கம்பஹா மாவட்டத்தில் விளையாட்டுத் துறைக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் பாடசாலை கல்வி அடைவுக்கு வழங்கப்படவில்லை

கலாநிதி றவுப் செய்ன்

0 1,312

கலா­நிதி றவூப்ஸெய்ன் அம்­பாறை மாவட்டம், இறக்­கா­மத்தைப் பிறப்­பி­ட­மாகக் கொண்­டவர். திஹா­ரியில் வசித்து வரு­பவர், ஆய்­விலும் எழுத்­திலும் இரு தசாப்­த­கால அனு­பவம் முதிர்ந்­தவர். உள­வள ஆலோ­சகர். சர்­வ­தேச அர­சியல் ஆய்­வாளர். மெய்­யியல் போத­னா­சி­ரியர், விரி­வு­ரை­யாளர், ஊட­க­வி­ய­லாளர், கல்­வி­யி­ய­லாளர் என பன்­முகத் தளங்­களில் தீவி­ர­மாக இயங்கி வரு­பவர். அண்­மையில் கல்வித் துறையில் வெளி­நாட்டு பல்­க­லைக்­க­ழ­க­மொன்றில் தனது கலா­நிதிப் பட்­டத்தைப் பூர்த்தி செய்­தவர். அவ­ரது கல்­வி­யியல் ஆய்­வுகள் மற்றும் ஈடு­பா­டுகள் குறித்தும் தனது கலா­நிதிப் பட்­டத்­திற்­கான ஆய்வுத் தலைப்­பாக அவர் தேர்ந்­தெ­டுத்த “கம்­பஹா மாவட்ட இடை­நிலைப் பாட­சாலை மாணவர் இடை­வி­லகல்” குறித்தும் அவர் விடி­வெள்­ளிக்கு வழங்­கிய நேர்­காணல் இது.

Q நீண்­ட­கா­ல­மாக சர்­வ­தேச விவ­கா­ரங்கள் குறித்து எழு­தியும் பேசியும் வரும் நீங்கள் உங்கள் கலா­நிதிக் கற்­கைக்­கான புல­மாக கல்வித் துறையைத் தெரிவு செய்யக் காரணம் என்ன?

எனது வாழ்வின் அரை­வாசிப் பகுதி முழு­வ­தையும் சர்­வ­தேச விவ­கா­ரங்­களைப் புரிந்து கொள்­வதில் செலவு செய்­தி­ருக்­கின்றேன். இன்று வரையும் எனது தேடலும் ஆய்வும் அத்­து­றையில் தொடர்­கின்­றது. ஒரு புவிப் பிராந்­தி­யத்தின் எதிர்­கால அர­சியல் சூழ­மை­வையும் போக்­கு­க­ளையும் ஓர­ள­வுக்கு எதிர்­வு­கூறும் அள­வுக்கு எனது தேடல் விரி­வா­னது 2004 ஆம் ஆண்டில் நான் எழு­திய கட்­டு­ரை­யொன்றில் எதிர்­வரும் சில ஆண்­டு­களில் அரபு மக்கள் புரட்­சியில் ஈடு­ப­டு­­வார்கள் என்று நான் கூறி­யி­ருந்தேன். அது 2011 இல் நிகழ்ந்­தது. இன்று சர்­வ­தேச செய்­தி­களை எழு­து­ப­வர்­க­ளுக்கு தலை­ந­க­ரங்­களின் பெயர்­க­ளையோ ஆட்­சி­யா­ளர்­களின் பெயர்­க­ளையோ சரி­யாக எழுத முடி­யாமல் இருப்­பதைக் கண்டு கவலை அடை­கிறேன்.

