ஷண்முகாவில் அபாயாவுக்கு அனுமதி வழங்க வேண்டும்

0 694

திரு­கோ­ண­மலை ஷண்­முகா இந்­துக்­கல்­லூ­ரியில் முஸ்லிம் ஆசி­ரி­யை­க­ளுக்கு விதிக்­கப்­பட்­டி­ருந்த அபாயா அணிந்து கட­மையில் ஈடு­ப­டு­வ­தற்­கான தடை மனித உரிமை ஆணைக்­கு­ழு­வினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இலங்­கையின் அர­சியல் யாப்பில் உறு­தி­செய்­யப்­பட்­டுள்ள உறுப்­பு­ரைகள் 10,12 (1), 12 (2),14 E யின் பிர­காரம் ஆசி­ரி­யை­களின் அடிப்­படை உரி­மை­களை முத­லா­வது பிர­தி­வா­தி­யா­கிய ஷண்­முகா இந்­துக்­கல்­லூ­ரியின் அதிபர் மீறி­யி­ருக்­கிறார். ஆசி­ரி­யைகள் அவர்­களின் கலா­சார ஆடை­யான அபா­யாவை அணிந்­து ­கொண்டு மீண்டும் ஷண்­முகா இந்­துக்­கல்­லூ­ரிக்குள் உள்­வாங்­கப்­ப­ட­வேண்டும் என மனித உரி­மைகள் ஆணை­யகம் பரிந்­துரை செய்­துள்­ளது.

திரு­கோ­ண­மலை ஷண்­முகா இந்­துக்­கல்­லூ­ரியில் கட­மை­யாற்­றிய 4 முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து பாட­சா­லைக்குச் சென்­ற­போது அதிபர் அபாயா அணிந்து கற்­பித்தல் நட­வ­டிக்­கையில் ஈடு­படத் தடை­வி­தித்தார். பாட­சா­லையில் அபா­யா­வுக்கு நில­விய எதிர்ப்­பி­னை­ய­டுத்து கல்­வி­ய­மைச்சு அவர்­க­ளுக்கு தற்­கா­லிக இட­மாற்­றத்­தினை வழங்­கி­யது. கடந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் 9 மாத­கா­ல­மாக தற்­கா­லிக இட­மாற்­றத்தின் கீழ் வேறு பாட­சா­லை­களில் கட­மை­யாற்­றிய ஆசி­ரி­யைகள் மீண்டும் ஷண்­முகா இந்­துக்­கல்­லூ­ரிக்கு கடந்த ஜன­வரி மாதம் 1 ஆம் திகதி முதல் இட­மாற்றம் செய்­யப்­பட்­டனர்.

இந்­நி­லையில் தொடர்ந்தும் ஷண்­முகா கல்­லூ­ரியின் அதிபர் தனது நிலைப்­பாட்டில் உறு­தி­யாக இருந்தார். இட­மாற்றம் பெற்று அபாயா அணிந்து சென்ற ஆசி­ரி­யை­க­ளுக்கு கற்­பித்தல் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட அனு­மதி வழங்­கப்­ப­ட­வில்லை. பாட நேர­சூ­சியும் வழங்­கப்­ப­ட­வில்லை. ஷண்­முகா கல்­லூரி அதி­பரின் இந்த நட­வ­டிக்­கை­க­ளை­ய­டுத்து 4 ஆசி­ரி­யை­க­ளுக்கு நிரந்­தர இட­மாற்றம் வழங்­கப்­பட்­டது. அவர்கள் ஷண்­முகா கல்­லூ­ரி­யி­லி­ருந்தும் வெளி­யே­றினர். மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழு­விலும் முறை­யிட்­டி­ருந்­தனர்.

இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லி­ணக்­கத்­தையும் தேசிய ஒரு­மைப்­பாட்­டி­னையும் பாட­சாலை மாண­வர்கள் மட்­டத்­தி­லி­ருந்து பலப்­ப­டுத்­து­வ­தற்கு அர­சாங்கம் முயன்­று­வரும் நிலையில் மாண­வர்­களை வழி­ந­டத்த வேண்­டிய அதிபர் இவ்வாறான செயற்­பா­டு­களில் ஈடு­பட்­டமை வருந்­தத்­தக்­க­தாகும்.

மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் கண்­ட­றி­தல்­களில் பல வலு­வான தெளி­வுகள் வழங்­கப்­பட்­டுள்­ளன. உச்ச நீதி­மன்­றத்தின் தீர்ப்பு 688/12 ஐத் தொடர்ந்து கல்வி அமைச்­சினால் வெளி­யி­டப்­பட்ட சுற்று நிருபம் இல 37/95 அடிப்­ப­டை­யிலும் மற்றும் உச்ச நீதி­மன்­றத்தின் FR 97/14 வழக்கின் தீர்ப்பின் அடிப்­ப­டை­யிலும் முஸ்­லிம்­களின் கலா­சார ஆடை என்­பது இலங்­கையின் கலா­சா­ரத்­திற்குள் உட்­பட்­டது என்­ப­தோடு அவ்­வா­றான ஆடை­களை அணியும் உரிமை முஸ்­லிம்­க­ளுக்கு இருக்­கி­றது என மனித உரி­மைகள் ஆணை­யகம் தெரி­வித்­துள்­ளது.

அத்­தோடு அர­சியல் யாப்பின் ஷரத்து 10 மற்றும் 14 (E) மற்றும் முஸ்லிம் பெண்­களின் ஆடை சம்­பந்­த­மான கல்வி அமைச்சின் சுற்று நிருபம் 37/95 ற்கு முர­ணாக ஷண்­முகா இந்­துக்­கல்­லூ­ரியும் அதன் நிர்­வா­கமும் ஒரு குறிப்­பிட்ட வகை­யான ஆடையை அணிந்து வரக்­கூ­டாது என்றும் ஒரு குறிப்­பிட்ட வகை­யான ஆடை­யைத்தான் அணிந்­து­கொண்டு வர­வேண்டும் என்றும் பணிக்க முடி­யாது என்றும் தெரி­வித்­துள்­ளமை அதிபர் தவறிழைத்துள்ளார் என்பதை உறுதி செய்கிறது.

ஷண்­முகா இந்­துக்­கல்­லூ­ரியின் அதிபர் மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் அறிக்­கை­யையும் பரிந்­து­ரை­க­ளையும் வாசித்து தெளிவு பெற­வேண்டும். இனங்­க­ளுக்­கி­டையில் ஓர் உறவுப்பாலமாக தன்னை அமைத்துக்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியைகள் தங்களது கலாசார ஆடை அபாயாவுடன் எந்தவித தடையோ, அச்சுறுத்தல்களோ இன்றி ஷண்முகா  இந்துக்கல்லூரியில் கடமையாற்றுவதற்கு அதிபர் வழிவகை செய்யவேண்டும்.

நான்கு ஆசிரியைகளும் தமது கலாசார உடையுடன் ஷண்முகா  இந்துக்கல்லூரியில் மீண்டும் கடமையாற்ற கல்வி அமைச்சின் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.