மத்ரஸாக்கள் கல்வி அமைச்சின் கீழ் வருவது பற்றி நாம் வீணாக அஞ்சத் தேவையில்லை

பேராசிரியர் ஏ.ஜி. ஹுஸைன் இஸ்மாயில்

0 2,105

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் வாரந்­தோறும் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பளீல் (நளீமி) தொகுத்து வழங்கும் ‘மஜ்லிஸ் அஷ் ஷூரா’ கலந்­து­ரை­யாடல் நிகழ்ச்­சியில் விருந்­தி­ன­ராக கலந்து கொண்ட முன்னாள் தென் கிழக்குப் பல்­க­லைக்­க­ழக உப­வேந்தர் பேரா­சி­ரியர் ஏ.ஜி. ஹுஸைன் இஸ்­மாயில், இலங்­கையில் மத்­ரஸா கல்வி முறை­மையில் கொண்­டு­வ­ரப்­பட வேண்­டிய மாற்­றங்கள் தொடர்பில் தெரி­வித்த கருத்­துக்­களை முக்­கி­யத்­துவம் கருதி ‘விடி­வெள்ளி’ வாச­கர்­க­ளுக்கு தொகுத்து வழங்­கு­கிறோம்.

தொகுப்பு : எம்.ஏ.எம். அஹ்ஸன்

மத்­ரஸா கல்வி முறையில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்த வேண்டும் என்ற விட­யத்தை பதற்­றத்­து­டனோ உணர்ச்­சி­வ­சப்­பட்டோ பார்க்க வேண்­டிய அவ­சியம் இல்லை. ஏதோ ஒரு வெளிச்­சக்­தியின் தலை­யீட்­டி­னால்தான் மத்­ரஸா கல்­வியில் மாற்றம் ஏற்­ப­டப்­போ­கி­றது என்ற அபிப்­பி­ராயம் தற்­போது தோற்­று­விக்­கப்­பட்­டுள்­ளது. மத்­ர­ஸாக்கள் 1000 வரு­டங்­க­ளாக இயங்கி வரு­கின்­றன. அது எங்­க­ளது சொத்து. அதனை நாங்கள் பாது­காக்க வேண்டும் என்ற பிடி­வா­தக்­குரல் எழு­வ­தற்கு மேற்­சொன்ன பதற்­றமும் உணர்ச்­சி­வ­ச­மு­மேதான் காரணம் என நான் நினைக்­கின்றேன்.

1000 வரு­டங்­க­ளாக மத்­ரஸா கல்வி முறை முஸ்­லிம்கள் மத்­தியில் காணப்­ப­டு­கின்­றது என்­பது அனை­வரும் அறிந்த ஓர் உண்மை. இந்த 1000 வரு­டத்­திலும் முஸ்­லிம்­களின் மத்­ரஸா கல்வி முறை முஸ்­லிம்­களின் அர­சியல், சமூக , கலா­சார தேவை­க­ளுக்கு ஏற்­ற­வாறு மாறி வந்­தி­ருக்­கின்­றது என்­பதை நாங்கள் புரிந்­து­கொள்ள வேண்டும். இந்த 1000 வருட கால கட்­டத்­தையும் 4 கட்­டங்­க­ளாக பிரித்து குறிப்­பிட்ட கால கட்­டங்­களில் மத்­ர­ஸாக்­க­ளி­னு­டைய அமைப்பு, இயக்கம் என்­பன எவ்­வாறு இருந்­தன என்­பது பற்றி சுருக்­க­மாக விளக்­கு­கிறேன்.

