ஐ.தே.க இனி மாற்றுவழி பற்றி சிந்திக்க வேண்டும்

மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம்

0 708

ஜனா­தி­பதித் தேர்­தலில் தோல்­வி­ய­டைந்த ஐக்­கிய தேசியக் கட்சி இனி அதன் கூட்­ட­ணி­களை பாது­காத்­துக்­கொள்ள அதன் கட்­ட­மைப்பில் மாற்­று­வழி பற்றி அவ­சியம் சிந்­தித்­தாக வேண்டும். இதுவே இன்­றைய தேசிய அர­சி­யலின் புதிய சமன்­பா­டா­கு­மென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்­துள்ளார்.

நிந்­த­வூரில் நடை­பெற்ற கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்கும் ஆத­ர­வா­ளர்­க­ளுக்­கு­மான பொதுக் கூட்­டத்­தி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

கடந்த ஜனா­தி­பதித் தேர்­த­லின்­போது சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு ஆத­ர­வ­ளித்து எமது கரங்­களைப் பலப்­ப­டுத்­தி­யுள்­ளனர். இந்த ஒற்­று­மை­யா­னது இப்­போது சமூக வலைத்­த­ளங்­களில் சிலரால் ஆபத்­தா­ன­தென்று விமர்­சிக்­கின்­றனர்.

ஆனால் சிறு­பான்­மை­யி­ன­ரான தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் மாற்றுத் தரப்­புக்கு எதி­ராக ஏன் வாக்­க­ளித்­தனர் என்­பது பற்றி இங்கு சிந்­திக்கத் தவ­றி­விட்­டனர்.

கடந்த 2010 ஆம் ஆண்டில் நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­த­லிலும் வடக்கு, கிழக்கு, மலை­யகம் உட்­பட மஹிந்த ராஜபக் ஷவுக்கு எதி­ரா­கவே வாக்­க­ளித்­தனர். 2015 இல் இப்­போக்கு மேலும் பல­ம­டைந்­தி­ருந்­தது. ஆக, தொடர்ச்­சி­யாக நடை­பெற்ற 3 ஜனா­தி­பதித் தேர்­த­லிலும் சிறு­பான்மை மக்கள் ஆணை­யா­னது மஹிந்த ராஜபக் ஷவுக்கு எதி­ரா­கவே இருந்து வந்­தது. இந்தப் போக்­கினை இப்­போ­தைக்கு ஆபத்­தா­ன­தென்று கூறு­வது வேடிக்­கை­யா­னது. ஆனால் இதனை வென்ற தரப்­பா­கிய மஹிந்த ராஜபக் ஷ அணி­யி­னரே ஆழ­மாகப் பரி­சீ­லிக்க வேண்டும்.

அத­னைப்போல் இந்தக் கட்­டத்தில் ஐக்­கிய தேசியக் கட்சி 2015ஆம் ஆண்டு மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு கிடைத்த வெற்­றி­யையும் பற்றி ஆழ­மாக சிந்­திக்க வேண்டும். மைத்­திரி வெற்­றி­ய­டைந்­தது சிறு­பான்மை மக்­களின் ஏகோ­பித்த வாக்­கு­க­ளி­னா­லே­யாகும்.

ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன என்ற அமைப்பு தற்­போ­தைய அர­சி­யலில் சிங்­களப் பேரி­ன­வா­தத்தின் முக­வ­ரா­கவே பார்க்­கப்­ப­டு­கின்­றது. அவர்கள் சிறு­பான்­மை­யி­னரின் வாக்­குகள் இல்­லாமல் வெற்­றி­பெ­று­வதைப் பற்றி கடந்த 5 ஆண்­டு­க­ளாக சிந்­தித்து வந்­துள்­ளனர்.

ஆனால், ஐக்­கிய தேசிய கட்­சி­யா­னது சிங்­களப் பெரும்­பான்­மையின் ஆத­ரவு தமக்கு ஏன் கிடைக்­க­வில்லை என்­பது பற்றி சிந்­தித்து நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை. மாறாக மஹிந்த மற்றும் கோத்­தா­பய ஆகியோர் தனியே நின்று வெற்­றி­ய­டையும் வைராக்­கி­யத்­துடன் இந்தத் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்­ளனர்.

