ரணிலின் ஆத­ர­வுடன் கள­மி­றங்­கி­யுள்ளேன்

0 505

எம்­மிடம் குடும்ப அர­சியல் இல்லை, நாட்டின் சகல மக்­க­ளையும் சிந்­தித்து சக­ல­ரதும் ஒத்­து­ழைப்­புடன் கட்­சியின் தலைவர் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் பூரண ஆத­ர­வுடன் நான் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராகக் கள­மி­றங்­கி­யுள்ளேன் என்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் அமைச்சர் சஜித் பிரே­ம­தாச கூறினார். 

நாட்­டி­லுள்ள ஒன்­பது மாகாண மக்­களின் ஒத்­து­ழைப்­பையும் எதிர்­பார்ப்­ப­தாக அவர் கூறினார்.

கொலன்­னா­வையில் நேற்று இடம்­பெற்ற மக்கள் சந்­திப்பில் உரை­யாற்­றும்­போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,
நாம் உரு­வாக்கும் பரந்த கூட்­ட­ணியின் மூல­மாக இந்த ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட்டு எமது வெற்­றியை நாம் உரு­வாக்­குவோம். அடுத்த எமது அர­சாங்­கத்தை அமைத்து இந்த நாட்டில் ஆரோக்­கி­ய­மான ஆட்­சியை முன்­னெ­டுப்போம். அத்­துடன் சர்­வ­தே­சத்­துடன் போட்­டி­போ­டக்­கூ­டிய சிறந்த ஏற்­று­ம­தி­களை உரு­வாக்கி நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்பும் பொரு­ளா­தார வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுப்போம். நாட்­டினை கட்­டி­யெ­ழுப்பும் புதிய வேலைத்­திட்­டங்­களே எம்­மிடம் உள்­ளன. மக்­க­ளுக்கு பொரு­ளா­தார ஏணி ஒன்­றினை உரு­வாக்க வேண்டும். வாழ்­வா­தா­ரத்தை பாது­காக்கும் அதற்­கான வாய்ப்­பு­களை உரு­வாக்­கிக்­கொ­டுக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல் அரச தலை­மைத்­துவம் எப்­போதும் ஒரு தேசிய கொள்கைத் திட்­டத்­தி­லி­ருக்க வேண்டும். இது குடும்ப கொள்கை திட்­டத்தில் இருக்க முடி­யாது. கடந்த காலத்தில் தேர்தல் வேட்­பாளர் விட­யத்தில் இரண்டு திரைப்­ப­டங்களைப் பார்க்க முடிந்­தது. ஒன்று தமது குடும்ப தலை­மைத்­துவம், அதில் அண்ணன், தம்பி அதி­கா­ரங்கள் பற்றி மட்­டுமே சிந்­திக்­கப்­பட்­டன. பொது­மக்கள் குறித்தும் அடி­மட்ட மக்கள் குறித்தும், தொழி­லாளர் குறித்தும், விவ­சா­யிகள் குறித்தும், நடுத்­தர மக்கள் குறித்தும் சிந்­திக்­க­வில்லை. ஒருவர் பின் இன்­னொரு சகோ­த­ர­ருக்கு எவ்­வாறு நாட்டின் உரி­மையை கொடுக்க முடியும் என்றே சிந்­தித்­தனர்.

மறு­பக்கம் எமது தரப்பில் ஒரு வேட்­பாளர் விட­யத்தில் அனை­வ­ரதும் கருத்­துக்கள், ஒன்­பது மாகா­ணங்­களின் நிலைப்­பாடு, உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் நிலைப்­பாடு, பங்­காளி கட்­சி­களின் மக்கள் என்ன நினைக்­கின்­றனர் என்ற அனை­வ­ரையும் பற்றி சிந்­தித்து தலை­வரின் முழு­மை­யான ஆசிர்­வா­தத்­துடன் எமது அணி தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. ஆகவே, இந்த நாட்டில் எதிர்­கா­லத்தை குடும்பம் ஒன்­றுக்கு கொடுக்கப் போகின்­றீர்­களா அல்­லது நாடாக ஒன்­றி­ணைந்து பய­ணிக்கும் தீர்­மா­னத்தை எடுக்­கப்­போ­கின்­றீர்­களா என்­பதை மக்­களே தீர்­மா­னிக்க வேண்டும். எம்­மிடம் குடும்ப ஆட்சி இல்லை. எம்மை நம்பி மக்கள் எமக்கு கொடுக்கும் ஆத­ரவை நாம் எப்­போதும் காப்பாற்றுவோம். மக்களுக்கு முன்வைக்கும் அனைத்துமே மக்கள் வேலைத்திட்டம். இதில் காலம், எண்ணம், கொள்கை என்ற திட்டமே இருக்கும். என்னிடம் ஏமாற்று அரசியல் ஒருபோதும் இல்லை. நான் எப்போதும் இந்த நாட்டுக்கான நேசமான அரசியலையே செய்வேன் என்றார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.