சூறா தௌபா கூறும் ‘கொல்’ என்பதை முறையாக விளக்குவோம்

0 887

ஏ.ஜே.எம்.நிழாம்

2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6 ஆம் திகதி வெளி­யான ராவய பத்­தி­ரி­கையில் எஸ்.நந்­தலால் என்­பவர் குர்­ஆனில் பழைய, புதிய என இரு­வ­கைகள் உள்­ள­னவா எனக் கேட்­டி­ருந்தார். அண்­மையில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் அல்­குர்­ஆனின் சிங்­கள மொழி­பெ­யர்ப்பைக் கொடுத்த பிற­குதான் அது நந்­த­லாலின் கைக­ளுக்கும் பார்­வைக்கும் வந்­தி­ருக்­கி­றது.

குர்­ஆ­னி­லுள்ள கருத்­து­களை சிங்­க­ள­மொ­ழியில் வெளி­யிட்டால் சிங்­கள மக்­களின் இஸ்­லாத்தின் மீதான சந்­தே­கங்கள் நிவர்த்­தி­யாகும் எனும் நன்­னோக்­கி­லேயே ஜம்­இய்­யத்துல் உலமா இதைச்­செய்­தி­ருக்­கலாம். எனினும் இதில் சில விட­யங்கள் அவ­தா­னிக்­கப்­ப­ட­வில்லை.

* -நல்ல காரி­யத்­தையும் பிழை­யான நேரத்தில் செய்­யக்­கூ­டாது.

* அறவே இஸ்­லாத்தைத் தெரி­யா­தோ­ரிடம் நேர­டி­யான மொழி­பெ­யர்ப்பை வழங்­காமல் தெளி­வான முன்­வி­ளக்­கங்­களை இணைத்து வழங்­கி­யி­ருக்க வேண்டும்.

* தெளி­வான விளக்­கங்கள் இல்­லா­விட்டால் இஸ்­லாத்தைத் தவ­றாகப் பரப்­புரை செய்­வோ­ருக்கு அவை உறு­தி­யான அனு­கூ­ல­மா­கி­விடும்.

* இது­வரை அவர்கள் ஆங்­கிலம் மூலம்தான் சில கருத்­துக்­களைக் கண்­டு­பி­டித்து இஸ்­லாத்­துக்கு எதி­ராக இயங்­கிக்­கொண்­டி­ருந்­தார்கள்.

இப்­போது சிங்­கள மொழி­யி­லேயே நேரடி மொழி­பெ­யர்ப்பு கிடைத்­தி­ருப்­பதால் அவர்­களின் செயற்­பாடு மேலும் வியா­பிக்க அதிக வாய்ப்புக் கிடைத்­தி­ருக்­கி­றது. இது பற்றி நான் முன்பே ஒரு கட்­டு­ரையில் தெளி­வு­ப­டுத்­தி­யி­ருந்தேன்.

நந்­தலால் பின்­வ­ரு­மாறு குறிப்­பி­டு­கின்றார். மே மாதம் 12 ஆம் திகதி இம்­தியாஸ் பாக்கீர் மாக்­கா­ருடன் நிகழ்ந்த கலந்­து­ரை­யா­டலின் அடிப்­ப­டையில் அவர் இஸ்லாம் என்­பது சமா­தா­னமே எனக்­கூ­றி­யி­ருந்­ததால் நான் 19 ஆம் திகதி ராவ­ய­வுக்கு குர்­ஆனில் இருப்­பதும் அப்­ப­டியா? என்னும் ஒரு கட்­டு­ரையை எழு­தி­யி­ருந்தேன். இதி­லி­ருந்த குழப்பம் என்­ன­வென்றால் இம்­தியாஸ் பாக்கீர் மாக்கார் கூறி­யுள்­ள­படி இஸ்லாம் என்­பது சமா­தா­ன­மாயின் அத்­தௌபா என்னும் 9 ஆம் அத்­தி­யா­யத்தின் 5 ஆம் வச­னத்­திலும் அதே அத்­தி­யா­யத்தின் 29 ஆம் வச­னத்­திலும் ஆங்­கி­லத்தில் Slay (கொல்) என்­றி­ருக்­கையில் சிங்­கள மொழி­பெ­யர்ப் பில் அந்த அர்த்தம் இல்­லையே. அத­னால்தான் முஸ்லிம் பயங்­க­ர­வா­திகள் ‘கொல்’ என்­பதைத் தமது கோஷ­மாக எடுத்­துக்­கொண்­டி­ருக்­கிறார் என்­கிறார்.

