எமது ஆட்சியில் ஹக்கீம் ரிஷாதுக்கு இடமில்லை

மஹிந்த தலைமையில் புதிய அரசாங்கம் என்கிறார் தினேஷ்

0 1,377

ஜனா­தி­பதி தேர்தல் தோல்­வி­யுடன் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு அர­சாங்­கத்தை கொண்­டு­ந­டத்த முடி­யாது என்­பது உறு­தி­யா­கி­விட்­டது. வெகு விரைவில் மஹிந்த ராஜபக் ஷவின் தலை­மையில் புதிய அர­சாங்­கத்தை அமைப்போம் எனக் குறிப்பிட்ட தினேஷ் குண­வர்­தன எம்.பி. தாம் அமைக்கும் புதிய அர­சாங்­கத்தில் ரிஷாத், – ஹக்கீம் ஆகி­யோ­ருக்கு இடம் கொடுக்­கப்­போ­வ­தில்லை எனவும் கூறினார்.

அர­சியல் நெருக்­கடி நிலை­மைகள் தொடர்­கின்ற நிலையில் புதிய அர­சாங்கம் அமைப்­பது குறித்து கருத்­துக்­கனை முன்­வைக்­கையில் அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் கூறு­கையில்,

ஜனா­தி­பதி தேர்தல் தோல்­வி­யுடன் ஐக்­கிய தேசியக் கட்சி ஆட்­சியில் இருக்க இனியும் தகு­தி­யில்லை என்­பது தெரிந்­து­விட்­டது. ஜனா­தி­பதி தேர்­தலில் எமக்கு கிடைத்த மிகப்­பெ­ரிய  வெற்­றியின் மூல­மாக எமக்­கான அர­சாங்­க­மொன்றை  அமைக்க நாம் தயா­ராக உள்ளோம். இன்று மக்கள் ஒரு தீர்ப்பை கொடுத்­துள்­ளனர். இதற்கு அடி­ப­ணிந்து அர­சாங்­கத்தை எம்­மிடம் ஒப்­ப­டைக்க வேண்­டி­யது பிர­தமர் ரணில் மற்றும் அவ­ரது அர­சாங்­கத்தின் கட­மை­யாகும். அவர்­க­ளுக்கு இனியும் அதி­கா­ரத்தில் இருக்க எந்த தகு­தியும் இல்லை.

அதேபோல் கோத்­தா­பய ராஜபக் ஷவை ஜனா­தி­ப­தி­யாக்கி விட்டோம். அடுத்­த­தாக மஹிந்த ராஜபக் ஷவின் தலை­மையில் புதிய அர­சாங்­கத்தை உரு­வாக்­கவே நாம் கடு­மை­யான முயற்­சி­களை எடுக்­கின்றோம். அதற்­கான முயற்­சி­களை ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ முன்­னெ­டுத்து வரு­கின்றார்.

பல­த­ரப்­புடன் அவர் பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுத்தும் வரு­கின்றார்.

எவ்­வா­றி­ருப்­பினும், அடுத்­தாண்டு பெப்­ர­வரி மாதம் வரையில் பாரா­ளு­மன்­றத்தை கலைக்க முடி­யாத சட்ட சிக்­கல்கள் உள்­ளன. 19 ஆவது திருத்­தத்­திற்கு அமைய பாரா­ளு­மன்றம் அடுத்த ஆண்டு முதல் இரு மாதங்கள் வரையில் கொண்­டு­செல்­லப்­பட வேண்டும். ஆனால் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவுடன் ஐக்­கிய தேசியக் கட்­சியின் அமைச்­ச­ரவை அமர முடி­யாது.

எனவே, காபந்து அர­சாங்­க­மொன்றை அமைக்கும் வாய்ப்­புக்கள் உள்­ளன. எம்மால் அர­சாங்­கத்தை பொறுப்­பேற்க முடியும்.

எமது அர­சாங்­கத்தில் எவ­ரையும் புதி­தாக இணைத்­துக்­கொள்ள வேண்­டிய அவ­சி­ய­மில்லை. பெரும்­பான்மைப் பலம் எம்­மிடம் உள்­ளது. அர­சாங்­கத்தை அமைப்­பதில் எண்­ணிக்­கையில் பிரச்­சினை ஒன்றும் இல்லை. நாட்­டினை பிள­வு­ப­டுத்த முயற்­சிக்கும் உறுப்­பி­னர்­க­ளுக்கு நாம் எமது அணியில் இட­ம­ளிக்க மாட்டோம். ரவூப் ஹக்கீம்,- ரிஷாத் பதி­யுதீன் இரு­வ­ரையும் எமது அர­சாங்­கத்தில் இணைத்­துக்­கொள்ள நாம் தயாரில்லை. அதேபோல் வடக்கு, கிழக்கை இணைக்கும் நாட்டினை துண்டாடும் பயங்கரவாதத்தை உருவாக்கும் நபர்களுக்கு நாம் ஒருபோதும் அங்கீகாரம் கொடுக்க மாட்டோம் என்ற உறுதியான நிலைப்பாட்டில் உள்ளோம் என்றார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.