உலக முஸ்­லிம்­களின் இதயம் பலஸ்தீன்

0 1,575

ஏ.எல்.எம்.றிஸ்வி (CGO)
காத்­தான்­குடி ஆசி­ரிய மத்­திய நிலையம்

பலஸ்­தீன ஒரு­மைப்­பாட்டு தினம் இன்று அனுஷ்­டிக்­கப்­ப­டு­வ­தை­யொட்டி இக்­கட்­டுரை பிர­சு­ர­மா­கின்­றது.

இன்­றுடன் முஸ்­லிம்­களின் புனித பூமி­யான பலஸ்தீன் இஸ்­ரே­லினால் ஆக்­கி­ர­மிப்­புக்­குள்­ளாக்­கப்­பட்டு 70 வரு­டங்கள் நிறை­வ­டை­கின்­றன. 1948 மே மாதம் 15ஆம் திகதி சர்­வ­தேச முஸ்­லிம்­களின் துக்க தின­மாகும். அதா­வது, எமது முதல் கிப்­லா­வான பைத்துல் முக்­கத்தஸ் அமையப் பெற்­றுள்ள புனித தல­மான பலஸ்தீன் நாட்­டினை உலகில் அடை­யா­ள­மின்றி இருந்த இஸ்ரேல் கப­டத்­த­ன­மாக சுவீ­க­ரிப்புச் செய்த தினமே இத்­தி­ன­மாகும்.

முஸ்லிம் உம்­மாவின் முதல் கிப்­லாவும், மூன்­றா­வது புனி­தஸ்­த­ல­மு­மான பைத்துல் முகத்­த­ஸினை, மஸ்­ஜிதுல் அக்­ஸாவை இன்­று­வரை இஸ்­ரே­லிய இரா­ணுவம் பல முறைகள் ஆக்­கி­ர­மிப்புச் செய்து துவசம் செய்­துள்­ளது. இதே­வேளை இன்று வரை இஸ்ரேல் இரா­ணு­வத்­தி­னரே முஸ்­லிம்­களின் முதல் கிப்­லா­வினை தமது கட்­டுப்­பாட்டின் கீழ் வைத்­துள்­ளனர்.

இலங்கை மற்றும் சர்­வ­தே­ச­மெங்கும் பலஸ்தீன் மக்­களின் துன்ப நிகழ்­வி­னையும், அவர்கள் யூத சியோ­னிஸ்­டு­களால் தமது சொந்த இடத்­தினை விட்டு விரட்­டி­ய­டிப்புச் செய்­யப்­பட்­ட­தையும் நினைவு கூர்ந்து கடந்த 15 மே மாதம் நக்பா தினம் கொண்­டா­டப்­பட்­டது. உல­க­ளவில் பலஸ்­தீன மக்கள் தமது உடை­மைகள், உற­வுகள், சொந்­தங்கள், உயிர்­களை தொலைத்து நிற்­கின்ற நிலையில் அவர்­களின் உணர்­வு­க­ளோடு இரண்­டறக் கலக்­கின்றோம் என்று பறை­சாற்­றவே சர்­வ­தே­ச­மெங்­கு­முள்ள முஸ்லிம் உம்மத் இத்­தி­னத்­தினை கொண்­டா­டு­கின்­றது.

அதே­வேளை, இன்று 29, நவம்பர் மாதத்­தினை ஐக்­கிய நாடுகள் சபை­யா­னது சர்­வ­தேச பலஸ்தீன் மக்­களின் ஒரு­மைப்­பாட்டு தின­மாக (International Day of Solidarity with the Palestinian People) பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்­ள­மையும் இங்கு குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இன்­றைய இந்த முக்­கி­யத்­து­வ­மிக்க தினத்தில் பலஸ்தீன் வர­லாற்றின் அறி­முகம் பற்றி சிறிது நோக்­குவோம்.

தள அமை­விடம்

பலஸ்தீன், ஜோர்தான், லெபனான், சிரியா போன்ற நாடு­களை உள்­ள­டக்­கிய நிலப்­பி­ர­தே­சமே ‘ஷா சாம்­ராஜ்யம்’ என அழைக்­கப்­ப­டு­கின்­றது. ஷாம் நாட்டின் தென்­மேற்குப் பிர­தே­சமே பலஸ்தீன் புனித பூமி­யாகும். ஆசி­யாவின் மேற்குப் புறத்தில் மத்­திய தரைக்­க­டலில் அமைந்­துள்­ளது. ஆசி­யா­வி­னதும் ஆபி­ரிக்­கா­வி­னதும் இணைப்புக் கேந்­தி­ர­மாக இது அமைந்­துள்­ளது.