சிங்­கள மொழி­பெ­யர்ப்பில் சில வார்த்­தைகள் இல்லை. அதா­வது, ஆங்­கி­லத்­துக்குப் பொருத்­த­மற்ற வார்த்­தைகள் சிங்­க­ளத்தில் உள்­வாங்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. ஆக ஆங்­கிலச் சொல்லே அர­புச்­சொல்­லுக்குச் சரி­யாக இருக்­கி­றது எனவும் குறிப்­பி­டு­கிறார். இதன்­படி கொல் என்னும் சொல்லை சிங்­க­ள­மொ­ழியில் இருட்­ட­டிப்பு செய்­தி­ருப்ப தாகவே அவர் கூறு­கிறார் என்­பது புரி­கி­றது.

தனது கட்­டு­ரைக்கு ஜூன்­மாதம் 2 ஆம் திகதி இம்­தியாஸ் பாக்கீர் மாக்கார் தக்க விளக்கம் தர­வில்லை. ஆங்­கிலச் சொல்­லோடு தமிழ்ச்சொல் ஒத்­துப்­போ­கையில் சிங்­க­ளச்சொல் எப்­படி வித்­தி­யா­சப்­பட்­டது எனவும் நந்­தலால் இம்­தியாஸ் பாக்கீர் மாக்­கா­ரிடம் வின­வி­யி­ருக்­கிறார். இனி அந்த இரண்டு வச­னங்­க­ளையும் அவ­தா­னிப்போம்.

ஆகவே, சிறப்­புள்ள மாதங்கள் கழிந்து விட்டால் இணை­வைத்­தி­ருப்­போரைக் காணும் இட­மெல்லாம் கொல்­லுங்கள், இன்னும் அவர்­களைப் பிடி­யுங்கள், அவர்­களை முற்­று­கையும் இடுங்கள்– ஒவ்­வொரு பதுங்­கு­மி­டத்­திலும் அவர்­களைக் குறி­வைத்து உட்­கா­ருங்கள். அவர்கள் தாம் செய்த பாவங்­க­ளுக்­காக வருந்தி அதி­லி­ருந்தும் விலகி (விசு­வா­சித்து) தொழுது சக்­காத்­தையும் வழங்­கினால் அவர்கள் வழியில் (அவர்­களை) விட்­டு­வி­டுங்கள். நிச்­ச­ய­மாக அல்லாஹ் மிக்க மன்­னிப்­பவன். மிகவும் கிரு­பை­யாளன். (அல்­குர்ஆன்–9=5)

விசு­வா­சி­களே! வேதம் கொடுக்­கப்­பட்­டோரில் அல்­லாஹ்­வையும் மறுமை நாளையும் விசு­வா­சிக்­கா­மலும் அல்­லாஹ்வும் அவ­னது தூதரும் விலக்­கி­ய­வற்றை விலக்­கா­மலும் இந்த உண்மை மார்க்­கத்தை ஏற்­கா­மலும் இருக்­கின்­ற­னரே அத்­த­கை­யோரை இழி­வுற்­றோ­ராக அவர்கள் (தமது) கையால் ஜிஸ்யா என்னும் வரியைக் கொடுக்கும் வரை நீங்கள் அவர்­க­ளோடு யுத்தம் புரி­யுங்கள். (அல்­குர்ஆன் 9–-29)

ஏற்­க­னவே ஜமா அதே இஸ்­லா­மியும் கூட குர்­ஆனை சிங்­கள மொழியில் வெளி­யிட்­டி­ருக்­கி­றது. ஜம்­இய்­யத்துல் உல­மாவின் சிங்­கள குர்ஆன் மொழி­பெ­யர்ப்பு அண்­மை­யில்தான் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கொடுக்­கப்­பட்­டி­ருந்­தது.

