இரு பிரதான தேர்தல் வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களும் சிறுபான்மை சமூகங்களும்

0 1,279

இலங்கை தமி­ழ­ரசு கட்­சி­யி­ட­மி­ருந்து கிடைத்­தி­ருக்கும் ஆத­ரவு சஜித் பிரே­ம­தா­சவின் தேர்தல் பிர­சா­ரத்­துக்கு ஒரு உத்­வே­கத்தைக் கொடுத்­தி­ருக்­கி­றது. சில தமிழ் அர­சி­யல்­வா­திகள் பரிந்­து­ரைப்­பதைப் போன்று, தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு நடு­நி­லை­யாக இருந்­து­கொண்டு தமிழ் மக்கள் தாங்கள் விரும்­பிய வேட்­பா­ள­ருக்கு வாக்­க­ளிக்­கலாம் அல்­லது தேர்­தலில் பங்­கேற்­காமல் வில­கி­யி­ருக்­கலாம் என்று ஆலோ­சனை கூறக்­கூ­டிய சாத்­தி­யப்­பாடு முனனர் இருந்­தது. காணாமல் போனோரைக் கண்­ட­றி­வ­திலும் குடி­மக்­களின் காணி­களை திருப்பிக் கைய­ளிப்­ப­திலும் இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்­வொன்றைக் காண்­பதை நோக்கி நகர்­வ­திலும் முன்­னேற்றம் இல்­லா­தி­ருப்­பது குறித்து தமி­ழச்­ச­மூகம் கடு­மை­யாக கோப­ம­டைந்­தி­ருக்­கி­றது. தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு உட்­பட ஐந்து தமிழ் அர­சியல் கட்­சி­க­ளினால் முன்­வைக்­கப்­பட்ட 13 அம்சக் கோரிக்­கைக்கு நேர­டி­யாகப் பதில் தரு­வ­தற்கு இரு பிர­தான வேட்­பா­ளர்­களும் தயா­ரில்­லாமல் இருக்­கின்­றமை தொடர்­பிலும் தமிழ் அர­சியல் சமு­தா­யத்தின் பல பிரி­வுகள் மத்­தியில் கோபம் இருக்­கி­றது. ஆனால், அவர்­க­ளு­டைய தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களை நோக்­கினால், அவற்றில் தீர்க்­க­மான பதி­லொன்று இருப்­பதை அவ­தா­னிக்­க­மு­டியும்.

இலங்கை தமி­ழ­ரசு கட்சி, தமி­ழீழ மக்கள் விடு­தலை கழகம் (புளொட்), ஈழ­மக்கள் புரட்­சி­கர விடு­தலை முன்­னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்.), தமிழ் மக்கள் பேரவை மற்றும் தமி­ழீழ விடு­தலை இயக்கம் (ரெலோ) ஆகி­யன தமிழ் மக்­களின் முக்­கிய கோரிக்­கை­களை தெளி­வு­ப­டுத்தி மகஜர் ஒன்றில் கைச்­சாத்­திட்­டி­ருந்­தன. சமஷ்டி அடிப்­ப­டை­யி­லான அர­சி­யல்­தீர்வு, பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை ஒழித்தல், தமிழ்த்­தே­சிய இனத்தின் அர­சியல் அபி­லா­சை­களை ஏற்­றுக்­கொள்தல், இணைந்த வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களை தமிழ்த்­தே­சிய இனத்தின் வர­லாற்­று­ ரீ­தி­யான வாழ்­வி­ட­மா­கவும் பாரம்­ப­ரிய தாய­க­மா­கவும் அங்­கீ­க­ரித்தல், தமிழ் தேசத்தின் இறை­மையை ஏற்­றுக்­கொண்டு சர்­வ­தேச சட்­டத்தின் ஏற்­பா­டு­களின் கீழ் தமிழ் மக்கள் சுய­நிர்­ணய உரி­மைக்கு உரித்­துடைய­வர்கள் என்­பதை அங்­கீ­க­ரித்தல் என்­பவை உட்­பட 13 கோரிக்­கைகள் அந்த மக­ஜரில் உள்­ள­டங்­கி­யி­ருக்­கின்­றன. இவற்றில் பல கோரிக்­கைகள் குறிப்­பாக சிங்­கள பெரும்­பான்­மை­யி­னத்­த­வர்­களின் வாக்­குகள் தீர்க்­க­மா­ன­வை­யாக அமை­கின்ற – நெருக்­க­மான போட்­டி­யு­டைய தேர்­தலின் பின்­பு­லத்தில் மிகவும் சர்ச்­சைக்­கு­ரி­ய­வை­யாகும்.