இதே­வேளை, கடந்த 20 ஆண்­டு­களில் கல்வி என்னை ஈர்த்த மிக முக்­கிய ஆய்வுப் புல­மாகும். கல்­வி­யி­னூ­டா­கவே ஒரு ஆரோக்­கி­ய­மான சமூக மாற்றம் சாத்­தி­ய­மாகும் என்று நம்­பு­கின்­றவன் நான். அதனால் கல்­வியில் ஒரு வள­வா­ள­ராக, விரி­வு­ரை­யா­ள­ராக, ஆய்­வா­ள­ராக, உயர்­கல்வி ஆலோ­ச­க­ராக, நெறி­யா­ள­ராக, பாட வரை­ஞ­ராக என்று பல்­வேறு பாத்­தி­ரங்­களில் எனது பங்­க­ளிப்பை ஆற்றி வந்­துள்ளேன். வரு­கிறேன்.

இது­வரை 160 இற்கு மேற்­பட்ட முஸ்லிம் பாட­சா­லை­களில் ஆசி­ரியர், மாணவர், பெற்றோர் தொடர்­பான பல விழிப்­பூட்டல் நிகழ்ச்­சி­களை ஒரு கல்வி உள­வி­ய­லா­ள­ரா­கவும் சமூக ஆய்­வாளர் என்ற வகை­யிலும் நான் நடத்­தி­யுள்ளேன். அதன் நல்ல விளை­வு­க­ளையும் கண்­டுள்ளேன். இந்த வகையில் கல்­வியும் உள­வி­யலும் மிகுந்த பிர­யோகத் தன்மை வாய்ந்த (More Applicable) புலங்கள் என்­பதால் அதனை எனது கலா­நிதி ஆய்­வுக்­கான துறை­யாகத் தெரிவு செய்தேன்.

Q உங்­க­ளது கல்வித் துறைசார் ஈடு­பாடு முழு நாட்­டையும் உள்­ள­டக்­கி­யதா அல்­லது தலை­ந­க­ரையும் புற­நகர் பகு­தி­க­ளையும் மாத்திரம் கருத்திற் கொண்­டதா?

160 பாட­சா­லைகள் மட்­டு­மன்றி பிர­தேச ரீதி­யான கல்வி அபி­வி­ருத்தி நிறு­வ­னங்கள், புலமைப் பரிசில் நிறு­வ­னங்கள், கல்வி குறித்த ஆய்­வு­க­ளுக்கு நிதி­யா­த­ர­வ­ளிக்கும் ஒரு சில நிறு­வ­னங்­க­ளு­டனும் இணைந்து பணி­யாற்­றிய அனு­ப­வமும் எனக்­குள்­ளது. அந்த வகையில் வட மாகாணம் தவி­ர­வுள்ள எட்டு மாகா­ணங்­களில் சகல மாவட்­டங்­க­ளி­லு­முள்ள பாட­சா­லை­க­ளுக்கும் நான் சென்­றுள்ளேன். அனு­ரா­த­புரம், பொலன்­ன­றுவை, புத்­தளம், தெற்கில் மாத்­தறை, ஹம்­பாந்­தோட்டை வரையும் பதுளை, மொன­ரா­கலை வரையும் பாட­சாலைக் கல்­வியை மேம்­ப­டுத்தும் பல்­வேறு நிகழ்ச்­சி­களில் ஒரு வள­வா­ள­ராக நான் கலந்து கொண்­டுள்ளேன். எங்­கி­ருந்­தெல்லாம் எனக்கு அழைப்பு வரு­கின்­றதோ அவை அனைத்­திற்கும் நான் சாத­க­மாகப் பதி­ல­ளித்­துள்ளேன். அது எனக்கு மன ஆறு­தலைத் தரு­கின்­றது. நான் தலை­ந­கரை மாத்­திரம் எனது வச­திக்­கா­கவும் சௌக­ரி­யத்­திற்­கா­கவும் தெரிவு செய்யும் வள­வாளன் அல்ல.

Q இப்­போது நீங்கள் கம்­பஹா மாவட்ட முஸ்லிம் பாட­சா­லை­களின் கல்விப் போக்­குகள் குறித்து பொது­வா­கவும் மாணவர் இடை விலகல் குறித்து குறிப்­பா­கவும் ஆய்­வொன்றை மேற்­கொண்­டி­ருக்­கின்­றீர்கள். முதலில் இந்த ஆய்வு அனு­ப­வங்கள் குறித்து சொல்­லுங்கள்.

