ஐ.ஸீ­.ஸீ.­பி.ஆர். சட்­ட­ம் என்றால் என்ன?

0 1,145

இலங்­கையில் தற்­போது, ஐஸீ­ஸீ­பிஆர் சட்­ட­மூ­லத்தின் கீழ் கைதுகள் இடம்­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. இந்த சட்ட மூலம் குறித்து எதிரும் புதி­ரு­மான வாதப்­பி­ரதி வாதங்கள் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றன. இது குறித்து பீபீஸீ சிங்­கள சேவை, ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பிர­சன்த லால் த சில்­வா­வுடன் நடத்­திய நேர்­கா­ணலின் தமி­ழாக்கம் இங்கு தரப்­ப­டு­கி­றது.

சிங்­க­ளத்தில்: தஹமி ரண­வீர
தமிழில்: ஏ.எல்.எம்.சத்தார்

ஐ.ஸீ­.ஸீ.­பி.ஆர். சட்­ட­மூலம் என்றால் என்ன?

2007– 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அர­சியல் உரி­மைகள் தொடர்­பான சர்­வ­தேச சம­­வாயம் (ICCPR). உள்­நாட்டு யுத்த காலத்தைப் போன்றே உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களின் பின்னர் இடம்­பெற்ற கைதுகள் தொடர்­பாக ஐஸீ­ஸீ­பிஆர் சட்­ட­மூலம் குறித்து பலத்த வாதப் பிர­தி­வா­தங்கள் எழுந்­துள்­ளன.
இந்த சட்­ட­மூ­லத்தின் அடிப்­படை விதி­யாக அமை­வது, “சிவில் மற்றும் அர­சியல் உரி­மைகள் தொடர்­பான சர்­வ­தேச சம­­வா­ய­மா­னது, யாப்பில் உள்­ள­டக்­கப்­பட்­டில்­லாத மனித உரி­மை­க­ளுக்குப் பொருத்­த­மான யாப்­ப­தி­காரம் ஒன்றைப் பெற்றுக் கொடுப்­ப­தோடு, அத­னுடன் தொடர்­பான அல்­லது அதற்­க­னு­ச­ர­ணை­யாக அமையும் விதத்­தி­லான சட்­டதிட்­டங்கள் உள்­ள­டக்­கப்­பட்­ட­தான சட்­ட­மூ­ல­மொன்­றாகும்” என்றே குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

1978 ஆம் ஆண்டின் அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்தில், இலங்கைப் பிர­ஜை­க­ளுக்­கான அடிப்­படை உரி­மைகள் வழங்­கப்­பட்­டுள்­ளன.

30 வரு­ட­கால யுத்­தத்தின் கார­ண­மாக ஒரு சில அடிப்­படை உரி­மைகள் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக முறைப்­பா­டுகள் தெரி­விக்­கப்­பட்­டன. யுத்த கெடு­பி­டி­க­ளுக்கு மத்­தியில் மீண்டும் அத்­த­கை­ய­தொரு நிலை உரு­வா­கக்­கூ­டாது என்­ப­தற்­காக சர்­வ­தே­சத்தால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்ள சட்ட திட்டம் ஒன்­றுக்கு கட்­டுப்­பட்டு நடக்கும் நிலைக்கு இலங்கை தள்­ளப்­பட்டது.

இந்த அடிப்­ப­டை­யி­லேயே இலங்­கையில் 2007 ஆம் ஆண்டு முதல் ஐஸீ­ஸீ­பிஆர் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கி­றது.

அர­சியல் அமைப்புச் சட்­டத்தில் அடங்­கப்­ப­டா­துள்ள மனித உரி­மைகள் இதன்­மூலம் உறு­தி­செய்­யப்­ப­டு­கி­றது.

1966 டிசம்பர் 16 ஆம் திகதி இச்­சட்டம் ஐக்­கிய நாடுகள் சபையால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­ட­தொன்­றாகும். 1976 மார்ச் மாதம் முதல் சிவில் மற்றும் அர­சியல் உரிமை தொடர்­பான சர்­வ­தேச சம­வா­யத்தில் ஓர் உறுப்பு நாடாக இலங்­கையும் இணைந்­துள்­ளது.

