புல்­வாமா தாக்­குதல் குறித்து பிர­தமர் ரணிலை சந்­தித்து விளக்­க­ம­ளித்தார் பாக். உயர் ஸ்தானிகர்

0 588

பாகிஸ்­தா­னிய உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் கலா­நிதி ஷாஹித் அஹ்மத் ஹஷ்மத், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை சந்­தித்து புல்­வாமா தாக்­கு­த­லுக்குப் பின்­ன­ரான பிராந்­திய பாது­காப்பு நிலை­மைகள் குறித்து விளக்­க­ம­ளித்தார்.

இச்­சந்­திப்­பின்­பொ­ழுது பிராந்­தி­யத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்­தன்­மை­யினை பாகிஸ்தான் விரும்புவதாகவும் பேச்­சு­வார்த்­தையின் மூலம் அனைத்து பிரச்சினைகளுக்­கு­மான தீர்வைக் காண­மு­டி­யு­மெனக் கூறினார். மேலும் எந்­த­வி­த­மான வெளி ஆக்­கி­ர­மிப்­பி­லி­ருந்தும் பாகிஸ்தான் தனது பூமி­யினை பாது­காக்க உறு­தி­பூண்­டுள்­ளது எனவும் பாகிஸ்­தா­னிய உயர் ஸ்தானிகர் தெரி­வித்தார்.

எல்­லையில் நிலவும் பதற்­றத்தைக் குறைப்­ப­தற்கு பாகிஸ்தான் பிர­தமர் இம்ரான் கானினால் தொடர்ந்தும் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற அணு­கு­மு­றை­களை சுட்­டிக்­காட்­டி­ய­துடன், காஷ்மீர் உட்­பட இந்­தி­யா­வுடன் நிலவும் அனைத்­து­வி­த­மான பிரச்­சி­னை­க­ளுக்கும் பேச்­சு­வார்த்தை மூல­மாக தீர்வு காண்­ப­தற்கு சர்­வ­தேச சமூ­கத்­தினால் வழங்­கப்­ப­டு­கின்ற ஆத­ர­வினை பாகிஸ்தான் பெரிதும் வர­வேற்கும் என  அவர் மேலும் தெரி­வித்தார்.

அத்­துடன், பாகிஸ்­தானின் அணு­கு­மு­றை­யினை ஏற்­றுக்­கொண்ட இலங்கை பிர­தமர், பாகிஸ்தான் மற்றும் இந்­தி­யா­விற்­கி­டை­யி­லான அபி­வி­ருத்­தி­ய­டையும் சுமு­க­மான நிலை­மை­யினை ஆழ்ந்து அவ­தா­னித்து வரு­வ­தாக தெரி­வித்தார்.

நாடு­க­ளுக்­கி­டையில் பாது­காப்பு பதற்­றங்கள் அதி­க­ரிக்கக் கூடா­தெனத்  தெரி­வித்த இலங்கை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, இரு­நா­டு­களும் பிராந்­தி­யத்தில் சமா­தா­னத்­தினை நிலை­நாட்­டு­வதன் நிமித்தம் அர்த்­த­புஷ்­டி­யான பேச்­சு­வார்த்­தை­க­ளு­டாக அனைத்து பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்­வு­காணும் என நம்­பிக்கை வெளியிட்டார். நெருக்கடியான தருணத்தில் தனது இராஜதந்திரம் மற்றும் மதிநுட்பத்தினை இம்ரான் கான் வெளிப்படுத்தியுள்ளார் என  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாகிஸ்தானிய பிரதமரை இதன்போது பாராட்டினார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.