இறையன்பை இலக்காகக் கொண்ட இளமைப்பருவம்

0 1,218

மனித வாழ்வின் மூன்று பிர­தான கட்­டங்­களில் இளமைப் பருவம் என்­பது அல்­லாஹ்வின் மிகப்­பெரும் ஓர் அரு­ளாகும், இப்­ப­ரு­வத்தின் சிறப்­பையும் பெறு­ம­தி­யையும் அறிந்து கொள்ள, முதலில் நாம் இறைச்­செய்­தி­களை அவ­தா­னிக்க வேண்­டி­யி­ருக்­கி­றதுஇலக்காகக் .

அல்லாஹ் தனது திரு­ம­றையில் கூறு­கிறான் ; அல்­லாஹ்தான் உங்­களைப் பல­வீ­னத்­தி­லி­ருந்து படைத்தான். பின்பு, அவனே பல­வீ­னத்தின் பின்னர் பலத்தை ஏற்­ப­டுத்­தினான். பின்பு, பலத்தின் பின்னர் பல­வீ­னத்­தையும் (முது­மையின்) நரை­யையும் அவன் ஏற்­ப­டுத்­தினான். அவன் நாடு­வதைப் படைப்பான். அவன் யாவற்­றையும் அறிந்­தவன், பேராற்­ற­லு­டை­யவன்.’ (30:54)

இரண்டு பல­வீன நிலை­க­ளுக்­கி­டையே உள்ள பல­மான பரு­வ­மாக அல் குர்ஆன் இப்­ப­ரு­வத்தை அடை­யா­ளப்­ப­டுத்­து­கி­றது, உடல், உள ரீதி­யாக வலிமை நிறைந்து காணப்­படும் இப்­ப­ரு­வத்தை இறை­வனின் அன்பைப் பெறு­வ­தனை மாத்­திரம் இலக்­காகக் கொண்டு இயங்­கு­வ­தனால் கிடைக்கும் சிறப்பும் அருளும் மிக மகத்­தா­னது.  இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறி­விக்­கின்­றார்கள்:

அல்­லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்­க­ளிடம் அறி­வுரை கேட்டு வந்த ஒரு­வ­ருக்கு அல்­லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறி­வுரை பகர்ந்­த­வண்ணம் கூறி­னார்கள்: “நீர் ஐந்து விட­யங்­களை ஐந்து விட­யங்­க­ளுக்கு முன் அரிய வாய்ப்பாய்க் கரு­து­வீ­ராக!

  1. நீர் முது­மை­ய­டை­வ­தற்கு முன்னால் உம் இள­மை­யையும், 2. நீர் நோயு­று­வ­தற்கு முன்னால் உம் ஆரோக்­கி­யத்­தையும், 3. நீர் ஏழ்­மை­ய­டை­வ­தற்கு முன்னால் உம் செல்­வ­நி­லை­யையும், 4. நீர் பணி­களில் ஈடு­ப­டு­வ­தற்கு முன்னால் உமக்கு கிடைக்கும் ஓய்­வையும், 5. நீர் மர­ண­ம­டை­வ­தற்கு முன்னால் உமது வாழ்­நா­ளையும் நீர் அரிய வாய்ப்பாய்க் கருதி பயன்­ப­டுத்திக் கொள்­வீ­ராக! நூல் – ஹாகிம் – 7846 ஸஹீஹுல் ஜாமிஃ – 1077

மறுமை நாளில் ஓர் அடியான் ஐந்து வினாக்­க­ளுக்கு விடை­ய­ளிக்கும் வரை அவ­னது கால்கள் இரண்டும் நகர முடி­யாது. அவை:

  1. தனது (உலக) வாழ்வை எவ்­வாறு கழித்தான்?
  2. தனது வாலிபப் பரு­வத்தை எவ்­வ­ழி­களில் ஈடு­ப­டுத்­தினான்?
  3. செல்­வத்தை எவ்­வாறு சம்­பா­தித்தான் ?

4- அதை எவ்­வாறு செல­வ­ழித்தான் ?

5- பெற்ற அறிவின் மூலம் என்ன செய்தான் ? என நபி (ஸல்) அவர்கள் கூறி­னார்கள்.