1980 ஜூன் 11 ஆம் திகதி மேற்­படி சர்­வ­தேச சம­வா­யத்தின் சட்ட திட்­டங்­க­ளுக்கு உடன்­பாடு தெரி­வித்து சிவில் மற்றும் அர­சியல் உரி­மை­களின் குறிப்­பி­டத்­தக்க அளவை இலங்கை தனது அர­சியல் அமைப்பில் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளது போன்றே பாரா­ளு­மன்­றத்­திலும் கொண்­டு­வந்து சட்­ட­மாக அங்­கீ­க­ரித்­துள்­ளது.
இதற்கு முன்னர் சிறி­த­ள­வுக்­கேனும் யாப்பில் ஏற்­கப்­ப­டா­தி­ருந்த சிவில் மற்றும் அர­சியல் உரி­மைகள் தொடர்­பான சட்­டங்கள் ஐஸீ­ஸீ­பிஆர் சட்­ட­மூலம் கொண்டு வரப்­பட்­டதைத் தொடர்ந்து சட்­ட­மாக்கிக் கொள்­வ­தற்கு அர­சுக்கு வாய்ப்பை ஏற்­ப­டுத்திக் கொடுத்­துள்­ளது.

சர்­வ­தே­சத்தால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்ள உரி­மை­களை இலங்கை மக்கள் பெற்­றுக்­கொள்­ளவும் உரி­மை­களை உறு­தி­செய்து கொள்­ளவும் இச்­சட்­ட­மூலம் வழி­வ­குத்­துள்­ளது.

இந்தச் சட்­ட­மூ­லத்தால் மக்­க­ளுக்குப் பாதிப்பா?

கடந்த சில மாதங்­க­ளுக்கு முன்னர் பொல்­க­ஹ­வெல பகு­தியைச் சேர்ந்த பிக்­குகள் செய்த முறைப்­பாடொன்றுக்­க­மைய விரு­து­பெற்ற எழுத்­தா­ள­ரான சக்­திக சத்­கு­மார என்­பவர் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டார். அவ­ரது முக­நூலில் பதி­வேற்­றப்­பட்­டுள்ள சிறு­க­தை­யொன்றில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள விடயம் பொது­மக்­களை கொந்­த­ளிப்பில் ஆழ்த்­தக்­கூ­டி­ய­தென்றே சக்­தி­க­வுக்கு எதி­ரான முறைப்­பாட்டில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அவர் இன்னும் பொலிஸில் கைதி­யா­கவே உள்ளார்.

இதே­போன்றே ரஹீம் மஸா­ஹினா அணிந்­தி­ருந்த நீண்ட மேலா­டையின் பின் பகு­தியில் “தர்ம சக்­க­ரத்தின் வடி­வி­லான” சின்னம் பொறிக்­கப்­பட்­டி­ருந்ததாகக் கூறி ஹஸ­லக பொலி­ஸாரால் கைது­செய்­யப்­பட்டார்.

ஐஸீ­ஸீ­பிஆர் சட்­ட­மூ­லத்தின் ஷரத்தில் காணப்­படும் கடுமையான சட்ட திட்­டங்­க­ளுக்­க­மை­யவே இக்­கை­துகள் இடம்­பெற்­றுள்­ளன.

இதனால் பெரும்­பா­லானோர் இச்­சட்ட மூலம் “மக்­களைக் கட்­டுப்­ப­டுத்தும்” ஒரு செயற்­பா­டா­கவே கரு­து­கின்­றனர். அதே­போன்றே தேவை­யற்ற விதத்தில் மக்­களைக் கைது­செய்­வ­தற்கும் இச்­சட்ட மூலம் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தா­கவும் மக்கள் அச்சம் தெரி­விக்­கின்­றனர்.

சட்ட மூலத்தின் 3 (1) உறுப்­பு­ரையின் உள்­ள­டக்கம் பெரும்­பாலும் மேற்­படி கருத்­துக்கு உர­மி­டு­வ­தா­க­வுள்­ளது. மேலே குறிப்­பிட்ட கைதுகள் 3 (1) உறுப்­பு­ரையின் விதி­க­ளுக்­க­மை­யவே இடம்­பெற்­றுள்­ளன.