முத­லா­வது கி.பி.12 ஆம் நூற்­றாண்டின் இறுதி வரை­யான காலப்­ப­கு­தி­யாகும். அது இஸ்­லா­மி­யர்­களின் ஆட்சிக் கால­மாகும். இது சர்­வ­தேச ரீதி­யாக முஸ்­லிம்கள் ஆட்சி நில­விய கால­மாகும். இக்­கா­லத்தில் இந்­தி­யாவில், ஐரோப்­பாவின் பல்­வேறு நாடு­க­ளிலும் இஸ்­லா­மிய ஆட்சி காணப்­பட்­டது. இப்­ப­டி­யா­ன­தொரு காலப்­ப­கு­தியில் மத்­ரஸா கல்வி முறை எப்­ப­டி­யி­ருந்­தது என்­பதை நாம் நோக்க வேண்டும். அப்­போது மத்­ர­ஸாக்கள் முக்­கிய கல்வி நிலை­யங்­க­ளாக இருந்­தன. உலக ரீதி­யான கல்­வியும் மார்க்கக் கல்­வியும் அங்கு கற்­பிக்­கப்­பட்­டன. இப்­போது போல அன்று கல்­வி­யா­னது மார்­க்­கக்கல்வி மற்றும் உல­கக்­கல்வி என்று கூறு போடப்­ப­ட­வில்லை.

மத்­ர­ஸாக்­களில் விஞ்­ஞானம், வைத்­தியம், வானியல், கட்­ட­டக்­கலை, சட்டம் என்­ப­வற்றை கற்­ற­வர்கள் உல­கத்­துக்கு பங்­க­ளிப்பு செய்­தி­ருக்­கி­றார்கள். முஸ்­லிம்­களின் பொற்­காலம் என்று அந்­தக்­கா­லத்தை சொல்­வ­தற்கு மத்­ர­ஸாக்­களின் பங்­க­ளிப்பே காரணம். மத்­ரஸா கல்­வியின் பொற்­காலம் என்று கூட அதைச் சொல்லலாம்.

அரபு மொழியில் அலி ஸீனா எழு­திய வைத்­திய நூல் ஹிப்ரு மொழியில் மொழி­பெ­யர்க்­கப்­பட்டு இஸ்ரேல் போன்ற நாடு­களில் இன்­னமும் உப­யோ­கிக்­கப்­ப­டு­கி­றது. அலி ஸீனா, அல் பராபி, இப்னு கல்தூன் போன்றோர் அர­பியில் எழு­திய நூல்­களை எமது உல­மாக்கள் எத்­தனை பேர் வாசித்து இருக்­கின்றோம் என்­பது எனக்குத் தெரி­யாது. அந்­தக்­கா­லத்தில் உல­கக்­கல்வி, மார்க்கக் கல்வி என்று பிரித்து நோக்­காமல் வாழ்க்­கைக்கு என்­ன­வென்ன தேவையோ அத்­த­னைக்கும் முக்­கி­யத்­துவம் வழங்­கப்­பட்­டது.

நீதி­பதி வீர­மந்­திரி இஸ்­லா­மிய சட்டம் பற்றி ஒரு நூல் எழு­தினார். ஒக்ஸ்போர்ட் பல்­க­லைக்­க­ழ­கத்தில் நூற்­றுக்­க­ணக்­கான நூல்கள் இருந்த போது இஸ்­லா­மிய மத்­ர­ஸாக்­க­ளிலே ஆயி­ரக்­க­ணக்­கான நூல்கள் இருந்­த­தாக அந்த நூலில் அவர் குறிப்­பிட்­டி­ருந்தார். அந்­த­ள­வுக்கு முஸ்­லிம்­க­ளிடம் அறிவு உயர்ந்த நிலையில் காணப்­பட்­டது. அந்­த­ள­வுக்கு மத்­ர­ஸாக்­களும் தர­மு­யர்ந்த நிலையில் காணப்­பட்­டன.

இரண்­டா­வது கால­கட்டம் முஸ்­லிம்­க­ளு­டைய ஆட்சி முடி­வ­டைந்து அதி­க­மான முஸ்லிம் நாடுகள் கால­னித்­துவ ஆட்­சியின் கீழ் வந்த 1400-–1900 வரை­யான கால­கட்­ட­மாகும். இந்தக் கால­கட்­டத்தில் நாங்கள் ஐரோப்­பிய நாடு­க­ளுக்கு அடி­மை­யா­கி­விட்டோம். அப்­போது மேற்­கத்­தேய கலா­சா­ரத்­தையும் மிஷ­ன­ரிக்­கல்வி முறை­யையும் முஸ்­லிம்கள் மீது திணித்­தார்கள். அதனால் நாம் எமது சுய அடை­யா­ளத்தை இழந்தோம். எமது ஈமானை பாது­காக்க நாம் மேற்­கத்­தேய கல்­வியை புறக்­க­ணித்தோம்.