அறி­விப்­பவர் : அப்­துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) நூல்  : திர்­மிதி – 2416

ஸஹீஹுல் ஜாமிஃ – 7299

மேலுள்ள இரண்டு நபி­மொ­ழி­களும் இளமைப் பருவம் என்­பது எம்மை விட்டு நழுவிப் போய் விடு­வ­தற்கு முன் சிறப்­பாக பயன்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டிய காலம் வரை­ய­றுக்­கப்­பட்ட ஓர் அருள் என்றும் அது குறித்து நிச்­ச­ய­மாக ஒவ்­வொ­ரு­வரும் மறு­மையில் விசா­ரிக்­கப்­ப­டு­வார்கள் என்­ப­த­னையும் எமக்கு விளக்­கு­கின்­றன.

நபி (ஸல்) அவர்கள் கூறி­னார்கள்: அல்­லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்­லாத அந்­நாளில் அல்லாஹ் ஏழு நபர்­க­ளுக்கு நிழல் கொடுப்பான்.

  1. நீத­மாக நடந்து கொண்ட ஆட்­சி­யாளன்.
  2. அல்­லாஹ்வின் வணக்­கத்­தி­லேயே வளர்ந்த இளைஞன்.
  3. தனது உள்­ளத்தைப் பள்­ளி­யுடன்; தொடர்பு படுத்திக் கொண்­டி­ருந்த மனிதன்.
  4. அல்­லாஹ்­வுக்­காக நேசம் கொண்டு அதற்­கா­கவே இணைந்து அதற்­கா­கவே பிரிந்த இரு மனி­தர்கள்.
  5. அந்­தஸ்தும் அழ­கு­முள்ள பெண் தவறு செய்ய அழைத்­த­போது நிச்­ச­ய­மாக நான் அல்­லாஹ்வைப் பயப்­ப­டு­கிறேன் எனக் கூறிய மனிதன்.
  6. வலது கை கொடுப்­பதை இடது கை அறி­யா­வண்ணம் தர்மம் செய்யும் மனிதன்.
  7. தனித்­தி­ருந்து அல்­லாஹ்வை நினைவு கூர்ந்து கண்ணீர் வடித்த மனிதன்.

நூல் – புஹாரி. 629 முஸ்லிம் 1031

இறைச்­செய்­தி­களில் இளை­ஞர்கள் என்று குறித்து சொல்­லப்­ப­டு­கின்ற அனைத்து இடங்­க­ளிலும் யுவ­தி­களும் உள்­ள­டங்­குவர், அவர்­களும் தம் செயல்கள் குறித்து விசா­ரிக்­கப்­ப­டு­வார்கள், அவர்­களின் செயல்கள் நல்­ல­வை­யாக இருந்தால் நன்­மையும் தீய­வை­யாக இருந்தால் தீமையும் அவர்­க­ளுக்கு உண்டு, இறை­யன்பை இலக்­காகக் கொண்டு தமது இளமைப் பரு­வத்தை அவர்கள் கழிக்கும் பட்­சத்தில் இறை­வனின் அன்பும் அர்ஷின் நிழலும் உயர்ந்த சுவ­னமும் நிச்­சயம் மறு­மையில் கிடைக்கும்.

உன்­ன­த­மான இந்த சிறப்­புக்­களை அடைந்து கொள்ள, அருள் நிறைந்த இந்தப் பரு­வத்தை நெறிப்­ப­டுத்த வேண்­டிய தேவை உள்­ளது, தனது செயற்­பா­டு­களால் இறை­வனை நெருங்­கு­கின்ற ஓர் இளைஞன் அதற்கு சவா­லாக அமை­கின்ற அனைத்துக் காரி­யங்­க­ளையும் திட்­ட­மிட்டு தவிர்த்துக் கொள்­வதில் முனைப்­புடன் செயற்­பட வேண்டும், அவற்றில் மிக முக்­கி­ய­மான சில­வற்றை மாத்­திரம் இங்கு நாம் அடை­யா­ளப்­ப­டுத்­து­கிறோம்.

தகாத உறவு முறைகள்

இளமைப் பரு­வத்தில் ஏற்­ப­டு­கின்ற நட்­புக்­களோ உற­வு­களோ எது­வா­யினும் அவை அல்­லாஹ்வை நோக்கி அழைத்துச் செல்­லு­கின்ற உற­வாக இருக்க வேண்டும்.