பலஸ்தீன் எல்­லைகள்

வடக்­காக லெபனான் நிலப் பிர­தே­சமும் வட கிழக்­காக சிரி­யாவும் மற்றும் கிழக்­காக ஜோர்தான், தெற்­காக எகிப்தும் அமைந்­துள்­ளன.

பலஸ்தீன் பூமி முஸ்லிம் உம்­மாவின் உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட பூர்­வீகம்

பலஸ்தீன் பிர­தேசம் உலகின் நாக­ரிக வர­லாற்றில் மிகப் புரா­த­ன­மான அரீஹா (ஜெரிக்கோ) என்ற பிர­தே­ச­மாகும். வர­லாற்று ஆய்­வ­றிக்­கை­க­ளின்­படி கி.மு.8000ஆம் ஆண்­ட­ளவில் இப்­பி­ர­தே­சத்தின் வர­லாறு அமை­யப்­பெற்­றுள்­ளது என்ற தக­வல்கள் காணப்­ப­டு­கின்­றன. ஆனால் இன்றைய நவீன தொல்­பொருள் ஆய்­வு­க­ளின்­படி கி.மு.9000 ஆண்­டு­களில் இப்­பி­ர­தேசத்தில் மனி­தர்­களின் வாழ்­வா­தாரம் மற்றும் விவ­சாய நட­வ­டிக்­கைகள் இடம்­பெற்­றுள்­ளன என்று கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

“கன்ஆன் தேசம்” என்ற புரா­தனப் பெய­ரினைக் கொண்டே பலஸ்தீன் பூமி ஆரம்­ப­கா­லங்­களில் அனைத்து மக்­க­ளாலும் அறி­யப்­பட்­டது. இப்­பி­ர­தே­சத்தின் புரா­தன குடிகள் தமது தேசத்தின் பெயரின் மூலம் “கன்­ஆ­னியர்” என்றே அழைக்­கப்­பட்­டனர். இவர்­களும் “ஜஸீ­ரதுல் அரப்” எனும் அரபுப் பிர­தே­சத்தின் தீப­கற்­பத்­தி­லி­ருந்து இங்கு கி.மு. 3000 வரு­டங்­க­ளுக்கு முன்­ன­ரான காலப்­ப­கு­தியில் வந்து குடி­யே­றி­ய­வர்கள். இன்­றைய வர­லாற்று ஆய்­வா­ளர்­களின் ஆய்­வு­க­ளின்­படி கன்­ஆ­னி­யர்­கள்தான் இன்­றுள்ள பலஸ்­தீ­னர்­க­ளாவர். காலப்­போக்கில் மத்­திய தரைக்­க­டலின் கிழக்குப் பிர­தே­ச­வா­சி­களும் இங்கு குடி­யே­றினர். இவர்­கள்தான் அன்­றைய அரபுக் கோத்­திர சமூ­கத்­த­வர்­க­ளு­மாவர். பின்னர் இஸ்­லாத்தின் வரு­கையின் பிற்­பாடு இக்­கோத்­தி­ரத்­த­வர்கள் இஸ்­லாத்­தினை தமது புனித மத­மாக ஏற்­றுக்­கொண்­டனர். அறபு மொழி­யி­னையும் தமது தாய்­மொ­ழி­யாக இவர்கள் ஏற்று பேசத்­தொ­டங்­கினர். பலஸ்தீன் பிர­தேசம் இஸ்­லாத்தின் புனித பூமி என்­ப­தற்­கான அடை­யா­ளங்கள் ஹிஜ்ரி 15 முதல் இன்­று­வரை காணப்­ப­டு­கின்­றது.

