தமிழ் முஸ்லிம் சமூ­கங்கள் ஒற்­றுமைப் பட வேண்டும்

முன்னாள் அமைச்சர் அதா­உல்லா

0 467

இலங்­கையில் ஒன்­றாக வாழ்ந்த தமிழ் முஸ்லிம் சமூ­கங்­களை இப்­போது சிறிய சிறிய கோடு­களைக் கொண்டு பிரிப்­ப­தற்கு சில தரப்­பினர் வேண்­டு­மென்றே முனை­கின்­றார்கள். இரு சமூ­கத்­த­வர்­க­ளுக்கு மத்­தி­யிலும் வேற்­றுமை ஏற்­பட வேண்டும் என ஒரு தரப்­பினர் இரு சமூ­கத்­தி­னையும் சூடாக்கும் வேலை­களை மிகக் கச்­சி­த­மாக செய்து கொண்­டி­ருக்­கின்­றனர் என தேசிய காங்­கிரஸ் கட்­சியின் தலை­வரும், முன்னாள் அமைச்­ச­ரு­மான ஏ.எல்.எம்.அதா­உல்லா தெரி­வித்தார்.

ஆசு­கவி அன்­பு­டீனின் 50 வருட இலக்­கியப் பணி­யினைப் பாராட்டி கௌர­விக்கும் இலக்­கியப் பொன் விழாவும், ‘சிற்பம் செதுக்­கிய சிற்பி’ சிறப்பு மலர் வெளி­யீடும் நேற்று அட்­டா­ளைச்­சே­னையில் இடம்­பெற்­றது. இந்­நி­கழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

பொன் விழா மன்றத் தலைவர் எம்.ஸிறாஜ் அஹமட் தலை­மையில் இடம்­பெற்ற இந்­நி­கழ்வின் போது நகரத் திட்­ட­மிடல் நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எல்.எம்.நசீர் உள்­ளிட்ட பல்­துறை முக்­கி­யஸ்­தர்கள் பலர் கலந்து கொண்­டனர். இந்­நி­கழ்வில் தொடர்ந்தும் உரை­யாற்­றிய முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதா­உல்லா குறிப்­பி­டு­கையில், இன்று சில விட­யங்­க­ளுக்­காக தமி­ழர்­க­ளையும் முஸ்­லிம்­க­ளையும் சூடாக்­கு­வ­தற்­கான பேச்­சுக்கள் பாரா­ளு­மன்­றத்­திலும் அதற்கு வெளி­யிலும் கருத்து மோதல்­க­ளாக இடம்­பெ­று­கின்­றன.

தமிழ், முஸ்லிம் சமூகம் ஒற்­று­மை­யாக வாழ்ந்த சமூகம். இவ்­விரு சமூ­கத்­த­வர்கள் ஒரு­வ­ருக்­கொ­ருவர் முரண்­பா­டு­களால் மோதிக் கொள்ள வேண்டும் என ஒரு­சிலர் முனைப்­புடன் செயற்­ப­டு­கின்­றனர். இந்­நி­லைமை மாற வேண்டும். தமிழ், முஸ்லிம் சமூகம் கடந்த காலங்­களில் எவ்­வாறு ஒற்­று­மை­யுடன் வாழ்ந்­ததோ அதுபோல் ஒரு­வ­ருக்­கொ­ருவர் விட்டுக் கொடுப்­புடன் இரு சமூ­கத்­த­வர்­களும் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும்.

எமக்கு வேண்டும் என்று ஓர் அர­சியல் தரப்பும், இல்லை அது எமக்­குத்தான் வேண்டும் என்று மற்­று­மொரு தரப்பும் கருத்து முரண்­பா­டு­களால் இரு சமூ­கத்­தி­னையும் சேர்ந்த அர­சி­யல்­வா­திகள் மோதிக்­கொள்­கின்­றார்கள். இச்­சந்­தர்ப்­பத்­தில்தான் சமூ­கத்­திற்­காக செயற்­பட வந்த அர­சி­யல்­வா­திகள் அவ­தா­ன­மாக செயற்­பட வேண்­டி­யுள்­ளது.

கருத்து முரண்­பா­டு­களால் பிரிந்த நம்மில் சிலர் இன்று தமிழால் ஒரே மேடையில் ஒன்று சேர்ந்­தி­ருக்­கின்றோம். தமி­ழுக்கு உர­மூட்­டி­ய­வர்­களில் முஸ்­லிம்கள் முக்­கி­ய­மா­ன­வர்கள் என்­பதில் எவ்­வித மாற்றுக் கருத்­துக்கும் இட­மில்லை. இந்தத் தமிழ் மூலம் நாட்டில் உள்ள அனைத்து சமூ­கமும் ஒன்­று­மைப்­பட்டு ஒரு­வ­ருக்­கொ­ருவர் விட்டுக் கொடுப்­பு­டனும் புரிந்­து­ணர்­வு­டனும் செயற்­பட இதய சுத்­தி­யோடு அனை­வரும் ஒன்­று­சேர வேண்டும்.

எழுத்­தா­ளர்­களும், கவி­ஞர்­களும் நமது சமூ­கங்­களை ஒற்­றுமைப் படுத்­தவும், ஒன்று திரட்­டவும் எழுத வேண்டும். அன்பு என்ற விடயம் எல்லோர் மத்­தி­யிலும் காணப்­ப­டு­மாயின் அந்த அன்பின் மூலம் நாம் அனை­வரும் வேறு­பா­டுகள் மறந்து ஒன்­று­ப­டுவோம் என்­பது மட்டும் உண்­மை­யாகும். தனது புனைப்­பெ­ய­ரினை அன்­புடீன் என்று சூடிக்­கொண்ட அன்­புடீன் மறைந்த பெருந்­த­லைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப்பின் விடுதலைக் காலம் முதல் நமது சமூகத்திற்காகவும் சமூக விடுதலைக்காகவும் கவிதைகள் பாடிய முக்கிய கவிஞர். இவரது அன்பின் மூலம் அனைவரும் ஒன்று சேர்ந்து அவருக்கு இலக்கியப் பொன்விழா நடத்துவதையிட்டு நாம் அனைவரும் பெருமை கொள்கின்றோம் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.