3 (1) உறுப்­பு­ரையில், எந்­த­வொரு நப­ராலும் யுத்­தத்தைத் தூண்­டவோ, வேறு­ப­டுத்தும் விதத்தில் எதிர்­வாதம் புரி­யவோ, அல்­லது வன்­மு­றை­களில் ஈடு­ப­டு­வதோ, ஒன்று திர­ளு­வதோ, இன, மத குரோ­தங்­களை முன்­னெ­டுப்­பதோ கூடாது என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இதே­போன்றே, 3 ஆவது உறுப்­பு­ரையின் (4) ஆவது உப பிரிவில், “இந்த உறுப்­பு­ரையின் கீழ் உள்ள குற்றச் செயல் பார­தூ­ர­மா­னதும் பிணை வழங்­க­மு­டி­யா­த­து­மான குற்­ற­மாகும். இத்­த­கைய குற்­றச்­சாட்டு புரிந்­துள்­ள­தாக சந்­தே­கப்­படும் அல்­லது முறைப்­பாடு சுமத்­தப்­பட்­டுள்ள நபர் விசேட சந்­தர்ப்­பங்­களில் உயர்­நீ­தி­மன்­றத்­தி­னூ­டா­க­வே­யன்றி வேறு நீதி­மன்­றங்­க­ளூ­டாக பிணையில் செல்ல முடி­யாது” என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இதற்­க­மைய 3(1) உறுப்­பு­ரையில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள குற்றச் செயலில் ஈடு­ப­டுவோர் பிணை வழங்­கு­வ­தற்­கு­ரிய முதல்­படி உயர்­நீதி மன்­ற­மே­யாகும். இதனைத் தவிர அதன் கீழுள்ள வேறு எந்த நீதி­மன்­றத்­தாலும் பிணை வழங்க முடி­யா­தென்­ப­தாகும்.

இதற்­க­மைய 1997– 30 ஆம் இலக்க பிணை சட்­ட­மூலம் இத்­த­கைய சந்­தர்ப்­பங்­களில் செய­லி­ழந்­த­தா­கவே காணப்­படும்.

“மேற்­படி உறுப்­பு­ரைக்கு விரி­வா­னதும் குறு­கி­ய­து­மான இரு­வேறு விளக்­கங்­களை அளிக்க முடியும் அவ்­வாறு விளக்கும் போது, சட்­ட­மூ­லத்­தி­லுள்ள இதர விட­யங்­க­ளையும் வாசித்துப் பார்ப்­பது அவ­சியம்” என்று பிர­சன்த லால்த அல்விஸ் கூறு­கிறார். இங்கு முத­லா­வது உறுப்­பு­ரையில் “யுத்­தத்தைத் தூண்­டுதல்” என்­றுள்­ளது. அதனைத் தொடர்ந்து குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது எதிர்­வாதம் புரி­தலும் குரோ­தத்தை உரு­வாக்­கு­தலும் என்­ப­தாகும். இவை­யி­ரண்டும் யுத்­தத்தை மூளச்­செய்யும் அள­வுக்­கான செயற்­பா­டாக அமைய வேண்டும்.
உதா­ர­ணத்­திற்கு, எனது புத்த சமயம் தான் உல­கிலே மிகவும் உன்­ன­த­மான தர்மம் என்று நான் சொன்னால், சட்ட மூலத்­திற்­க­மைய இது­வொரு குற்றச் செயல் என்று எவ­ராலும் எண்­ண­மு­டியும். ஆனால் அது குரோ­தத்தை உண்டு பண்­ணு­ம­ள­வுக்கு நெருங்­கு­வ­தில்லை என்று அவர் கூறு­கிறார்.

சட்ட மூலத்தை விரி­வாக ஆராய்ந்து பார்த்தால், அதன் நோக்கம் உரி­மை­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தல்ல. உரி­மை­களை மேலும் உறு­தி­செய்­வ­தா­கவே உள்­ள­தாக சட்­டத்­த­ரணி பிர­சன்த லால் மேலும் கூறு­கிறார்.

