அருகிவரும் நீர் வளத்தை பாதுகாப்போம்

0 10,907
  • எம்.எப்.எம்.  இக்பால்

            யாழ்ப்பாணம்

நீர் என்­பது உயிரின் ஆதா­ர­மாகும். அது இயற்­கையின் கொடை­யாகும். நீர் இல்­லையேல் மண் காய்ந்­து­விடும். உணவு உற்­பத்தி இருக்­காது. மண்ணும் காற்­றும்­கூட நீரின்றேல் வறண்டு போய்­விடும். ஆக, எல்லா இயற்கை வளங்­க­ளுக்கும் மனித வளத்­திற்கும் தாய் வளம் நீராகும். நீர் பல வழி­க­ளிலும் மனி­த­னுக்குப் பயன்­ப­டு­கி­றது. எமது உடலின் உள்­ளேயும் அதி­க­ளவு நீருள்­ளது. குருதி, நிணநீர், பாய்­பொருள் முத­லி­ய­வற்றின் கூறா­கவும் நீர் அமைந்­துள்­ளது.

முன்­னைய காலங்­களில் தூய நீருக்­கான பற்­றாக்­குறை ஒரு போதும் இருந்­த­தில்லை. ஆனால் தூய­நீரின் வளம் உலகில் மிக வேக­மாகக் குறைந்­து­கொண்டு செல்­வது அவ­தா­னிக்­கப்­பட்டு வரு­கி­றது. இத்­த­கைய போக்கு கட்­டுப்­ப­டுத்­தப்­ப­டாது போகு­மானால் எதிர்­கா­லத்தில் விவ­சாயம் மற்றும் மனி­தனின் தனிப்­பட்ட பாவ­னைக்­கான தூய­நீ­ருக்குப் பெரும் பற்­றாக்­குறை ஏற்­படும் ஆபத்­தேற்­ப­டலாம்.

புவியின் மேற்­ப­ரப்பில் பெரும்­ப­குதி நீரினால் மூடப்­பட்­டுள்­ளது. கடல் உட்­பட அனைத்து நீர் நிலை­க­ளிலும் இருந்து நீர் ஆவி­யாகி மேலே சென்று முகி­லாகி மழை­யாகப் பெய்து, மீண்டும் நிலத்தை வந்­த­டையும் செயற்­பாடு தொடர்ச்­சி­யாக நடந்து கொண்­டுதான் இருக்­கி­றது. நீர் வட்டம் தொடர்ச்­சி­யாக நடந்து கொண்­டே­யி­ருக்­கி­றது. நீர்க்­கோ­ளத்தை விட்டு நீர் எங்­குமே சென்று விடு­வ­தில்லை. அவ்­வா­றி­ருக்­கையில் உலகம் தூய நீருக்­கான பற்­றாக்­கு­றையை எதிர்­நோக்­கு­வது ஏன்?

மனி­தனின் செயற்­பா­டு­களே இந்த ஆபத்­துக்குக் கார­ண­மென நீரியல் ஆய்­வா­ளர்கள் கூறு­கின்­றனர். காடுகள் மெரு­ம­ளவில் அழிக்­கப்­ப­டுதல், நீர் மாச­டைதல், நீரின் அதி­க­ரித்த பாவனை ஆகி­ய­னவே தூய நீருக்­கான பற்­றாக்­குறை அதி­க­ரிக்கக் கார­ண­மென அவர்கள் தெரி­விக்­கின்­றனர்.

மனித செயற்­பா­டு­களின் விளை­வினால் புவி உஷ்­ண­ம­டைந்து செல்­வதால் பனிப்­பா­றைகள் உருகி கடல் மட்டம் உய­ரு­கி­றது. இதனால் கடல்நீர் புவி­யினுள் பிர­வே­சிப்­பதன் விளை­வாக தூய­நீரின் விகிதம் குறைந்து கொண்டே செல்­கி­றது. இது போதா­தென்று மறு­பு­றத்தில் இர­சா­யனப் பதார்த்­தங்­களின் பாவ­னை­யினால் தூயநீர் படிப்­ப­டி­யாக மாச­டைந்து செல்­கி­றது.

உலகில் 70 வீத பரப்­ப­ளவு நீர் இருந்­தாலும் அதில் 97.5 வீதம் கடலில் இருக்கும் உவர் நீர்தான். மீதி 2.5 வீத அள­வுக்­குத்தான் நிலத்­தடி நீர் உள்­ளது. இதிலும் 2.24 வீதம் துருவப் பகு­தி­களில் பனிப்­பா­றை­க­ளா­கவும் பனித்­த­ரை­யா­கவும் மாறிப் போயுள்­ளது. எஞ்­சிய 0.26 வீத நீரைத்தான் உலக மக்­க­ள­னை­வரும் பகிர வேண்டும். அண்­மைய புள்ளி விப­ரங்­க­ளின்­படி உல­க­ளவில் 250 கோடி மக்கள் போதி­ய­ளவு சுத்­த­மான நீரை அல்­லது நீர் வளத்தை அனு­ப­விக்க முடி­யாத நிலை­யி­லுள்­ளனர். அவர்­களில் 70 சத­வீ­தத்­தினர் ஆசிய நாடு­க­ளி­லேயே உள்­ளனர். ஒவ்வோர் ஆண்டும் நீர் மாச­டை­தலால் உயி­ரி­ழந்­தோரின் எண்­ணிக்கை போர் மற்றும் வன்­மு­றை­களால் இறந்­தோரின் எண்­ணிக்­கையை விட அதி­க­மாகும் என்று குறிப்­பி­டப்­ப­டு­கின்­றது.