பேரா­சிரியர் சும­தி­பால இலங்கை கல்வி வர­லாறு என்ற நூலிலே, இலங்கை முஸ்­லிம்கள் 200 வரு­டங்­க­ளாக கல்­வியில் பின்­ன­டைந்து காணப்­பட்­டார்கள். ஏனென்றால் முஸ்­லிம்கள் உல­கக்­கல்­வியை காட்­டிலும் மார்க்கக் கல்­விக்கு அதிக முக்­கி­யத்­துவம் கொடுத்துக் கொண்­டி­ருந்­தார்கள். இந்­தக்­கா­லத்தில் முஸ்­லிம்கள் மதம் மாறு­வதை தடுக்க தமக்­கென கல்வி நிலை­யங்கள் தேவைப்­பட்­டன. அதன்­போ­துதான் இலங்­கையில் மத்­ர­ஸாக்­கள் ஏரா­ள­மாக அமைக்­கப்­பட்­ட­துடன் அதனை அமைப்­பது ஒரு முக்­கி­ய­மான தேவை­யா­கவும் இருந்­தது என்று எழு­தி­யி­ருந்தார்.

மூன்­றா­வது கால­கட்­ட­மாக 1950 இற்கு பிற்­பட்ட காலப்­ப­கு­தியைக் குறிப்­பி­டலாம். இது முஸ்லிம் நாடு­களும் இலங்­கையும் சுதந்­திரம் அடைந்த கால­கட்­ட­மாகும். இதன்­போது இலங்­கையில் மன­சாட்­சிச்­சட்டம் என்ற ஒன்று வந்­தது. அதில் எந்­த­வொரு பெற்­றோ­ருக்கும் தங்­க­ளது பாட­சா­லை­களில் தமது சொந்த மதம் தொடர்­பான கல்­வியை கற்­பிக்க முடியும் என்ற சுதந்­திரம் கொடுக்­கப்­பட்­டது. அதே­நேரம் எந்­த­வொரு பிள்­ளைக்கும் கிறிஸ்­தவ மதம் பலாத்­கா­ர­மாக கற்­பிக்­கப்­படக் கூடாது என்ற சட்­டமும் அமுல்­ப­டுத்­த­ப்பட்­டது. இதன்­போது எங்­க­ளுக்கு முன்னர் இருந்த கஷ்­டங்கள் முடி­வுக்கு கொண்டு வரப்­ப­டு­கின்­றது. அப்­போது சித்திலெப்பை, ரி.பி.ஜாயா, ஏ.எம்.ஏ. அஸீஸ், சேர் ராஸிக் பரீத் போன்றோர் முஸ்­லிம்­களைத் தூண்­டி­னார்கள். அவர்­களின் தூண்­ட­லினால் முஹம்­ம­திய (முஸ்லிம்) பாட­சா­லை­களை அமைக்கத் தொடங்­கினோம். இவற்றின் செல்­வாக்­கினால் மத்­ர­ஸாக்­களின் அத்­தி­யா­வ­சியம் குறைக்­கப்­பட்­டது.

இக்­கா­லத்தில் தேசிய தலை­வர்கள் தமது மக்­களை மத ரீத­ியாக விழிப்­பு­ணர்­வூட்ட முனைந்­தனர். அதன் விளை­வாக அந­கா­ரிக தர்­ம­பால போன்றோர் பௌத்த பாட­சா­லை­க­ளையும் பொன்­னம்­பலம் இரா­ம­நாதன் போன்றோர் இந்துப் பாட­சா­லை­க­ளையும் அமைத்­தது போன்று சித்­தி­லெப்பை போன்ற தலை­வர்­களும் தமது சமூ­கத்­துக்­காக முஸ்லிம் பாட­சா­லை­களை அமைத்­தார்கள். அவ்­வாறு அவர்கள் அமைத்த பாட­சா­லைகள் ‘முஹம்­ம­திய பாட­சா­லைகள்’ என்று அழைக்­கப்­பட்­டன. இவை 1956 இற்கு பிற்­பாடு முஸ்லிம் பாட­சா­லைகள் என்ற பெயர் பெற்­றன.