எனினும் இது முத­லா­வது சிங்­களக் குர்ஆன் மொழி­பெ­யர்ப்பு அல்ல. 1995 ஆம் ஆண்­டி­லேயே பி.ஜெய்னு­லாப்தீன் தமிழில் மொழி­பெ­யர்த்த சிங்­கள மொழி­யாக்கம் மகிந்த ராஜபக் ஷ, கோதா­பய ராஜபக் ஷ, உதய கம்­மன்­பில, விமல் வீர­வங்ச ஆகி­யோ­ரிடம் வழங்­கப்­பட்­டி­ருந்­த­தாக அசாத் ஸாலி பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழுவில் சாட்சி வழங்­கி­ய­போது குறிப்­பிட்­டி­ருந்தார். அதில் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் கொல்­லுங்கள், ஜிஸ்­யா­வரி அற­வி­டுங்கள் எனும் சொற்­க­ளுக்குத் தெளி­வான விளக்­கங்­களை சிங்­கள மொழியில் வழங்­கா­ம­லேயே அதைச்­செய்­தி­ருக்­கி­றார்கள்.

ஆக, எவர்­க­ளிடம் இவ்­வாறு விளக்­கங்­க­ளின்றி சிங்­கள மொழியில் வழங்­கக்­கூ­டாதோ, அவர்­க­ளி­டமே கிடைத்­தி­ருக்­கி­றது. காரணம், முஸ்லிம் அல்­லா­த­வர்­க­ளிடம் தகுந்த விளக்­கத்­து­ட­னேயே குர்ஆன் வச­னங்கள் முன்­வைக்­கப்­ப­ட­வேண்டும். தற்­போதும் கூட அதைப்­பே­ணா­ம­லேயே ஜம்­இய்­யத்துல் உல­மாவின் செயற்­பாடு நிகழ்ந்­தி­ருக்­கி­றது. நாட்டின் பேரி­ன­வாத சூழலால் கொல்­லுங்கள் என்னும் வார்த்­தையைத் தவிர்த்து அதற்­கென மென்­மை­யான வார்த்­தையை சிங்­கள மொழியில் பயன்­ப­டுத்­தி­யி­ருப்­பது தெரி­கி­றது.

சமா­ளிக்கும் நோக்­கத்தில் இவ்­விதம் நிகழ்ந்­தி­ருக்­கலாம் என்­பதும் புரி­கி­றது. அல்­லாஹ்வால் இறக்­கப்­பட்ட குர்­ஆனில் எந்த வார்த்­தை­யையும் மாற்றும் அதி­காரம் யாருக்கும் இல்லை. உல­க­மொ­ழி­களில் அப்­ப­டியே இருக்க சிங்­கள மொழியில் மட்டும் மாற்­றப்­பட்­டது. இணக்­கப்­பாட்டில் முரண்­பாடு ஏற்­பட்­டு­வி­டக்­கூ­டாது என்னும் நோக்கில் என்­பதும் தெளி­வா­கி­றது. இங்கு இரண்டு விட­யங்­களில் தவ­றுகள் நிகழ்ந்­தி­ருக்­கின்­றன என்றே நான் கூறுவேன்.

* ‘‘குர்ஆன் பய­பக்­தி­வான்­க­ளுக்கே வழி­காட்டும்”  என அதன் ஆரம்­பத்­தி­லேயே அது கூறி­யி­ருப்­பதால் அதன் நேரடி மொழி­பெ­யர்ப்பை முஸ்­லி­மல்­லா­தோ­ரிடம் கொடுத்து விடாது, தெளி­வான விளக்­கங்கள் மூலம் உள்­ளங்­களைப் பக்­கு­வப்­ப­டுத்­திய பிறகே வழங்க வேண்டும்.