கம்­பஹா மாவட்­டத்தில் மொத்­த­மாக 21 முஸ்லிம் பாட­சா­லைகள் உள்­ளன. அதில் 19 பாட­சா­லைகள் இடை­நி­லைப்­பா­ட­சா­லைகள் ஆகும். எனது ஆய்வுக் குடித்­தொ­கைக்­கேற்ப நான் 18 பாட­சா­லைகளுக்குச் செல்ல வேண்­டி­யி­ருந்­தது. இது ஒரு கள ஆய்வு. தரவுப் பகுப்­பாய்வு இதில் முக்­கி­ய­மா­னது. 04 கல்வி வல­யங்­க­ளி­லுள்ள 18 பாட­சா­லைக்கும் சென்று பல்­வேறு வகை­யான தர­வு­களைத் திரட்டுவது மிகச் சவால் நிறைந்­த­தா­கவே இருந்­தது. காரணம் சில அதி­பர்­க­ளுக்கு இந்த ஆய்வின் முக்­கி­யத்­து­வத்தை எடுத்­து­ரைப்­பதும் அவர்­களின் மன­மு­வந்த ஆத­ரவைப் பெறு­வதும் சற்று கடி­ன­மாக இருந்­தது. குறிப்­பாக பாட­சா­லை­யி­லி­ருந்து பல்­க­லைக்­க­ழகம் தெரி­வான மாண­வர்­களின் தொகையை வெளி­யிட சிலர் தயங்­கினர்.

சில அதி­பர்கள் முழு அளவில் ஒத்­து­ழைப்பு வழங்கி தேவை­யான அனைத்து தர­வு­க­ளையும் வழங்­கினர். சிலர் பாட­சா­லையில் பின்­ன­டை­வுக்­கான கார­ணங்­களைத் தெளி­வாகச் சொல்­வ­தற்குத் தயக்கம் காட்­டினர். தாம் பத­வி­யி­லி­ருந்து வில­கி­யதன் பின்னர் தன்னைப் பேட்டி கண்டால் எல்லா விஷ­யங்­க­ளையும் தெளி­வாகப் பேச முடியும் என்­றனர். இந்தக் கேள்­விக்கு முழு­மை­யான பதில் தரு­வதில் எனக்கும் சில சங்­க­டங்கள் உள்­ளன.

Q மேல்­மா­கா­ணத்தில் கம்­பஹா முக்­கிய மாவட்டம். இம்­மா­வட்­டத்தில் முஸ்­லிம்­களின் கல்வி நிலை பொது­வாக எவ்­வாறு உள்­ளது?

கல்வி மேம்­பாட்டை அள­வீடு செய்­வ­தற்­கான உரை­கற்­களில் தரம் 05 புல­மைப்­ப­ரிசில் பரீட்சைப் பெறு­பே­றுகள் சாதா­ரண தரப் பரீட்சைப் பெறு­பே­றுகள் மற்றும் உயர்­த­ரத்­திற்குப் பிந்­திய பல்­க­லைக்­க­ழக அனு­மதி விகிதம் என்­ப­னவே கொள்­ளப்­ப­டு­கின்­றன. 19 இடை­நிலைப் பாட­சா­லை­க­ளிலும் சுமார் 13000 மாண­வர்கள் பயில்­கின்­றனர். 700 ஆசி­ரி­யர்கள் கற்­பித்­தலில் ஈடு­பட்­டுள்­ளனர். எவ்­வா­றா­யினும் தரம் 05 புலமைப் பரிசில் பெறு­பே­றுகள் ஒப்­பீட்டு ரீதியில் மிகக் குறை­வா­கவே உள்­ளன. உதா­ர­ண­மாக 180 மாண­வர்கள் தோற்றும் ஒரு பாட­சா­லையில் ஒரு 10 பேர் அள­வி­லேயே சித்­தி­ய­டை­கி­றார்கள். சாதா­ர­ண­தரப் பரீட்­சைக்குப் பின்னர் 40 சத­வீ­த­மான மாண­வர்கள் உயர் தரத்­திற்குச் செல்­லா­ம­லேயே இடை வில­கு­கின்­றனர். உயர் தரத்­திற்குச் செல்லும் மாண­வர்­களில் விரல் விட்டு எண்­ணக்­கூ­டிய மாண­வர்கள் மிக அரி­தா­கவே பல்­க­லைக்­க­ழக நுழைவு அனு­ம­தியைப் பெறு­கின்­றனர்.

