அதிகாரப் பகிர்வு என்ற பெயரில் நாட்டை துண்டாட இடமளியோம்

அதாவுல்லா தெரிவிப்பு

0 1,216

தமிழ், முஸ்லிம், சிங்­கள, கிறிஸ்­தவ மக்கள் எல்­லோரும் சுதந்­தி­ர­மாக அவ­ர­வர்­க­ளு­டைய உரி­மை­களை பெற்றுக் கொள்­ளக்­கூ­டி­ய­வாறு ஒரு யாப்பை உரு­வாக்க வேண்டும். அதி­காரப் பகிர்வு என்­கின்ற பெயரில் ஒவ்­வொரு நாட்­டிற்கும் தேவை­யா­ன­வாறு இந்த நாட்டைத் துண்­டாட இட­ம­ளிக்க முடி­யா­தென முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதா­உல்லா கூறினார்.

ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­தா­பய ராஜபக் ஷவை ஆத­ரித்து அக்­க­ரைப்­பற்று காதி­ரி­யாவில் நேற்­று­முன்­தினம் இடம்­பெற்ற பிர­சாரக் கூட்­டத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே மேற்­படி கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில், மாகாண திருத்தச் சட்­டம்­கூட இந்­தி­யா­வி­னு­டைய அழுத்­தத்­தினால் கொண்­டு­வ­ரப்­பட்­டது. நாங்கள் மாகாண சபை கேட்­க­வில்லை. இந்த நாட்­டிலே வாழ்­கின்ற முஸ்லிம் மக்­களும் சிங்­கள மக்­களும் மாகா­ண­சபை கேட்­க­வில்லை. நான் இதனை பல அர­சியல் தலை­வர்­க­ளிடம் சொன்னேன் சிங்­கள மக்கள் 55 வீத­மாக இருந்து ஏனைய சிறு­பான்மையினர் 45 வீத­மாக இருந்தால் சிங்­கள மக்­களும், தலை­வர்­களும் பயப்­ப­டு­வ­ததில் அர்த்­த­மி­ருக்­கி­றது. ஆனால் சிங்­கள மக்கள் 70 வீதம் வாழ்­கி­றார்கள். ஏனை­ய­வர்கள் 30 வீதம் வாழ்­கி­றார்கள். அப்­ப­டி­யி­ருந்தால் ஏன் 70திற்­கு­ரிய விகி­தா­சாரம்  30திற்­கு­ரிய விகி­தா­சா­ரத்­தையும் நாங்கள் ஏன் பேண முடி­யாது? இதை­விட இந்த நாட்டை வாழ­வைப்­ப­தற்கு என்ன இருக்­கி­றது என்று நமது பால­முனை பிர­க­ட­னத்­திலே சொன்ன விட­யங்­களை நாங்கள் அங்கே கொடுத்­தி­ருக்­கிறோம்.

எமக்கு ஒன்றும் வேண்டாம் நாட்டை மீட்ட தலை­வ­னுக்கு சிங்­கள மக்கள் வாக்குப் போடு­கி­றார்கள். முஸ்­லிம்கள் போட­வில்லை. நம்மை ஒரு இனத் துவே­சி­யாக நன்றி கெட்­ட­வர்­க­ளாக பார்ப்­ப­தற்கு எப்­பொ­ழுதும் பெரும்­பாலும் சிங்­கள மக்கள் இருக்­கின்ற எமது பக்­கத்தில் முஸ்லிம் தலை­வர்கள் எம்மை வாக்கு போட­வைக்க மாட்­டார்கள். எமது முஸ்லிம் மக்கள் நிம்­ம­தி­யாக வாழ்­வ­தற்கு வாக்­க­ளி­யுங்கள். நமது கண் முன்னே பொலி­சாரும் அர­சாங்­கமும் பார்த்துக் கொண்­டி­ருந்­த­போதே அம்­பாறை பள்­ளி­வாசல் உடைக்­கப்­பட்­டது. திக­னையில் அடித்துக் கொண்டே இருந்­தார்கள். இதனை மக்கள் புரிந்­து­கொள்ள வேண்டும். ஆக­வேதான் நாம் நன்­றி­யு­ணர்­வோடு இல்­லாமல் போன­தற்­காக அதுவும் ஒரு கார­ண­மாக நமக்­காக நாட்டை மீட்­டுத்­தந்­த­வ­னுக்குச் செய்த அநி­யா­யத்தை புரி­ய­வைப்­ப­தற்­காக நமது மக்கள் நமது கண் முன்னே விரட்டி நாய் போல் உதைக்­கப்­பட்­டார்கள். இத­னு­டைய பொறுப்பை விதைத்­த­வர்கள் எடுக்­க­வேண்டும்.

இப்­பொ­ழுது ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் அதனை அறு­வடை செய்து கொண்டு வரு­கின்றார். உண்மை பேசு­வ­தற்கு எதற்குப் பயப்­பட வேண்டும். கடந்த உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் முழு இலங்­கை­யிலும் 62 வீத­மான வாக்­கு­களை பெற்று எல்லா வட்­டா­ரங்­க­ளையும் வென்ற ஒரு பெருமை இந்த தேசிய காங்­கி­ரசின் அக்­க­ரைப்­பற்று மாந­க­ர­சபை மற்றும் பிர­தே­ச­ச­பைக்கும் இருந்­தது. அதற்கு சொந்­தக்­கா­ரர்கள் நீங்கள். நீங்கள் ஒரு போதும் துரோகம் செய்­ப­வர்கள் அல்ல. ஆக­வேதான் இன்­னு­மொரு வர­லாற்றுக் காலத்தில் தோல்வி காணாத நாம் இன்­றைக்கு அதா­உல்லா அணி­யி­னரின் மேடையில் அந்த அணி­யி­னரின் பேச்சு மட்­டும்தான் உண்மையாக இருக்­கி­றது என்று சிங்­கள மக்­களும், தமிழ் மக்­களும், முஸ்லிம் மக்­களும் குறிப்­பாக, கிழக்­கி­லங்­கையின் முஸ்­லிம்கள் சாரை சாரை­யாக தேசிய காங்­கி­ரசின் இந்த அழைப்பை ஏற்றுக் கொள்­கி­றார்கள். இது நமது வெற்றி இல்­லையா? பாரா­ளு­மன்றத் தேர்தலை விடவும் ஜனாதிபதித் தேர்தலே முக்கியமானது ஏன் தெரியுமா பாராளுமன்றத்தில் நாங்கள் இல்லாவிட்டாலும்  நாட்டை பாதுகாக்கக் கூடிய  உரிய ஒருவருடைய கையில் நாட்டை கொடுக்க வேண்டும். 2005 இல் நாம் கொடுத்தோம் வாழவைத்துக் காட்டினார். ஆகவே வரலாற்றில் இது முக்கியமான விடயமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.-Vidivelli

  • அக்­க­ரைப்­பற்று மேல­திக நிருபர்

Leave A Reply

Your email address will not be published.