காஷ்மீர் விவகாரத்தை தீர்ப்பதற்கு மஹாதீரின் மத்தியஸ்தம் அவசியம்

0 1,226

பாகிஸ்­தா­னுடன் இணைந்து காஷ்மீர் பிரச்­சி­னையைத் தீர்க்க இந்­தியா முன்­வர வேண்டும் என ஐக்­கிய நாடுகள் சபையின் 74ஆவது பொதுச் சபைக் கூட்­டத்தில் உரை­யாற்­றிய மலே­சிய பிர­தமர் மஹாதீர் முஹம்மத் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கிறார்.

காஷ்மீர் விவ­காரம் தொடர்­பான ஐ.நா.வின் தீர்­மானம் உள்ள போதிலும், அப்­ப­குதி வலுக்­கட்­டா­ய­மாக ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்­ளது என்று குறிப்­பிட்ட அவர், இந்த ஆக்­கி­ர­மிப்பின் பின்­ன­ணியில் பல்­வேறு கார­ணங்கள் இருக்­கலாம் என்­றாலும், இந்­தியா மேற்­கொண்ட நட­வ­டிக்கை தவ­றா­னது என்றும் திட்­ட­வட்­ட­மாகத் தெரி­வித்­தி­ருக்­கிறார்.

” எனவே அமை­தி­யான வழி­மு­றை­களின் மூலம் காஷ்மீர் பிரச்­சினை தீர்க்­கப்­பட வேண்டும். இல்­லை­யெனில் ஐ.நா.வின் கோரிக்­கை­களைப் புறக்­க­ணிப்­பது என்­பது சட்ட நீதியைப் புறக்­க­ணிப்­ப­தற்கு ஒப்­பா­னது” என்றும் அவர் காட்­ட­மாகக் குறிப்­பிட்டார்.

”பேச்­சு­வார்த்தை மூலம் கருத்து வேறு­பா­டு­களைத் தீர்ப்­ப­திலும் களை­வ­திலும் இந்­தி­யா­வுக்கு முன் அனு­பவம் உள்ள பட்­சத்தில், காஷ்மீர் மீது படை­யெ­டுக்­காமல், ஏன் பேச்­சு­வார்த்­தையை பயன்­ப­டுத்தி இருக்­கக்­கூ­டாது?” என்று தாம் இந்­திய தரப்­பிடம் கேட்­ட­தாக மஹாதீர் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கிறார்.

காஷ்மீர் விவ­கா­ரத்தில் மூன்றாம் தரப்பின் மத்­தி­யஸ்தம், தலை­யீட்டை இந்­தியா விரும்­ப­வில்லை என இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி ஏற்­க­னவே திட்­ட­வட்­ட­மாகத் தெரி­வித்­துள்ள நிலை­யி­லேயே, மஹாதீர் முஹம்மத் தற்­போது இரு நாடு­க­ளையும் பேச்­சு­வார்த்தை மூலம் தீர்வு காணு­மாறு வலி­யு­றுத்­தி­யி­ருக்­கிறார்.

தற்­போது உலகில் அதி­கா­ரத்­தி­லுள்ள சிரேஷ்ட தலை­வர்­களில் ஒரு­வ­ரான மஹாதீர் முஹம்­மதின் இந்த வேண்­டு­கோளை இந்­தி­யாவும் பாகிஸ்­தானும் கவ­னத்திற் கொள்ள வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

ஐக்­கிய நாடுகள் சபையில் உரை­யாற்­றிய இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி, காஷ்மீர் விவ­காரம் குறித்து எதையும் பேச­வில்லை. அவர் பெரும்­பாலும் தனது அரசு செய்­துள்ள சாத­னைகள் என்று தாம் கருதும் விவ­கா­ரங்கள் பற்­றியே பேசினார். ஆனால், இம்ரான் கானின் பேச்சு முழு­வதும் காஷ்மீர் பிரச்­சி­னையை மையப்­ப­டுத்­தியே இருந்­தது.

சுமார் 50 நிமி­டங்கள் நீடித்த இம்ரான் கானின் உரைக்கு காஷ்­மீரில் மாத்­தி­ர­மன்றி உல­க­ள­விலும் பலத்த வர­வேற்புக் கிடைத்­துள்­ளது. எனினும் அவர் தனது உரையை சற்றுக் காட்­ட­மா­ன­தா­கவே நிகழ்த்­தினார். அணு­வா­யுத வல்­ல­மையைக் கொண்­டுள்ள இரு நாடுகள் போருக்குச் செல்­வது ஆரோக்­கி­ய­மா­ன­தல்ல என்ற செய்­தியை அவர் திரும்பத் திரும்ப தன­து­ரையில் வலி­யு­றுத்­தினார். அத்­துடன் ஐக்­கிய நாடுகள் சபை காஷ்மீர் விவ­கா­ரத்தில் தலை­யிட்டு உடன் தீர்வைத் தர வேண்டும் என்றும் அவர் தன­து­ரையில் வலி­யு­றுத்திக் கேட்டுக் கொண்டார்.

அந்த வகையில் இந்­திய கட்­டுப்­பாட்­டுக்­குட்­பட்ட காஷ்­மீரில் இரண்டு மாதங்­க­ளாக நீடிக்கும் ஊர­டங்குச் சட்­டத்தை நீக்க முதலில் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். அதனைத் தொடர்ந்து சம்­பந்­தப்­பட்ட தரப்­புகள் பேச்­சு­வார்த்தை மூலம் தீர்வு காண நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும்.

இந்­தி­யாவும் பாகிஸ்­தானும் சம்­பந்­தப்­பட்ட இந்த விவ­கா­ரத்தில் மூன்றாம் தரப்பின் உத­வி­யின்றி சம­ரசம் காண்­பது சாத்­தி­ய­மா­ன­தல்ல. அந்த வகையில் உலகின் அனு­ப­வ­மிக்க மூத்த தலை­வ­ரான மலே­சியப் பிர­தமர் மஹாதிர் முஹம்­மதின் மத்­தி­யஸ்­தத்தில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாயின் சுமுக தீர்வொன்றை எட்டக் கூடியதாகவிருக்கும்.

அந்த வகையில் அவர் ஐ.நா.வில் வலியுறுத்தியுள்ளதைப் போன்று பாகிஸ்தானுடன் இணைந்து காஷ்மீர் பிரச்சினையைத் தீர்க்க இந்தியா முன்வர வேண்டும். அதுவே பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட பேருதவியாக அமையும்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.