ரஹீம் மஸா­ஹி­னாவின் ஆடை­யி­லுள்ள சின்னம் கார­ண­மாக அவர் கைது­செய்யப் பட்­டுள்­ளமை குறித்து பிர­சன்த லால் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில், ஒரு பௌத்தன் என்ற வகையில் நான் இந்த சம்­ப­வத்தை வன்­மை­யாகக் கண்­டிக்­கிறேன். இதற்குப் பல கார­ணங்­களை முன்­வைக்­கலாம். முதன் முத­லாக குறித்த ஆடையில் உள்­ளது தர்­ம­சக்­கரம் அல்ல. அது கப்­ப­லி­லுள்ள சுக்கான் என்­பது தெளி­வா­கவே தெரி­கி­றது.

பௌத்த கொடியைக் கொண்டு தைக்­கப்­பட்ட சட்டை சந்­தையில் விற்­கப்­ப­டு­வதை நான் கண்­டி­ருக்­கிறேன். தர்­ம­சக்­க­ரத்தைப் போல அதுவும் குற்றம் தானே! ஆனால், சம்­பந்­தப்­பட்ட பெண் முஸ்லிம் என்­பதால் கைது­செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்ளார்.

மக்கள் தர்­ம­சக்­கரம் பொறிக்­கப்­பட்ட சட்­டை­களை அணி­வது போன்றே அணி­க­லன்­க­ளாக தர்­ம­சக்­கர சின்­னங்­க­ளையும் அணி­கி­றார்கள். எனவே இவற்­றையும் இவற்றைத் தயா­ரிக்­கிற நிறு­வ­னங்­க­ளையும் அல்­லவா குற்­ற­வா­ளி­க­ளாகக் கணிக்­க­வேண்டும்.

சட்­டத்­த­ரணி திஷ்ய வேர­கொட என்­பவர் சண்டே ஒப்­சேவர் பத்­தி­ரி­கைக்கு கருத்துத் தெரி­விக்­கையில் கூறி­ய­தா­வது, மக்­களின் உரி­மை­களைப் பாது­காப்­ப­தற்­காக அறி­மு­கப்­ப­டுத்­திய ஐஸீஸீ­பிஆர் சட்ட மூலம் சிவில் சுதந்­தி­ரத்தை கட்டுப் படுத்­து­வ­தற்கே பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது என்று குறிப்­பிட்ட அவர், சக்­தி­கவின் கைது சுதந்­தி­ரத்­திற்கு வரை­யறை போட்­டுள்­ள­துடன் ரஹீம் மஸா­ஹி­னாவின் கைதில் சட்­ட­மூ­லத்தின் எக்­கா­ர­ணியும் பேணப்­ப­டா­ம­லேயே இடம்­பெற்­றுள்­ளது என்று அவர் மேலும் கூறி­யுள்ளார்.

ஐஸீ­ஸீ­பிஆர் செயற்­ப­டுத்­தப்­பட்ட விசேட சந்­தர்ப்பம் எது?

2018 மார்ச் மாதம் திகன வன்­செ­யல்­களின் பின்னர் மஹ­சொஹொன் அணியின் அமித் வீர­சிங்ஹ உள்­ளிட்ட இதர நபர்கள் நீண்­ட­நாட்கள் சிறையில் அடைக்கப் பட்­டி­ருந்­தமை மேற்­படி சட்ட மூலம் மற்றும் அவ­சர கால சட்ட விதி­க­ளுக்­க­மை­யவே இடம்­பெற்­றுள்­ளன.

அவ­ச­ர­கால சட்­ட­விதி போன்றே இந்த சட்­ட­மூலம் செயற்­படும் போது சிங்­க­ளவர், தமிழர், முஸ்­லிம்கள் ஆகிய எல்லா இனத்தைச் சேர்ந்த மக்­களும் அவ்­வப்­போது இடம்­பெற்ற சண்டை, குழப்­பங்­களின் கீழ் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

எவ்­வா­றி­ருந்­த­போ­திலும் ஐஸீ­ஸீ­பிஆர் சட்ட மூலத்தில் பல்­வேறு வகை­க­ளிலும் உரி­மைகள் பேணப்­பட்­டுள்­ளன. 4(1) உறுப்­பு­ரையில் முறைப்­பாட்­டுக்கு இலக்­காகி யுள்ள நபரின் உரி­மைகள் குறித்தும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன.