புனித பூமியின் போராட்ட வர­லாறு

அரபு நாடு­களின் எண்ணெய் வளத்­தினை அப­க­ரிப்­ப­தற்கும், அவற்­றினை தனது கண்­கா­ணிப்பின் கீழ் நிலை நிறுத்­திக்­கொள்­வ­தற்கும் அமெ­ரிக்­கா­விற்கு ஒரு குழு­வினர் தேவைப்­பட்­டனர். இதற்­கி­டையே பிரிட்டிஷ் ஏகா­தி­பத்­திய உரு­வாக்­கத்தின் கார­ண­மாக உல­கெங்கும் எடுப்பார் கைப்­பிள்­ளை­க­ளாக மதிப்­பற்­றுக்­கி­டந்த யூதர்­களை இங்கு சதி­வ­லையின் மூலம் குடி­யேற்­றி­யது. இதனால் இருப்­பிற்­கான இடமும் வள­மான எண்ணெய் வயல்­களைக் கொண்ட நாடு­களின் தூவா­னமும் இஸ்ரேல் என்ற நாட்­டிற்கு கிடைக்­கப்­பெ­று­கின்­றது. தம்மை குடி­யேற்­றிய விசு­வா­சத்­திற்கு வேலை செய்­ப­வர்­க­ளாக இவர்கள் காலப்­போக்கில் மாறு­கின்­றனர். இவர்­களை இங்கு அமரச் செய்­த­வர்­களின் நோக்­கமும் நிறை­வே­று­கின்­றது.

பலஸ்­தீனின் இன்­றைய நிலை

பேரா­சி­ரியர் எட்வார்ட் ஸைத் சர்­வ­தேச அரங்கில் பலஸ்­தீ­னத்தின் விடி­வுக்­காக குரல் கொடுத்­த­வ­ராவார். இவர் “ஒரு நாடு கைப்­பற்­றப்­பட்டு அங்கு வாழும் மக்கள் கூட்டம் அடி­மை­யாக்­கப்­பட்­ட­வுடன் அம்­மக்­களை இழி­வா­ன­வர்­க­ளா­கவும், வர­லாறு அற்­ற­வர்­க­ளா­கவும் ஆக்­கு­வது ஆக்­கி­ர­மிப்­பா­ளர்கள் தொடர்ந்து கடைப்­பி­டிக்கும் ஒரு வழி­முறை” என்றார். இந்த அவல நிலையே பலஸ்தீன் மக்­க­ளுக்கு இன்று நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றது.

இன்று உலகில் எந்­த­வொரு மக்­களும் இது­வரை அனு­ப­வித்­தி­ராத சொல்­லொணாத் துய­ரங்­களை இங்கு வாழ்­கின்­ற­வர்கள் எதிர்­கொள்­கின்­றனர். தமது சொந்த வீடு தன் மேல் இடிந்து விழும். சிறு­வர்கள் என்ற பரா­பட்­ச­மின்றி குழந்­தைகள் கைதா­கு­கின்­றனர். துப்­பாக்­கியின் முன் பெண்கள், குழந்­தை­ககள், வயோ­தி­பர்கள் என்ற வித்­தி­யா­ச­மின்றி சுட்­டுத்­தள்­ளப்­ப­டுவர். ஆனால் அவர்­க­ளது தூய ஈமான் அவர்­களை அசையச் செய்­யாது. இன்று சிறை­களில் சிறார்கள் 8000 பேர் கைதி­க­ளாக உள்­ளனர். மருத்­துவ வச­திக்­காக செல்ல முடி­யாது.

 உலகின் மெத்­தனப் போக்கு

இன்று பலஸ்தீன் மக்கள் கடந்­தத 70 வரு­டங்­க­ளாக இஸ்­ரேலின் ஆக்­கி­ர­மிப்பால் பாதிப்­புற்­றுள்­ள­மை­யினை கண்டும் காணா­த­வர்­க­ளாக உலகம் செயற்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றது. நாளாந்தம் அங்கு நடை­பெ­று­கின்ற நிகழ்­வு­களை ஒரு­சில ஊட­கங்கள் வாயி­லாகப் பார்க்­கின்­ற­போது நாம் ஒரு நாக­ரிக உல­கில்தான் வாழ்­கின்­றோமா? என்ற கேள்­வி­யினை எம்மை நோக்­கியே கேட்க வேண்­டி­ய­வர்­க­ளாக உள்ளோம்.

பலஸ்­தீன நிலம் யூதர்­களின் சியோ­னிஸ்­டு­களின் மூதா­தையர் பூமி. இதில் அமை­தி­யா­கவும், பாது­காப்­பா­கவும் வாழ இவர்­க­ளுக்கு உரி­மை­யுண்டு என சவூ­திய இள­வ­ரசர் முஹம்மத் ஸல்மான் கூறி­யுள்ளார். அதே­வேளை, சவூதி – இஸ்ரேல் பொரு­ளா­தார மற்றும் ராஜ­தந்­திர உற­வுகள் மலரும் மங்­க­ள­க­ர­மான வாய்ப்­புக்­களும் கனிந்­துள்­ள­தா­கவும் தனது விசு­வா­சத்தை வெளிப்­ப­டுத்தி ஒட்­டு­மொத்த முஸ்லிம் உம்­மாவின் சாபத்­திற்கு ஆளா­கி­யுள்ளார். இத­னை­விட வெட்­கக்­கே­டான செயல் உலகில் எங்­கு­மி­ருக்­காது என்­ப­துவே இஸ்­லா­மிய அர­சியல் ஆய்­வா­ளர்­களின் கருத்­தாகும்.

