அர்ஷின் நிழலை அடைய அல்லாஹ்வுக்காக அன்பு கொள்வோம்

0 2,905

அன்பு கொள்­ளுதல், நேசம் பாராட்­டுதல் போன்­ற­வை­யெல்லாம் இவ்­வு­லகில் இரண்டு வித­மான கார­ணங்­க­ளுக்­கா­கவே நடை­பெ­று­கின்­றன, ஒன்று தன்­னைப்­ப­டைத்த ரப்புல் ஆல­மீ­னா­கிய அல்­லாஹ்­வுக்­காக. மற்­றது உலக இலா­பங்­க­ளுக்­காக என்று எம்மால் வகைப்­ப­டுத்த முடியும், இதில் முத­லா­வது வகையே இஸ்­லாத்தில் ஊக்­கு­விக்­கப்­பட்ட வணக்க வழி­பா­டாக கரு­தப்­ப­டு­கி­றது, அதுவே அல்­லாஹ்வின் அன்­பையும் அரு­ளையும், நாளை மறுமை நாளில் அல்­லாஹ்­வு­டைய அர்ஷின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்­லாத அந்த சந்­தர்ப்­பத்தில் அவ­னது அர்ஷின் நிழலைப் பெற்றுத் தரும் ஓர் உயர்ந்த அம­லா­கவும் கரு­தப்­ப­டு­கி­றது.

இரண்­டா­வது வகையில் அமைந்த நட்பு, அன்பு, இவை­யெல்லாம் ஏதோ ஓர் உலக இலா­பத்தை மையப்­ப­டுத்­தி­ய­தா­கவோ ஏமாற்றம், நய­வஞ்­ச­கத்­தனம் போன்­ற­வற்றை தன்­ன­கத்தே கொண்­ட­தா­கவோ இருக்கும், இதில் இஸ்லாம் தடை செய்த அந்­நிய ஆண், பெண் நட்பு, தகாத உறவு, திரு­ம­ணத்­துக்கு முந்­தய காதல், போன்­ற­வை­யெல்லாம் உள்­ள­டங்கும், இவை இஸ்லாம் தடை­செய்­தி­ருக்­கின்ற உறவு முறை­க­ளாகும்.

அல்லாஹ் தனது திரு­ம­றையில் கூறு­கிறான்; உற்ற நேசர்­க­ளெல்லாம் அன்­றைய (மறுமை) நாளில் ஒருவர் மற்­ற­வ­ருக்கு விரோ­தி­க­ளா­யி­ருப்பர், இறை­யச்­ச­முள்­ள­வர்­களைத் தவிர (அல்­குர்ஆன் – 43:67)

‘எவ­ரிடம் மூன்று தன்­மைகள் அமைந்­து­விட்­ட­னவோ அவர் ஈமான் எனும் இறை­நம்­பிக்­கையின் சுவையை உணர்ந்­த­வ­ராவார். (அவை) அல்­லாஹ்வும் அவ­னு­டைய தூதரும் அவர்கள் இரு­வ­ரல்­லாத வேறு அனைத்தை விடவும் அதிக நேசத்­திற்­கு­ரி­ய­வர்­க­ளாக இருப்­பது, ஒருவர் மற்­றொ­ரு­வரை அல்­லாஹ்­வுக்­கா­கவே நேசிப்­பது, நெருப்பில் வீசப்­ப­டு­வதை வெறுப்­பது போல் இறை நிரா­க­ரிப்­புக்குத் திரும்பிச் செல்­வதை வெறுப்­பது’ என்று இறைத்­தூதர்(ஸல்) அவர்கள் கூறி­னார்கள்:

அறி­விப்­பவர் : அனஸ் (ரழி),
நூல் : புஹாரி 16

இறை­யச்­சத்­துடன் அல்­லாஹ்­வுக்­காக அன்பு கொள்­ளுதல் மாத்­தி­ரமே மறுமை விமோ­ச­னத்­துக்கு சிறந்த வழி­யாகும் அதுவே ஈமானின் சுவை­யையும் சுவைக்கச் செய்யும் சிறந்த பண்­பாகும். இறை­யச்­ச­மின்றி உலக இலா­பங்­க­ளுக்­காக ஒருவர் மற்­றொ­ரு­வரை நேசித்தால் மறுமை நாளில் ஒருவர் மற்­ற­வ­ருக்கு விரோ­தி­க­ளாவே இருப்­பார்கள் என்­ப­த­னையே இறைச் செய்­திகள் நமக்கு உணர்த்­து­கின்­றன.