கல்வித் துறையில் அர­சாங்கம் மேற்­கொண்டு வரும் செல­வினங்­க­ளையும் பௌதிக, ஆளணி முத­லீ­டு­க­ளையும் அர்த்தம் உள்­ள­தாக ஆக்­கு­வ­தற்கு இந்தப் பெறு­பே­றுகள் போது­மா­ன­தல்ல.

Q இம் மாவட்­டத்தில் முஸ்லிம் கல்வி பின்­ன­டைந்­தி­ருப்­ப­தற்­கான பிர­தான கார­ணிகள் எவை என்று நீங்கள் அடை­யா­ளப்­ப­டுத்­து­கி­றீர்கள்?

எப்­போதும் கல்விப் பின்­ன­டை­வுக்கு மனித வளப் பற்­றாக்­குறை அல்­லது பௌதிக வளப்­பற்­றாக்­குறை கார­ண­மாக்­கப்­ப­டு­வது வழக்கம். ஆனால் இவற்­றினைத் தாண்டி கிடைக்கப் பெற்­றுள்ள ஆளணி வளத்தை உச்­ச­ளவில் பயன்­ப­டுத்தி உயர்ந்த பெறு­பே­று­களைக் கண்­ட­டையப் பயன்­ப­டுத்­து­கின்­றோமா? என்­பது எனது ஆய்வில் முக்­கி­ய­மா­ன­தாக இருந்­தது. ஒரு பாட­சாலைக் கல்­வி­யுடன் தொடர்­புற்­றுள்ள பங்­கா­ளர்­களில் அதி­பர்கள், ஆசி­ரி­யர்கள், மாண­வர்கள் கல்­வி­ய­மைச்சு, பழைய மாணவர் அமைப்பு, பாட­சாலை அபி­வி­ருத்தி குழு, பெற்றோர் மிக முக்­கி­ய­மா­ன­வர்கள்.

அதி­பர்­களின் வினாக்­கொத்துப் பகுப்­பாய்­வி­லி­ருந்து பெறப்­பட்ட முடி­வு­களின் படி ஆள­ணிப்­பற்­றாக்­குறை இப்­பா­ட­சா­லை­களில் குறிப்­பி­டத்­தக்க அளவில் இல்லை. இருக்கும் ஆசி­ரி­யர்­களை வலு­வூட்டி வினைத்­தி­றன்­மிக்க கற்­பித்­தலை உறுதி செய்தால் பெறு­பே­று­களில் நாம் இன்னும் உயர்ந்து செல்­லலாம். ஆசி­ரியர் வாண்மை விருத்தி தொடர்­பாக நான் விநி­யோ­கித்த வினாக்­கொத்தில் 14 உருப்­ப­டிகள் சேர்க்­கப்­பட்­டி­ருந்­தன. அவற்­றுக்­கான ஆசி­ரி­யர்­களின் பதில் குறி (Response) திருப்­தி­க­ர­மா­னதாய் இல்லை.

