முஸ்­லிம்கள் மீதான வெறுப்பும் விரோ­தமும்

ஒரு சுய பரிசோதனை

0 1,540

முஸ்­லிம்கள் பன்­னெ­டுங்­கா­லங்­க­ளாக தமது தனித்­து­வத்தைப் பாது­காத்து, மற்ற சமூ­கங்­க­ளுடன் புரிந்­து­ணர்­வோடு வாழ்ந்து வரு­கின்­றனர். இவற்றின் கார­ண­மாக பெரும்­பான்மை சமூ­கத்­தி­ன­ரிடம் முஸ்­லிம்கள் பற்­றிய நல்­லெண்ணம் காணப்­பட்­டது.

 

துர­திஷ்­ட­வ­ச­மாக, சீரிய சிந்­த­னை­யற்ற சில முஸ்லிம் இளை­ஞர்­களின் இஸ்­லாத்­துக்கு விரோ­த­மான ஈஸ்டர் தினத் தாக்­குதல், முஸ்­லிம்கள் பற்­றிய நல்­லெண்­ணத்தை சுக்­கு­நூ­றாக்கி விட்­டது. தாக்­கு­த­லுக்­குள்­ளான தேவா­ல­யங்­களும், ஹோட்­டல்­களும் புனர் நிர்­மாணம் செய்­யப்­ப­டு­கின்­றன. ஆனால், முஸ்­லிம்கள் இழந்த நல்­லெண்­ணத்தை மீளக் கட்­டி­யெ­ழுப்­பு­வது இல­கு­வாகத் தெரி­ய­வில்லை. கிறிஸ்­தவ சமூகம் பொறுமை காக்கும் அதே­வேளை, பௌத்த இன­வா­திகள் சந்­தர்ப்­பத்தைச் “சரி­யாக“ப் பயன்­ப­டுத்­து­கின்­றனர். இதனால் அனைத்து முஸ்­லிம்­களும் ஏதோ ஒரு வகையில் பாதிப்­புக்­குள்­ளா­கி­யுள்­ளனர்.

 

இவ்­வேளை, பின்­வரும் அல்­குர்­ஆனின் எச்­ச­ரிக்கை கவ­னிக்கத் தக்­கது

 

“நீங்கள் ஒரு சோத­னையை பயந்து கொள்­ளுங்கள். உங்­களில் அநீதி இழைத்­த­வர்­களை மாத்­திரம் அது தாக்க மாட்­டாது. (மற்­ற­வர்­க­ளையும் தாக்கும்)” (8-25) “பொல்­லார்க்கு வரும் வினை, நல்­லார்க்கும்“ என்­பது இதன் பொரு­ளாகும்.

 

அல்­லாஹ்வின் தூதர் (ஸல்) அவ­ர­்களும் இது தொடர்­பாக எச்­ச­ரித்­துள்­ளார்கள்.

 

“ஒரு முறை அண்­ணலார் அவர்கள் தன் தோழர்­க­ளிடம், “ஒரு காலம் வரும், அக்­கா­லத்தில் பசித்த பிரா­ணிகள் தமது உண­வுப்­பாத்­தி­ரத்தை நோக்கி போட்­டி­போட்டுக் கொண்டு பாய்­வதைப் போல (மற்ற) சமூ­கங்கள் உங்கள் மீது பாய்வர்” எனக் கூற. அங்­கி­ருந்த ஒருவர், “அல்­லாஹ்வின் தூதரே, அவ்­வேளை நாம் சொற்பத் தொகை­யி­ன­ரா­கவா இருப்போம்?” என வின­வினார். அதற்கு அண்­ணலார் அவர்கள், “இல்லை, நீங்கள் வெள்­ளத்தில் அள்­ளுண்டு போகும் நுரை­களைப் போல பெருந்­தொ­கை­யி­ன­ராக இருப்­பீர்கள். உங்­களைப் பற்­றிய அச்­சத்தை (பெறு­ம­தியை) உங்கள் விரோ­தி­களின் உள்­ளங்­க­ளி­லி­ருந்து அல்லாஹ் எடுத்­தி­ருப்பான். (அவ்­வேளை) உங்­க­ளது உள்­ளங்­களில் ‘அல் வஹ்ன்’ குடி­கொண்­டி­ருக்கும்” என்­றார்கள். அப்­போது மற்­றொரு தோழர், ‘அல் வஹ்ன்’ என்றால் என்ன?” வென வினவ, உல­க­மோ­கமும், மர­ணத்தை வெறுக்கும் மனோ­பா­வமும்” என்­றார்கள். (அறி­விப்­பவர்.  தவ்பான். (ரழி) ஆதாரம் அபு­தாவுத். அஹ்மத்)