நல்­லொ­ழுக்­க­முள்ள ஒருவர் தனது நண்­பர்­களால் தீய குண­மு­டை­ய­வ­ராக மாற்­றப்­ப­டலாம் தீய குண­முள்­ளவர் நல்­ல­வ­ராக மாறு­வ­தற்­கான வாய்ப்பும் உண்டு. நபி­களார் (ஸல்) அவர்கள் கூறி­னார்கள்: நல்ல நண்­ப­னுக்கும் தீய நண்­ப­னுக்கும் உதா­ரணம் கஸ்­தூரி வைத்­தி­ருப்­ப­வ­ரையும் கொல்­லனின் உலை­யையும் போன்­ற­தாகும். கஸ்­தூரி வைத்­தி­ருப்­ப­வ­ரி­ட­மி­ருந்து உமக்கு ஏதும் கிடைக்­காமல் போகாது. நீர் அதை விலைக்கு வாங்­கலாம். அல்­லது அதன் நறு­ம­ணத்­தை­யா­வது பெற்றுக் கொள்­ளலாம். கொல்­லனின் உலை உமது வீட்­டையோ அல்­லது உமது ஆடை­யையோ எரித்­து­விடும். அல்­லது அவ­னி­ட­மி­ருந்து கெட்ட வாடையை நீர் பெற்­றுக்­கொள்வீர்.

அறி­விப்­பவர்: அபூ­மூஸா (ரழி)

நூல்: புஹாரி (2101)

நாம் யாரோடு நட்­புக்­கொள்­கின்றோம் என்ற விட­யத்தில் மிகவும் கரி­­ச­னை­யுடன் இருக்க வேண்டும்.

போதைப் பொருட்­க­ளுக்கு அடி­மை­யா­குதல்

போதைப் பொருள் பாவனை என்­பது இன்று சிறு­வர்கள், இளை­ஞர்கள், முதி­ய­வர்கள் என எவ்­வித பாகு­பா­டு­மின்றி அனைத்து தரப்­பி­னரும் சர்வ சாதா­ர­ண­மாக பயன்­ப­டுத்­து­கின்ற நிலை உரு­வா­கி­யி­ருக்­கின்­றது, குறிப்­பாக இளை­ஞர்கள் தமது நண்­பர்­க­ளோடு சேர்ந்து ஓரிரு நாட்கள் என பயன்­ப­டுத்த துவங்கி பின்பு அதுவே பழக்­க­மாகி அதற்கு அடி­மை­யாகி விடு­கின்ற நிலை ஏற்­பட்டு விடு­கின்­றது.

அல்­லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறி­னார்கள்: மது­பா­னத்­தையும், அதைப் பரு­கு­ப­வ­ரையும், பிற­ருக்கு பருகக் கொடுப்­ப­வ­ரையும், அதை விற்­ப­வ­ரையும், அதை வாங்­கு­ப­வ­ரையும், அதை (பிற­ருக்கு) தயார் செய்து கொடுப்­ப­வ­ரையும், (தானே) தயார் செய்து கொள்­ப­வ­ரையும், அதைச் சுமந்து செல்­ப­வ­ரையும், யாருக்­காக அது சுமந்து செல்­லப்­ப­டு­கி­றதோ அவ­ரையும் அதன் பெறு­மா­னத்தை சாப்­பிடக் கூடி­ய­வ­ரையும் அல்லாஹ் சபிக்­கிறான் என்று கூறி­னார்கள்.

அறி­விப்­பவர்: இப்னு உமர் (ரலி)

அஹ்மத் – 5716, அபூ தாவுத் – 3674

போதைப் பொருள் பாவ­னைக்கு அடி­மை­யாகி விட்ட ஒரு­வரால் ஒரு போதும் ஆன்­மீ­கத்­திலோ கல்­வி­யிலோ பொரு­ளா­தா­ரத்­திலோ முன்­னேற்றம் காண்­ப­தென்­பது அசாத்­தி­ய­மான ஒன்­றாகும்.

எனவே போதைப் பொருட்­க­ளோடு எவ்­வ­கை­யிலும் இளை­ஞர்கள் தொடர்­பு­ப­டா­தி­ருக்க  இது குறித்து அவர்கள் தெளி­வூட்­டப்­பட வேண்­டி­யது காலத்தின் கட­மை­யாகும்.

காதல், சினிமா. இசையில் மூழ்­குதல்

காதல், சினிமா, இசை போன்ற இஸ்லாம் தடை செய்த அம்­சங்­களில் எவ்­வித குற்ற உணர்­வு­மின்றி நேரத்தை விர­யப்­ப­டுத்­து­வது மிகப்­பெரும் சாபக் கேடாகும். சினி­மாவின் தாக்­கத்தால் நிஜ­வாழ்க்­கை­யையும் சினிமா போன்ற கற்­ப­னை­யாக பார்க்­கின்ற மனோ நிலை இன்­றைய இளை­ஞர்­களை ஒரு­வகை உள­வியல் சார்  பிரச்­சி­னையின் பால் தள்­ளி­யி­ருக்­கின்­றது.