பாடத்­திட்­ட­மிடல் (Lesson planning) கற்­பித்­த­லுக்கு தயா­ராதல் (Preparation) கற்­பித்தல் தொடர்­பான கருத்­த­ரங்­கு­களில் பங்­கேற்றல் ஆகிய உருப்­ப­டி­க­ளுக்கு ஆசி­ரியர் பதில் குறி முறையே 21%, 19%, 25% அவ்­வாறே அமைந்­தி­ருந்­தது. எனது கருத்தில் ஆசி­ரி­யர்கள் மிக முக்­கிய பங்­கா­ளர்­க­ளாவர். இதன் அர்த்தம் பெற்றோர் பொறுப்­பற்­ற­வர்கள் என்­ப­தல்ல.

Q பெற்றோர் தரப்பும் கல்­வியின் முக்­கிய பங்­காளர் என்­பதை உங்­க­ளது ஆய்வு எந்­த­ள­வுக்கு ஏற்றுக் கொள்­கி­றது?

ஆசி­ரி­யர்­களும் பெற்­றோர்­களும் முக்­கி­யத்­து­வத்தில் எந்­த­ள­விலும் குறை­யாத சம பங்­கா­ளர்கள் (Equal stake holders) என்­பதே எனது முடி­வாகும். பெற்­றோரும் ஒரு மாணவன் வாழும் குடும்பக் கட்­ட­மைப்பும் கல்­வியில் மிகப் பெரும் செல்­வாக்­குள்ள காரணி என்­பதை எனது ஆய்வின் இலக்­கிய மீளாய்­விலும் தரவுப் பகுப்­பாய்­விலும் மிகத் துல்­லி­ய­மாக நான் விளக்­கி­யுள்ளேன். எனது வாதத்தை வலி­தாக்க போது­மான தர­வு­க­ளையும் புள்ளி விப­ரங்­க­ளையும் பயன்­ப­டுத்­தி­யுள்ளேன்.

குடும்­பத்தின் அளவு, குடும்­பத்தின் வகை, குடும்­பத்தின் பண்­புகள் அதன் பொரு­ளா­தார நிலை, பெற்­றோரின் கல்வி மட்டம், பெற்றோர் சமூக அந்­தஸ்து, பெற்றோர்– பிள்ளை உறவு, பெற்­றோரின் கல்வி ஈடு­பாடு, பிள்­ளைக்கு பெற்றோர் அளிக்கும் கல்வி வச­திகள், பெற்­றோரின் எதிர்­பார்ப்பு, பெற்றோர் மனப்­பாங்கு, பிள்­ளைகள் உள­வியல் தேவை­களைப் பெற்றோர் நிறைவு செய்யும் அளவு, வீட்டுச் சூழலில் கல்வி நிலை, உடன் பிறப்­புக்­களின் தாக்கம் போன்­றன எனது ஆய்வில் சாராமாறி­க­ளா­கவும், கல்விப் பெறு­பேறு சார்­மா­றி­யா­கவும் கொள்­ளப்­பட்டு, பெற்­றோரின் செல்­வாக்கை ஆராய்ந்­துள்ளேன். அந்த வகையில் மேற்போந்த கார­ணிகள் நேர்­மு­க­மா­ன­தாக இருப்பின் பிள்­ளை­களின் அடைவு மட்டம் உயர்­வா­ன­தாக இருக்கும். அக்­கா­ர­ணிகள் எதிர்­நி­லையில் (Negative) இருப்பின் பிள்­ளைகளின் பெறு­பே­றுகள் மிகக் குறைந்த மட்­டத்தில் இருக்கும் என்­பதை நிறு­வி­யுள்ளேன்.

Q மாண­வர்­க­ளது பாட­சாலை இடை­வி­லகல் வீதம் இம்­மா­வட்­டத்தில் எந்­த­ள­வுக்கு உள்­ளது? அதற்­கான கார­ணங்கள் என்ன?

