எதிர்பார்த்த பெறுபேறு இல்லை மக்களே தோல்வியடைந்துள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி இயக்கம் தெரிவிப்பு.

0 1,138

ஜனா­தி­பதி தேர்தல் முடி­வுகள் ஒரு தரப்­பி­ன­ருக்கு வெற்­றியை வழங்­கி­யி­ருந்­தாலும் மக்கள் தோல்­வி­யையே சந்­தித்­துள்­ளனர் என்றும் அதனை அவர்கள் விரைவில் உணர்ந்து கொள்­வார்கள் என்றும் தெரி­வித்­துள்ள தேசிய மக்கள் சக்தி இயக்கம், மக்­க­ளுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்­பட போவ­தா­கவும் தெரி­வித்­துள்­ளது. ஜனா­தி­பதி தேர்தல் முடி­வு­களின் பின்னர் விசேட ஊடக அறிக்­கை­யொன்றை வெளி­யிட்­டுள்ள அந்த இயக்கம் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

ஜனா­தி­பதி தேர்­தலில் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன கட்­சியின் சார்பில் கள­மி­றங்­கிய கோத்­தா­பய ராஜ­பக் ஷ வெற்றி பெற்­றுள்ளார். தேசிய மக்கள் சக்தி என்ற வகையில் எமக்கு கிடைக்கப் பெற்­றுள்ள தேர்தல் பெறு­பே­றுகள் தொடர்பில் எம்மால் திருப்தி கொள்ள முடி­யாது. நாங்கள் எதிர்­பார்த்த பெறு­பேற்றை எங்­களால் அடைய முடி­யாமல் போயுள்­ளதை நாங்கள் ஏற்றுக் கொள்­கின்றோம்.

தேசப்­பற்­றுள்ள, ஜன­நா­ய­கத்தை பிர­தி­ப­லிக்கும் அர­சியல் முகாம் என்ற வகையில் தேசிய மக்கள் சக்தி இம்­முறை தேர்­தலின் போது மக்­களை மையப்­ப­டுத்தி பாரிய செயற்­திட்­டத்தை முன்­னெ­டுத்­தி­ருந்­தது. அதற்­க­மைய இலங்கை தேர்தல் மேடை­களில் இது­வ­ரையில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வந்த சேறு பூசல்கள், வெறுக்­கத்­தக்க பேச்­சுகள், சிறு­பிள்ளைத் தன­மான  வாக்­கு­று­தி­களை வழங்­கு­வதை விடுத்து நாட்டில் நிரந்­த­ர­மான கொள்­கையை கடைப்­பி­டிக்க நாம் நட­வ­டிக்கை எடுத்தோம்.

இந்த நட­வ­டிக்­கையில் பெரும் எண்­ணிக்­கை­யா­னோரை அணி­தி­ரட்ட எடுத்த நட­வ­டிக்­கை­யா­னது எமக்கு கிடைத்த நீண்­ட­கால வெற்­றி­யாகும்.ஜனா­தி­பதி தேர்தல் மேடை­களில் சில கட்­சிகள் இன வாதத்தை பேசி ஒரு­வ­ருக்­கொ­ரு­வரை பய­மு­றுத்தும் முயற்­சி­களை முன்­னெ­டுக்­கையில், இன­வாதத்தை விடுத்து அர­சியல் மற்றும் தேசிய ஐக்­கி­யத்தை ஏற்­ப­டுத்த பிர­சார மேடை­களில் எம்மால் முடிந்­தது.

இந்­நி­லைமை எதிர்­காலம் தொடர்­பான நல்ல சமிக்ஞை. ஜனா­தி­பதி தேர்­தலை பொறுத்­த­மட்டில்  வட பகுதி மக்கள் மத்­தி­யிலும் தென்­ப­குதி மக்கள் மத்­தி­யிலும் பயத்தை உரு­வாக்கி மக்­களை திசை­தி­ருப்பி தமக்கு வாக்­கு­களை பெற்றுக் கொள்­வ­தற்­காக இரண்டு அர­சியல் கட்­சி­களும் முயற்­சித்­தது என்­பது தெளி­வான விட­ய­மாகும்.

கொள்­கைகள் வாதப்­பி­ர­தி­வா­தங்­க­ளி­னூ­டாக மக்­களை தெளி­வு­ப­டுத்தி அவர்­களின் வாக்­கு­களை பெறு­வ­தற்கு நாங்கள் எடுத்த முயற்­சிகள் அனைத்தும் அக்­கட்­சி­களின் நட­வ­டிக்­கை­க­ளினால் பயன்­த­ராமல் போனது தெளி­வா­கி­யது.

எது எப்­ப­டி­யா­யினும் இந்த தேர்தல் முடி­வு­களின் படி வெற்­றி­ய­டைந்த தரப்­பினர் தங்­க­ளு­டைய வெற்றி தொடர்பில் மகிழ்ச்சி கண்­டாலும் , மக்கள் இதனால் தோல்­வி­யையே கண்­டுள்­ளனர். நாட்டில் ஏற்­பட்­டுள்ள பொரு­ளா­தார அர­சியல் செயற்­பா­டுகள் , கலா­சார முரண்­பா­டுகள் தொடர்பில் தற்­போது ஆட்­சிக்கு வந்­த­வர்­க­ளிடம் எந்­த­வித தீர்­மா­னமும் இல்லை.

தாம் இது­வ­ரையும் வெற்றி பெற­வில்லை என்­ப­தையும் , இனி­வரும் காலங்­களில் வெற்றி பெற வேண்டும் என்றும் மக்கள் விரைவில் புரிந்து கொள்­வார்கள். இவ்­வா­றான நிலையில் மக்கள் தொடர்­பான எமது கட­மையை தொடர்ந்தும் நாம் முன்­னெ­டுப்போம்.

அதேவேளை தேர்தலின் போது  எந்தவித அரசியல் இலாபத்தையும் எதிர்பாராமல் எம்மோடு கைக்கோர்த்து செயற்பட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதுடன், மக்கள் மத்தியில் நாம் களமிறக்கிய வேட்பாளர் தோல்வியடைந்திருந்தாலும் நாங்கள் சோர்வடையாமல் தொடர்ந்தும் எமது வெற்றிக்காக போராடுவோம்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.