தாமரை மலர் ஒன்றில் வீற்­றி­ருப்­ப­தான புத்­தரின் உரு­வப்­படம் ஒன்றை தனது கையில் பச்சை குத்­தி­யி­ருந்த நயோமி கோல்மன் என்ற வெளி­நாட்டுப் பெண்­மணி, 2014 ஆம் ஆண்டு பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்தில் வைத்து கட்­டு­நா­யக்க பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டார்.

நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­யப்­பட்ட அவர், பெரும்­பான்மை மக்­களை சினம் கொள்ளச் செய்யும் வகையில் பச்சை குத்­தப்­பட்­டுள்­ளதால் இவர் கைது செய்­யப்­பட்டார் என்று நீதி­மன்­றத்தில் பொலிஸார் குற்­றத்தை முன் வைத்­தனர்.
பின்னர் நீதி­மன்ற பணிப்­பு­ரைக்­க­மைய அவர் இலங்­கை­யி­லி­ருந்து நாடு கடத்­தப்­பட நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டது.

ஆனால், மனித உரிமை மீறல் என்ற அடிப்­ப­டையில் பிரித்­தா­னிய பிர­ஜை­யான அப்பெண், உயர் நீதி­மன்­றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கின் இறு­தியில் அப்­பெண்­ணுக்கு நஷ்ட ஈடா­கவும், வழக்குச் செல­வா­கவும் எட்டு இலட்சம் ரூபா செலுத்­தும்­படி உயர் நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­தது.

இலங்­கைக்கு பல தட­வைகள் உல்­லா­சப்­ப­ய­ணி­யாக வருகை தந்­துள்ள நயோமி, தான் ஒரு தூய்­மை­யான பெளத்த பெண் என்றும், புத்­த­பெ­ருமான் மீதுள்ள பற்­றி­னா­லேயே தான், தனது கையில் அவ­ரது உரு­வப்­ப­டத்தை பச்சை குத்­தி­யுள்ளேன் என்றும் அவர் தனது ஆதங்­கத்தை வெளி­யிட்­டுள்ளார்.
எவ்­வா­றி­ருந்த போதிலும் மேற்­படி உறுப்­பு­ரைக்­க­மைய, ஒரு­வ­ருக்­கெ­தி­ராக வழக்குத் தொடரும் போது பொலிஸார் மிகவும் கவ­ன­மாக நடந்து கொள்­ள­வேண்டும். இது நீதி­மன்­றத்­துக்குக் கூட சில கட்­டுப்­பா­டு­களை விதிக்கும் சட்ட மூல­மாகும் என்று பிர­சன்த லால் அல்விஸ் தெரி­வித்தார்.

3(1) உறுப்­பு­ரையின் கீழ் வழக்குத் தொடரும் போது மேல் நீதி­மன்­றத்தில் பிணை கோரும் சந்­தர்ப்­பத்தில் விசேட கார­ணிகள் முன் வைக்­க­வேண்டும். ஆனால் குறித்த அந்த விசேட கார­ணிகள் எவை என்று சட்­டத்­தினுள் குறிப்­பி­டப்­பட்­டில்லை.

இதற்­க­மைய வழக்­கு­களில் நீதி­ப­தி­க­ளுக்கு அதி­வி­சேட கார­ணிகள் எவை­யென்­பது குறித்து ஆராய்ந்து பார்ப்­ப­தற்கு பூரண சுதந்­திரம் உள்­ளது.

அடிப்­படை உரி­மை­களின் கீழ் வழக்குகள்

சக்­திக சத்­கு­மார மற்றும் மஸாஹிமா ஆகிய இரு­வரும் தமது அடிப்­படை உரி­மைகள் மீறப்­பட்­டுள்­ள­தாக உயர் நீதி­மன்­றத்தில் வழ்க்குத் தாக்கல் செய்­துள்­ளனர்.