இப்­போது பாட­சாலை மற்றும் பல்­க­லைக்­க­ழ­கங்­களில் இஸ்­லா­மிய கல்வி போதிக்­கப்­ப­டு­கின்­றது. அதனால் மத்­ர­ஸாக்­களின் தேவை குறைந்து வரு­கி­றது. மத்­ர­ஸாக்­களில் படித்­த­வர்கள் மாத்­தி­ரம்தான் குத்பா உரை நிக­ழ்த்த வேண்டும் அல்­லது அங்கு படித்­த­வர்கள் மாத்­தி­ரம்தான் பத்வா கொடுக்க வேண்டும் என்று கூறு­வது நியா­ய­மற்­றது. பேரா­சி­ரியர் குர்ஷித் அஹமத் இலங்கை வந்த போது தன்னை ஒரு மௌலவி என்று குறிப்­பிட்டார். அதே­வேளை அவர் ஒரு பொரு­ளியல் விரி­வு­ரை­யா­ளரும் கூட. அந்த கோணத்­தில்தான் நாம் அனை­வரும் பார்க்க வேண்டும். மத்­ர­ஸாக்­களில் படித்­த­வர்­களை நாம் குத்பா ஓத மாத்­தி­ரம்தான் வைத்­துக்­கொள்ள வேண்டும் என்று கிடை­யாது. அவர்­களும் வைத்­தி­யர்­க­ளாக, பொறி­யி­ய­லா­ளர்­க­ளாக வரு­வதில் தவ­றில்லை.

1960 இற்கு பிறகு பேசப்­பட்ட விட­யங்­களுள் ஒன்­றுதான் இஸ்­லா­மிய கல்­வி­ம­ய­மாக்கம். நான் அந்த விட­யத்­துக்கு கொஞ்சம் முரண்­பட்­ட­வ­னா­கவே இருந்தேன். ஏனென்றால் அனைத்து கல்­வி­யையும் இஸ்­லா­மிய மய­மாக்க முடி­யாது. வேண்­டு­மென்றால் ஒருங்­கி­ணைக்க முடியும். உலகக் கல்­வி­யையும் இஸ்­லா­மிய கல்­வி­யையும் ஒன்­றி­ணைத்து நோக்­கு­வ­துதான் அது. அதனை நாம் இஸ்­லா­மிய விஞ்­ஞானம் என்று கூறுவோம். இதன் பின்­னரே இஸ்­லா­மிய பல்­க­லைக்­க­ழ­கங்கள் அமைக்­கப்­பட்­டன. இந்­தோ­னே­ஷியா, பங்­க­ளாதேஷ் போன்ற நாடு­களில் இவ்­வா­றான பல்­க­லைக்­க­ழ­கங்கள் உள்­ளன. உலகக் கல்­வி­யையும் மார்க்கக் கல்­வி­யையும் ஒன்­றி­ணைத்துச் செல்­வதே இப்­போ­தைய நடை­மு­றை­யாகும். இவ்­வாறு செய்­வதே சமூ­கத்தின் எழுச்­சிக்கு கார­ண­மாக அமை­வ­துடன் ஓதி­ய­வர்கள் சுய­கௌ­ர­வத்­துடன் வாழவும் வழி­வ­குக்கும்.
நான்­கா­வது கட்­ட­மாக 90 இற்கு பிற்­பட்ட காலப்­ப­கு­தியைக் குறிப்­பி­டலாம். பாகிஸ்தான் மற்றும் பங்­க­ளாதேஷ் போன்ற நாடு­களில் உள்ள மத்­ர­ஸாக்­களில் இஸ்­லா­மிய இயக்­கங்­க­ளு­டைய தலை­யீடு அதி­க­மாக பர­வி­யது. இதற்கு ஒரு­சில அர­சியல் நகர்­வு­களும் கார­ண­மாக அமைந்­துள்­ளன. இதனால் மத்­ர­ஸாக்­களின் எண்­ணிக்கை நாள­டைவில் அதி­க­ரித்துப் போன­துடன் அவற்­றி­னு­டைய தரமும் குறைந்து போனது. அப்­ப­டி­யா­ன­தொரு கால கட்­டத்­தில்தான் நாங்கள் இப்­போது இருக்­கின்றோம்.