இந்­நி­லைமை தொடர்ந்தால் மட்­டுமே சிறு­பான்­மை­யி­னங்­க­ளுக்கு ஆபத்­தா­னது என்­பதைத் தான் நாம் புரிந்­து­கொள்ள வேண்டும். ஆனால் அவ­ருடன் இருந்த சிறு­பான்­மையைச் சேர்ந்த ஒரு கும்பல் இந்தத் தேர்­தலில் படு­தோல்வி அடைந்­த­வர்­க­ளாவர். எனினும், அவர்­களே பட்­டாசு கொளுத்தி மகிழ்­கி­றார்கள். ஆனால் நம்­மு­டைய பிராந்­தி­யங்­களில் ஒற்­று­மையின் மூலம் நாம் வெற்­றி­ய­டைந்­துள்­ளதை மறந்து நம்மில் சிலர் சோர்­வ­டைந்­துள்­ளனர்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிளவு என்­பது தற்­போது அடுத்த பிரச்­சி­னை­யாக உரு­வா­கி­யுள்­ளது. மக்­களின் உணர்­வு­களும் இனி ரணி­லோடு வர­வேண்டாம் என கட்­ட­ளை­யி­டு­கின்­றது. தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பும்­கூட ஐக்­கிய தேசியக் கட்சி தங்கள் குழப்­பங்­களை தீர்க்­கா­து­விட்டால் மீதியை தாங்கள் மஹிந்த ராஜபக் ஷவுடன் பேசிக்­கொள்­வ­தாகக் குறிப்­பிட்­டுள்­ளது. ஆகவே கட்­சிக்குள் ஏற்­பட்­டுள்ள இந்தப் பிளவை அவர்கள் சரி­செய்­தாக வேண்டும்.

எவ்­வா­றா­யினும், சிறு­பான்மை மக்­களின் உணர்­வு­களை புதிய ஜனா­தி­பதி நன்கு புரிந்­து­கொண்டு தனது அடுத்­த­கட்ட அர­சி­யலின் புதிய வியூ­கத்தை திட்­ட­மிட்­டாக வேண்டும். அது­மாத்­தி­ர­மின்றி சிறு­பான்மை அர­சியல் அமைப்­புக்­களும் தங்­க­ளுக்­கான அடுத்­த­கட்ட அர­சி­யலின் புதிய வியூ­கங்­களை தடு­மாற்­ற­மின்றி திட்­ட­மிட்­டாக வேண்டும். அதுவே விவே­க­மான அர­சியல் வழி­மு­றை­யாக இருக்க முடி­யுமே தவிர சர­ணா­கதி அர­சி­யலைச் செய்ய முடி­யாது. சிறு­பான்­மை­யி­னரைப் பொறுத்­த­வ­ரையில் சர­ணா­கதி அர­சி­யலைத் தவிர்த்து ஆரோக்­கி­ய­மான இயக்க அர­சியல் வாய்ப்­புக்கள் பற்றி சிந்­திக்க வேண்டும்.

பதி­லாக மாற்­ற­மான முடி­வு­களை எடுத்­தி­ருக்க வேண்­டு­மென்­பது கேவ­ல­மா­ன­தாகும்.

முதலில் ஐக்­கிய தேசியக் கட்சி தன்­னு­டைய தலை­மைத்­துவ மாற்றம் பற்றி தீர்க்­க­மான முடி­வு­களை எடுக்கட்டும். அதன் பின்னர் சிறுபான்மை அடுத்தகட்ட அரசியல் பற்றியும் அடுத்த தேர்தலில் தனித்தா, பிரிந்தா அல்லது கூட்டுச் சேர்ந்தா என்பதை சிந்திக்க முடியும். விகிதாசார தேர்தல் முறையின் உச்சக்கட்ட பயனையும் முஸ்லிம்களின் காப்பீடு தொடர்பான உச்சகட்ட ஊர்ஜிதப்படுத்தல் தொடர்பிலும் நாம் திட்டமிடல் வேண்டும். இந்த செயற்பாட்டில் நம்மிடமிருந்து பிரிந்து சென்றவர்களை இணைத்துக்கொண்டு நம் பயணத்தை தொடருதல் வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.-Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.