* குர்ஆன் இறக்­கப்­பட்ட கால­கட்­டத்­தையும் அதற்­கு­ரிய கார­ணங்­க­ளையும் அதன் சொற்­க­ளுக்­கு­ரிய யதார்த்­த­மான தெளி­வு­க­ளையும் முன்­வைக்­க­வேண்டும். காரணம் அறி­வுக்குப் பொருந்­து­கி­றதோ இல்­லையோ உள்­ளத்தில் ஆழ­மா­கப்­ப­திந்­தி­ருக்கும் ஒரு விட­யத்தை எடுத்த எடுப்பில் மாற்றி விடு­வ­தென்­பது எளி­தல்ல.

* தலை­முறை தலை­மு­றை­யாக இருந்­து­வரும் நம்­பிக்­கைகள் பிறப்பு ரீதியில் அமை­வதால் பாரம்­ப­ரிய நம்­பிக்­கை­களே ஆளுமை செலுத்தும்.

* எவனும் தனக்குத் தெரி­யாத விட­யத்­தையும் தெளிவு கிடைக்­காத விட­யத்­தையும் எதிர்க்­கவே செய்வான். இது அவ­னது குற்­ற­மல்ல இயல்பு. ஏற்­க­னவே தவ­றான விப­ரங்­க­ளோடு விளங்­கிக்­கொண்­டவன் அதி­லி­ருந்து உட­ன­டி­யாக மாற­மாட்டான்.

* தவ­றான நோக்­கத்தைக் கொண்டோர் குர்ஆன் மொழி­பெ­யர்ப்பு மூலம் அதைத் தனது வழி­கேட்­டுக்குப் பயன்­ப­டுத்த முயற்சி செய்­யலாம். நபி (ஸல்), பிறப்­ப­தற்கு முன்பு கஃபா­வுக்குள் 360 சிலைகள் இருந்­தன. ஆகப் பெரி­யது ஹுபல்– அதற்கு அடுத்த அந்­தஸ்தில் லாத்­ம­னாத் உஸ்ஸா என மூன்று சிலைகள் இருந்­தன. அங்கு வாழ்ந்த குறை­ஷிகள் தின­சரி ஒரு சிலை வீதம் வணங்கி வந்­தார்கள். எனினும் அல்­லாஹ்­வையும் கூட இறை­வ­னாக அவர்கள் ஏற்­றுத்தான் இருந்­தார்கள். நபி(ஸல்) அவர்­களின் தந்தை அப்­துல்லாஹ் என்­ப­தி­லி­ருந்து இது தெளி­வா­கின்­றது.

எனினும், அவர்கள் அல்­லாஹ்வை மட்டும் இறை­வ­னாகக் கொள்­ளாமல் சிலை­க­ளையும் அவ­னுக்கு இணைக் கட­வுள்­க­ளாக ஆக்­கிக்­கொண்­டார்கள். முதலில் ஹுப்லே அக்பர் ஹுபலே (மிகப்­பெ­ரி­யது) எனக் குறை­ஷியர் சொல்­லி­யதை மாற்றி அல்­லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரி­யவன்) என முதற் சுற்றில் ஆரம்­பித்த நபி(ஸல்) பிறகு லாஇ­லாஹ இல்­லல்லாஹ் அல்­லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்னும் வார்த்­தையை முன்­னி­லைப்­ப­டுத்தி னார்கள். பிறகு அல்­லாஹு அஹத் (அல்லாஹ் ஒருவன்) என்னும் சொல்­லையும் லாஷ­ரி­க­லஹு (அவ­னுக்கு இணை­யில்லை) என்னும் சொல்­லையும் ஊன்­றி­னார்கள்.

இதன் மூலம் 360 சிலை­க­ளுக்கும் கடவுள் அந்­தஸ்து வழங்­கப்­ப­டு­வதைத் தடுத்­தார்கள். அப்­போது குறை­ஷிகள் அல்­லாஹ்­வையும் இறை­வ­னாக ஏற்­றுக்­கொண்­டி­ருந்­தார்கள் என்­பதை நாம் மறந்து விடக்­கூ­டாது. எனினும் அல்­லாஹ்­வோடு சிலை­க­ளையும் இணைத்தே வழி­பட்டு வந்­தார்கள். ஷிர்க் (இணை­வைப்பு) என்­ப­தற்­கான அர்த்தம் இது­வே­யாகும்.

