சபாநாயகருக்கு எதிரான பிரேரணை எம்மிடமில்லை

கொண்டுவந்தால் தோல்வியே என்கிறார் தயாசிறி

0 686

சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய பாரா­ளு­மன்­றத்தில் 122 பேருக்­கா­கவே செயற்­ப­டு­கிறார். நாம் சபா­நா­ய­க­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை முன்­வைத்தால் அந்த 122 பேரும் அவரைக் காப்­பாற்­று­வார்கள். சபா­நா­யகர் அந்த 122 பேரையும் காப்­பாற்­றுவார். சபா­நா­யகர் அர­சாங்கம் ஒன்று இருப்­ப­தாக நினைத்து செயற்­ப­டு­தில்லை. அத­னாலே சபா­நா­ய­க­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா  பிரே­ரணை பற்றி நாம் சிந்­திக்­க­வில்லை என அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்தார். நேற்று தகவல் திணைக்­க­ளத்தில் நடை­பெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கேள்­வி­க­ளுக்குப் பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் பதி­ல­ளிக்­கையில்; சபா­நா­யகர் அர­சி­ய­ல­மைப்­புக்கு அமை­வாக பாரா­ளு­மன்ற நிலை­யியற் கட்­ட­ளையின் படி ஒரு நிலை­யாக செயற்­பட வேண்டும். ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் பேச்­சா­ள­ராக செயற்­ப­டக்­கூ­டாது.

ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­லி­ருந்தும், விலகி எம்­முடன் இணைந்து கொண்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வசந்த சேனா­நா­யக்க அமைச்­ச­ராக பதவிப் பிர­மாணம் செய்து கொண்டார். ஆனால் அவர் கடந்த அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் கலந்து கொள்­ள­வில்லை. அது  ஏனென்று தெரி­ய­வில்லை.

கெஹ­லிய ரம்­புக்­வெல்ல அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­ப­ட­வில்லை. இரா­ஜாங்க அமைச்­ச­ரா­கவே நிய­மிக்­கப்­பட்டார். அதனால் அவர் அமைச்­ச­ரவை கூட்­டங்­களில் கலந்து கொள்­வ­தில்லை.

பாரா­ளு­மன்றில் கல­வ­ரங்­களில் ஈடு­பட்டு சேதங்­களை ஏற்­ப­டுத்­தி­ய­வர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும். ஆனால் சபா­நா­ய­கரால் இதற்­கான கமிட்­டிகள் நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. இதுவே பிரச்­சினை. இதனால் எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் குண்டுத் தாக்குதல் ஏற்படுவதற்கும் சந்தர்ப்பம் உள்ளது. எனவே அவ்வாறான சம்பவங்கள் ஏற்பட்டாலும் நடவடிக்கை எடுக்க முடியாமற்போகும் என்றார்.
-Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.