 

இவ்­விரு தீய பண்­பு­களும் முஸ்­லிம்கள் மத்­தியில் பர­வ­லாகக் காணப்­ப­டு­வதன் கார­ண­மாக முஸ்­லிம்கள் பிள­வு­பட்ட நிலையில் தோல்­வி­க­ளையும், துன்ப, துய­ரங்­க­ளையும் சந்­தித்த வண்­ண­முள்­ளனர்.

 

முஸ்­லிம்கள் சிறு­பான்­மை­யி­ன­ராக வாழும் நாடு­களில் பெரும்­பான்மை சமூ­கங்­களின் இன வன்­மு­றை­க­ளுக்கும், கெடு­பி­டி­க­ளுக்கும் ஆளா­கி­யுள்­ளனர். இலங்கை முஸ்­லிம்­களும் இதற்கு விதி­வி­லக்­கல்ல.

 

வெறுப்­பு­ணர்­வுக்­கான சில முக்­கிய கார­ணிகள்

 

முஸ்­லிம்கள் நாட்­டுப்­பற்­றற்­ற­வர்கள் எனும் குற்­றச்­சாட்டு. ஒரு சில முஸ்­லிம்­களின் பொருத்­த­மற்ற நட­வ­டிக்­கை­களை  வைத்து, “முஸ்­லிம்கள் நாட்டின் அபி­வி­ருத்­திக்குப் போதிய பங்­க­ளிப்புச் செய்­வ­தில்லை. நாட்­டுப்­பற்­றுடன் நடப்­ப­தில்லை. மார்க்­கமும், வியா­பா­ர­முமே அவர்­க­ளது முக்­கிய குறிக்­கோள்கள்” என இன­வா­திகள் பகி­ரங்­க­மாகக் கூறு­கின்­றனர்.

 

இலங்­கைக்கும் முஸ்லிம் நாடொன்­றுக்­கு­மி­டையே கிரிக்கெட் போட்­டி­யொன்று நடை­பெற்ற வேளை, முஸ்லிம் நாட்­டையே அவர்கள் ஆத­ரிப்பர் எனும் இன­வா­தி­க­ளது குற்­றச்­சாட்டை நிரூ­பிப்­பது போல் முஸ்லிம் இளை­ஞர்­களின் நட­வ­டிக்­கைகள் அமைந்­தி­ருந்­தமை.

 

நாட்டை வளப்­ப­டுத்தும் மர­ந­டுகை, தோட்­டப்­பயிர்ச் செய்கை, சுற்­றாடற் சுத்தம், ஒலி மாச­டை­தலைத் தவிர்த்தல் போன்ற நட­வ­டிக்­கை­க­ளுக்கு முஸ்­லிம்­களின் பங்­க­ளிப்­புக்கள் மிகக் குறை­வாகக் காணப்­பட்­டமை ஆகி­யன இன­வா­தி­களின் பிரச்­சா­ரத்­துக்கு வாய்ப்­பாக அமைந்­தன.

