அர­சி­ய­ல­மைப்பை மீறியே ஜனா­தி­ப­தி செயற்பட்டு வருகிறார்

சபையில் ஹக்கீம், ரிஷாத், முஜீப் குற்­றச்­சாட்டு

0 672

ஜன­நா­ய­கத்தை மீறிய ஜனா­தி­ப­தி­யாக மைத்­தி­ரி­பால சிறி­சேன மாறி­விட்டார். அர­சி­ய­ல­மைப்­பி­னையும் சபா­நா­யகர் அறி­விப்­பையும் மீறி ஜனா­தி­பதி செயற்­பட முடி­யா­தென எதிர்க்­கட்சி முஸ்லிம் உறுப்­பி­னர்கள் சபையில் சாடினர். ஜனா­தி­பதி விட்ட தவறை அவரே சரி­செய்ய வேண்டும் எனவும் அவர்கள் சுட்­டிக்­காட்­டினர்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை சபை அமர்­வு­களின் போது எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­க­ளான முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலைவர் ரிசாத் பதி­யுதீன் மற்றும் ஐக்­கிய தேசியக் கட்சி கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் உள்­ளிட்டோர் உரை நிகழ்த்­திய போதே இந்த விட­யங்­களை சுட்­டிக்­காட்­டினர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம் உரை­யாற்­று­கையில்,

பாரா­ளு­மன்­றத்தில் பிர­த­ம­ருக்கும் ஆளும் கட்­சிக்கும் எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­பட்டு வெற்­றி­கொள்­ளப்­பட்­டுள்­ளது. அர­சாங்கம் பெரும்­பான்மை இழப்­ப­தாக பாரா­ளு­மன்­றத்தில் சபா­நா­யகர் மூல­மாக அறி­வித்தல் விடுக்­கப்­பட்­டுள்­ளது. ஆகவே இப்­போது அர­சாங்கம்  ஒன்றும் பிர­தமர், அமைச்­சர்கள் எவரும் இல்லை. அவ்­வா­றி­ருக்­கையில் இன்­னமும்  ஊட­கங்­களில் இவர்­களை பிர­தமர், அமைச்­சர்கள் என குறிப்­பி­டு­வது பாரா­ளு­மன்ற அங்­கீ­கா­ரத்தை மீறும் ஜன­நா­யக விரோத செயற்­பா­டாகும்.

இன்றும் ஊட­கங்­களில் இவர்­களின் செய்­தி­யாளர் சந்­திப்­புகள் பிர­சு­ரிக்­கப்­ப­டும்­போது சகல ஊட­கங்­க­ளிலும் இவர்கள் அமைச்­சர்கள், மஹிந்த ராஜபக் ஷவை பிர­தமர் என அடை­யா­ள­ப்ப­டுத்­து­கின்­றனர். பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்மை ஆத­ர­வுடன் அர­சாங்கம் தோற்­க­டிக்­கப்­பட்­டுள்­ளது, சபா­நா­யகர் அறி­வித்தல் பதி­யப்­பட்­டுள்­ளது. அவ்­வாறு இருந்தும் ஊட­கங்­களில் இவர்­களை அமைச்­சர்கள், பிர­தமர் என கூறு­வது எமது சிறப்­பு­ரி­மையை மீறும் செயற்­பா­டாகும். ஆகவே இதனை கவ­னத்தில் கொள்ள வேண்­டு­மெனக் குறிப்­பிட்டார்.

அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலைவர் ரிஷாத் பதி­யுதீன் கூறு­கையில்,

