300 பேர் கடத்தி சித்திரவதைகளுக்கு உட்படுத்தி கொல்லப்பட்டுள்ளனர்

வெள்ளை வேன் சாரதியொருவர் ஊடக சந்திப்பில் விளக்கம்

0 1,164

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சி­கா­லத்தில் இடம்­பெற்ற வெள்­ளைவேன் கடத்தல் விவ­கா­ரத்தின் பிர­தான சூத்­தி­ர­தா­ரி­யாக செயற்­பட்­டவர் கோத்­தா­பய ராஜபக் ஷவே என்றும் இவ்­வாறு அண்­ண­ள­வாக 300 பேர் கடத்­தப்­பட்டு சித்­தி­ர­வ­தை­க­ளுக்கு உட்­ப­டுத்தி கொல்­லப்­பட்­டுள்­ள­தா­கவும், இவ்­வாறு கடத்தப் பயன்­ப­டுத்­திய வெள்ளை வேன் ஒன்றின் சார­தி­யாக பணி­யாற்­றி­ய­தாகக் கூறப்­படும் அந்­தனி டக்லஸ் பெர்­னாண்டோ என்ற நபர் தெரி­வித்தார்.

கிரு­லப்­ப­னையில் அமைந்­துள்ள ஜன­நா­யக தேசிய அமைப்பு காரி­யா­ல­யத்தில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை அமைச்சர் ராஜித்த சேனா­ரத்­னவின் தலை­மையில் விசேட ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்று இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்­ட­போதே அவர் இவ்­வாறு குறிப்­பட்டார்.

இதன் போது அவர் தொடர்ந்தும் கூறு­கையில்,

வெள்ளை வேன் கடத்­த­லுடன் தனக்குத் தொடர்­பில்­லை­யென்று கோத்­தா­பய தற்­போது தெரி­வித்து வரு­கின்றார். ஆனால் அவரே இதன் பிர­தான சூத்­தி­ர­தா­ரி­யாக செயற்­பட்­டவர். இவ்­வாறு கடத்தப் பயன்­ப­டுத்­திய வேன்­களின் ஒன்­றி­னது சார­தி­யாக நானும் பணி­பு­ரிந்­துள்ளேன்.

இந்தக் கடத்­த­லுக்கு பொலி­ஸாரும், இரா­ணு­வத்­தி­னரும் பெரிதும் ஒத்­து­ழைப்­பு­களை வழங்­கினர். கடத்தல் தொடர்பில் கோத்­தா­பய பிரி­கே­டியர் ஒரு­வ­ருக்கும், மேஜர் ஒரு­வ­ருக்கும் ஆலோ­ச­னை­களை வழங்­குவார். அவர்­களே இதனை வெற்­றி­க­ர­மாக செயற்­ப­டுத்­துவர். இதன்­போது நபர்­களை கடத்­து­வ­தற்கு வாக­ன­மொன்று பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­துடன், அவரை மறைத்து வைத்து சித்­தி­ர­வ­தை­க­ளுக்கு உட்­ப­டுத்தும் இடத்­திற்கு பிறி­தொரு வாக­னத்­தி­லேயே அழைத்துச் செல்­வார்கள்.

இந்த இடங்­களில் அவர்கள் மறைத்து வைக்­கப்­பட்டு விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தப்­ப­டு­வார்கள். பின்னர் மேல­திக தக­வல்­களை பெறு­வ­தற்­காக அவர்கள் சித்­தி­ர­வ­தை­க­ளுக்கும் ஆளாக்­கப்­ப­டு­வார்கள். இவ்­வாறு பல கொடு­மைகள் செய்த பின்னர் அவர்கள் கொலை செய்­யப்­ப­டு­வார்கள். பின்னர் சட­லத்தின் உள்­ளு­றுப்­பு­களை அகற்­றி­விட்டு மொன­ரா­கலை -– சீத்­தா­வக்கை காட்டுப் பகு­தி­யி­லுள்ள குள­மொன்றில் போடு­வார்கள். அந்தக் குளத்­திலே 100 க்கும் அதி­க­மான முத­லைகள் வாழ்­கின்­றன. இன்­றும்­கூட நீங்கள் அந்தக் குளத்தை சோத­னை­யிட்டால் மனித எலும்­பும்­கூ­டுகள் கிடைக்­கப்­பெறும். நான் இவர்­க­ளுடன் இணைந்து செயற்­பட்­ட­போது இருவர் இவ்­வாறு கடத்­தப்­பட்டு கொலை செய்­ய­பட்­டனர். அதில் இரண்­டா­வது நப­ரான 60 வய­து­டைய ஒரு­வரை கடத்­தும்­போது இவ­ரது பிள்ளை பெபா என்று கத­றி­யதை பார்த்­ததும் எனக்கு அங்­கி­ருக்க மன­வ­ருத்­த­மாக இருந்­தது. பின்னர் இங்­கி­ருந்து சென்று விகா­ரை­யொன்றில் வாழ்ந்து வந்தேன். ஆனால் மக்­களை காப்­பாற்ற வேண்டும் என்று பின்னர் இவர்­க­ளுக்கு எதி­ராக முறை­பா­ட­ளிக்க நட­வ­டிக்கை எடுத்தேன்.

இந்த விவ­காரம் தொடர்பில் மிரி­ஹான பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பா­ட­ளித்­த­போது, நிலையப் பொறுப்­ப­தி­காரி வசந்த நாண­யக்­கார அதனை விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தாமல் மறைத்து விட்டார். பின்னர் ஊட­கங்­க­ளுக்குத் தெரி­விக்­க­லா­மென்று அவர்­க­ளிடம் பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­போது ஊட­கங்­களும் இதனை வெளி­யிட மறுத்­து­விட்­டன.

இந்­நி­லை­யிலே அமைச்சர் ராஜித்த சேனா­ரத்ன இந்த விடயம் தொடர்பில் அக்­கறை கொண்­டுள்­ள­தாகத் தெரி­ய­வந்­ததை அடுத்து அவ­ரிடம் தெரி­வித்தேன். பின்னர் அவர் எனக்கு உத­வு­வ­தாகக் கூறினார். அதற்­கா­கவே இன்று ஊடக சந்­திப்பை மேற்கொண்டு தெரிவிக்கின்றேன்.

நாட்டு மக்கள் விழிப்பாக செயற்பட வேண்டும். ஜனாதிபதி தேர்தலின்போது மீண்டும் ஒரு கொலைகார அரசாங்கத்தை உருவாக்காமல் மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலையை யார் அமைத்துக் கொடுப்பார்களோ அவர்களுக்கு வாக்களியுங்கள். நாட்டில் மீண்டும் வெள்ளை வேன் கலாசாரம் ஏற்படுவதற்கு வழிவகுக்காதீர்கள் என்றும் தெரிவித்தார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.