சுற்றுநிருபத்தில் உடன் திருத்தம் வேண்டும்

0 780

ஏப்ரல் 21 ஆம் திகதி முஸ்லிம் அடிப்­ப­டை­வா­திகள் சில­ரினால் மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தல்கள் முஸ்­லிம்­க­ளுக்குப் பல சவால்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. முஸ்லிம் பெண்­களின் கலா­சார உடையை அடிப்­ப­டை­வா­தி­களின் சின்­ன­மாகக் கரு­திய பேரி­ன­வா­திகள் பலத்த எதிர்ப்­பு­களை வெளி­யிட்­டனர்.

புர்கா மற்றும் நிகா­புக்கு மாத்­தி­ர­மல்ல அபா­யா­வுக்கும் எதிர்ப்­புகள் வெளி­யி­டப்­பட்­டன. நாட்டில் அபாயா தடை செய்­யப்­ப­டாத விடத்தும் அரச அலு­வ­ல­கங்கள், வைத்­திய சாலைகள், பாட­சா­லைகள் மற்றும் போக்­கு­வ­ரத்து சேவை­களில் அபா­யா­வுக்குத் தடை விதிக்­கப்­பட்­டது. அபாயா அணிந்து சென்ற பெண்கள் அபா­யாவைக் களை­யு­மாறு உத்­த­ர­வி­டப்­பட்­டார்கள்.

முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி அணியும் ஆடைக்கு எதிர்ப்பு வலுத்­த­தை­ய­டுத்து புர்­காவைத் தடை­செய்து ஜனா­தி­பதி 2019.4.29 ஆம் திகதி விசேட வர்த்­த­மானி அறி­வித்தல் ஒன்­றினை வெளி­யிட்டார். 2121/1 ஆம் இலக்க குறிப்­பிட்ட அர­சாங்க வர்த்­த­மானி முகத்தை மூடி ஆடை அணி­வ­தற்கு தடை விதித்­தது. முழு முகம் என்­ப­தற்கு ஒரு­வரின் இரு காது­களும் மறைக்­கப்­பட்­டி­ருக்கக் கூடாது என்று வரை விலக்­கணம் கொடுக்­கப்­பட்­டி­ருந்­தது.

இதனால் பெண்கள் அபாயா அணி­யவும் முடி­யா­த­வாறு சர்ச்சை உரு­வா­கி­யது. பின்பு உலமா சபை, முஸ்லிம் அர­சியல் தலை­மைகள், முஸ்லிம் சிவில் சமூக பிர­தி­நி­தி­களின் கோரிக்­கைக்கு இணங்க ஜனா­தி­பதி தான் வெளி­யிட்ட வர்த்­த­மா­னியில் திருத்­தங்­களைச் செய்து 2019.5.13 ஆம் திகதி 2123/4 எனும் இலக்கம் கொண்ட விசேட வர்த்­த­மா­னி­யொன்­றினை வெளி­யிட்டார். இந்த வர்த்­த­மானி அறி­வித்­தலின் படி பெண்கள் இரு காது­க­ளையும் மறைத்து ஆடை அணி­யலாம். இந்த வர்த்­த­மானி அறி­வித்­தலே தற்­போது அமுலில் உள்­ளது.

இதே­வேளை, பாட­சா­லைகள் மற்றும் அரச அலு­வ­ல­கங்­களில் கட­மை­யாற்றும் முஸ்லிம் பெண்­களின் ஆடை தொடர்பில் எதிர்ப்­புகள் வெளி­யி­டப்­பட்­டன. முஸ்லிம் பெண் உத்­தி­யோ­கத்­தர்கள், ஆசி­ரி­யைகள் சாரி அணிந்து வரு­மாறு நிர்ப்­பந்­திக்கப் பட்­டனர். இதற்கு எதி­ராக முஸ்லிம் பெண் உத்­தி­யோ­கத்­தர்கள் மனித உரிமை ஆணைக்­கு­ழு­விலும் முறை­யிட்­டனர். அவர்கள் தங்கள் உரி­மை­க­ளுக்­காகப் போரா­டினர்.

இவ்­வா­றான சூழ்­நி­லை­யி­லேயே கடந்த மாதம் 29 ஆம் திகதி பொது நிர்­வாகம் மற்றும் அனர்த்த முகா­மைத்­துவ அமைச்சு அரச ஊழி­யர்­களின் ஆடை தொடர்­பாக சுற்று நிருபம் ஒன்­றினை வெளி­யிட்­டுள்­ளது.

