அரசியல் குழப்பத்துக்கு ஜனாதிபதியே காரணம்

கடுமையாக சாடுகிறார் சரத் பொன்சேகா

0 579

நாட்டில் இடம்­பெற்­று­வரும் அர­சியல் குழப்­பங்­க­ளுக்கு ஜனா­தி­ப­தியே கார­ண­மாவார். இந்தப் பிரச்­சி­னை­களைத் தொடர்ந்து கொண்­டு­செல்­கின்றார். அத்­துடன் அர­சாங்­கத்தை வீழ்த்­தவே ஜனா­தி­பதி முயற்­சித்து வரு­கின்­றா­ரென ஐக்­கிய தேசியக் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சரத் பொன்­சேகா தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை இந்த வரு­டத்­துக்­கான வரவு செல­வுத்­திட்­டத்தின் ஜனா­தி­பதி, பிர­தமர் தலை­மை­யி­லான நிதி ஒதுக்­கீ­டுகள் தொடர்­பான விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்

அவர் அங்கு தொடர்ந்து குறிப்­பி­டு­கையில்,

அர­சாங்­கத்தில் பிரச்­சினை இருப்­ப­தாக எதிர்க்­கட்­சி­யினர் தெரி­வித்து வரு­கின்­றனர். நாட்டில் இடம்­பெற்ற அர­சியல் குழப்­பத்­துக்கு ஜனா­தி­ப­தியே கார­ண­மாகும். அதனால் தனி ஒரு நபரின் நட­வ­டிக்­கையால் முழு அர­சாங்­கத்­தையும் குற்­றம்­சாட்ட முடி­யாது. ஜனா­தி­பதி ஏற்­ப­டுத்­திய இந்தக் குழப்­பத்தை அவர் தொடர்ந்து மேற்­கொண்­டு­வ­ரு­கின்றார். அர­சாங்­கத்தை வீழ்த்­தவே நட­வ­டிக்கை எடுத்­து­வ­ரு­கின்றார்.

அத­துடன் கம்­பெ­ர­லிய வேலைத்­திட்­டத்­துக்­காக அர­சாங்கம் 16பில்­லி­யனை ஒத்­துக்­கி­யி­ருந்­தது. ஆனால் ஜனா­தி­பதி மேற்­கொண்ட அர­சியல் சதித்­திட்டம் கார­ண­மாக கிரா­மங்­களில் மக்­க­ளுக்கு சேவை செய்ய முடி­யா­மல்­போ­னது. 5பில்­லியன் ரூபா செல­விட முடி­யு­மா­கி­யது. இம்­மு­றையும் கம்­பெ­ர­லிய வேலைத்­திட்­டத்­துக்கு 48 பில்­லியன் ஒதுக்கி இருக்­கின்றோம். என்­றாலும் இந்த வரு­டத்­திலும் மூன்று மாதங்கள் கடந்த பின்­னரே இதனை ஒதுக்க முடி­யு­மாகி இருக்­கின்­றது. அர­சியல் குழப்பம் இடம்­பெ­ற­வில்லை என்­றி­ருந்தால் கிரா­மங்­க­ளில் பாரிய வேலைத்­திட்டம் இடம்­பெற்­றி­ருக்கும்.

மேலும் அர­சாங்கம் ஆரம்­பிக்கும் அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­களை தடுத்து நிறுத்தும் வேலைத்­திட்­டத்தை ஜனா­தி­பதி ஆரம்­பித்­தி­ருக்­கின்றார். குறிப்­பாக பாட­சாலை மாண­வர்­க­ளுக்­காக டெப் வழங்க எடுத்த திட்டம், நாட்டின் வர்த்­தக துறையை கட்­டி­யெ­ழுப்ப மேற்­கொண்ட சிங்­கப்பூர் ஒப்­பந்தம் போன்ற நட­வ­டிக்­கை­களை இடை­நி­றுத்­தி­யுள்ளார். கண்டி அதி­வே­கப்­பாதை நிர்­ம­ணிக்கும் அந்தப் பிர­தே­சத்தில் மலை­களை வெட்­ட­வேண்டாம் என தெரி­வித்­துள்ளார். மத்­திய மாகாணம் என்­பது மலைப்­பி­ர­தே­ச­மாகும். மலை­களை வெட்­டாமல் எவ்­வாறு அதி­வே­கப்­பாதை அமைப்­பது?