நாட்டின் நடை­மு­றை­யி­லுள்ள ஏனைய கல்­வி­மு­றை­களை மற்­றாது ஏன் மத்­ரஸா கல்­வி­மு­றையை மாற்­றும்­படி அரசு கோரு­கி­றது என சில முஸ்­லிம்கள் வினா எழுப்­பு­கின்­றனர். என்­னைப்­பொ­றுத்­த­வரை அவற்றிலும் மாற்­றங்கள் ஏற்­பட்­டுள்­ளன. மாற்­று­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

பௌத்­தர்­களின் பிரி­வெனாக் கல்­வியில் பாரிய மாற்­றங்கள் ஏற்­பட்­டுள்­ளன. 1980 இற்குப் பின்னர் பிரி­வெ­னாக்­களின் ஒட்­டு­மொத்த செயற்­பா­டு­க­ளையும் கல்வி அமைச்­சிடம் ஒப்­ப­டைத்து விட்­டார்கள். தற்­போது பிரி­வெ­னாக்­களின் முழு விட­யங்­க­ளையும் அர­சாங்­கம்தான் பார்க்­கின்­றது. 1980 இல் இருந்து 2016 வரை­யான காலப்­ப­கு­திக்குள் பிரி­வெ­னாக்­களின் பாடத்­திட்டம் 10 முறைக்கு மேல் மீள்­ப­திப்பு செய்­யப்­பட்­டுள்­ளது. காலத்தின் தேவைக்கு ஏற்­ற­வாறு அவை மாற்­றப்­பட்­டுள்­ளன.

பாலர் பாட­சா­லைகள் நடத்­து­வது தொடர்­பா­கவும் தேசிய கல்வி ஆணைக்­குழு ஆராய்ந்து வரு­கின்­றது. சாதா­ர­ண­தரம் கூட சித்­தி­ய­டை­யா­த­வர்கள் உள­வியல் தெரி­யா­த­வர்கள் பிள்­ளை­க­ளுக்கு பாடம் கற்­பிக்­கி­றார்கள். இது தொடர்­பாக ஆராய வேண்டும். அடுத்­த­தாக சர்­வ­தேச பாட­சா­லைகள் தொடர்­பா­கவும் நாம் ஆராய்ந்து நட­வ­டிக்­கை­களை துரி­தப்­ப­டுத்­த­வுள்ளோம். அவை வரு­மா­னத்தை மாத்­திரம் எதிர்­பார்த்த ஒரு துறை­யாக மாறி விட்­டது. இது எமது நாட்­டுக்கு ஆபத்து. இதை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வர வேண்டும். அந்­தக்­கு­ழு­விலும் நான் அங்­கத்­த­வ­ராக இருக்­கின்றேன்.

அத்­துடன் நாட்டில் தனியார் கல்வி நிறு­வ­னங்கள் உள்­ளன. இவ்­வா­றான தனியார் பல்­க­லைக்­க­ழ­கங்கள் அவர்கள் நினைத்­த­வாறு நடந்து கொள்­கின்­றார்கள். இவை அனைத்­தையும் ஒரு கட்­டுப்­பாட்டின் கீழ் கொண்டு வரு­வ­தற்­கான வேலைத்­திட்­டங்கள் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன.

