ஜனாதிபதி வேட்பாளராக என்னால் வர முடியும்

0 597

நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை இல்­லா­ம­லாக்கும் நோக்­கத்தை பிர­தா­ன­மா­கக்­கொண்டு செயற்­ப­டு­ப­வர்­க­ளு­டனும் 19ஆம் திருத்­தத்தை உறு­திப்­ப­டுத்­து­ப­வர்­க­ளு­டனும் இணை ந்தே என்னால் ஜனா­தி­பதி வேட்­பா­ளராக வர­மு­டியும். அத்­துடன் இதற்கு ஐக்­கிய தேசிய முன்­னணி உறுப்­பி­னர்­களின் ஆசிர்­வாதம் கிடைக்க வேண்­டு­மென சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தெரி­வித்­துள்ளார்.

ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக முன்­வ­ரு­மாறு தெரி­விக்­கப்­படும் கோரிக்­கை­க­ளுக்குப் பதி­ல­ளித்து விடுத்­துள்ள அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

பல முக்­கிய கார­ணங்­களை முன்வைத்து இம்­முறை ஜனா­தி­பதி தேர்­தலில் வேட்­பா­ள­ராக இருக்­கு­மாறு கடந்த சில வாரங்­க­ளாக மகா­நா­யக்க தேரர்கள் மற்றும் வேறு மதத்­த­லை­வர்கள், பல்­வேறு சிவில் அமைப்­பு­களின் பிர­தா­னிகள், பல்­க­லைக்­க­ழக பேரா­சி­ரி­யர்கள், பல்­வேறு துறை­களில் இருக்கும் புத்­தி­ஜீ­விகள், இளைஞர் அமைப்­புகள் மற்றும் அர­சியல் செயற்­பாட்­டா­ளர்கள் என்னை வந்து சந்­தித்­தனர். 

இன்னும் சிலர் தனிப்­பட்ட ரீதியில் வந்து சந்­தித்­த­துடன் மற்றும் சிலர் தொலை­பே­சியில் தொடர்­பு­கொண்டும் செய்­தி­யாளர் சந்­திப்­புக்­களை நடத்­தியும் என்­னிடம் கேட்­டுக்­கொண்­டி­ருந்­தனர்.

இவர்கள் அனை­வரும் முன்­வைத்­தி­ருந்த பொது­வான விடயம் என்­ன­வென்றால், நாட்­டுக்குள் ஜன­நா­ய­கத்தை பாது­காப்­ப­தற்கும் தற்­போது ஏற்­பட்­டுள்ள அர­சியல் பிரச்­சி­னையைத் தீர்த்து ஒழுக்­க­முள்ள ஆட்­சி­யொன்றை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு நம்­பிக்­கை­யான தலை­மைத்­துவம் நாட்­டுக்குத் தேவை­யாகும். அதற்­காக இந்த வேண்­டு­கோளை முன்­வைப்­ப­தா­கவே அவர்கள் அனை­வரும் தெரி­வித்­தி­ருந்­தனர்.

என்­மீது இவர்கள் வைத்­தி­ருக்கும் நம்­பிக்­கைக்கு நான் எனது நன்­றியை ஆரம்­ப­மாகத் தெரி­வித்துக் கொள்­கின்றேன். என்­றாலும் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக முன்­வ­ரு­மாறு தெரி­வித்து கிடைக்­கப்­பெற்­றி­ருக்கும் எந்தக் கோரிக்­கை­யா­னாலும் 1995ஆம் ஆண்­டி­லி­ருந்து நாங்கள் தொடர்ந்து இருக்கும் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை இல்­லா­ம­லாக்கும் நோக்­கத்தை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு செயற்­படும் அர­சியல் சக்­தி­க­ளுடன் இணைந்தும்,

அதே­போன்று 17ஆம் திருத்தம் ஊடாக முன்­வைக்­கப்­பட்­டி­ருக்கும் 19ஆம் திருத்தம் ஊடாக உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்கும் ஜன­நா­யக மறு­சீ­ர­மைப்­புக்­காக தொடர்ந்து செயற்­ப­டு­ப­வர்­க­ளுடன் இணைந்­துமே செயற்­ப­டுவேன்,
இது முன்­னேற்­ற­கர­மான ஜன­நா­ய­கத்­துடன் பொரு­ளா­தாரம் மற்றும் தார்­மிகம் மிக்க, உறு­தி­யான, பாது­காப்­பான நாடொன்றை நோக்­காகக் கொண்டு குறிப்­பிட்ட காலத்­துக்­காக மேற்­கொள்­ளப்­படும் அர்ப்­ப­ணிப்­பாகும். மாறாக, ஜனாதிபதி வேட்பாளர் பதவியை எதிர்பார்த்து மேற்கொள்ளப்படும் தலையீடல்ல. என்றாலும் ஐக்கிய தேசிய முன்னணியை பிரதானமாகக் கொண்ட பிரிவினர் பிரதிநிதித்துவப்படுத்தி இவ்வாறு முன்வந்தால்௸, அது கட்சியின் யாப்புக்கமைய அனைத்து பிரிவினரின் ஆசிர்வாதத்துடன் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும்.

ஆர்,யசி, எம்.ஆர்.எம்.வஸீம்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.