குற்­ற­மற்று குற்றம் செய்யும் இஸ்ரேல்

இஸ்ரேல் தான் செய்யும் குற்­றங்­களை மறைப்­ப­தற்கும், தண்­டிப்­ப­தற்கும் எவரும் இல்­லை­யென்ற நிலையில் தான்­தோன்­றித்­த­ன­மாக உலக அரங்கில் செயற்­ப­டு­கின்­றது. இஸ்ரேல் இழைக்­கின்ற அநி­யா­யங்­க­ளுக்கு எதி­ராக உலக அரங்கில் துருக்­கியின் அர்­து­கானை விட வேறு எவரும் குரல் கொடுக்­க­வில்லை எனலாம்.

தான் என்ன போர்க்­குற்­றங்கள் புரிந்­த­போதும் தனக்கு விசா­ரணை இல்லை என்றே கரு­திக்­கொண்­டி­ருக்­கின்­றது இஸ்ரேல். ஊட­கங்கள் எதுவும் தனது இரும்புத் திரை­யினை விலக்­காத அள­விற்கு வேலி­ய­மைத்து செயற்­ப­டு­கின்­றன. ஐ.நா. சபை­யா­னது தனது கட­மைக்கு வாய்­வழிக் கண்­ட­னத்­தோடு மாத்­திரம் நின்­று­வி­டு­கி­றது.

பலஸ்தீன் மக்­களின் அவல ஓலங்­களை காது சாய்க்­கா­மலே உலகம் செவி­டா­கி­விட்­டது. அனைத்து நிகழ்­வு­க­ளையும் திட்­ட­மிட்டு இஸ்ரேல் அரங்­கேற்­றிக்­கொண்­டி­ருக்­கின்­றது. தற்­பா­து­காப்பு நடாத்தும் அப்­பாவி பலஸ்­தீன சிறார்கள் குற்­ற­வா­ளிகள், பயங்­க­ர­வா­திகள் என்று மேற்­கத்­தைய ஊட­கங்கள் முத்­திரை குத்­து­கின்­றன. ட்ரம்ப் குருட்­டுத்­த­ன­மாக அறிக்கை விடு­கின்றார். இஸ்­ரே­லுக்கு இரண்டு பில்­லி­யனை வழங்கும் வொஷிங்டன், பலஸ்தீனர்களின் உயிர்களின் மதிப்பை கணக்கெடுப்பதில்லை.

மனித வரலாறு இதுபோன்றதொரு போராட்டத்தினை இதுவரை கண்டிராது. துப்பாக்கி அரக்கர் கூட்டம் ஒருபுறம் , மறுபுறம் யுத்த கவசங்கள். ஆனால் இவை யாவற்றின் முன்னே கற்களோடும், ஈமானிய இறை நாமத்தின் உச்சரிப்போடும் அப்பாவிச் சிறுவர்கள். இறை நிராகரிப்பாளன் ஆப்ரஹாவின் பெரும் யானைப் படைகளை அபாபீல் பறவைகளைக் கொண்டு அழித்தொழித்த இறைவன், பத்ர் யுத்தத்தில் மலக்குகளைக் கொண்டு உதவியளித்த இறைவன் அவனது புனித பூமியினை மீட்டெடுக்கும் சக்தியினை இவர்களுக்கு வழங்குவான் என்பதுவே எமது ஈமானின் எதிர்பார்ப்பாகும்.

இறைவா எமது பலஸ்தீன் மக்களின் விடிவுக்காய் உனது உதவிக் கரத்தினை நீட்டிடுவாயாக! ஆப்ரஹாவின் யானைப் படையினை அபாபீல் பறவைகளைக் கொண்டு அழித்தொழித்த இறைவன் நீயே! பத்ர் யுத்தத்தில் மலக்குகளைக் கொண்டு உதவியளித்த இறைவன் நீயே! எனவே, எங்களது பலஸ்தீன் மக்களுக்கும் இதுபோன்ற உதவியினை வழங்கிடுவாயாக!
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.