மத்­ர­ஸாக்கள் தொடர்­பான சட்­ட­வ­ரைபு பாரா­ளு­மன்ற குழுக் கூட்­டத்தில் எடுத்­துக்­கொள்­ளப்­பட்ட போது இது தொடர்­பாக அமைச்சர்கள் தமது அபிப்­பி­ரா­யங்­களை தெரி­வித்­தார்கள். இதில் பெரும்­பான்­மை­யான அபிப்­பி­ரா­யத்­தின்­படி புதிய சட்­டங்கள் எதுவும் இன்றி இருக்­கின்ற சட்­டங்­களை வைத்­துக்­கொண்டு மத்­ரஸா கல்­வியை கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வரு­வ­தற்கு இணங்­கினர். கல்வி அமைச்சு அதி­கா­ரி­க­ளுடன் இது பற்றி நான் கலந்­து­ரை­யா­டினேன். அவர்கள் என்­னிடம் இலங்­கையில் இஸ்­லா­மிய கல்­வியை போதிக்க 4 வகை­யான கல்வி நிலை­யங்கள் இருப்­பதை சுட்­டிக்­காட்­டி­னார்கள். அஹ­திய்யா, குர்ஆன் பள்­ளிக்­கூ­டங்கள் , ஹிப்ழு மத்­ர­ஸாக்கள், கிதாப் மத்­ர­ஸாக்கள் என்­ப­வையே அவை­யாகும்.

அஹ­திய்யா, குர்ஆன் பள்­ளிக்­கூ­டங்கள், ஹிப்ழ் மத்­ர­ஸாக்கள் இவை­பற்றி யாரும் வருத்­தப்­ப­ட­வில்லை. ஆனால் ஒரு விடயம் கவ­னத்தில் கொள்­ளப்­பட வேண்டும். கட்­டா­யக்­கல்வி என்ற ஒரு விடயம் இருக்­கின்­றது. ஒவ்­வொ­ரு­வரும் 14 வயது வரை பாட­சா­லைக்­கல்­வியைக் கற்க வேண்டும் என்­பதே அது­வாகும். இனி­வரும் காலங்­களில் இலங்கை கல்வி முறையில் பாலர் வகுப்பில் இருந்தே விஞ்­ஞானம், கணிதம் தொழில்­நுட்பம் போன்ற விட­யங்கள் போதிக்­கப்­ப­ட­வுள்­ளன. அவற்றை நிச்­ச­ய­மாக மத்­ர­ஸாக்­களால் செய்ய முடி­யாது. மத்­ர­ஸாக்­களில் அரபு மொழியை ஆழ­மாக கற்­பிக்க வேண்டும். ஆனால் அரபு மொழி போதனா மொழி­யாக அமைய வேண்டும் என நாம் கேட்­பது நாட்டின் கல்வி தொடர்­பான கொள்­கை­களில் சில சிக்­கல்­களை ஏற்­ப­டுத்தும்.

தற்­போது மத்­ர­ஸாக்­க­ளு­டைய வெளிப்­ப­டைத்­தன்மை பற்றி பெரும்­பான்மை மக்­க­ளி­டத்தில் இருந்து கேள்வி எழுப்­பப்­பட்­டுள்­ளது. நாம் அந்த சந்­தே­கங்­களை எளிதில் தீர்த்து வைக்க முடி­யாது. நாம் இதன் செயற்­பா­டு­களை முஸ்லிம் கலா­சார திணைக்­களம் அல்­லாத பிறி­தொரு திணைக்­க­ளத்­திடம் ஒப்­ப­டைக்கும் போது பெரும்­பான்­மை­யி­னரின் நம்­ப­கத்­தன்மை அதி­க­ரிக்கும். மத்­ரஸா கல்வி செயற்­பா­டு­களும் இல­கு­வா­கி­விடும்.

கல்வி அமைச்சின் கீழ் மத்­ர­ஸாக்­களை கொண்­டு­வர வேண்டும் என்றால் அர­சாங்கம் மத்­ர­ஸாக்­களின் உட்­கட்­ட­மைப்பு வச­தி­க­ளுக்­காக செலவு செய்ய வேண்டும். இது பற்றி கல்வி அமைச்சில் நான் பேசிய போது அவற்­றுக்­கான போது­மா­ன­ளவு நிதி தற்­போது இல்லை என்று கூறி­னார்கள். ஆனால் பல மத்­ர­ஸாக்­களில் போது­மா­ன­ளவு அல்­லது தேவைக்கு அதி­க­மான மேல­திக வளங்­களும் காணப்­ப­டு­கின்­றன. இருக்­கின்ற உட்­கட்­ட­மைப்பு வச­தி­களை நல்­ல­மு­றையில் பயன்­ப­டுத்­தலாம் என்று நான் கூறினேன்.

