துஆக்களை அல்லாஹ் அங்கீகரித்துள்ளான்.

புதிய ஆட்சியாளர்களுடன் இணைந்து செயற்பட முன்வர வேண்டும்; சட்டத்தரணி அலி சப்ரி

0 1,707

இலங்கை முஸ்­லிம்கள் நல்­ல­தொரு ஆட்­சி­யா­ளரைத் தரு­மாறு பள்­ளி­வா­சல்­களில் பிரார்த்­த­னை­களில் ஈடு­பட்­டனர். சிலர் நோன்பும் நோற்­றனர். அல்லாஹ் அந்த பிரார்த்­த­னை­களை அங்­கீ­க­ரித்து இன்று ஓர் ஆட்­சி­யா­ளரை தந்­துள்ளான். அல்­லாஹ்வின் அந்த முடி­வுக்கு நாம் மதிப்­ப­ளிக்க வேண்டும். பழைய கதை­களை பேசிக் கொண்­டி­ருக்­காமல் அல்லாஹ் மீது நம்­பிக்கை வைத்து புதிய ஆட்­சி­யா­ளர்­க­ளுடன் இணைந்து செயற்­பட முஸ்­லிம்கள் முன்­வர வேண்டும் என ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணியும் பொது ஜன பெர­முன கட்­சியின் சட்ட ஆலோ­ச­க­ரு­மான அலி சப்ரி ‘விடி­வெள்ளி’க்குத் தெரி­வித்தார்.

ஜனா­தி­பதித் தேர்தல் பெறு­பே­றுகள் தொடர்பில் கருத்து வெளியி­டு­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில், 

இன­வாத அர­சி­யலை கைவிட்­டு­விட்டு தேசிய அர­சியல் நீரோட்­டத்தில் இணைந்து கொள்ள வேண்டும். இந்த நாட்­டுக்கு நல்­ல­தொரு எதிர்­காலம் பிறந்­துள்­ளது. எல்லா மக்­களின் நலன்­க­ளுக்­கா­கவும் குறிப்­பாக முஸ்லிம் சமூ­கத்தின் அபி­லா­ஷை­க­ளுக்­கா­கவும் நாங்கள் குரல் கொடுக்க தயா­ரா­க­வுள்ளோம்.

முஸ்லிம் சமூ­கத்­திற்கு எங்­களால் தேர்தல் காலத்தில் அளிக்­கப்­பட்ட வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற நட­வ­டிக்கை எடுப்போம். நாட்டில் சட்­டத்­தையும் ஒழுங்­கையும் நிலை­நாட்­டு­வதன் மூலம் முஸ்­லிம்­களை மாத்­தி­ர­மன்றி சகல மக்­க­ளையும் பாது­காப்போம். இன்று (நேற்று) தேர்தல் திணைக்­க­ளத்தில் இடம்­பெற்ற நிகழ்வில் புதிய ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்ச கூறி­யதைப் போன்று அவர் தனக்கு வாக்களித்த மக்களுக்கு மாத்திரமன்றி வாக்களிக்காத மக்களுக்கும் சேவையாற்றுவார் என்பதை நானும் உறுதிப்படுத்துகிறேன் என்றார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.