ஆன்­மாக்கள் எல்லாம் குழுக்­க­ளாக பிரிக்­கப்­பட்ட படை­க­ளாகும். அவற்றில் அறி­மு­க­மாகிக் கொள்­பவை இணைந்து கொள்­கின்­றன. அறி­மு­க­மாகிக் கொள்­ளா­தவை வேறு­பட்டு விடு­கின்­றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறி­னார்கள். (அறி­விப்­பவர்: ஆயிஷா (ரழி) அவர்கள், நூல்: புஹாரி 3088)

நபி (ஸல்) அவர்­களின் சபையில் நான் இருந்தேன். அப்­போது ஒரு மனிதர் (எங்­களை) கடந்து சென்றார். எங்­க­ளுடன் இருந்­த­வர்­களில் ஒருவர், அல்­லாஹ்வின் தூதரே! நான் இந்த மனி­தரை நேசிக்­கிறேன் என்றார். அதனை அவ­ருக்கு தெரி­வித்­து­விட்­டாயா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்­டார்கள். அதற்கு அவர் இல்லை என்றார். எழுந்து சென்று அவ­ரிடம் தெரி­வித்­து­விடு என்று நபி (ஸல்) அவர்­கள்­கூ­றி­னார்கள். உடனே அவர் எழுந்து சென்று, நான் உம்மை அல்­லாஹ்­வுக்­காக நேசிக்­கிறேன் என்றார். அதற்கு அந்த மனிதர், யாருக்­காக நீ என்னை நேசித்­தாயோ அந்த அல்லாஹ் உம்மை நேசிப்­பா­னாக! என்று கூறினார்.

அறி­விப்­பவர்: அனஸ் (ரழி) அவர்கள்,
நூல்: முஸ்னத் அஹ்மத் 11980

நட்­புக்­கொள்­ளவும் நேசம் பாராட்­டவும் பொருத்­த­மான நல்ல மனி­தர்­களைத் தேடிச் சென்று அவர்­க­ளோடு அறி­மு­க­மாகி அவர்­க­ளிடம் நட்புக் கொள்­வ­தனைப் பற்றி தெரி­வித்துக் கொள்­வது நபி­க­ளாரின் மிகச்­சி­றந்த வழி­மு­றை­யாகும்.

ஒரு மனிதர் இன்­னொரு ஊரி­லி­ருந்த தன் சகோ­த­ரரை சந்­திக்கச் சென்றார். அவர் செல்லும் வழியில் அல்லாஹ் ஒரு மலக்கை எதிர்­பார்த்­தி­ருக்கும் படி செய்தான். அம்­ம­னிதர் அந்த மலக்கு அருகில் வந்த போது, அம்­ம­லக்கு அவ­ரிடம் எங்கு செல்­கிறீர்? என்­று­கேட்டார். அதற்­கவர் இந்த ஊரி­லுள்ள என் சகோ­த­ரரை நாடிச் செல்­கிறேன் என்றார். அப்­போ­து­அந்த மலக்கு அந்த சகோ­தரர் உமக்கு ஏதேனும் நன்மை செய்ய வேண்டி இருக்­கி­றதா? (அந்த உலக நோக்­கத்­திற்­கா­கவா அவ­ரிடம் செல்­கிறாய்) என்று கேட்டார். அதற்கு அம்­ம­னிதர், அல்­லாஹ்­வுக்­காக அவரை நேசிக்­கிறேன் என்­பதைத் தவிர வேறொன்றும் இல்லை என்றார். அப்­போது அந்த மலக்கு, அல்­லாஹ்­வுக்­காக நீர் அவரை நேசித்­தது போல் அல்லாஹ் உன்னை நேசிக்­கிறான் என்­பதை உனக்கு தெரி­விக்க வந்த அல்­லாஹ்வின் தூதர்தான் நான் என்று கூறினார்.

(அறி­விப்­பவர்: அபூ­ஹு­ரைரா (ரழி) அவர்கள்,
நூல்: முஸ்லிம் 4656)