 

சட்­டத்தைக் கையி­லெ­டுப்­ப­வர்கள் எனும் குற்­றச்­சாட்டு

 

முஸ்லிம் பிர­தே­ச­மொன்றில் வாகன விபத்­தொன்று நேரும் தரு­ணத்தில் முஸ்­லி­மல்­லாத ஒருவர் அதில் சம்­பந்­தப்­பட்­டி­ருப்பின், அந் நபரைத் தண்­டிக்க முஸ்லிம் இளை­ஞர்கள் முற்­ப­டுவர். இத்­த­கைய நட­வ­டிக்­கை­களால் பல இடங்­களில் இன முறுகல் நிலை ஏற்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

 

ஹலால் சான்­றிதழ் மூலம் பெரும்­பான்மை சமூ­கத்­தி­ன­ரிடம் வரி அற­வி­டு­வ­தற்கு சிறு­பான்­மை­யினர் முயற்­சிக்­கின்­றனர் எனும் பௌத்த மத­கு­ரு­மாரின் தீவிர பிர­சாரம் சிங்­கள சமூ­கத்தில் பெரும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யது.

 

சந்­தர்ப்­ப­வா­திகள் எனும் குற்­றச்­சாட்டு

 

முஸ்­லிம்­களின் சுய­நல நட­வ­டிக்­கை­களை வைத்து முழு முஸ்லிம் சமூ­கத்­தையும் சந்­தர்ப்­ப­வா­திகள் (அவஸ்த்­தா­வாதீன்) என இன­வா­திகள் பரி­க­சிக்­கின்­றனர். சந்­தர்ப்­ப­வாத சுய­நல அர­சியல், நேர்­மை­யற்ற வர்த்­தகம், பொது இடங்­க­ளிலும், போக்­கு­வ­ரத்து சாத­னங்­க­ளிலும் இடைஞ்­ச­லேற்­ப­டுத்தும் இளைஞர் கூட்டம், கட்­டுப்­பாடு, ஒழுங்கு விதி­மு­றை­களை மீறும் அவ­ச­ரக்­காரர், ஹரா­மான வர்த்­த­கத்­தி­லீ­டு­படும் போதைப்­பொருள் வர்த்­தகர், லஞசம் கொடுத்து காரியம் சாதிப்போர், பிற­மத பெண்­களை மண­மு­டித்து ஒரு­சில வாரங்­களில் அல்­லது மாதங்­களில் கைவி­டுவோர் ஆகி­யோரின் சந்­தர்ப்­ப­வாத நட­வ­டிக்­கைகள் அனைத்து முஸ்­லிம்­க­ளுக்கும் அவ­மா­னத்தை ஏற்­ப­டுத்­து­வ­துடன், இன­வா­தி­களின் குற்­றச்­சாட்­டுக்­களை நிரூ­பிப்­பது போலவும் அமை­கின்­றன.

 

பிற­மதத் தலங்­களை அவ­ம­திப்போர் எனும் குற்­றச்­சாட்டு

 

மற்ற மதத்­த­வரின் வழி­பாட்டுத் தலங்­களை அவ­ம­திக்கும் நோக்கம் முஸ்­லிம்­க­ளிடம் இல்­லாத போதும், அங்கு சென்று பொறுப்­பற்ற முறையில் நடப்­பதும், புகைப்­ப­டங்கள் எடுப்­பதும், பிற சம­யத்­த­வர்­களைப் பொறுத்­த­வ­ரையில் பாரிய குற்­ற­மாகும். எனவே, இளை­ஞர்­களோ, மாண­வர்­களோ பௌத்த சமய நம்­பிக்­கைகள், நடை­மு­றைகள் பற்றி  தெரி­யாத நிலையில், அவர்­க­ளது மதத் தலங்­க­ளுக்குச் செல்­வது தவிர்க்­கப்­பட வேண்டும்.

 

அடுத்து, பிறர் வணங்கும் தெய்­வங்கள் மற்றும் மத­கு­ரு­மார்­களைப் பரி­க­சிப்­பதை இஸ்லாம் அனு­ம­திக்­க­வில்லை என்­பதை சூரா அல்­ஆமின் 102வது வச­னத்தில் காணலாம்.