இதை மாற்றி நபி(ஸல்) அல்லாஹ் ஒரு­வனே இறைவன். அவ­னுக்கு இணை­யாக சிலை­களை ஆக்­கா­தீர்கள் எனக் கூறி­னார்கள். அப்­போது குறை­ஷிகள் இறை கொள்கை விட­யத்தில் ஒரு சம­ர­சத்­தீர்­வுக்கு வரு­மாறு நபி(ஸல்) அவர்­களை அழைத்­தார்கள். அதா­வது, ஆறு மாதங்கள் நாமும் அல்­லாஹ்­வையே வணங்­கு­கிறோம். அதற்குப் பக­ர­மாக நீங்கள் ஆறு மாதங்கள் சிலை­களை வணங்­க­வேண்டும் என்­றார்கள். இதன் மூலமும் கூட குறை­ஷிகள் அல்­லாஹ்­வையும் இறை­வ­னாக ஏற்றுக் கொண்­டி­ருந்­தது தெளி­வா­கி­றது. இது பற்றி குர்ஆன் குறிப்­பி­டு­கையில் பின்­வ­ரு­மாறு தெரி­விக்­கி­றது.

இந்த சிலைகள் அல்­லாஹ்­விடம் எம்மை நெருக்­க­மாக்கி வைக்கும் என்­பதால் தான் இவற்­றையும் வணங்­கு­கிறோம். எமக்கு இது எமது மூதா­தையர் மூலம் பரம்­பரை பரம்­ப­ரை­யாக வந்த வழி­பாடு என்­பதால் மாற்­ற­மு­டி­யாது என்­றார்கள். இப்­படி அவர்கள் கூறி­ய­போதும் அல்­லாஹ்வை விடவும் சிலை­களின் அந்­தஸ்தைக் கூட்­டியே வந்­தி­ருக்­கி­றார்கள்.

கடற் பய­ணத்­தின்­போது கப்­பலில் தத்­த­ளிக்­கையில் உத­விக்கு அல்­லாஹ்வை அழைத்து தப்பி வந்த பின் நன்றி மறந்­த­வர்­க­ளாகி சிலை­களை வணங்­கு­வ­தா­கவும் அல்லாஹ் கூறு­கிறான். அதுபோல் பெண் குழந்தை பிறந்தால் அல்­லாஹ்­வுக்கு எனவும் ஆண் குழந்தை பிறந்தால் சிலைக் கட­வு­ளுக்கு என அவர்கள் குறிப்­பி­டு­வ­தா­கவும் அல்லாஹ் கூறு­கிறான்.

ஆக அல்­லாஹ்­வுக்கு இணை­யாக சிலை­க­ளையும் வைப்­ப­தையே ஷிர்க் என்னும் இணை­வைப்பு என அல்லாஹ் குறிப்­பி­டு­கிறான். குர்ஆன் கட்­ட­ளை­யாக எதையும் விடுக்­க­வில்லை கோரிக்­கை­யாக வேண்­டு­கி­றது. லா இக்­ராஹ் பித்தீன்(மார்க்­கத்தில் பல­வந்தம் இல்லை) என்னும் வசனம் இதற்கு சிறந்த ஆதா­ர­மாகும். அதன்­படி குப்ர் என்னும் சொல்­லுக்கு நிரா­க­ரிப்பு என்னும் அர்த்­தத்தை யன்றி ஏற்­றுக்­கொள்­ளாமை என்றே அர்த்­தங்­கொள்ள வேண்டும். இத்­த­கை­யோரை மார்­ம­டியூக் பிக்தால் பின்­வ­ரு­மாறு வகைப்­ப­டுத்­து­கிறார்.

* இஸ்­லாத்தின் மீது நல்­லெண்ணம் கொண்டு முஸ்­லிம்­க­ளோடு நல்­லு­ற­வாக வாழுவோர்.