1978 ஆம் ஆண்டின் இலங்கை அர­சியல் அமைப்புச் சட்­டத்தில் பிர­ஜை­க­ளுக்­குள்ள மனித உரி­மைகள் குறித்து குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

“இலங்­கையில் வதியும் மக்கள் சந்­த­திகள் மத்­தியில் தார்­மீக சுதந்­திர சமூகம் ஒன்றைக் கட்­டி­யெ­ழுப்­பவும் அவர்­களைப் பேணிப் பாது­காக்­கவும் அச்­சந்­த­தி­யி­னரால் முன்­னெ­டுக்­கப்­படும் முயற்­சி­க­ளுக்கு உதவ முன்­வரும் அனைத்­து­லக மக்­க­ளி­னதும் அபி­மானம் மற்றும் செல்வம் ஆகி­ய­வற்றை உறு­திப்­ப­டுத்தும் அப­ரி­மி­த­மான உரி­மை­யாக சுதந்­திரம், சம­நி­லைத்­தன்மை, நேர்மை, அடிப்­படை மனித உரி­மைகள் மற்றும் நீதித்­து­றையின் சுயா­தீனம் என்­பன சகல மக்­க­ளுக்கும் உறு­திப்­ப­டுத்தக் கூடி­ய­தான ஜன­நா­யக சோஷ­லிஸ குடி­ய­ர­சாக இலங்­கையை உரு­வாக்­கு­வ­தற்­காக….” என்றே யாப்பு விதி கூறு­கி­றது.
அதே போன்றே யாப்பின் 4(ஈ) அடிப்­படை உரிமை தொடர்­பாக பின்­வ­ரு­மாறு கூறுகிறது:

“அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டு ஏற்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் யாவும் நிர்வாக நிறுவனங்களால் பேணப்பட வேண்டும். மதித்து ஒழுக வேண்டும், வளர்க்கப்பட வேண்டும். மேலும் அந்த அடிப்படை உரிமைகள் இங்கு இதன் பின்னர் வரும் விதிமுறைகள் வலிந்துரைக்கும் விதத்திலும் அதன் அளவை மிகைத்தோ வரையறுத்தோ மேற்கொள்வதும் அல்லது வலிதற்றதாக்குவதும் கூடாது.”

அரசியலமைப்பின் 14(1) உறுப்புரையின் கீழ் எந்தவொரு நபருக்கும் பேச்சுச் சுதந்திரம் அல்லது கருத்து வெளியிடும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோன்றே அரசியலமைப்பின் 10 ஆவது உறுப்புரையின் கீழ் எந்தவொரு நபருக்கும் தாம் விரும்பும் மதத்தை பின்பற்றுவதற்குரிய சுதந்திரமும் நம்பிக்கை கொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் கூடிய சுதந்திரம் உள்ளது.

வழங்கப்பட்டுள்ள உளச் சுதந்திரத்தின் அடிப்படையில் விரும்பும் எந்தவொரு விடயத்தையும் சிந்திப்பதற்கும் எந்தவொரு மதத்தையும் ஒழுக்கப்பண்புள்ள எந்தொவரு சிந்தனையையும் பின்பற்றுவதற்குரிய உரிமையும் உள்ளது.
எவ்வாறானபோதிலும் மேற்கண்ட சகல உரிமைகளையும் அடுத்தவருக்கு பாதிப்பேற்படாதவாறே அனுபவிக்க வேண்டும். அடுத்தவரின் சுயகௌரவத்தைப் பாதிக்காதவாறும் அவர்களது உரிமைகள் பேணப்படும் வகையிலுமே நடந்துகொள்ள வேண்டும்.

தனிநபர் உரிமைகள் அளவு கடந்து பயன்படுத்துவதற்கெதிராக இலங்கையில் பல்வேறு சட்டமூலங்கள் மற்றும் சட்டத்திட்டங்கள் பலவும் உள்ளன.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.