எந்த வேட்­பா­ளரை ஆத­ரிப்­பது என்று தீர்­மா­னத்தை எடுக்கும் விட­யத்தில், தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு இரண்டு பிர­மா­ணங்­களை பயன்­ப­டுத்­தி­யி­ருக்­க­வேண்டும்.முத­லா­வது, தேர்­தலில் வெற்­றி­பெ­றக்­கூ­டிய வாய்ப்பைப் பெரு­ம­ள­வுக்கு கொண்­டி­ருக்கும் கடந்த கால நட­வ­டிக்­கை­களை மதிப்­பீடு செய்­வது.கடந்த கால நட­வ­டிக்­கை­களும் சிந்­த­னை­களும் எதிர்­கா­லத்தில் நடக்­கக்­கூ­டி­ய­வற்றை தீர்­மா­னிக்கும் கார­ணி­க­ளாக இருக்­க­மு­டியும். இரண்­டா­வது, முன்­னணி வேட்­பா­ளர்­களின் தேர்தல் பிர­சா­ரங்­களை நோக்­கு­வதும் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான உற­வு­களைப் பொறுத்­த­வரை, அவர்­களின் வாக்­கு­று­தி­களை மதிப்­பி­டு­வ­து­மாகும்.

கடந்த ஐந்து வருட காலத்தில், சஜித் பிரே­ம­தாச அமைச்­ச­ரவை உறுப்­பி­ன­ராக இருந்­து­வந்­தி­ருக்கும் அர­சாங்கம் தேசிய நல்­லி­ணக்­கத்தைப் பொறுத்­த­வரை, பெரு­ம­ளவு உறு­தி­மொ­ழி­களை வழங்­கி­யி­ருக்­கி­றது. உள்­நாட்­டுப்­போ­ருக்­கான கார­ணங்­களை கவ­னத்­திற்­கெ­டுத்து பரஸ்­பரம் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய முறையில் இன­நெ­ருக்­க­டிக்குத் தீர்­வு­கா­ணக்­கூ­டிய புதிய அர­சி­ய­ல­மைப்பும் அந்த உறு­தி­மொ­ழி­களில் அடங்கும். கடந்த காலங்­களில் நடந்­த­வைக்கு பொறுப்­புக்­கூ­று­வ­துடன் இழப்­புக்­களை சந்­தித்­த­வர்­க­ளுக்கு இழப்­பீ­டு­களை வழங்­கு­வ­தா­கவும் அர­சாங்கம் உறு­தி­ய­ளித்­தது. ஆனால், அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் எதிர்­பார்க்­கப்­பட்­டதை விடவும் குறை­வா­ன­தா­கவே இருந்­தன. அதன் விளை­வாக, அர­சாங்­கத்­துக்கு ஆத­ர­வாக இருந்­து­வந்த தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு தமிழ் மக்கள் மத்­தியில் செல்­வாக்கை இழக்க ஆரம்­பித்­தது. என்­றாலும், கடந்த ஐந்து வரு­ட­கா­லத்தில் தமிழ் மக்கள் மத்­தியில் அர­சாங்கம் பற்­றிய பயம் கணி­ச­மா­ன­ள­வுக்கு குறைந்­தி­ருந்­தது.