தரம் 6 முதல் 11 வரை­யான வகுப்­ப­றை­க­ளி­லி­ருந்து சரா­ச­ரி­யாக 10 வீத­மான மாண­வர்கள் இடை வில­கு­கின்­றனர் என்­பதை ஆவ­ணப்­ப­குப்­பாய்வு எடுத்­துக்­காட்­டு­கின்­றது. அதே­வேளை, சாதா­ரண தரத்­துடன் அதா­வது, சாதா­ரண தரப் பரீட்­சைக்குத் தோற்­றிய பின்னர் உயர்­த­ரத்­திற்குச் செல்­லாமல் சரா­ச­ரி­யாக 50 சத­வீத மாண­வர்கள் இடை­வி­லகிச் செல்­கின்­றனர். மாவட்­டத்­தி­லுள்ள மொத்த (ஆய்­வுக்­குழுத் தொகை) 18 இடை நிலைப் பாட­சா­லை­களின் சரா­சரிப் பெறு­மா­னமே 50 வீத­மாகும். பாட­சா­லைக்குப் பாட­சாலை 40 சத­வீ­தத்­தி­லி­ருந்து 60 சத­வீதம் வரை சாதா­ரண தரத்­துடன் இடை விலகும் மாணவர் வீதம் வேறு­ப­டு­கின்­றது. இடை­வி­லகும் மாணவர் தொகையில் ஒப்­பீட்டு ரீதியில் ஆண் மாண­வர்­களே அதிகம் என்­பதைத் தர­வுகள் காண்­பிக்­கின்­றன.

இடை விலகல்­க­ளுக்­கான கார­ணங்கள் பல்­வேறு வகைப்­பட்­டவை. அவற்றுள் சில பெற்­றோர்­க­ளு­டனும் மாண­வர்­க­ளு­டனும் தொடர்­புற்­றவை. வேறு சில ஆசி­ரி­யர்­க­ளு­டனும் கற்­பித்தல் அணு­கு­மு­றை­க­ளு­டனும் தொடர்­புற்­றவை. பிள்­ளை­க­ளுக்குக் கற்­பிப்­பதில் பெற்­றோரின் ஆர்வம் குறை­வாக இருப்­பது மாணவர் இடை­வி­லகிச் செல்­வ­தற்­கான பிர­தான காரணம் என 80% மான அதி­பர்­களும் 75% மான ஆசி­ரி­யர்­களும் வினாக் கொத்­துக்­க­ளுக்கு பதில் குறி (Response) தந்­தி­ருந்­தனர்.

எவ்­வா­றா­யினும் இடை வில­கிய மாண­வர்­க­ளு­ட­னான நேர்­கா­ணலில் இருந்து வேறு பல கார­ணங்­களும் கண்­ட­டை­யப்­பட்­டன. அவற்றுள் பின்­வ­ரு­வன முக்­கி­ய­மா­னவை. கல்­வியின் பெறு­மானம் குறித்த மாண­வர்­களின் மங்­க­லான புரிதல், நேரத்­திற்கு உணவு கிடைக்­காமை, கற்றல் சாத­னங்கள் மற்றும் போதிய வகுப்புக் கட்­டணம் இல்­லாமை, ஆசி­ரி­யர்­களின் பிழை­யான கையா­ளுதல், பெற்றோர் வெளி­நாடு செல்லல், பாது­கா­வ­லர்­களால் அல்­லது பொறுப்­பா­ளர்­களால் சுரண்­டப்­படல். மாண­வர்கள் பகுதி நேர வேலைக்கு அமர்தல், வீட்டில் கவ­னிப்புக் கிடைக்­காமை, மோச­மான சக­பா­டிகள், பொருத்­த­மற்­றதும் வச­தி­யற்­ற­து­மான வாழிடம். அள­வுக்கு மீறிய வணிக நாட்டம், ஊட­கங்­களின் தாக்கம் என அவை விரிந்து செல்­கின்­றன.

Q மாண­வர்கள் பாட­சாலைக் கல்­வி­யி­லி­ருந்து இடை விலகிச் செல்­வ­தனால் ஏற்­ப­டக்­கூ­டிய எதிர்­வி­ளை­வுகள் என்ன?

