மத தீவிரவாதத்தை ஒழிக்க புதிய சட்டங்கள் அமுலாகும்

சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிப்பு

0 1,159

மதத்­தீ­வி­ர­வாத செயற்­பா­டு­களைக் கண்­கா­ணிப்­ப­தற்கும், அச்­செ­யற்­பா­டுகள் தொடர்பில் விசா­ரணை நடத்­து­வ­தற்கும் குற்­ற­வா­ளி­களை சட்­டத்தின் முன் நிறுத்­து­வ­தற்கும் புதிய சட்­டங்­க­ளையும் ஒழுங்கு முறை­க­ளையும் உரு­வாக்­கு­வ­தாக புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­சவின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­சவின் தேர்தல் விஞ்­ஞா­பனம் நேற்று கண்டி குயின்ஸ் ஹோட்­டலில் வெளி­யிட்டு வைக்­கப்­பட்­டது.

தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் மத தீவி­ர­வாதம் மீதான போர் என்ற தலைப்பின் கீழ் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, மதத் தீவி­ர­வா­தத்­துக்­கெ­தி­ரான இச்­சட்­டங்கள் பகை­மையைத் தூண்டும் பேச்சு மற்றும் பொய்த்­த­கவல் பரி­மாற்­றத்­திற்­கெ­தி­ராக கடு­மை­யான அப­ரா­தங்­களை விதிக்கும். மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் வழி­காட்­டு­தலின் கீழ், சிவில் மற்றும் அர­சியல் உரி­மைகள் தொடர்­பான சர்­வ­தேச உடன்­ப­டிக்கை சட்ட மூலம் முழு­மை­யா­கவும், நியா­ய­பூர்வமாகவும் அமுல்­ப­டுத்­தப்­படும்.

அனைத்து மக்­களின் உரி­மை­களும் பாது­காக்­கப்­படும். அவர்­களின் நம்­பிக்­கைகள் மதிக்­கப்­படும். ஜன­நா­ய­கமும், பன்­மைத்­து­வமும் மிக்க சமூ­கத்தை உரு­வாக்­குவோம். இதன் அடிப்­ப­டை­யில்தான் மதத் தீவி­ர­வாதம் மீதான போர் தொடுக்­கப்­படும். மத மற்றும் சமூக நல்­லி­ணக்­கத்­திற்­கான திய­வன்னை பிர­க­டனம் நல்­லி­ணக்க சட்­டத்தின் மூலம் அமுல்­ப­டுத்­தப்­ப­டு­வ­துடன், மக்கள் அங்­கீ­காரம் பெற்ற மதத் தலை­வர்­களை உள்­ள­டக்­கிய நல்­லி­ணக்க மன்­றமும் இச்­சட்­டத்தின் கீழ் உரு­வாக்­கப்­படும்.

சமூ­கங்­க­ளுடன் ஒத்­தி­சைவு மற்றும் ஒத்­து­ழைப்புக் குறித்த தேசிய கொள்­கையை உரு­வாக்­க­வென நாம் மகா சங்கம், இந்து, இஸ்­லா­மிய மற்றும் கிறிஸ்தவ தலைவர்கள், பொதுமக்கள், சிவில் சமூகம் என்பனவற்றோடு கலந்தாலோசிப்போம். பாடத்திட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும், பொது மக்களை அறிவூட்டவும் இக்கொள்கை பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.