இந்தச் சுற்று நிருபம் இன்று திங்­கட்­கி­ழ­மை­யி­லி­ருந்து அமு­லுக்கு வரும் எனவும் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. என்­றாலும் இந்தச் சுற்று நிரு­பத்தை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க எதிர்ப்புத் தெரி­வித்­த­தை­ய­டுத்து சுற்­று­நி­ருபம் இடை­நி­றுத்தி வைக்­கப்­பட்டு விட்­டது.

இடை­நி­றுத்தி வைக்­கப்­பட்­டுள்ள சுற்­று­நி­ரு­பத்­தின்­படி அர­சாங்க உத்­தி­யோ­கத்­தர்கள் கட­மைக்­காக அலு­வ­ல­கத்­துக்குள் வரும்­போது பெண் உத்­தி­யோத்­தர்கள் சேலை அல்­லது ஒஸரி (கண்­டியச் சேலை) அணிந்­தி­ருத்தல் வேண்டும். ஆண் உத்­தி­யோ­கத்­தர்கள் காற்­சட்டை மற்றும் மேற்­சட்டை அல்­லது தேசிய உடை அணிந்­தி­ருக்க வேண்டும்.

குறித்த சுற்­று­நி­ருபம் தொடர்பில் இன்று நடை­பெ­ற­வுள்ள பாரா­ளு­மன்ற குழுக் கூட்­டத்தில் கலந்­து­ரை­யா­டப்­பட்டு தீர்­மானம் எட்­டப்­படும் என பொது நிர்­வாகம் மற்றும் அனர்த்த முகா­மைத்­துவ அமைச்சர் ரஞ்சித் மத்­தும பண்­டார தெரி­வித்­துள்ளார்.

குறித்த சுற்று நிரு­பத்தில் முஸ்லிம் பெண் உத்­தி­யோ­கத்­தர்கள் அபாயா அணிந்து கட­மைக்குச் செல்லும் வகையில் திருத்­தங்­களைச் செய்­யும்­படி முஸ்லிம் அமைச்­சர்­களும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் முஸ்லிம் சிவில் சமூக அமைப்­பு­களும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் கோரிக்கை விடுத்­துள்­ளன.

சுற்று நிரு­பத்தில் திருத்­தங்கள் செய்­யப்­ப­டா­த­வி­டத்து முஸ்லிம் பெண் உத்­தி­யோ­கத்­தர்கள் பல்­வேறு அசௌ­க­ரி­யங்­க­ளுக்­குள்­ளா­வார்கள். எனவே முஸ்லிம்  அர­சியல் தலை­மைகள் இது விவ­கா­ரத்தில் ஒன்­றி­ணைந்து விரைந்து செயற்­பட வேண்டும். பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க முஸ்லிம் பெண் உத்­தி­யோ­கத்­தர்கள் அபாயா அணிந்து கட­மைக்குச் செல்லும் வகையில் சுற்று நிரு­பத்தை வரைந்­தி­ருந்­த­போதும் பொது நிர்­வாக அமைச்சின் செய­லாளர் ஜே.ஜே. ரட்­ண­சிரி அதற்கு மாற்­ற­மாக சுற்று நிரு­பத்தைத் தயா­ரித்து அதில் கையொப்­ப­மிட்­டுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

குறிப்­பிட்ட சுற்று நிரு­பத்­துக்கு பிர­தமர் எதிர்ப்பு தெரி­வித்தும் கடந்த 31 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை பொது நிர்­வாக அமைச்சின் செய­லா­ள­ரினால் கையொப்­ப­மிடப் பட்­டுள்­ளது. அவர் 29 ஆம் திக­தி­யிட்டே கையொப்பமிட்டதாக அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அரச உயரதிகாரிகள் இவ்வாறு ஒரு சமூகத்தின் கலாசார உடைக்குத் தடையேற்படும் விதத்தில் குறித்த சமூகத்துடன் கலந்துரையாடாது சுற்று நிருபங்களை வெளியிடுவது அனுமதிக்கப்பட முடியாததாகும். சமூகத்தின் தலைவர்கள் என்று கூறிக் கொள்ளும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்தித்து குறிப்பிட்ட சுற்று நிருபத்தில் திருத்தங்களை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.