 

முஸ்­லிம்கள் பெருமை பிடித்­த­வர்கள் எனும் குற்­றச்­சாட்டு

 

முஸ்­லிம்கள் தமது முகத்தைப் பார்க்க மாட்­டார்கள். கதைக்க மாட்­டார்கள் என ஒரு சில பெரும்­பான்­மை­யினர் குற்றம் சுமத்­து­வ­தாக அறிய முடி­கின்­றது. ஒரு­சில தனிப்­பட்ட முஸ்­லிம்­களின் நட­வ­டிக்­கை­களை வைத்து, முழு முஸ்லிம் சமூ­கத்­தையும் எடை போடு­வது பொருத்­த­மற்­றது. “மனி­தரை விட்டும் உமது முகத்தைத் திருப்ப வேண்டாம்“ (3-:18) எனும் அல் குர்ஆன் கட்­ட­ளையும், “பெரு­மை­ய­டிப்­ப­வனை அல்லாஹ் தாழ்த்­துவான்” என்ற நபி­ய­வர்­களின் எச்­ச­ரிக்­கையும், முஸ்­லிம்­க­ளு­டனோ, முஸ்­லி­மல்­லா­த­வ­ரு­டனோ பெருமை பாராட்டக் கூடாது என்­பதை வலி­யு­றுத்­து­கி­றது.

 

மனித சகோ­த­ரத்­துவம் மதிக்­கப்­ப­டாமை எனும் குற்­றச்­சாட்டு

 

அல்லாஹ் மனி­தரை ஒரு ஆணி­லி­ருந்தும், ஒரு பெண்­ணி­லி­ருந்தும் படைத்­தி­ருப்­ப­தாக அல் குர்ஆன் (04- –11) குறிப்­பி­டு­கின்­றது. அதே­வேளை, “படைப்­பி­னங்கள் அல்­லாஹ்வின் குடும்பம்” என்று நபி­மொழி கூறு­கின்­றது.  இவற்­றி­லி­ருந்து, முஸ்­லி­மல்­லா­தவர் உட்­பட மனி­தர்கள் அனை­வ­ரையும் இஸ்லாம் மனித சகோ­த­ரத்துவத்தில் இணைத்­தி­ருப்­பது தெளி­வா­கி­றது. ஆகவே, இஸ்­லா­மிய அகீதா, ஷரீஆ என்­ப­வற்­றுக்கு முர­ணில்­லாத வகையில், பிற­ம­தத்­த­வர்­க­ளுடன் சமூக, பொரு­ளா­தார, அர­சியல் விவ­கா­ரங்­களில் முஸ்­லிம்கள் நல்­லு­றவைப் பேண வேண்டும். பிற சமூ­கங்­களை விட்டும் முற்­றாக ஒதுங்கி வாழ்­வது பாதிப்பை ஏற்­ப­டுத்தும்.

 

அற­பு­ம­ய­மாக்கல் எனும்  குற்­றச்­சாட்டு

 

இன­வா­திகள் முஸ்லிம் சமூ­கத்­துக்­கெ­தி­ராக வைத்த குற்­றச்­சாட்­டுக்­களில் அறபு மொழி­யி­லான விளம்­பரப் பதா­தைகள், அரா­பி­யரின் ஆடை, பேரித்த மரம் என்­ப­னவும் அடங்கும். பெளத்த மதக் கலா­சா­ரத்­துக்­கெ­தி­ரான ஐரோப்­பி­யரின் அரை­குறை ஆடை நாட்டில் செல்­வாக்கு செலுத்­து­வதை இன­வா­திகள் பொருட்­ப­டுத்­து­வ­தில்லை. அவர்­க­ளது ஆதங்கம் என்­ன­வெனில், முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யி­ன­ராக மாறி, இலங்கைத் தீவையே அறபு மய­மாக்கப் போகி­றார்கள் என்­ப­துவே. “ஆத்­தி­ரக்­கா­ர­னுக்குப் புத்தி மட்டு” என்ற முது­மொ­ழியை நிரூ­பிப்­பதைப் போன்று அவர்­க­ளது வாதம் காணப்­ப­டு­கின்­றது

 

ஒழுங்கு, கட்­டுப்­பாட்டை மீறுவோர் எனும் குற்­றச்­சாட்டு

 

