இலவச கல்வியின் எதிர்காலம்

0 2,714

ஒருவர் பெறு­கின்ற கல்வி அவ­ரது ஆளு­மைக்கும், ஆற்­ற­லுக்கும், திற­னுக்கும் அடித்­த­ள­மாக இருந்து அவ­ரது ஒவ்­வொரு செயற்­பாட்­டையும் சிறப்­புற மேற்­கொள்ள வழி­வ­குக்கும். அந்­த­வ­கையில், கல்வி கற்கும் வய­தெல்­லை­யைக்­கொண்ட ஒவ்­வொரு பிள்­ளையும் இக்­கல்­வியை கற்­றுக்­கொள்­வதும், கற்­றுக்­கொள்ள வழி ஏற்­ப­டுத்­தப்­படுவதும் அவ­சி­ய­மாகும்.

அந்த அவ­சி­யத்தை இலக்­காகக் கொண்டே ஒவ்­வொரு பிள்­ளையும் கல்வி கற்­ப­தற்­கான உரிமை உல­க­ளா­விய ரீதியில் வழங்­கப்­பட்­டுள்­ளது. இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்­பில்­கூட கல்­விக்­கான உரிமை வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அந்த அடிப்­படை உரி­மையைப் பெற்­றுக்­கொள்ளும் உரிமை இந்­நாட்டில் பிறக்கும் ஒவ்­வொரு பிள்­ளைக்கும் உரித்­தா­னது.

உல­க­ளா­விய ரீதியில் கற்றல், – கற்­பித்தல் செயற்­பா­டுகள் பல வடி­வங்­களில் முறை­மைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது. உலகின் சில நாடு­க­ளி­லேதான் இல­வசக் கல்வி முறைமை நடை­மு­றையில் காணப்­ப­டு­கி­றது. ஒரு சில ஐரோப்­பிய நாடு­களில் ஆரம்­பக்­கல்விப் பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு இல­வசக் கல்வி முறைமை உள்­ள­போ­திலும், இடை­நிலைப் பாட­சாலை மற்றும் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளுக்கு அவ்­வாய்ப்பு வழங்­கப்­ப­ட­வில்லை. அவர்கள் கொடுப்­ப­னவு செலுத்­தியே கல்வி கற்கும் நிலை காணப்­ப­டு­கி­றது. இருந்­த­போ­திலும், ஆரம்­பக்­கல்வி முதல் பல்­க­லைக்­க­ழகக் கல்­வி­வரை இல­வ­ச­மாக வழங்கும் பிரேசில், மொறி­சியஸ் போன்ற விரல்­விட்டு எண்­ணக்­கூ­டிய நாடு­களின் வரி­சையில் இலங்­கையும் ஒன்­றாகும். ஆனால், இல­வசக் கல்வி முறை­மையைக் கொண்­டுள்ள இலங்­கையின் இல­வசக் கல்வி எதிர்­கா­லத்தில் என்­ன­வாக அமையும் என்ற கேள்­வியை தற்­கால பாட­சாலைக் கல்வி நட­வ­டிக்­கைகள் எழுப்­பி­யுள்­ளன என்­பது அவ­தா­னத்­திற்­கு­ரி­ய­தாகும்.

தற்­கா­லமும் பாட­சாலைக் கல்­வியும்

இலங்கை ஏறக்­கு­றைய 2300 வரு­டங்­க­ளுக்கு முற்­பட்ட கல்வி வர­லாற்றைக் கொண்­ட­தொரு நாடாகக் காணப்­ப­டு­கி­றது. இந்­நாட்டை ஆளு­கைக்­குட்­ப­டுத்தி ஆட்சி செய்த மேற்­கு­ல­கினர் அவர்­களின் கொள்­கை­க­ளுக்கும், தேவைக­ளுக்­கு­மேற்ப கல்வி வாய்ப்பை வழங்­கினர். இருந்­த­போ­திலும், அவர்­களின் கொள்­கை­க­ளுக்கு இசைந்­து­போக மறுத்த பலர் கல்வி வாய்ப்பை இழந்­த­மையை இலங்­கையின் கல்வி வர­லாற்றில் காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது.

இருப்­பினும், 1836ஆம் ஆண்டு ஏற்­ப­டுத்­தப்­பட்ட கோல்­புறூக் ஆணைக்­கு­ழுவின் ஊடாக பாட­சாலைக் கல்வி முறைமை என்ற நவீன கல்­வித்­திட்டம் அறி­முகப் படுத்­தப்­பட்­டது. இத்­திட்­டத்தின் மூலம் உரு­வாக்­கப்­பட்ட முத­லா­வது பாட­சா­லை­யாக கொழும்பு றோயல் கல்­லூரி திகழ்­கி­றது. இதன் பின்னர் பல பாட­சா­லைகள் உரு­வாக்­கப்­பட்­டன.

1931ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் இலங்­கையின் கல்வி முறை­மை­யா­னது இல­வசக் கல்வி என்ற நிலைக்கு மாற்­றப்­ப­டு­வ­தற்­கான முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. இந்த முயற்­சியின் பய­னாக கால­னித்­துவ காலத்து இலங்கை நிரு­வாகப் பேர­வையின் முதல் கல்வி அமைச்­ச­ரான கிறிஷ்­டோபர் வில்­லியம் விஜே­யகோன் கன்­னங்­க­ரா­வினால் 1940ஆம் ஆண்டு இல­வசக் கல்வி முறைமை இந்­நாட்டில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

அவ­ரினால் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட இல­வசக் கல்வி வாய்ப்பின் மூலமே இலங்கை மக்கள் எழுத்­த­றிவு மிக்­க­வர்­க­ளாக உள்­ளனர். தென்­கி­ழக்­கா­சிய நாடு­களின் சனத்­தொ­கையில் 98.1 வீதம் எழுத்­த­றிவு கொண்ட மக்­களைக் கொண்ட நாடாக இலங்கை திகழ்­கி­றது. அர்ப்­ப­ணிப்­புள்ள ஆசி­ரி­யர்­களின் கட­மை­யு­ணர்வும் கற்­பித்தல் உணர்வும் இந்த நிலையை அடை­யச்­செய்­தி­ருக்­கி­றது. பாட­சாலைக் கல்­வியின் தாக்கம் இலங்­கையை ஆசி­யா­வி­லேயே எழுத்­த­றி­வு­டை­யோ

Leave A Reply

Your email address will not be published.