இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை வழங்கக்கூடிய அறிகுறி தெரிகின்றது

சிங்கள பாடசாலையில் தமிழ் மொழிக்கான முக்கியத்துவம் குறித்து அமைச்சர் ஹலீம் சுட்டிக்காட்டு

0 591

சிங்­கள மொழிப் பாட­சா­லையில் தமிழ் மொழிக்கு அதி முக்­கி­யத்­துவம் வழங்­கப்­பட்­டுள்­ளதைக் காணும் போது இந்த நாட்டின் மிக முக்­கி­ய­மான இனப் பிரச்­சி­னைக்கு  நிரந்­தர அர­சியல் தீர்­வை­வ­ழங்கக் கூடிய அறி­குறி துல்லி­ய­மாக தென்­ப­டு­கி­றது. அதே போன்று ஜன­நா­ய­கத்­துக்கு எதி­ரான செயற்­பாட்டின் கார­ண­மாக நாடு பொரு­ளா­தார ரீதியில் பாரிய வீழ்ச்­சியைக் கொண்­டி­ருந்­தாலும் இம்­முறை சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள வரவு செலவுத் திட்­டத்தில் கணி­ச­மா­ன­ளவு கல்வித் துறைக்­காக நிதி ஒதுக்­கீ­டுகள் செய்­துள்­ளார்கள். இந்த அர­சாங்கம் சிறந்த கல்வி சமூ­கத்தை உரு­வாக்­கு­வ­தற்கும் இனங்­க­ளுக்­கி­டையே நிரந்­த­ர­மான இன ஐக்­கி­யத்தை உரு­வாக்­கு­வ­தற்கும் சிறந்த வேலைத் திட்­டங்­களை மேற்­கொண்டு வரு­கி­றது என்று முஸ்லிம் சமயம் கலா­சார மற்றும் தபால் துறை அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரி­வித்தார்.

கட்­டு­கஸ்­தோட்டை பூஜாப்­பிட்­டிய நாலந்த மத்­திய கல்­லூ­ரியில் நிர்­மா­ணிக்­கப்­பட்ட அரு­கி­லுள்ள பாட­சாலை சிறந்த பாட­சாலை என்­கின்ற தேசிய வேலைத் திட்­டத்தின் கீழ்  20 மில்­லியன் ரூபா செலவில் நிர்­மா­ணிக்­கப்­பட்ட இரு வகுப்­பறைக் கட்­டடத் தொகுதியின் திறப்பு விழா அதிபர் மாதிப்­பொல தம்­மிக தேரர் தலை­மையில் இடம்­பெற்­றது.

இதில் பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொண்ட அமைச்சர் ஹலீம் தொடர்ந்து உரை­யாற்றும் போது, கடந்த காலங்­களில் சிங்­கள தமிழ் மக்­க­ளுக்­கி­டை­யி­லான முரண்­பாடு மொழி மூல­மா­கவும்  தோற்­று­விக்­கப்­பட்­டது. இது இல்­லாமல் செய்­வ­தற்­காக எமது அர­சாங்­கத்­தினால் பல செயற்­திட்­டங்கள் முன்­னெ­டுக்கப் பட்­டுள்­ளன. அதில் ஒன்று தான் ஏனைய இனங்­க­ளு­டைய மொழி­க­ளையும் அறிந்து கொள்­வ­தாகும். பௌத்த சமயத் தலை­வரை அதி­ப­ராகக் கொண்டு இயங்கும் இந்த சிங்­களப்  பாட­சா­லையில் தமிழ் மொழிக்கு முக்­கி­யத்­துவம் வழங்­கப்­பட்டு வரு­வ­தை­யிட்டு நான் மிகவும் மகிழ்ச்­சி­ய­டை­கின்றேன். நான் கூட தாய் மொழி­யாக தமிழ் மொழியைப் பேசு­பவன்.  இந்தப் பாட­சா­லையில்  சிங்­கள  மாண­விகள் தமிழ் மொழியில் உரை நிகழ்த்­தி­ய­தை­யிட்டு நான் மிகவும் மன மகிழ்ச்­சி­ய­டை­கின்றேன். அது மட்­டு­மல்ல சில இடங்­களில் தமிழ்  வாசங்­க­ளு­டைய பதா­தை­களும் இந்தப் பாட­சாலை வளா­கத்­திற்குள் காணக் கூடி­ய­தாக உள்­ளது. இப்­பா­ட­சா­லையில் சிங்­களம், தமிழ் ஆங்­கிலம் ஆகிய மூன்று மொழி­க­ளுக்கும் முக்­கி­யத்­துவம் கொடுக்­கப்­பட்­டுள்­ளது என்­பது வர­வேற்கத்தக்க அம்­ச­மாகும். இன நல்­லி­ணக்­கத்­துக்கும் சிறப்­பான எதிர்­கா­லத்­துக்கும் உவப்­பான கல்விச் சூழல் இந்த அர­சாங்­கத்தின் மூல­மாக வழங்­கப்­பட்டு வரு­கின்­றது.

