ஜோர்தான் பள்ளத்தாக்கை இஸ்ரேலுடன் இணைக்க நெட்டன்யாஹு வலியுறுத்தல்

0 785

ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்ள மேற்­குக்­க­ரை­யி­லுள்ள ஜோர்தான் பள்­ளத்­தாக்கை இஸ்­ரே­லுடன் இணைப்­ப­தென்ற தேர்தல் வக்­கு­று­தி­யினை இஸ்­ரே­லிய பிர­தமர் பெஞ்­சமின் நெட்­டன்­யாஹு கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை மீள வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

1967 ஆம் ஆண்டு மேற்­குக்­க­ரை­யினை இஸ்ரேல் ஆக்­கி­ர­மித்­ததன் பின்னர் முதன்­மு­றை­யாக ஜோர்தான் பள்­ளத்­தாக்கில் இடம்­பெற்ற அமைச்­ச­ரவைக் கூட்­டத்­தி­லேயே இக் கருத்­தினை வெளி­யிட்டார்.

அடுத்த அர­சாங்கம் உரு­வாக்­கப்­பட்­ட­வுடன் மிக­வி­ரை­வாக ஜோர்தான் பள்­ளத்­தாக்கு மற்றும் சாக்­கடல் பிர­தே­சங்­களில் இஸ்­ரேலின் இறைமை பிர­யோ­கிக்­கப்­படும் என இஸ்­ரே­லிய பிர­தமர் தெரி­வித்தார்.

இறை­மையைப் பிர­யோ­கிப்­பது தொடர்பில் ஒரு முறை­யினை வடி­வ­மைப்­ப­தற்­காக பிர­தமர் அலு­வ­லகப் பணிப்­பாளர் தலை­மையில் ஒரு பணிக்­கு­ழு­வொன்­றினை தான் நிய­மித்­துள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்ள மேற்குக் கரை­யி­லுள்ள அனைத்துக் குடி­யேற்­றங்­க­ளிலும் இஸ்­ரேலின் இறைமை பிர­யோ­கிக்­கப்­படும் எனவும் அவர் வலி­யு­றுத்­தினார்.

தேர்தல் முடி­வ­டைந்­ததும் வெளி­யி­டப்­ப­ட­வுள்ள நூற்­றாண்டின் இணக்­கப்­பாட்டில் இவ்­வா­றான விட­யங்கள் வெளிப்­ப­டுத்­தப்­படும் எனவும் அவர் தெரி­வித்தார்.

கூட்­டத்­தினைத் தொடர்ந்து குறித்த பகு­தியில் புதிய குடி­யேற்­ற­மொன்­றினை அமைப்­ப­தற்­கான நெட்­டன்­யா­ஹுவின் முன்­மொ­ழி­வுக்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யது.

1967 ஆம் ஆண்டு மேற்­குக்­கரை மற்றும் கிழக்கு ஜெரூ­சலம் ஆகி­ய­வற்றை இஸ்ரேல் ஆக்­கி­ர­மித்­ததில் இருந்து கட்­டப்­பட்ட 100 இற்கும் மேற்­பட்ட குடி­யி­ருப்­புக்­களில் தற்­போது சுமார் 650,000 இஸ்­ரே­லிய யூதர்கள் வாழ்ந்து வரு­கின்­றனர்.

காஸா பள்­ளத்­தாக்­குடன் இந்த ஆள்­புலப் பிர­தே­சங்­க­ளையும் இணைத்து எதிர்­கால பலஸ்­தீன தேசத்தை உரு­வாக்­கு­வ­தற்கு பலஸ்­தீ­னர்கள் விரும்­பு­கின்­றனர். மேற்­குக்­கரை மற்றும் கிழக்கு ஜெரூசலம் ஆகிய இரண்டினையும் ஆக்கிரமிக்கப்பட்ட ஆள்புலப் பிரதேசங்களாகப் பார்க்கும் சர்வதேச சட்டம் அங்கு யூதக் குடியயேற்றங்களை அமைப்பதற்கு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் சட்டவிரோதமானதாகக் கருதுகின்றது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.