முஸ்­லிம்கள் ஒழுங்­கையும், கட்­டுப்­பாட்­டையும் மீறி நடப்­ப­வர்கள் என்ற மனப்­ப­திவு பெரும்­பா­லா­ன­வ­ரிடம் காணப்­ப­டு­கின்­றன. இதனை நிரூ­பிக்கும் வகையில், கடந்த 8ஆம் திகதி, கண்டி மீரா மக்காம் பள்­ளிக்கு ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தாச விஜயம் செய்­த­வேளை, அங்கு குழு­மி­யி­ருந்த முஸ­லிம்­களில் பலர் அவரை “வர­வேற்க“ முண்­டி­ய­டித்து, முட்­டி­மோதிக் கொண்­டனர். அதனைக் கண்­ணுற்ற சஜித் அவர்கள், “இது பள்­ளி­வாசல். இங்கே சத்தம் போடா­தீர்கள்!” என முஸ்லிம் பிர­மு­கர்­க­ளுக்கு உப­தேசம் செய்ய வேண்­டிய துர்ப்­பாக்­கிய நிலைமை ஏற்­பட்­ட­தாக பத்­தி­ரிகைச் செய்­திகள் கூறு­கின்­றன.

 

பொது­வாக பஸ் வண்­டி­களுள் நுழைதல், வெளி­யே­றுதல், பாதை­களைக் கடத்தல், பார்­மஸி போன்ற இடங்­களில் பொருட்­களை கொள்­வ­னவு செய்­தலின் போதும், அரச வைத்­தியசாலைகள், விமான நிலை­யங்­க­ளிலும் – ஒப்­பீட்­ட­ளவில் – பிற சமூ­கங்­களை விட முஸ்­லிம்கள் நிதானப் போக்­கற்று அவ­ச­ரப்­ப­டு­வதை காணலாம்.

 

வியா­பார கொடுக்கல் வாங்கல், மோச­டிகள் எனும் குற்­றச்­சாட்டு

 

சில முஸ்­லிம்­களின் மோச­டி­களால் முழு முஸ்லிம் சமூ­கமும் சந்­தே­கத்­துடன் பார்க்­கப்­ப­டு­கின்­றது. மார்க்க விட­யங்­களில் அக்­கறை காட்­டு­வோர்­கூட, கொடுக்கல் வாங்­கல்­களில், மோச­டி­களை சர்வ சாதா­ர­ண­மாகக் கரு­து­கின்­றனர். குறிப்­பாகக் கடன் கொடுக்கல் வாங்­கல்­களைக் குறிப்­பி­டலாம். முஸ்­லி­மல்­லா­த­வர்­க­ளு­ட­னான கடன் கொடுக்கல் வாங்­கல்­களில் கூட மோச­மான முறை­கே­டுகள் நடை­பெ­று­வதால் இன­வி­ரோதம் மேலும் உச்ச நிலையை அடை­கின்­றது. “அளவை நிறு­வையில் மோசடி செய்­ப­வர்­க­ளுக்கும் கேடுதான் !” என்ற அல்­குர்­ஆனின் (83-:11) எச்­ச­ரிக்­கையும், ஈர­லிப்­பான தானி­யங்­களை குவி­யலின் கீழ்ப்­ப­கு­தி­யிலும் காய்ந்­ததை மேல் பகு­தி­யிலும் வைத்து வியா­பாரம் செய்த ஒரு நபரை நோக்கி, நபி­ய­வர்கள், “எங்­களை ஏமாற்­று­பவர் எம்மைச் சேர்ந்­த­வ­ரல்லர்” (ஸஹீஹ் முஸ்லிம்) என்று எச்­ச­ரித்­த­மையும், ஏமாற்று, மோச­டி­களின் தீமையை விளங்கிக் கொள்ளப் போது­மா­னவை.

 

சமூ­கத்தில் மலிந்­துள்ள மோச­டி­களும், ஏமாற்­று­களும் நமது இறுதிக் கட­மை­யான ஹஜ்­ஜை­யும்­கூட விட்டு வைத்­த­பா­டில்லை. அல்­லாஹ்வின் விருந்­தி­னர்கள் எனப்­படும் ஹஜ்­ஜா­ஜி­கள்­கூட, வருடா வருடம் பகி­ரங்­க­மா­கவே ஏமாற்­றப்­பட்டு வரு­கின்­றனர்.