பாட­சாலைக் கல்­வியில் மாணவர் மாண­விகள் ஏனைய மொழி­களை கற்றுக் கொள்­ளுதல் வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் இந்தப் பாட­சா­லை­யினர் சரி­யாகப் புரிந்து கொண்டு தமிழ் மொழிக்கு உரிய உயர் அந்­தஸ்தை வழங்கி வரு­கின்­றனர். இதைப்­பார்க்­கின்ற போது எமக்கு ஆச்­ச­ரி­ய­மாக உள்­ளது.

அரு­கி­லுள்ள பாட­சாலை சிறந்த பாட­சாலை என்ற திட்டம் கிரா­மிய மட்­டத்­தி­லுள்ள பாட­சா­லை­களை அபி­வி­ருத்தி செய்­வ­தற்­காகும்.

கிரா­மத்­தி­லுள்ள பிள்­ளைகள் நகரப் பாட­சா­லை­களை நாடிச் செல்­வ­தி­லி­ருந்து தடுப்­ப­தற்­காகும். எல்லாப் பிள்­ளை­க­ளையும் கவர்ச்­சி­க­ர­மான நகரப் பாட­சா­லை­க­ளுக்­குள்ளே உள்­வாங்க முடி­யாது. அந்த வகையில் தான் கல்வி அமைச்சு நகரப் பாட­சாலை தன்­மைக்கு ஏற்ப கிராம மட்­டத்தில் ஒரு பிர­தேச செய­லாளர் பிரிவில் ஒன்று  அல்­லது இரண்டு பாட­சா­லைகள்  அபி­வி­ருத்தி செய்­யப்­ப­டு­கின்­றன.

ஜன­நா­ய­கத்­துக்கு விரோ­த­மான செயற்­பா­டு­மிக்க அந்த 52 நாட்கள் நாங்கள் மறக்க முடி­யாது. அக்­கால கட்டம் நாடு பாரிய பொரு­ளா­தார வீழ்ச்­சி­யினை அடைந்­தது. உள்­நாட்டு ரீதி­யா­கவும் வெளி­நாட்டு ரீதி­யா­கவும் நாட்­டுக்குள் வர வேண்­டிய பொரு­ளா­தாரம் வராமல் வீழ்ச்சி கண்­டது. இப்­ப­டி­யா­ன­தொரு சூழலில் இருந்து நாட்டை மீட்­டெ­டுத்து கல்வி அபி­வி­ருத்­திக்­கா­கவும் பொது மக்­களின் நலனுக்காகவும் வரவு செலவுத் திட்டத்தில் பாரிய நிதி ஒதுக்கீடுகளை இந்த அரசாங்கம் வழங்கியுள்ளது. இந்த வரவு செலவுத் திட்டத்தை எதிர்கட்சி உறுப்பினர்கள் கூடப் பாராட்டுகின்றனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கட்டுகஸ்தோட்டை கல்வி வலயப் பணிப்பாளர், பூஜாப்பிடடிய எதிர்கட்சித் தலைவர் ரம்ஜான் உள்ளிட்ட பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.