மறு­பு­றத்தில், கோத்­தா­பய ராஜ­பக் ஷ பாது­காப்பு செய­லா­ள­ராக இருந்த அர­சாங்கம் போரை முழு­வீச்சில் முன்­னெ­டுக்க நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டது. பிர­தா­ன­மாக தமிழ்ப்­ப­கு­தி­களில் இடம்­பெற்ற போர் அங்கு பெரும் அழி­வு­களை ஏற்­ப­டுத்­தி­யது. போரின் இறு­தியில், அப்­போது பத­வி­யி­லி­ருந்த அர­சாங்கம் பரந்­த­ள­வி­லான தேசிய பாது­காப்பு கட்­ட­மைப்­புக்குள் அர­சியல் உரி­மை­க­ளையும் விட பொரு­ளா­தார அபி­வி­ருத்­திக்கு முன்­னு­ரிமை கொடுக்­கப்­ப­ட­வேண்டும் என்ற நிலைப்­பாட்டை எடுத்­தது. அதன் விளை­வாக ஆட்­சி­மு­றையில் பலம்­பொ­ருந்­திய இரா­ணுவ ஈடு­பாடு காணப்­பட்­டது. அத­னுடன் சேர்ந்து பயமும் எதிர்ப்­பு­ணர்வும் தோன்­றி­யது. இந்தக் கடந்த காலம் எந்­த­ள­வுக்கு எதிர்­கா­லத்தின் மீது செல்­வாக்கு செலுத்தும் என்­பது தமிழ் தேசிய கூட்­ட­மைப்பை பொறுத்­த­வரை முக்­கிய கேள்­வி­யா­கி­றது. கடந்த காலத்­துக்கும் எதிர்­கா­லத்­துக்கும் இடை­யி­லான பாலம் இரு பிர­தான வேட்­பா­ளர்­க­ளி­னதும் தேர்தல் பிர­சா­ரங்­க­ளிலும் குறிப்­பாக அவர்­களின் தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­க­ளிலும் நோக்­கப்­படும். அந்த விஞ்­ஞா­ப­னங்­களே கடந்த காலம், நிகழ்­காலம் மற்றும் எதிர்­காலம் பற்­றிய அவர்­களின் அபிப்­பி­ரா­ய­மா­கவும் மதிப்­பீ­டா­கவும் இருக்­க­வேண்டும்.

சஜித் பிரே­ம­தா­சவின் தேர்தல் விஞ்­ஞா­பனம் வெளி­யான கையோடு அவ­ருக்­கான ஆத­ரவை தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு அறி­வித்­தி­ருப்­பது முக்­கி­ய­மாகக் கவ­னிக்­கப்­பட வேண்­டி­ய­தாகும். பல்­லின மற்றும் பல­மத சமூ­க­மொன்றில் ஒத்­தி­சை­வான உற­வு­களை சாதிப்­ப­தற்கு அவ­சி­ய­மா­ன­வற்றை அந்த விஞ்­ஞா­பனம் கணி­ச­மா­ன­ள­வுக்கு விளக்­கிக்­கூ­றி­யி­ருக்­கி­றது.” எமது அர­சி­ய­ல­மைப்பு எமது நாட்டின் பல்­லின, பல­்க­லா­சார, பல்­மொழித் தன்­மையை – அதா­வது பன்­மு­கத்­தன்­மையை -பிர­தி­ப­லிக்­க ­வேண்­டும். அர­சி­ய­ல­மைப்பு சட்­டங்­க­ளினால் மாத்­தி­ர­மல்ல மனங்­க­ளி­னாலும் எம்மை ஐக்­கி­யப்­ப­டுத்த வேண்டும்” என்று அந்த விஞ்­ஞா­ப­னத்தில் கூறப்­பட்­டுள்­ளது.

பலம்­பொ­ருந்­திய தேச­மொன்றைக் கட்­டி­யெ­ழுப்­பக்­கூ­டிய, ஜன­நா­யக பன்­முக சமூ­க­மொன்றை உரு­வாக்­கக்­கூ­டிய, ஜனா­தி­ப­திகள் ரண­சிங்க பிரே­ம­தாச, சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க, மகிந்த ராஜ­பக் ஷ ஆகி­யோரின் ஆட்­சி­களின் கீழ் முன்­வைக்­கப்­பட்ட யோச­னை­களின் அடிப்­ப­டையில் ஐக்­கி­யப்­பட்­டதும் பிரிக்­க­மு­டி­யா­த­து­மான நாட்­டுக்குள் மாகா­ணங்­க­ளுக்கு கூடு­தல்­பட்ச அதி­கா­ரங்­களைப் பர­வ­லாக்­கக்­கூ­டிய புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்றைக் கொண்­டு­வ­ரு­வ­தாக ஆளும் கட்­சியின் வேட்­பாளர் உறு­தி­ய­ளித்­தி­ருக்­கிறார். மத்­தியில் அதி­கா­ரப்­ப­கிர்வை உறு­தி­செய்­வ­தற்கு மாகா­ண­ச­பை­களின் பிர­தி­நி­தி­களை உள்­ள­டக்­கிய (பாரா­ளு­மன்­றத்தில்) இரண்­டா­வது சபை­யொன்றை அமைக்­கப்­போ­வ­தா­கவும் அவர் உறு­தி­ய­ளித்­தி­ருக்­கிறார்.