 

இத்­த­கைய சமூக சீர்­கெ­டுகள், இன­வா­தி­க­ளுக்கு இன்­ப­ம­ளிப்­ப­ன­வை­யாக இருக்­கு­மென்­பதில் எள்­ளளவும் சந்­தே­க­மில்லை.

 

மஸ்­ஜி­துகள் தொடர்­பா­னவை

 

அல்­லாஹ்­வுக்­கு­ரிய மஸ்­ஜித்­களை பரி­பா­லனம் செய்தல் பாரிய பொறுப்பும், அமா­னி­த­மு­மாகும். அமா­னிதம் பற்றி மறுமை நாளில் விசா­ரிக்­கப்­படும்.  இறை விசு­வா­சத்­துடன் சன்­மார்க்க கட­மை­களை சரி­வர நிறை­வேற்றும் இறை பக்­தி­யு­மு­டை­ய­வர்­களே மஸ்­ஜித்­களை பரி­பா­லனம் செய்யும் தகு­தியை பெறுவர்.  தகு­தி­யற்­றோரை நிய­மிப்­பது பிரச்­சி­னை­க­ளுக்கு வழி­கோலும்.

 

மஸ்­ஜித்கள் சம்­பந்­தப்­பட்ட பின்­வரும் விட­யங்கள் தவிர்க்­கப்­படல் வேண்டும்.

 

மஸ்­ஜித்­களை அள­வுக்­க­திகம் அலங்­க­ரிப்­பதும், அவற்றுக்காகப் பெருந்தொகைப் பணத்தை செலவழித்தலும் வீண் விரயத்தில் அடங்கும். அனஸ் ரலி அவரகள் அறிவிக்கும் நபிமொழியொன்று, “மஸ்ஜித்களை வைத்து ஒருவருக்கொருவர் பெருமை பாராட்டிக் கொள்வது மறுமைநாளின் அடையாளங்களில் ஒன்று என கூறப்பட்டுள்ளது. (நூல் – அபுதாவூத் 449), மஸ்ஜித்கள் அழகாகவும், தேவைக்கேற்ப விசாலமாகவும் காணப்படுவதில் தவறில்லை. ஆனால், அதையும் மீறி செய்யப்படும் அலங்காரங்களும் ஆடம்பரத் தோற்றங்களும் இயல்பாகவே இனவாதிகளிடம் வெறுப்புணர்வை தோற்றுவித்துள்ளமை கவனிக்கத்தக்கது.

 

பிற­ருக்கு இடைஞ்சல் ஏற்­ப­டுத்தும் வகையில் மஸ்ஜித்களின் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத் துவதால், முஸ்லிம்களும் அசௌகரியங்களுக்குள்ளாகி, பெரும்பான்மை சமூகங்களிடமும் விரோத மனப்பான்மையை தோற்றுவிக்கின்றது. வாகனங்களில் மஸ்ஜித்களுக்கு வருவோர் தமது வாகனங்களை பள்ளியின் சுற்றுச் சூழலுக் கிடைஞ்சலாக பொறுப்பின்றி  நிறுத்துவதும், மஸ்ஜித்களுக்கு அபகீர்த்தியை உண்டு பண்ணுவதுடன், வெறுப்புணர்வுக்கும் காரணியாகிறது.

 

மஸ்ஜித்களில் ஏற்படும் கருத்து முரண்பாடுகளும், சர்ச்சைகளும் பொலிஸ் மற்றும் நீதிமன்றம் வரை செல்வதும், அந்நியரிடம் நீதிகோரி நிற்பதும் அல்லாஹ்வின் இல்லமான மஸ்ஜித்களுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் என்பதையிட்டு நாம் மிகுந்த கவலை கொள்ள வேண்டும்.-Vidivelli

 

  • மௌலவி ஏ.ஆர்.எம்.மஹ்ரூப் (கபூரி)

Leave A Reply

Your email address will not be published.