முஸ்லிம் தனியார் சட்டம் : திருத்தங்களை அவசரமாக நிறைவேற்றிவிட முடியாது

ஒரு வருட காலம் எடுக்கும் என்கிறார் அமைச்சின் பணிப்பாளர் அஷ்ரப்

0 1,249

அர­சி­யல்­வா­திகள் தேர்தல் கால­கட்­டத்தில் அவ­ச­ரப்­ப­டு­கி­றார்கள் என்­ப­தற்­காக முஸ்லிம் விவாக, விவா­கரத்துச் சட்ட திருத்த வரை­பினை பாரா­ளு­மன்­றத்தில் உட­ன­டி­யாகச் சமர்ப்­பித்து அதற்­கான அங்­கீ­கா­ரத்தைப் பெற்றுக் கொள்ள முடி­யாது. திருத்­தங்­க­ளுக்­கான சட்ட வரை­பினை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிப்­ப­தற்கு விதி­மு­றைகள் இருக்­கின்­றன. அதற்­கி­ணங்க இந்த செயற்­பா­டு­க­ளுக்கு சுமார் ஒரு­வ­ருட காலம் தேவைப்­ப­டலாம் என முஸ்லிம் சமய விவ­கார அமைச்சின் பணிப்­பாளர் ஏ.பி.எம். அஷ்ரப் தெரி­வித்தார்.

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய திருத்­தங்கள் முஸ்லிம் பாரா­ளு­மன்ற அங்­கத்­த­வர்­களால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு சட்ட திருத்த அறிக்கை நீதி மற்றும் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்­ச­ரிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. அதற்கு அமைச்­ச­ர­வையும் அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது. இந்­நி­லையில் தற்­போது ஜனா­தி­பதித் தேர்தல் நடை­பெ­ற­வுள்­ளதால் உடனே சட்ட வரைபு பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்டு அங்­கீ­காரம் பெற்றுக் கொள்ள நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கும்­படி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பைசர் முஸ்­தபா அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்­சரைக் கடிதம் மூலம் கோரி­யி­ருந்தார். இதற்கு உட­னடி நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­டா­விட்டால் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மேற்­கொண்ட முயற்­சிகள் பய­னற்­ற­தா­கி­வி­டு­மெ­னவும் தனது கடி­தத்­தில குறிப்­பிட்­டி­ருந்தார்.

இது தொடர்பில் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சின் பணிப்­பாளர் ஏ.பி.எம். அஷ்­ர­பிடம் வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்;

முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் அங்­கீ­காரம் பெற்­றுள்ள சட்ட வரைபு அண்­மை­யி­லேயே நீதி­ய­மைச்­ச­ரிடம் கைய­ளிக்­கப்­பட்டு முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் மற்றும் நீதி மற்றும் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் ஆகி­யோ­ரினால் அமைச்­ச­ர­வைக்கு சமர்ப்­பிக்­கப்­பட்டு அங்­கீ­காரம் பெற்றுக் கொள்­ளப்­பட்­டுள்­ளது.

தற்­போது அந்த சட்ட வரைபு அரச சட்ட வரைஞர் திணைக்­க­ளத்­துக்கு அனுப்­பப்­பட்­டுள்­ளது. சட்ட வரைஞர் திணைக்­களம் சட்ட திருத்­தங்கள் தொடர்பில் ஆராய்ந்து அதன் பின்பு சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­துக்கு அனுப்பி வைக்கும். சட்­டமா அதிபர் திணைக்­களம் திருத்­தங்கள் அர­சியல் யாப்­புக்கு முர­ணா­ன­தாக உள்­ளதா என்­பது பற்றி ஆராய்ந்த பின்பே அங்­கீ­கா­ரத்தை வழங்கும். இந்த செயற்­பா­டுகள் அனைத்தும் முற்றுப் பெற்­றதன் பின்பே சட்ட வரைபு பாரா­ளு­மன்­றத்தின் 2/3 பெரும்­பான்மை அங்­கீ­கா­ரத்­திற்­காக அனுப்பி வைக்­கப்­படும். எனவே, இந்த செயற்­பா­டு­க­ளுக்கு சுமார் ஒரு வருட காலம் தேவைப்­படும். அதனால் அர­சி­யல்­வா­திகள் தங்­க­ளது அர­சியல் சுய­நலம் கருதி அவ­ச­ரப்­ப­டு­வது போல் அவ­ச­ர­மாக முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்ள முடி­யாது.

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய திருத்­தங்­களை செய்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட குழு 9 வருட காலத்தின் பின்பே தனது அறிக்­கையை நீதி­ய­மைச்­சிடம் கைய­ளித்­துள்­ளது. ஏப்ரல் 21 ஆம் திகதி தற்­கொலை குண்டுத் தாக்கு­தல்­க­ளை­ய­டுத்தே இத்­தி­ருத்­தங்கள் விரை­வு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன என்­பதை நாம் கவ­னத்­திற்­கொள்ள வேண்டும் என்றார்.

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களைச் சிபா­ரிசு செய்­வ­தற்­காக 2009 ஆம் ஆண்டு அப்­போ­தைய நீதி­ய­மைச்சர் மிலிந்த மொர­கொ­ட­வினால் தற்­போ­தைய ஓய்வு நிலை நீதி­ய­ரசர் சலீம் மர்­சூபின் தலை­மையில் குழு­வொன்று நியமிக்கப்பட்டது. அக்குழு தனது அறிக்கையை கடந்த வருடம் நீதியமைச்சரிடம் கையளித்திருந்தது. குழு இரு வேறாகப் பிரிந்து இரு வேறுபட்ட சிபாரிசுகளை முன் வைத்திருந்ததனாலேயே நீதியமைச்சர் தலதா அத்துகோரள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் அங்கீகாரத்துக்குச் சமர்ப்பித்து திருத்தங்கள் தொடர்பான அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.