மேலும், சஜித் பிரே­ம­தா­சவின் விஞ்­ஞா­பனம் மனித உரி­மை­க­ளையும் சிறு­பான்­மை­யி­னத்­த­வர்­களின் உரி­மை­க­ளையும் அர­சியல் பெரும்­பான்­மைக்கு கீழ்ப்­ப­டி­வா­ன­வை­யாக அல்­லாமல், பாது­காப்­ப­தற்கு நிறு­வ­ன­ரீ­தி­யான உத்­த­ர­வா­தங்­களை பலப்­ப­டுத்­தப்­போ­வ­தா­கவும் உறு­தி­ய­ளித்­தி­ருக்­கி­றது.” அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து சுயா­தீ­ன­மா­ன­தாக நீதித்­துறை விளங்­கு­வது நாடு பலம்­பொ­ருந்­தி­ய­தாக இருப்­ப­தற்கு அவ­சி­ய­மா­ன­தாகும். இதை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு புதிய அர­சி­ய­ல­மைப்பு (அர­சி­ய­ல­மைப்பு பேர­வை­யினால் நிய­மிக்­கப்­ப­டு­கின்ற) சுயா­தீ­ன­மான பொது வழக்­குத்­தொ­டுநர் பத­வி­யொன்றை உரு­வாக்கும்.அர­சி­ய­ல­மைப்பை வியாக்­கி­யானம் செய்யும் பொறுப்பு உயர்­நீ­தி­மன்­றத்­தி­ட­மி­ருந்து எடுக்­கப்­பட்டு புதிய அர­சி­ய­ல­மைப்பு நீதி­மன்­றத்­திடம் ஒப்­ப­டைக்­கப்­படும். அர­சாங்­கத்தின் பல்­வேறு மட்­டங்­க­ளுக்கு இடை­யி­லான தக­ரா­று­களை, மத்­திய அர­சாங்­கத்­துக்கும் மாகாண நிரு­வா­கங்­க­ளுக்கும் இடை­யி­லான தக­ரா­று­களை, மாகா­ணங்­க­ளுக்கு இடை­யி­லான தக­ரா­று­களை தீர்த்­து­வைக்கும் பொறுப்­பையும் அர­சி­ய­ல­மைப்பு நீதி­மன்றம் கொண்­டி­ருக்கும் என்றும் பிரே­ம­தா­சவின் விஞ்­ஞா­பனம் கூறி­யி­ருக்­கி­றது. மாகாண சபை­க­ளிலும் பாரா­ளு­மன்­றத்­திலும் பெண்­க­ளுக்கு 25 சத­வீத இட­ஒ­துக்­கீடு வழங்­கப்­படும் என்றும் அதில் உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