குடி­சனப் பெருக்கம், கைத்­தொழில் அபி­வி­ருத்தி, விவ­சாய விரி­வாக்கம் முத­லி­ய­வற்றின் வளர்ச்சி வேகம் நீரின் தேவையை அதி­க­ரிக்கச் செய்­துள்­ளது. அதனால் தான் சுற்­றுச்­சூழல் வல்­லு­நர்கள் ‘மூன்றாம் உலகப் போர் ஒன்று நடந்தால்,அது நீருக்­கான ஒரு போரா­கவே இருக்கும் அன்றி வேறு எதற்­கா­கவும் அல்ல” என்று கடந்த 20 வரு­டங்­க­ளாக எச்­ச­ரிக்­கின்­றனர். இதற்­கான அறி­கு­றிகள் இன்று பெரி­ய­ளவில் காணப்­ப­டு­கின்­றன.

1993ஆ‌ம் ஆ‌ண்டு முத‌ல் மா‌ர்‌ச் மாத‌ம் 22ஆ‌ம் திக‌தியை உலக நீர்­வள  ‌தின­மாக அறி­வி‌க்­க‌ப்­ப‌ட்டு இன்­று­வரை கொ‌ண்­டா­டி‌த்தா‌ன் வ‌ரு‌­கிறோ‌ம். ஆனா‌ல் ஒவ்வோர் ஆ‌ண்டு‌ம் உல‌கி‌ன் பல கோடி ம‌க்க‌ள் த‌ண்‌­ணீ‌­ரி‌ன்‌றி ‌தி‌ண்­டாடி வரு‌ம் ‌நிலையு‌ம் எந்த வகை‌­யிலு‌ம் அக­ல‌­வி‌ல்லை.

ஐ.நா. சபை கடந்த 1992ஆம் ஆண்டு சுற்­றுச்­சூழல் மற்றும் வளர்ச்சி குறித்த கூட்­டத்தை கூட்­டி­யது. கூட்­டத்தில், நீர்­வள பாது­காப்பை வலுப்­ப­டுத்த வேண்டும் என்றும், அதை மக்­க­ளிடம் உணர்த்த ‘உலக நீர்­வள தினம்’ கொண்­டா­டப்­பட வேண்­டு­மென்றும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. அதன்­படி, ஆண்­டு­தோறும் மார்ச் 22ஆம் திகதி உலக நீர்­வள தினம் சர்­வ­தேச அளவில் கொண்­டா­டப்­பட்டு வரு­கி­றது.

மக்கள் தொகை அதி­க­ரித்துக் கொண்­டே­யி­ருக்க அவர்­கட்குத் தேவை­யான குடிநீர் தேவையும் அதி­க­ரிக்­கி­றது. வரு­டாந்தம் சனத்­தொகை 90 மில்­லி­யனால் அதி­க­ரித்து செல்­கின்­றது. தேவையைப் பூர்த்­தி­செய்ய இய­லாத நிலையில் கிடைக்கும் நீரைக் குடிக்கும் நிலைக்கு பல பிர­தேச மக்கள் தள்­ளப்­பட்­டுள்­ளனர். இதனால் பல­வித நோய்­கட்கு ஆளா­கின்­றனர்.

மனி­த­னுக்­கான நீரை வழங்கும் ஜீவ­ந­திகள் பல இருந்தும் பயன்­ப­டுத்த முடி­யாத துர்ப்­பாக்­கிய நிலைக்கு தள்­ளப்­பட்டு விட்டோம். இவ்­வா­றான செயற்­பா­டு­களால் நீரின் தேவை­களைப் பூர்த்­தி­செய்ய முடி­யாமல் இன்று  வளர்­முக நாடு­களில் 80 சத­வீ­த­மானோர் நீர் சார்ந்த நோய்­களால் பலி­யா­கின்­றனர். சுத்­த­மான நீரைப் பெற­மு­டி­யாமல் வரு­டாந்தம் 5 வய­திற்கு உட்­பட்ட 18 இலட்சம் சிறு­வர்கள் பலி­யா­கி­றார்கள். அசுத்­த­மான நீரால் ஏற்­படும் நோய்­க­ளான வயிற்­றுப்­போக்கு, வாந்­தி­பே­தியால் வரு­டத்­துக்கு 22 இலட்­சம் ­பேர் ­வரை இறப்­ப­தாகக் கூறி­யுள்­ளார்கள். அசுத்­த­மான நீர் இவ்­வாறு மக்­களைப் பலி­யாக்­கு­கி­றது.