சினி­மாவில் கரைந்து, இசையில் மூழ்கி, காதலில் சிக்கி தனது எதிர்­கா­லத்­தையும் வாழ்க்­கை­யையும் தானே அழித்­துக்­கொள்­கின்ற நிலை­யி­லி­ருந்து இளை­ஞர்கள் பாது­காக்­கப்­பட்டு ஆன்­மீகம், கல்வி, பொரு­ளா­தா­ரத்தில் முன்­னே­று­வ­தற்கு ஊக்­க­ம­ளிக்­கப்­பட வேண்டும்.

நேர விரயம்

சமூகம் சார்ந்த பய­னுள்ள செயற்­பா­டுகள், கற்றல், வாசித்தல், போன்ற அறிவு சார்ந்த விட­யங்­களில் தன்னை ஈடு­ப­டுத்­துதல், அல்­லாஹ்­வுக்கு அஞ்சி, அவ­னது தூத­ருக்கு கட்­டுப்­பட்டு தனக்கும் சமூ­கத்­துக்கும் பய­னுள்­ள­வ­ராக திகழ்தல் என்­பது இறை­யன்பை இலக்­காகக் கொண்ட இளை­ஞர்­க­ளிடம் எதிர் பார்க்­கப்­படும் அழ­கிய பண்­பு­க­ளாகும், இதற்கு நேர்­மாற்­ற­மாக  பய­னற்ற விட­யங்­களில் தன்னை ஈடு­ப­டுத்­துதல், அல்­லாஹ்வின் கட்­ட­ளை­களை பாழ்­ப­டுத்­துதல், அவ­னது தூத­ருக்கு மாறு செய்தல், தனக்கும் சமூ­கத்­துக்கும் எவ்­வித பய­னு­மின்றி நேர காலங்­களை விர­யப்­ப­டுத்­து­வது என்­பது இறை­யன்பை இழக்கச் செய்து விடும் செயல்­க­ளாகும்.

அல்லாஹ் தனது திரு­ம­றையில் கூறு­கிறான்; அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்­ப­வர்­களை நேசிப்­ப­தில்லை. (7:31)-

முறை கேடான கைய­டக்க தொலை­பேசிப் பாவனை

எமது தொலை தொடர்­பாடல் தேவை­களை மிக இல­குவில் நிறை­வேற்­றிக்­கொள்ள எமக்கு கிடைத்­துள்ள மிகப்­பெரும் ஓர் அருளே இந்த கைய­டக்க தொலை­பே­சி­யாகும். இதனை தேவைக்கு மாத்­திரம் பயன்­ப­டுத்­து­வது வர­வேற்­கத்­தக்­க­தாகும், இதனை தவ­றாக பயன்­ப­டுத்­தி­யதன் மூலம் எவ்­வ­கை­யான பாதிப்­புக்­க­ளுக்கு இளைஞர், யுவதிகள் ஆளாகியிருக்கின்றனர் என்பதனை நாம் அன்றாடம் சமூக வலைத்தளங்கள் மூலமாக அறிந்து வைத்திருக்கின்றோம். இந்த விடயத்தில் இறையன்பை இலக்காகக் கொண்ட இளைஞர், யுவதிகள் மிகவும் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும், மூத்தவர்கள், பெற்றோர்கள், பாதுகாவலர்கள் தமது பொறுப்பின் கீழுள்ள இளைஞர், யுவதிகளுக்கு அறிவுரை வழங்கி, வழிகாட்ட வேண்டும்.

இளமைப் பருவம் என்ற மகத்தான அருள் குறித்து மறுமையில் விசாரிக்கப்படுவேன் என்பதனை கவனத்தில் கொண்டு அந்த அருளை உரிய முறையில் பயன்படுத்துவதற்கு சவாலாக அமைகின்ற அம்சங்களிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொண்டு தன்னோடிருப்பவர்களையும் நெறிப்படுத்தி, இறைவணக்கத்தில் காலத்தை கழிப்பதின் பால் வழிகாட்டுகின்ற ஓர் இளைஞனின் இளமைப் பருவம் இறையன்பை இலக்காகக் கொண்டதாகவே அமையப் பெற்றிருக்கும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.