சர்­வ­தேச பாட­சா­லை­களை பதிவு செய்­வ­தற்கு சில நிய­மங்கள் கொடுக்­கப்­பட்­டுள்­ளன. இது பற்றி அறிக்­கைகள் சமர்­பிக்க 6 மாதங்கள் வழங்­கப்­படும். இரு வரு­டத்துள் நிபந்­த­னை­களை பூர்த்தி செய்­யாத பாட­சா­லைகள் மூடப்­படும். சர்­வ­தேச பாட­சா­லைகள் வெறும் வியா­பார நோக்கில் செய்ய இட­ம­ளிக்க முடி­யாது. அங்கு போது­மா­ன­ளவு உட­கட்­ட­மைப்பு வச­திகள் இருக்க வேண்டும். அங்­குள்ள ஆசி­ரி­யர்­க­ளுக்கு முறை­யான கல்வித் தகை­மைகள் இருக்க வேண்டும். அங்கு கட­மை­யாற்றும் ஆசி­ரி­யர்­களின் சம்­பள அளவு அவ்­வாறு இருக்க வேண்டும் என பல நிபந்­த­னை­களை அவர்கள் பின்­பற்­றித்தான் ஆக வேண்டும். அதே போன்­றுதான் மத்­ர­ஸாக்­க­ளுக்கும் அவ்­வாறு நிபந்­த­னைகள் உண்டு. இந்த நிபந்­த­னைகள் மாண­வர்­களின் ஆளு­மையை வளர்ப்­ப­தற்கு ஒரு வாய்ப்­பாக அமையும்.

மத்­ர­ஸாக்­களின் கலைத்­திட்­டத்தை பொறுத்­த­வ­ரையில் அதில் முக்­கிய பல மாற்­றங்கள் கொண்­டு­வ­ரப்­பட வேண்டும் என்று நான் நினைக்­கின்றேன். அதில் முத­லா­வது மொழி தொடர்­பான மாற்றம் வர வேண்டும். அதிலும் குறிப்­பாக அரபு மொழி கற்­கைகள் விஸ்­த­ரிக்­கப்­பட வேண்டும். அரபு என்­பது முஸ்­லிம்­களின் சமய மொழி என்­பதைத் தாண்டி அது ஒரு சர்­வ­தேச மொழி­யாகும். அரபு மொழியை ஒரு இரண்டாம் மொழி­யாக கற்­பிக்கும் பல நுட்­பங்கள் சூடான் போன்ற நாடு­களில் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. ஆனால் எங்­க­ளது நாட்டில் அதற்கு பெரி­ய­ளவில் முக்­கி­யத்­துவம் கொடுக்­கப்­ப­டு­வ­தில்லை. மாண­வர்கள் கிதா­பு­களை வாசிப்­பதன் ஊடாக அரபை ஓர­ளவு தெரிந்து வைத்­தி­ருக்­கின்­றார்கள். அதைத் தவிர கற்­பித்தல் நுட்­பங்கள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தில்லை. மத்­ரஸா கல்­வியில் 4 வரு­டங்­களில் 2 வரு­டங்­களை அரபு மொழி விருத்­திக்­காக பயன்­ப­டுத்த வேண்டும். மத்­ர­ஸாவில் 50 வீதம் மொழிக்கு முக்­கி­யத்­துவம் கொடுக்க வேண்டும். அத்­துடன் தொழில்­நுட்பம், விஞ்­ஞானம் போன்ற விட­யங்­க­ளையும் இதனுள் உள்­ள­டக்க வேண்டும்.

