வஹா­பிஸம், அர­பு­ம­ய­மா­த­லுக்கு எதி­ராக நட­வ­டிக்கை வேண்டும்

இறுதி அறிக்கையில் சிபாரிசு செய்ய பாராளுமன்ற தெரிவுக்குழு திட்டம்

0 615

ஏப்ரல் 21 குண்டுத் தாக்­குதல் தொடர்பில் விசா­ர­ணை­களை பூர்த்தி செய்­துள்ள பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு, அதன் இறுதி அறிக்­கையில் வஹா­பிஸம் மற்றும் அரபு மய­மாதல் போன்­ற­வற்­றினால் ஏற்­படும் பாதிப்­பு­களைத் தடுப்­பது குறித்த சிபா­ரி­சு­களை முன்­வைக்கத் தீர்­மா­னித்­துள்­ள­தாகத் தெரிய வரு­கி­றது.
கடந்த செவ்­வாய்க்­கி­ழமை பாரா­ளு­மன்ற கட்­டிடத் தொகு­தியில் இடம்­பெற்ற தெரி­வுக்­கு­ழுவின் கூட்­டத்­தி­லேயே இது­கு­றித்து ஆரா­யப்­பட்­டுள்­ள­தாக ஆங்­கில ஊட­க­மொன்று செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

குழுவின் தலை­வரும் பிரதி சபா­நா­ய­க­ரு­மான ஆனந்த குமா­ர­சிறி தலை­மையில் நடை­பெற்ற இக்­கூட்­டத்தில், அமைச்­சர்­க­ளான ராஜித சேனா­ரத்ன, ரவூப் ஹக்கீம் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஆசு மார­சிங்க தவிர்ந்த குழுவின் ஏனைய உறுப்­பி­னர்கள் பங்­கேற்­றுள்­ளனர்.

இந்த சிபா­ரி­சு­களில் புல­னாய்வுக் கட்­ட­மைப்பில் மறு­சீ­ர­மைப்­பு­களை ஏற்­ப­டுத்­துதல், அதி­க­ரித்து வரும் இஸ்­லா­மிய தீவி­ர­வாதம் மற்றும் பௌத்த தீவி­ர­வா­தத்தை கண்­கா­ணித்தல் மற்றும் கட்­டுப்­ப­டுத்­துதல், சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தை மறு­சீ­ர­மைத்தல் உள்­ளிட்ட தாம­த­மாகும் சட்­ட­மி­யற்றும் பணி­களை துரி­தப்­ப­டுத்­துதல் ஆகி­ய­வற்­றுடன் வஹா­பிஸம் மற்றும் அர­பு­ம­ய­மா­த­லுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுத்தல் என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாராளுமன்ற தெரிவுக்குழு, மீண்டும் ஒக்டோபர் 4 ஆம் திகதி கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.