தமிழ் முஸ்லிம் மக்களையும் இணைத்து பயணியுங்கள்

பிரதமர் மஹிந்தவிற்கு ராமஞ்ச பீடாதிபதி அறிவுரை

0 1,246

சிங்­கள பெளத்த பெரும்­பான்மை ஆத­ரவில் ஆட்சி அமைத்­தாலும் தமிழ், முஸ்லிம் மக்­களை இணைத்­துக்­கொண்டு பய­ணிக்கும் முயற்­சி­களை முன்­னெ­டுக்க வேண்­டு­மென பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷவிற்கு ராமஞ்ச பீடா­தி­பதி அறி­வுரை வழங்­கி­யுள்ளார்.

பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ நேற்று காலை தல­தா­மா­ளிகை வழி­பாட்டில் ஈடு­பட்ட நிலையில் ராமஞ்ச பீட வழி­பாட்­டிலும் ஈடு­பட்டார். இதன்­போதே பிர­த­ம­ருக்கு ராமஞ்ச பீடா­தி­பதி நாபான்னே பேம­சிறி தேரர் இந்த அறி­வு­ரை­களை வழங்­கினார்.

அவர் கூறு­கையில்,

இந்த நாட்டில் தேசி­யத்­திற்கு ஏதேனும் அழி­வுகள் இடம்­பெறும் நிலையில் அவற்றில் இருந்து காப்­பாற்றும் பொருத்­த­மான தலை­வர்கள் உரு­வாகும் அதிஷ்டம் எமது நாட்­டிற்கு உள்­ளது. இப்­போதும் நாடு இரண்­டாக பிள­வு­பட இருந்த நிலையில், சர்­வ­தேச உடன்­ப­டிக்­கைகள் மற்றும் அர­சி­ய­ல­மைப்பின் மூல­மாக நாடு பிள­வு­ப­ட­வி­ருந்த நிலை­யில்தான் இந்த அர­சியல் மாற்றம் உரு­வாகி உங்­களின் தலை­மைத்­துவம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இதில் சிங்­கள பெளத்த பெரும்­பான்மை ஆத­ரவு உங்­க­ளுக்கு கிடைத்து உங்­களின் வெற்றி உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் ஏனைய இனத்­த­வரும் இனியும் பிள­வு­பட்டு நிற்­காது சிங்­கள மக்­க­ளுடன் இணைந்து பய­ணிக்க வேண்டும். ஆனால் இன்­னமும் அவ்­வா­றான எந்த முயற்­சி­களும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வதை காண­மு­டி­யா­துள்­ளது.

தமிழர், முஸ்­லிம்கள் என தனித்து பார்க்­காது அனை­வரும் இலங்­கை­யர்கள் என்ற உணர்­வுடன் செயற்­பட அவர்­க­ளையும் இணைத்­துக்­கொள்ள வேண்டும்.

இந்த செய்­தியை அவர்­க­ளிடம் கொண்­டு­சேர்க்க வேண்டும். உண்­மையில் இப்­போ­துதான் நல்லாட்சி ஒன்று உருவாக்கப் பட்டுள்ளதாக உணர முடிகின்றது. ஆகவே நாட்டுக்கும் மக்களுக்கும் ஏற்ற ஆட்சியொன்று உருவாக்க நீங்கள் முன்வர வேண்டுமென அவர் கூறினார். -Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.