* இத்­த­கைய தன்­மைகள் இல்­லா­தி­ருப்­பினும் முஸ்­லிம்­க­ளோடு பகை­யின்றி வாழுவோர்.

* முஸ்­லிம்­களோடு பகை இருப்­பினும் இடை­யூறு செய்­யாதோர்.

* மார்க்­கத்தில் வித்­தி­யாசம் இருப்­பினும் நட்­போடு நெருங்கி வாழ்வோர். இனி சூரதுத் தெள­பாவின் 5 ஆம் 29 ஆம் வச­னத்தைப் பாருங்கள். இவற்றில் முதல் வசனம் இணை­வைப்­போ­ரையும், இரண்டாம் வசனம் வேதக்­கா­ரர்­க­ளையும் விளிக்­கி­றது. இணை­வைப்பு ஷிர்க் என்றே அர­பியில் கூறப்­படும்.

அல்­லாஹ்­வோடு இன்­னொன்­றையும் சம இறை­வ­னாகக் கொள்­வதே இணை­வைப்­பாகும். அல்­லாஹ்வை நிரா­க­ரித்து வேறொன்றை வணங்­கு­பவன் இணை­வைப்­ப­வ­னல்ல. காரணம் அல்­லாஹ்வை வணங்­காமல் அவன் முற்று முழு­தாக அல்லாஹ் அல்­லா­த­தையே வணங்­கு­கிறான். எனவே இவன் இணை­வைக்­க­வில்லை. நேர­டி­யாக சிலை­யையே வணங்­கு­கிறான்.

அந்த வகையில் இவ­னது சுய உரி­மையில் இஸ்லாம் தலை­யி­டாது. வணங்­கு­வதில் உங்­க­ளுக்கு உங்கள் மார்க்கம், எனக்கு எனது மார்க்கம் எனும் வச­னமும் மார்க்­கத்தில் பல­வந்­த­மில்லை எனும் வச­னமும், இதையே குறிப்­பி­டு­கின்­றன. அல்­லாஹ்­வுக்குச் சம­மாக சிலையை வணங்­குவோர் விட­யத்­தி­லும்­கூட அவர்­களில் எல்­லோ­ரையும் 9–5 ஆம் வசனம் குறிப்­பி­ட­வில்லை. அவர்­களில் இஸ்­லாத்தை அழித்­தொ­ழிக்க ஆயு­த­பா­ணி­களாய் களத்தில் மோது­வோ­ரையே குறிக்­கி­றது.

எனவே யுத்த களத்தில் அழிக்க வரு­வோரைக் கொல்­லுங்கள் எனும் சொல் யதார்த்­த­மான கருத்­தே­யாகும். இது யுத்த சூழ­லுக்கு இசைந்த நிலைப்­பா­டாகும். ஜக்­துலூ (கொல்­லுங்கள்) என்னும் சொல் கூறப்­பட்ட சூழலே இங்கு அவ­தா­னிக்கத் தக்­க­தாகும். யுத்த மற்ற சூழலில் இது கூறப்­பட்­டது எனக்­கூ­றப்­ப­டு­வது சுத்த அபத்­த­மாகும்.

ஆயு­த­மு­னையில் அழித்­தொ­ழிக்க வரு­வோரை அர­வ­ணைத்து முத்­த­மி­டு­மாறு எந்த தர்மம் கூறு­கி­றது. சாதா­ரண கால­கட்­டத்தில் எமர்­ஜன்­சிலோ மாஷல்லோ கோட் மாஷல் என்­றெல்லாம் உண்டா இல்­லையே. எனவே, யுத்த களத்தில் கொல்­ல­வ­ரு­வோரைக் கொலை செய்­யு­மாறு கூறப்­பட்­டி­ருப்­பதை ஆதா­ர­மாக எடுத்துக் கொண்டு முஸ்­லிம்கள் முஸ்­லி­மல்­லா­தோரைக் குர்ஆன் கொல்லச் சொல்­கி­றது எனக்­கூ­ற­லாமா?

