ஈராக்கில் கடும் மழை: இரண்டு நாட்களில் 21 பேர் உயிரிழப்பு

0 856

 

 

கடந்த இரண்டு நாட்­க­ளாக ஈராக்கில் பெய்­து­வரும் அடை­மழை கார­ண­மாக குறைந்­தது 21 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும் ஆயி­ரக்­க­ணக்­கானோர் இடம்­பெ­யர்ந்­துள்­ள­தா­கவும் சுகா­தார அதி­கா­ரி­களும் ஐக்­கிய நாடுகள் சபையின் அதி­கா­ரி­களும் தெரி­வித்­துள்­ளனர்.

உயி­ரி­ழந்­த­வர்­களுள் பெண்­களும் சிறு­வர்­களும் உள்­ள­டங்­கு­வ­தாக கடந்த ஞாயி­றன்று ஈராக் சுகா­தார அமைச்சின் பேச்­சாளர் சயிப் அல்-பத்ர் தெரி­வித்தார்.

வெள்­ளத்தில் மூழ்­கி­யதில் சிலர் உயி­ரி­ழந்­த­தா­கவும், ஏனையோர் கார் விபத்­துக்கள், மின்­சாரத் தாக்கம் மற்றும் இடிந்து வீழ்ந்த வீடு­க­ளுக்குள் சிக்­குண்­டதன் கார­ண­மாக உயி­ரிழந்­துள்­ளனர். குறைந்­தது 180 பேர் இதில் காய­ம­டைந்­துள்­ளனர் எனவும் அவர் தெரி­வித்தார்.

ஈராக்கின் வடக்குப் பகு­தியில் சரா­சரி மழை வீழ்ச்­சி­யை­விட அதி­க­மான மழை வீழ்ச்சி பதி­வா­கி­யுள்­ள­தா­கவும், அடை­மழை கார­ண­மாக ஆயி­ரக்­க­ணக்­கானோர் தமது வீடு­களை விட்டு வெளி­யே­றி­யுள்­ள­தா­கவும் ஈராக்­கி­லுள்ள ஐக்­கிய நாடுகள் அலு­வ­லகம் தெரி­வித்­துள்­ளது.

உள்­ளக ரீதி­யாக இடம்­பெ­யர்ந்து முகாம்­களில் வசிக்கும் குடும்­பங்கள் உள்­ள­டங்­க­லாக வடக்கு மாகா­ணத்­தி­லுள்ள 10,000 மக்­களும், நின­வே­ஹி­லுள்ள 15,000 மக்­களும் அவ­சிய உத­வி­களை எதிர்­பார்த்­தி­ருக்­கின்­றனர் என ஐக்­கிய நாடுகள் சபை தெரி­வித்­துள்­ளது.

இழப்­புக்கள் தொடர்பில் மதிப்­பீ­டுகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. வெள்­ள­மேற்­பட்­டுள்ள பகு­தி­களில் பாதிப்­புக்­குள்­ளான வீடுகள், கால்­ந­டைகள் மற்றும் வீட்டுப் பாவனைப் பொருள்கள் தொடர்­பான மதிப்­பீ­டுகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன என ஐக்­கிய நாடுகள் சபையின் அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தலை­நகர் பக்­தா­திற்கு வடக்கே சுமார் 250 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்­துள்ள சரா­ஹத்­தீனின் அல்-­ஷ­ராகத் மாவட்­டத்தில் ஆயி­ரக்­க­ணக்­கான வீடுகள் முற்­றாக நீரில் மூழ்­கி­யுள்­ளன.

மௌசூலில் நக­ரத்தைப் பிரிக்கும் தைக்­கிரிஸ் நதிக்கு மேலாக இருக்கும் இரு மிதவைப் பாலங்கள் முற்­றாக நீரில் மூழ்­கி­யுள்­ளன. மௌசூலின் கிழக்கு மற்றும் மேற்­கிற்கு இடை­யே­யான ஒரேயொரு பாதை­யாக இது காணப்­ப­டு­கின்­றது. இப்­பா­லங்கள் நகரை மீட்­ப­தற்­கான ஒரு வரு­ட­கால யுத்­தத்­தின்­போது ஐ.எஸ். ஆயுத அமைப்­பி­னரால் இப்­பா­லங்கள் மீது தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

நிவா­ரண நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தற்­காக பாது­காப்புப் படை­யினர் மற்றும் உள்ளூர் அதி­கா­ரி­களை இணைத்த அவ­ச­ரக்­குழு ஒன்­றினை அமைப்­பது தொடர்பில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை புதிய பிர­தமர் டெல் அப்தெல் மஹ்தி அறி­வித்தார்.

மின்­சார, எண்ணெய் மற்றும் வர்த்­தக அமைச்­சுக்கள்  உத­வு­வ­தற்கு தமது விருப்­பத்தைத் தெரி­வித்­துள்­ளன.

உலகின் மிக வெப்­ப­மான நாடுகளுள் ஒன்றான ஈராக்கில் உட்கட்டமைப்புக்கள் சீரில்லாததன் காரணமாக கடுமையான மழையினால் உயிரிழப்புக்கள் அதிகளவில் ஏற்பட்டு வருகின்றன.

கடந்த 2015 ஆம் ஆண்டு பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மின்சாரத் தாக்கத்தினால் 58 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.