பாரா­ளு­மன்ற தேர்­தலில் போட்­டி­யி­டக்­கூ­டி­ய­வர்கள் குறைந்தபட்சம் பட்­ட­தா­ரி­யா­க­வா­வது இருக்­க­வேண்டும். அவ்­வாறு இல்­லா­த­தால்தான் நாக­ரி­மற்ற முறையில் கடந்த தினங்­களில் பாரா­ளு­மன்­றத்தில் செயற்­பட்­டனர். இவர்­களின் முறை­யற்ற செயற்­பாட்­டினால் பாரா­ளு­மன்ற அப்­பாவி ஊழி­யர்கள், பொலிஸார் பல்­வேறு அசெ­ள­க­ரி­யங்­க­ளுக்கு முகம்­கொ­டுத்­தனர். அதனால் மிள­காய்த்தூள் கரைத்து எறிந்­த­வர்­க­ளுக்கு எதி­ராக கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்டும். அத்­துடன் அரச தரப்பு என சொல்­லிக்­கொண்­டி­ருப்­ப­வர்கள் உங்­க­ளுக்கு எதி­ராக தெரி­விக்­கப்­படும் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் நீங்கள் கவ­லைப்­படத் தேவை­யில்லை. நானும் அகதி முகாமில் இருந்தே பாரா­ளு­மன்றம் வந்தேன். நான் செய்­யாத பல குற்­றச்­சாட்­டுக்கள் எனக்­கெ­தி­ராக கடந்த காலங்­களில் தெரி­விக்­கப்­பட்டு வந்­தன. நான் நேர்­மை­யாக செயற்­பட்டு வந்­த­மையால் அவற்­றுக்கு நான் தைரி­ய­மாக முகம்­கொ­டுத்தேன். இறு­தியில் எனக்கு வெற்றி கிடைத்­தது. அதேபோல் உங்கள் நேர்­மை­யான செய­லுக்கு உங்­க­ளுக்கும் வெற்­றி­கி­டைக்கும்.

அத்­துடன் தற்­போது இருக்கும் பிரச்­சி­னைக்கு பாரா­ளு­மன்­றத்தில் தீர்வு காண­மு­டி­யாமல் இருக்கும் நிலையில் பொதுத் தேர்­தலில் தீர்­வு­காண முயற்­சிப்­பது சிறு­பிள்­ளைத்­த­ன­மான செய­லாகும். அத்­துடன் நாமல் குமார தெரி­வித்த கொலை சதி முயற்­சியில் ஜனா­தி­பதி, கோத்­தா­பய ராஜபக் ஷவுடன் எனது பெய­ரையும் தெரி­வித்­தி­ருந்தார். ஆனால் ஊட­கங்கள் எனது பெயரை மறைத்­தார்கள். இது தொடர்­பாக பொலிஸில் முறைப்­பாடு செய்­துள்ளேன். நாமல் குமா­ரவின் நட­வ­டிக்­கையால் தற்­போது அர­சி­யலில் மோச­மான மாற்றம் ஏற்­பட்­டுள்­ளது. அதனால் எனது பாது­காப்­பையும் உறு­திப்­ப­டுத்­து­மாறு கேட்­டுக்­கொள்­கின்றேன் எனக் குறிப்­பிட்டார்.

ஐக்­கிய தேசிய கட்­சியின் உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் உரை­யாற்­று­கையில்,

பாரா­ளு­மன்­றத்­துக்குள் இருந்­து­கொண்டே சபா­நா­ய­க­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்­ப­தாக விமல் வீர­வன்ச ஊடக சந்­திப்பு நடத்தி தெரி­விக்­கின்றார். சபா­நா­ய­க­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்­ப­தாக இருந்தால் பாரா­ளு­மன்­றத்தில் ஒரு­முறை இருக்­கின்­றது. நிலை­யியற் கட்­ட­ளையின் பிர­காரம் நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணை­யொன்றை கொண்­டு­வந்து சபா­நா­ய­கரை நீக்­கலாம். ஆனால் அவர்கள் சபைக்கு வராமல் பாரா­ளு­மன்­றத்­துக்குள் ஊடக சந்­திப்­புக்­களை நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஜனாதிபதியின் அதிகாரத்துக்கு பின்னால் இருந்தே இவர்கள் இவ்வாறு செயற்படுகின்றனர். ஜனாதிபதியும் பாராளுமன்ற சம்பிரதாயத்துக்கு எதிராக செயற்படுகின்றார். பாராளுமன்ற தீர்ப்புகளை அவர் நிராகரித்து வருகின்றார். அத்துடன் சபாநாயகரை விமர்சிக்குமாறு ஜனாதிபதி சிலருக்கு கொந்தராத்து வழங்கியுள்ளதாக இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. ஆனால் இந்த செய்தியை ஜனாதிபதி செயலகம் இதுவரை நிராகரிக்கவில்லை என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.