யூத, கிறிஸ்­த­வ­ரா­யினும் கூட அல்­லாஹ்­வையும் மறுமை  நாளையும் விசு­வா­சித்து அல்­லாஹ்வும் அவ­னது தூதரும் விலக்­கி­ய­வற்றை விலக்கி இந்த உண்மை மார்க்­கத்தை ஏற்­றி­ருப்போர் மேன்மை பெற்­றோ­ராவர். இதற்கு மாறாக அல்­லாஹ்­வையும் மறுமை நாளையும் விசு­வா­சிக்­காது (அல்­லாஹ்வும் அவ­னது தூதரும் விலக்­கி­ய­வற்றை விலக்­காது இந்த மார்க்­கத்தை ஏற்­காதும் இருப்­போரே இழி­வா­னோ­ராவர்– காரணம் இத்­த­கையோர் தமக்கு வேதங்கள் கிடைத்­தும்­கூட அல்­லாஹ்­வையும் மறுமை நாளையும் விசு­வா­சிக்­க­வில்லை. அல்­லாஹ்வும் அவ­னது தூதரும் விலக்­கி­ய­வற்றை விலக்­க­வில்லை. இந்த உண்மை மார்க்­கத்­தையும் ஏற்­க­வில்லை. என்­றாலும் கூடப்­ப­ர­வா­யில்லை. நிர்­வாகக் கட்­டுக்குள் இவர்­களும் இருக்­கட்டும் ஜிஸ்யா வரி­யைப்­பெற்று இணைத்துக் கொள்­ளுங்கள். அதை அவர்கள் தர மறுத்து யுத்தம் புரிந்தால் நீங்களும் புரியுங்கள் என்பது யதார்த்தமான கருத்தேயாகும். தற்காப்பு முனையிலேனும் யுத்தத்தில் கொலை வியப்பானதல்ல.

இக்கருத்தையே அடிப்படை ஆதாரமாக வைத்துக்கொண்டு முஸ்லிமல்லாதாரைக் கொல்ல குர்ஆன் முஸ்லிம்களுக்கு ஆணையிடுகிறது என வாதிடுவது படுமுட்டாள் தனம் அல்லவா? சாதாரண சூழலையும் யுத்த சூழலையும் பிரித்துப்பார்க்க வேண்டும். அமைதியாக வாழுவோரிடமும்கூட யுத்தம் வலிந்து திணிக்கப்படுமாயின் தற்காப்பு யுத்தத்தையேனும்  புரியாதிருக்க வழியுண்டா? இதற்கான வழிமுறையாகவே பின்வரும் கருத்துக்கள் கூறப்பட்டிருக்கின்றன.

*. ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக்  குறிவைத்து உட்காருங்கள்.

*. அவர்களை முற்றுகை இடுங்கள்

*. அவர்களைப் பிடியுங்கள்

* காணும் இடமெல்லாம் கொன்று விடுங்கள்.

மேற்படி கருத்துக்களிலிருந்து 9 ஆம் அத்தியாயத்தின் 5 ஆம் வசனம் யுத்த காலத்தில் இறங்கியிருப்பது நன்றாகவே தெளிவாகிறது. 29 ஆம் வசனத்தில் வேதம் வழங்கப்பட்டோர் ஜிஸ்யா வழங்கிவிட்டால் விட்டுவிடுங்கள் எனும் கருத்திலிருந்தும் இவை யுத்த காலத்தில் நிகழ்ந்திருப்பவை என்பது மேலும் உறுதியாகிறது.

எனவே 9 ஆம் அத்தியாயத்தின் 5 ஆம் 29 ஆம் வசனங்களை எடுத்துக்காட்டி இஸ்லாம் சமாதானத்தை வலியுறுத்தும் மார்க்கமல்ல என நிறுவ முற்படுவது பிழையான எடுகோளாகும். அந்த வகையில் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் குறிப்பிட்டது முற்றிலும் சரியானதே என நந்தலாலிடம் கூறிக்கொள்கிறேன்.

Leave A Reply

Your email address will not be published.