ஷாபியின் அடிப்­படை உரிமை மீறல் மனு அடுத்த வருடம் வரை ஒத்­தி­வைப்பு

0 493

குரு­நாகல் போதனா வைத்­தி­ய­சா­லையின் மகப்­பேற்று மற்றும் பெண்­ணியல் நோய் தொடர்­பி­லான வைத்­தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி தாக்கல் செய்­தி­ருந்த அடிப்­படை உரிமை மனு மீதான பரி­சீ­ல­னையை அடுத்த வருடம் ஜன­வரி மாதம் 24 ஆம் திக­திக்கு உயர் நீதி­மன்றம் ஒத்­தி­வைத்­தது.

சட்­ட­வி­ரோ­த­மாகக் கருத்­தடை சத்­தி­ர­சி­கிச்சை மேற்­கொண்­டமை, முறை­யற்ற வகையில் நிதி சேக­ரித்­தமை உள்­ளிட்ட பல்­வேறு குற்­றச்­சாட்­டு­களின் கீழ் கைது செய்­யப்­பட்டு குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வி­னரால் தாம் தடுத்து வைத்­தி­ருந்­த­மையை ஆட்­சே­பித்து, வைத்­தியர் ஷாபி தாக்கல் செய்த மனுவே இவ்­வாறு ஒத்தி வைக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த அடிப்­படை உரிமை மீறல் மனு கடந்த வெள்­ளிக்­கி­ழமை உயர் நீதி­மன்ற நீதி­ய­ர­சர்­க­ளான புவ­வே­னக அலு­வி­ஹாரே மற்றும் முர்து பெர்­னாண்டோ ஆகியோர் முன்­னி­லையில் பரி­சீ­லனை செய்­யப்­பட்­டது. இதன்­போது இந்த மனு தொடர்பில் அறிக்கை சமர்ப்­பிப்­ப­தற்குத் தேவை­யான ஆவ­ணங்­களை திரட்­டு­வ­தற்கு கால அவ­காசம் தேவை­யென சட்­டமா அதிபர் சார்பில் ஆஜ­ரா­கிய பிரதி சொலி­ஸிட்டர் ஜெனரல் துஷித் முத­லிகே கோரி­ய­தற்­க­மைய அதற்­கான கால அவ­காசம் வழங்கப்பட்டே இவ்வாறு குறித்த மனு அடுத்த வருடம் ஜனவரி 24 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.