ஒரு­முறை கண்­டியில் என்னை ஒரு விரி­வுரை நிகழ்த்த அழைத்­தார்கள். அங்கு எனக்கு தந்த தலைப்பு காதல் , திரு­மணம் மற்றும் கலவி ஆகும். நான் அங்­குள்ள மத­கு­ரு­விடம் ஏன் இது­போன்ற ஒரு தலைப்பைப் பற்றி பேச வேண்டும் என்று கேட்டேன். இந்த 3 விட­யங்­க­ளிலும் தோல்­வியைத் தழு­வி­ய­வர்கள் இங்கு தாரா­ள­மாக இருப்­பார்கள். அவர்­க­ளுக்கு விளக்­க­ம­ளிப்­பது எமது கடமை என அவர் தெரி­வித்தார். நாமும் இது­போல உலகம் சம்­பந்­தப்­பட்ட விட­யங்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் கொடுக்க வேண்டும்.

நான் அண்­மையில் பிரி­வெ­னாக்­களின் இயக்­கு­ன­ரான குண­ரத்ன தேரரை சந்­தித்தேன். அவ­ரிடம் பிரி­வெ­னாக்கள் பற்றி வின­விய போது அர­சாங்கம் ஏற்­றுக்­கொண்ட 658 பிரி­வெ­னாக்கள் தற்­போது சேவையில் உள்­ள­தாக தெரி­வித்தார். 6000 இற்கும் மேற்­பட்ட ஆசி­ரி­யர்கள் சேவை­யாற்­று­வ­தா­கவும் அவர் தெரி­வித்தார். மேலும் 60000 பிள்­ளைகள் இந்த சேவை­களைப் பெறு­கி­றார்கள். தொழில்நுட்பக் கல்வியின் தாக்கத்தால் பிரிவெனாக் கல்வியில் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அந்த வகையில் எங்களது மத்ரஸாக்களிலும் கலைத்துறையில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.

மத்ரஸாக்களில் கற்பிப்பவர்கள் மார்க்கம் சம்பந்தப்பட்ட விடயங்களை மாத்திரம் அறிந்து வைத்திருப்பதால் அந்த ஒரு விடயத்தில் கல்வி பூரணப்படுத்தப்பட்டுவிட்டது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் மத்ரஸாவுக்கு வெளியே கற்பிக்கின்ற விடயங்களை அவர்கள் தரக்குறைவாகத்தான் எண்ணுகிறார்கள்.

பாகிஸ்தானில் உள்ள மத்ரஸாக்கள் தொடர்பாக அண்மையில் ஓர் ஆய்வு இடம்பெற்றது. அங்கு அதிகமாக காணப்பட்ட கற்பித்தல் முறை நெட்டுருக்கற்பித்தல் மனப்பாடம் செய்தல் ஆகும். அதாவது இருக்கின்ற புத்தகத்தை வைத்து அதனை அப்படியே விளங்கப்படுத்துவதாகும். அதைப் பிள்ளைகள் கேட்டுக் கொண்டிருப்பார்கள். தேசிய கல்வி நோக்கங்கள் பற்றி இங்கு எடுத்து நோக்க வேண்டும். அந்த வரையறைகளை மீறாமல் தேசிய கல்வி நோக்கங்கள் பின்பற்றப்பட வேண்டும்.

தேசிய கொள்கை எனும் போது அதில் நாட்டு நலன், தேசப்பற்று, சமூக நல்லிணக்கம், சமூக ஒற்றுமையை இனங்காணல் போன்ற பல தேசிய இலக்குகள் உள்ளன. இவற்றை நாம் எமது குர்ஆன், ஷரீஆவுக்கு அமைய பின்பற்ற முடியும். உதாரணமாக நாட்டினுடைய தேசிய கீதத்துக்கு நாட்டினுடைய பிரஜை என்ற வகையில் மரியாதை கொடுக்க வேண்டும். இது போன்ற பல விடயங்கள் உள்ளன. நம்மில் பலரிடம் இவை பற்றி பேசும்போது குறுகிய சிந்தனை உருவாகி விடுகின்றது.

அந்த வகையில் எங்களது மத்ரஸாக்கள் அரசாங்கத்தின் கல்வி அமைச்சுக்குக் கீழ் வருவது தொடர்பாக நாம் வீணாக அச்சம் கொள்ளத் தேவையில்லை. இது எங்களுக்கு கிடைத்த ஒரு சிறந்த வாய்ப்பே தவிர அச்சம் கொள்ள வேண்டிய ஒரு விடயமல்ல.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.