இவற்­றுக்கு மாறாக, கோத்­தா­பய ராஜ­பக் ஷவின் தேர்தல் விஞ்­ஞா­பனம், “மீண்டும் பயங்­க­ர­வாத மற்றும் தீவி­ர­வாத சக்­தி­க­ளி­னதும் அச்­சு­றுத்­த­லுக்­குள்­ளா­கி­யி­ருக்கும் எமது தாய்­நாட்டை பாது­காப்­பதே எனது பிர­தான இலக்கு” என்று கூறப்­பட்­டி­ருக்­கி­றது. “தேசிய பாது­காப்பு அதி­முக்­கி­யத்­துவம் வாய்ந்­தது. பெரு­ம­ளவு தியா­கத்தின் மூல­மாக வென்ற சமா­தா­னத்தை நாம் உறு­திப்­ப­டுத்­த­வேண்­டி­யி­ருக்­கி­றது. ஒரு சட்­டத்தின் கீழ் பிள­வு­ப­டாத நாடொன்றில் சிங்­கள, தமிழ், முஸ்லிம் மற்றும் ஏனைய சமூ­கங்­களும் கௌர­வத்­து­டனும் கண்­ணி­யத்­து­டனும் ஒன்­றி­ணைந்து ஒத்­தி­சை­வாக வாழ்­வதை நாம் மீண்டும் ஒரு தடவை உறு­தி­செய்ய வேண்­டி­யி­ருக்­கி­றது. சட்­டத்­தின்முன் சகல பிர­ஜை­களும் சமத்­து­வ­மா­ன­வர்­க­ளாக நடத்­தப்­ப­டக்­கூ­டி­ய­தாக, “எவரும் சட்­டத்­துக்கு மேலா­ன­வர்கள் இல்லை” என்ற கோட்­பாட்டை உறு­தி­யாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டி­யி­ருக்கும். என்­னி­ட­மி­ருந்து எதை எதிர்­பார்க்­கி­றீர்கள் என்­பதை தெளி­வாக விளங்­கிக்­கொள்­கிறேன். எல்­லா­வற்­றுக்கும் மேலா­னது தேசிய பாது­காப்பு. அதை நாம் நிலை­நி­றுத்திக் கொண்­டதும் பொரு­ளா­தார அபி­வி­ருத்­தியைச் சாதிப்­பது வெற்­றி­பெ­ற­மு­டி­யாத சவா­லாக இருக்­கப்­போ­வ­தில்லை. அடுத்து முக்­கி­ய­மான பணி முற்­போக்­கான தேசிய பொரு­ளா­தா­ரத்­தையும் பன்­முக சமூ­க­மொன்­றையும் உரு­வாக்­கு­வ­தே­யாகும் ” என்று விஞ்­ஞா­ப­னத்தில் கோத்­தா­பய கூறி­யி­ருக்­கிறார்.

சஜித் பிரே­ம­தா­சவின் விஞ்­ஞா­ப­னத்தை விடவும் கோத்தாபயவின் விஞ்ஞாபனம் வேறுபடுகிறது. அதுவும்கூட ஒரு கோட்பாட்டு அடிப்படையில் நன்கு வரையப்பட்டிருக்கிறது. ஆனால், அதில் தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது. தேசிய பாதுகாப்பு என்பது இனரீதியான, மதரீதியான சிறுபான்மை சமூகங்களை பலப்படுத்துவதாக இல்லாமல் பிரதானமாக அவற்றை இலக்குவைப்பதை நோக்கமாக கொண்டதாக கருதப்படுவதால் தேசிய பாதுகாப்பை மையமாகக்கொண்டு வரையப்பட்ட விஞ்ஞாபனத்தை சிறுபான்மை சமூகங்களிடம் கொண்டுசெல்வது மிகவும் கஷ்டமானதாகும்.

இனத்துவ மற்றும் மதரீதியான சமூகங்கள் என்ற வகையில் இலங்கையின் அரசியல் சமுதாயத்தின் அங்கங்களாக விளங்கும் சிறுபான்மை சமூகங்களின் தேவைகளில் கோத்தாபயவின் விஞ்ஞாபனம் கவனம் செலுத்தவில்லை.சிறுபான்மையின சமூகங்களை கவருவதில் கோத்தாபயவுக்கு இருக்கின்ற பிரச்சினை, அவர் பத்து வருடங்களாக பாதுகாப்பு செயலாளராக போரையும் போரின் இறுதிக்கட்டங்களையும் போரின் முடிவுக்கு பின்னரான உடனடிக் காலகட்டத்தையும் கையாளவேண்டிய பொறுப்பின் அடிப்படையில் எழுகின்ற ஒன்றாகும்.போரின் முடிவுக்கு பின்னரான காலகட்டத்தில் மனித உரிமை மீறல்கள் பெரும் பிரச்சினையாக வெடித்தன. கடந்த காலத்துடன் தொடர்பை அறுத்துக்கொண்டு நிகழ்காலத்தை அலசி ஆராய்ந்து (இனரீதியாக, மதரீதியாக துருவமயப்பட்டுக்கிடக்கின்ற )அரசியல் சமுதாயமொன்றின் ஒவ்வொரு பிரிவுக்கும் முக்கியமானவையாக இருக்கின்ற விவகாரங்கள் தொடர்பில் நம்பகத்தன்மையான உறுதிமொழிகளை வழங்குவது என்பது பெரிய சவாலாகும்.-Vidivelli

  • கலா­நிதி ஜெஹான் பெரேரா

Leave A Reply

Your email address will not be published.