மேலும் தனது பேச்சை உறுப்­பி­னர்கள் யாரும் கேட்­ப­தில்லை என்று அண்­மையில் பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்­தி­ருந்தார். ஜனா­தி­பதி, உறுப்­பி­னர்­களின் காலை வாரும் நட­வ­டிக்­கையை மேற்­கொள்­ளும்­போது அவர்கள் ஜனா­தி­ப­தியின் பேச்சை கேட்­க­மாட்­டார்கள். அமைச்­சுக்­க­ளுக்கு பொருத்­த­மான செய­லா­ளர்­களை நிய­மிக்­க­மாட்டார். அவ­ருக்கு தேவை­யா­ன­வர்­க­ளையே நிய­மிக்­கிறார். அதனால் அமைச்­சுக்­களின் வேலைத்­திட்­டங்­களை முறை­யாக கொண்­டு­செல்ல முடி­யாத நிலை ஏற்­ப­டு­கின்­றது.

அத்­துடன் கடந்த காலத்தில் ஜனா­தி­பதி ஐக்­கிய தேசிய கட்­சியை இல்­லா­ம­லாக்கி நாட்­டுக்குள் அர­சியல் குழப்பம் ஒன்றை ஏற்­ப­டுத்த திட்­ட­மிட்டு செயற்­பட்­டுள்ளார். எதிர்க்­கட்சி உறப்­பி­னர்­க­ளுடன் இது­தொ­டர்­பாக இர­க­சிய சந்­திப்­புக்­களை மேற்­கொண்­டுள்ளார். அடுத்த முறையும் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக போட்­டி­யிடும் நோக்­கிலே இவ்­வாறு செயற்­பட்­டுள்ளார் என்­பது தெளி­வா­கி­யுள்­ளது.

நாட்டின் அரச தலை­வ­ராக இருப்­பவர் தனிப்­பட்ட கார­ணங்­க­ளுக்­காக பழி­வாங்கும் செயல்­களில் ஈடு­ப­டு­வது முறை­யல்ல. ஐக்­கிய தேசியக் கட்சி அர­சாங்கம் ஆட்சி செய்யும் போது பிர­தமர் பெய­ரிடும் நப­ருக்கு அமைச்­சுப்­ப­தவி வழங்­கு­வதே ஜனா­தி­ப­தியின் கடமை. மாறாக என்­னுடன் இருக்கும் தனிப்­பட்ட கோபத்­துக்­காக எனக்கு அமைச்­சுப்­ப­தவி வழங்­கப்­போ­வ­தில்லை என்று தெரி­விக்க அவ­ருக்கு எந்த தார்­மீக உரி­மையும் இல்லை. நாட்டின் தலை­ருக்கு இது பொருத்­த­மில்லை.

எனவே, இந்த நிலை­மையை மாற்­றி­ய­மைக்­க­வேண்­டு­மாக இருந்தால் தேசிய அர­சாங்கம் அமைக்­கப்­ப­ட­வேண்டும். தேசிய அர­சாங்கம் அமைக்­கப்­பட்டால் எமக்குத் தேவை­யான அமைச்­சுப்­ப­த­வி­களை அமைத்­துக்­கொள்ள முடி­வ­துடன் இருக்கும் அமைச்­சுக்­களை பாது­காத்­துக்­கொள்ள முடியும். அத்­துடன் ஜனா­தி­ப­திக்கு இம்­முறை 23 பில்­லியன் ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. இது மக்­க­ளுக்கு பிர­யோ­ன­மா­கப்­போ­வ­தில்லை. அவரின் அர­சியல் நட­வ­டிக்­கைக்கே செல­வி­டுவார். அதனால் இந்த ஒதுக்கீடுக்கு நான் ஆதரவளிக்கமாட்டேன் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.