­றைப்­பாடு குறித்து அரசு கவனம் செலுத்தி வரு­கி­றது’ என்று அப்­பத்­தி­ரிகை அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

பாரத லக் ஷ்மன் கொலை தொடர்­பாக வழங்­கப்­பட்­டுள்ள வழக்கின் தீர்ப்பு பிழை­யா­னது என்ற குற்­றச்­சாட்டும் ஷானி அபே­சே­கர மீதே சுமத்­தப்­பட்­டி­ருப்­பது மேற்­கண்ட தகவல் மூலம் தெரி­ய­வ­ரு­கி­றது. ஆனாலும் துமிந்த சில்­வா­வுக்கு வழங்­கப்­பட்­டுள்ள மரண தண்­டனைத் தீர்ப்போ உயர் நீதி­மன்­றத்தின் ஐந்து நீதி­ப­திகள் உள்­ள­டங்­கிய நீதிச் சபை­யூ­டாக உறுதி செய்து வழங்­கப்­பட்ட தீர்ப்­பாகும். மேற்­படி வழக்கு விசா­ர­ணையின் போது இந்­நாட்டின் தலை­சி­றந்த வழக்­க­றி­ஞர்கள் ஐவர் துமிந்த சில்வா சார்­பாக ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர். இப்­ப­டிப்­பட்ட முக்­கி­ய­மான வழக்­கொன்றில் இன்று தின­மின பத்­தி­ரிகை சுட்­டிக்­காட்­டு­கின்ற குறை­பா­டு­களை அப்­போ­தி­ருந்த சட்­ட­வல்­லு­நர்­களால் ஏன் கண்­டு­கொள்­ளப்­ப­ட­வில்லை?

இதற்­கான காரணம் மிகவும் இல­கு­வா­ன­தொன்­றாகும். மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சியின்போது இடம்­பெற்ற அநீதி அட்­டூ­ழி­யங்­களை மூடி மறைக்கும் தேவை இப்­போ­துள்­ளது. ஊட­க­வி­ய­லா­ளர்­களின் படு­கொ­லைகள் உள்­ளிட்ட இதர குற்­ற­வியல் தொடர்­பாக பொலிஸ் குற்­ற­வியல் விசா­ரணைத் திணைக்­க­ளத்­தினால் கண்­ட­றி­யப்­பட்ட காரண, கார­ணி­களைக் குழி தோண்டிப் புதைப்­ப­தற்­காக ஷானி அபே­சே­கர மீது வஞ்சம் தீர்த்துக் கொள்­வ­தொன்றே இவர்­க­ளது இலக்­காகும். இச்­செ­யற்­பா­டா­னது ஒரே கல்­லெ­றியில் இரு பற­வை­களை வீழ்த்­து­வ­தற்­கொப்­பா­ன­தாகும். ஒன்று துமிந்த சில்­வாவின் விடு­தலை. மற்­றை­யது சிரேஷ்ட பொலிஸ் பரி­சோ­தகர் ஷானி அபே­சே­கர மீது தண்­டனை விதிப்­ப­தாகும்.

டாக்டர் ஷாபி சம்­பந்­த­மாக முன்­வைக்­கப்­பட்­டுள்ள விசா­ரணை தொடர்­பாக பேசு­வ­தற்கு எமக்கு ஜனா­தி­பதி ராஜபக் ஷவின் சட்­டத்­த­ர­ணி­யான அலி­சப்­ரி­யிடம் பொறுப்பு சாட்ட முடியும். ஏனெனில் டாக்டர் ஷாபி மீதான குற்­றச்­சாட்­டுக்கள் அலி சப்­ரி­யா­லேயே நிரா­க­ரிக்­கப்­பட்­டதால் அதனை அவர் ஈடு­செய்வார்.

ராஜபக் ஷ காலத்தில் இழைக்­கப்­பட்ட குற்­ற­வியல் தொடர்­பாக விசா­ரணை நடத்­திய சிரேஷ்ட பொலிஸ் அதி­காரி இட­மாற்­றப்­பட்டு அவ­ரது இடத்­திற்கு பிறி­தொ­ருவர் அமர்த்­தப்­பட்­டுள்ளார். ஆனால் அவரோ சில காலம் மஹிந்த ராஜபக் ஷவின் பாது­காப்பு அதி­கா­ரி­யாக பணி­யாற்­றி­யவர். இவ­ரது நிய­மனம் குறித்து இது­வரை ஐக்­கிய தேசியக் கட்­சியோ அல்­லது மக்கள் விடு­தலை முன்­ன­ணியோ வாய் திறக்­க­வில்லை. ஊடக அமைப்­புக்கள் மூன்று மாத்­தி­ரமே இச்­செ­யற்­பாட்­டுக்கு உத்­தி­யோ­கப்­பூர்­வ­மாக கண்­டனம் தெரி­வித்­துள்­ளன.

ராஜபக் ஷவா­தி­களின் இணை­யத்­த­ளத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள தக­வ­லுக்­க­மைய எழுந்து வரும் மேற்­படி நிகழ்ச்சி நிரல் முடி­வுக்குக் கொண்டு வரப்­ப­டலாம். இதன் மூலம் தெரி­ய­வ­ரு­வது எதிர்­வரும் ஐந்து வரு­டங்­க­ளுக்கு அரச ஊழி­யர்­க­ளுக்கு சீலம் அனுஷ்­டிப்­புக்­கான துணி விநி­யோக ஊழல் போன்­ற­ன­வற்­றுக்கு கதவு திறக்­கப்­பட்­டுள்­ளது என்­ப­தே­யாகும்.

அரசின் தீர்­மா­னங்­களை முறையாக செயற்­ப­டுத்­து­கின்ற அரச அதி­கா­ரி­க­ளுக்கு எதிராக சட்டரீதியாக நடவடிக்கைகள் எடுப்பதைத் தடுக்கும் வகையிலும் அவர்களைப் பாதுகாக்கும் வகையிலுமான புதிய சட்டமூலம் ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளது.

மேற்படி சட்டமூலம் அமுலுக்கு வரும் பட்சத்தில் எந்தவொரு அரச அதிகாரிக்கும் அரச தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கெதிராக இந்நாட்டு நீதிமன்றம் எதிலும் வழக்கு விசாரிக்கவோ தண்டனை விதிக்கவோ பூரணமாக முடியாது போகும்.

இத்தகைய சட்ட மூலமொன்றைக் கொண்டு வருவதற்குப் பின்னணியாக அமைந்தது, கடந்த 2010 – 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக் காலத்தில் சீலம் அனுஷ்டிக்கும் துணி அவரது அரசால் விநியோகிக்கப்பட்டது. மேற்படி அரசின் தீர்மானத்தை ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் தொலைத்தொடர்பு ஆணையாளர் நாயகம் அனுஷ பெல்பிடவும் செயற்படுத்தினர். அதற்காக இருவருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டதாலேயே இச்சட்ட மூலம் கொண்டு வரப்படவுள்ளது.

லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட ஆகிய இரு அதிகாரிகளுக்கும் தண்டனை விதிக்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பு, எதிர்வரும் மாதங்களில் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படும் சட்டமூலத்தின் மூலமாக செயலிழக்கப்பட்டு விடும்.
ஒழுக்கமுள்ள சமூகமொன்று இப்படித்தான் கட்டியெழுப்பப்படப் போகிறது.-Vidivelli

நன்றி: ராவய 29.11.2019

  • சிங்களத்தில்: சுனந்த தேசப்பிரிய
    தமிழில்: ஏ.எல்.எம்.சத்தார்

Leave A Reply

Your email address will not be published.