முத­லா­வது வேலை­யற்ற இளை­ஞர்­களின் பெருக்கம் அல்­லது கூலித் தொழி­லா­ளர்­களின் அதி­க­ரிப்பு, வீட்­டி­லி­ருந்து தூர இடங்­களில் ஒதுங்­கி­வாழல், குற்றச் செயல்­களில் ஈடு­படல், போதை­வஸ்துப் பாவனை, சிறுவர் துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு ஆளா­குதல், உள ஆரோக்­கி­யத்தை இழத்தல் என எதிர்­ம­றை­யான விளை­வுகள் பல ஏற்­ப­டலாம் என்­பதை கள­நிலைத் தர­வுகள் மூலம் இந்த ஆய்வு நிறு­வு­கின்­றது.

Q கம்­பஹா மாவட்ட முஸ்லிம் பாட­சா­லை­களின் கல்­வியை மேம்­ப­டுத்­தவும் இடை­வி­ல­கலைக் கட்­டுப்­ப­டுத்­தவும் உங்கள் ஆய்வு எத்­த­கைய விதப்­பு­ரை­களை முன்வைக்­கின்­றது?

எனது ஆய்­வ­றிக்­கையின் இறு­திப்­ப­கு­தியில் விதப்­பு­ரைகள் முறைப்­ப­டுத்­தப்­பட்டு தரப்­ப­டு­கின்­றன. அதில் பெற்றோர் தொடர்­பான விதப்­பு­ரைகள், பாட­சாலை முகாமை மற்றும் பௌதிக வளங்கள் தொடர்­பான விதப்­பு­ரைகள், ஆசி­ரி­யர்­க­ளுக்­கான விதப்­பு­ரைகள், அரச தரப்பு மற்றும் கல்வி வலயம் தொடர்­பான விதப்­பு­ரைகள் என தனித் தனி­யா­கவும் விரி­வா­கவும் ஆய்வை அடி­யொற்றி முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

இடைவிலகல் ஒரு தீவளாவிய பிரச்சினை என்ற வகையில் மாதிரி எடுப்புகளில் இருந்து மேற்கொள்ளப்படும் பிரச்சினைகள் குறித்த பகுப்பாய்வு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் பொருந்தும் என்பதே எனது எதிர்பார்ப்பு. கல்வியின் பிரதான பங்காளர்களான மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திக்குழு போன்றவர்களின் உயிர்ப்புள்ள பங்குபற்றலை ஊக்குவித்து மாணவர்கள் தமது பாடசாலைக் கல்வியைப் பூரணப்படுத்துவதற்கான தூண்டுதல்களை வழங்க இந்த ஆய்வின் பெறுபேறுகளும் விதப்புரைகளும் உதவும் என்பது எனது நம்பிக்கையாகும்.

Q உங்கள் ஆய்வும் அதனையொட்டிய பெறுபேறுகளும் விதப்புரைகளும் இம்மாவட்டத்தில் கல்வியுடன் தொடர்பானவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளனவா? அதற்கான சமூக ஒத்துழைப்பு எவ்வாறுள்ளது?

இம்மாவட்டத்தில் இப்படியொரு ஆய்வை நான் மேற்கொண்டமையை அனைத்து அதிபர்களும் பெரும்பான்மை ஆசிரியர்களும் நன்கு அறிவர். இந்த ஆய்வை வெளிப்படுத்தல் (Exposion) குறித்து திஹாரிய ஜம் இய்யத்துல் உலமா திஹாரியில் இயங்கும் சில முக்கிய இயக்கங்கள், நிறுவனங்களிடமும் நான் கலந்துரையாடியுள்ளேன். கல்விமான்களை ஒன்று சேர்த்து இந்த ஆய்வை அறிமுகம் செய்வதாக அவர்கள் அனைவரும் எனக்கு வாக்களித்தனர். எனினும் 6 மாதங்கள் கடந்து விட்டன. இதுவரை எதுவும் நடைபெறவில்லை. இந்த நேர்காணல் விடிவெள்ளிப் பத்திரிகையில் வெளிவந்த பின்னரேனும் சில நல்ல மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கிறேன்.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.