நீரில் பக்­றீ­ரி­யாக்கள் இருப்­பதால் டய­ரியா, தைபோய்ட், கொலரா, மஞ்சள் காமாலை, போலியோ, குடற் புழுக்கள் போன்ற நோய்கள் வரும் என்­பதை நாங்கள் எல்­லோரும் அறிந்­தி­ருக்­கிறோம். ஆயினும் எத்­தனை பேர் இதனை சரி­யாகக் கடைப்­பி­டிக்­கிறோம்?

நீருக்­கான நெருக்­க­டியில் மனித நட­வ­டிக்­கை­களும் அடங்­கி­யுள்­ளன. இவற்றை தவிர்ப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை நாம் கைக்­கொண்டு வந்தால் உல­கமும் உயிர்­களும் வாழும். மனி­தர்­க­ளுக்கும் ஏனைய ஜீவ­ரா­சி­க­ளுக்கும் உயிர் வாழ்­வ­தற்கு சுத்­த­மான நீர் மிகவும் அவ­சியம் என சிறு­வ­யது முதலே படித்து வரு­கிறோம். நாம் பரு­கு­வது சுத்­த­மான நீராக இருக்க வேண்டும். நன்கு கொதிக்க வைத்து ஆற வைத்து எடுத்த நீர் அல்­லது பில்­டரில் வடி­கட்­டிய நீர் குடிப்­ப­தற்கு ஏற்­றது.

குடி­நீ­ருக்­காக பல மைல் தூரம் குடத்­துடன் நடந்து செல்லும் சனங்கள் எத்­த­னையோ பேர் கிரா­மங்­களில் இருப்­பதை இன்றும் காண்­கிறோம்.

தொழிற்­சா­லைகள் தமது கழி­வு­களை ஆறுகள், குளங்­களில் கொட்­டு­வதால் இர­சா­யன மாற்­ற­மேற்­பட்டு நீரின் தன்மை மாற்­ற­ம­டை­கி­றது. இதனால் பயன்­பாட்­டுக்கு உகந்த நிலையை நீர் இழக்­கின்­றது. நீர் வளப் பாது­காப்பை வலுப்­ப­டுத்­தவும் அதை மக்­க­ளிடம் உணர்த்­த­வு­மென ‘உலக நீர்­வள தினம்’ அனுஷ்­டிக்­கப்­பட வேண்டும் என்ற ஐ.நா. சபையின் தீர்­மா­னத்­துக்­க­மைய 1993 முதல் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 22 இல் ‘உலக நீர்­வள தினம்’ அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றது.

நிலத்­தடி நீரைப் பாது­காக்க வேண்­டி­யதும் நீர் ஆதா­ரங்­களைக் காக்க வேண்­டி­யதும் மனித சமு­தா­யத்தின் தார்­மீகக் கட­மை­யாகும்.

குடி­சனப் பெருக்கம், கைத்­தொழில் அபி­வி­ருத்தி, விவ­சாய விரி­வாக்கம் முத­லி­ய­வற்றின் வளர்ச்சி வேகம் நீரின் தேவையை அதி­க­ரிக்கச் செய்­துள்­ளது. அதனால் தான் சுற்­றுச்­சூழல் வல்­லு­நர்கள் ‘மூன்றாம் உலகப் போர் ஒன்று நடந்தால், அது தண்­ணீ­ருக்­கான போராக இருக்கும்’ என்று எச்­ச­ரிக்­கின்­றனர். இப்­போது, உலகில் உள்ள 80 நாடு­களில் 40 சத­வீத மக்கள் சரி­வர தண்ணீர் கிடைக்­காமல் அவ­திப்­ப­டு­கின்­றனர். 110 கோடி மக்கள் நீர் பற்­றாக்­குறை உள்ள பகுதிகளில் வாழ்கின்றனர். இப்படியே போனால், இன்னும் சில நூற்றாண்டுகளில் உலகமே பாலைவனமாக மாறிவிடும்.

குடிநீர் மாசுபடுவதாலும், வறட்சியாலும் எதிர்காலத்தில் உலகம் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது. எனவே, எதிர்காலத்தில் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு சந்திரன், செவ்வாய் கிரகத்தில் மனிதன் உயிர் வாழ முடியுமா? தண்ணீர் உள்ளதா? என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.

நீர் பெறுவதற்கு முக்கிய காரணம் மழை. மழை வருவதற்கு முக்கிய காரணம் மரம். நாம் காடை வெட்டி நகரமய படுத்துவதால் எமக்குத்தான் தீமை என்பதை யாரும் புரிந்து கொள்வது கிடையாது. காடு வளர்ப்போம் நீர்  காப்போம். எம் உயிர் காப்போம், எம் அடுத்த சந்ததியினர் வாழ வழி சமைப்போம்.
-Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.