பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொள்ள அழைப்பு

புதிய ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடினார் இம்ரான் கான்

0 1,149

இலங்கை ஜன­நா­யக சோச­லிசக் குடி­ய­ரசின் 7 ஆவது ஜனா­தி­ப­தி­யாக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­ட­மை­யை­யிட்டு பாராட்டுத் தெரி­விப்­ப­தற்­காக பாகிஸ்தான் பிர­தமர் இம்­ரான்கான் இலங்­கையின் புதி­தாகத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவை தொலை­பே­சியில் தொடர்­பு­கொண்டு பாராட்டுத் தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவின் தலை­மைத்­துவம் மற்றும் தூர­நோக்கு பார்­வையில் இலங்கை மக்கள் கொண்­டி­ருந்த நம்­பிக்­கையை இந்தத் தேர்தல் பிர­தி­ப­லிக்­கி­றது என்றும் ஜனா­தி­பதி கோத்­தா­ப­யவின் தலை­மைத்­து­வத்தின் கீழ் இலங்­கையும் அதன் மக்­களும் அதிக வெற்­றி­க­ளையும் செழிப்­பையும் அடை­வார்கள் என்றும் பிர­தமர் இம்­ரான்கான் தனது நம்­பிக்­கையை வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார்.

மேலும், பாகிஸ்தான் – இலங்கை இரு தரப்­பி­னதும் நீண்­ட­கால உறவு பற்­றியும் கலந்­தா­லோ­சிக்­கப்­பட்­ட­தோடு இரு தலை­வர்­களும் இரு­த­ரப்பு ஒத்­து­ழைப்பை மேலும் பலப்­ப­டுத்­து­வ­தற்­காக ஒரு­வ­ருக்­கொ­ருவர் தமது விருப்­பத்­தையும் பரி­மாறிக் கொண்­டனர்.

மேலும், பிர­தமர் இம்­ரான்கான், தமது வச­திற்­கேற்ப முடி­யு­மான விரைவில் பாகிஸ்­தா­னுக்­கான உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்றை மேற்­கொள்­ளு­மாறு ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு அழைப்பு விடுத்­த­தோடு, அவ்­வ­ழைப்பை ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ ஏற்­றுக்­கொண்டார்.

இதே­வேளை, இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியின் அழைப்­பை­யேற்று, ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ எதிர்வரும் 29 ஆம் திகதி புதுடில்லிக்கு விஜயம் செய்யவுள்ளார். இதுவே புதிய ஜனாதிபதியின் முதலாவது வெளிநாட்டுப் பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.