அல்­லாஹ்­வுக்­காக அன்பு கொள்­ப­வர்­க­ளிடம் உலக இலா­பங்­களை அடைந்து கொள்ள வேண்­டு­மென்ற எண்ணம் ஒரு போதும் வந்­து­வி­டக்­கூ­டாது, அவர்கள் ஒரு­வ­ருக்­கொ­ருவர் நன்­மையை ஏவி, தீமையை தடுப்­ப­வர்­க­ளா­கவும், நன்­மைக்கும் இறை­யச்­சத்­துக்­கும் உத­வு­ப­வர்­க­ளா­கவும் பாவத்­துக்கும் அநீ­திக்கும் வரம்­பு­மீ­று­த­லுக்கும் தடை­யா­கவும் அல்லாஹ், மறு­மையை ஞாப­கப்­ப­டுத்தக் கூடி­ய­வர்­க­ளா­கவும் நர­கத்தை விட்டும் பாது­காத்து, சுவ­னத்தை நோக்கி அழைத்துச் செல்­ப­வர்­க­ளா­கவும் எல்லா நேரங்­க­ளிலும் அனைத்து சந்­தர்ப்­பங்­க­ளிலும் இறை திருப்­தியை மாத்­திரம் இலக்­காகக் கொண்டு நேசம் பாராட்­டக்­கூ­டி­ய­வர்­க­ளா­கவும் இருக்க வேண்டும் .

நபி­களார் (ஸல்) அவர்கள் கூறி­னார்கள்: நல்ல நண்­ப­னுக்கும் தீய நண்­ப­னுக்கும் உதா­ரணம் கஸ்­தூரி வைத்­தி­ருப்­ப­வ­ரையும் கொல்­லனின் உலை­யையும் போன்­ற­தாகும். கஸ்­தூரி வைத்­தி­ருப்­ப­வ­ரி­ட­மி­ருந்து உமக்கு ஏதும் கிடைக்­காமல் போகாது. நீர் அதை விலைக்கு வாங்­கலாம். அல்­லது அதன் நறு­ம­ணத்­தை­யா­வது பெற்றுக் கொள்­ளலாம். கொல்­லனின் உலை உமது வீட்­டையோ அல்­லது உமது ஆடை­யையோ எரித்­து­விடும். அல்­லது அவ­னி­ட­மி­ருந்து கெட்ட வாடையை நீர் பெற்­றுக்­கொள்வீர்.

அறி­விப்­பவர்: அபூ­மூஸா (ரழி)
நூல்: புஹாரி (2101)

ஒரு நண்பன் தனது நண்­பனின் வழி­மு­றையில் இருப்பான். எனவே, உங்­களில் ஒருவர் தான் நட்புக் கொள்­கின்­ற­வரை அவ­தா­னிக்­கட்டும்

அறி­விப்­பவர் : அபூ­ஹு­ரைரா (ரழி)
நூல்கள் : அபூ­தாவுத் (4193) திர்­மிதி (2300)

நல்ல நண்­பர்­களால் ஒரு மனிதன் சுவ­னத்தை நோக்கி அழைத்துச் செல்­லப்­ப­டு­கின்ற அதே வேளை தீய, மோச­மான நண்­பர்­களால் அவன் சீர­ழிந்து வழி­கெட்டுப் போகின்ற துர­திஷ்­ட­வச நிலையும் ஏற்­பட்டு விடு­கின்­றது, எனவே நாம் யாரை நேசிக்­கின்றோம் யாரோடு நெருங்கிச் செல்­கின்றோம், நாம் மர­ணித்தால் மறு­மையில் நாம் யாரோடு இருக்க ஆசை வைக்­கின்றோம் போன்ற விட­யங்­களில் நாம் அதிக கரி­சனை காட்ட வேண்டும்.

அல்­லாஹ்வின் தூதரே ஒரு மனிதர் (நன்) மக்­களை நேசிக்­கிறார். ஆனால் (செயல்­பாட்­டிலும் சிறப்­பிலும்) அவர்­களை அவரால் எட்ட முடி­ய­வில்லை. (இவரைக் குறித்­து நீங்கள் என்ன கரு­து­கி­றீர்கள்?) என்று நபி (ஸல்) அவர்­க­ளிடம் வின­வப்­பட்­டது. நபி (ஸல்) அவர்கள் மனிதன் யார் மீது அன்பு வைத்­துள்­ளானோ அவர்­க­ளுடன் தான் இருப்பான் என்று கூறி­னார்கள்.

அறி­விப்­பவர்: அபூ­மூசா (ரழி)
நூல்: புஹாரி (6170)

சினிமா நட்­சித்­தி­ரங்கள்,விளை­யாட்டு வீரர்கள், சாத­னை­யா­ளர்கள் மீது இயல்­பா­கவே எமது சிறு­வர்­க­ளுக்கும் இளை­ஞர்­க­ளுக்கும் ஒரு வகை­யான அன்பும் நேசமும் ஏற்­ப­டு­கின்­றன. அதன் விளை­வாக அவர்­களைப் போன்றே நடை, உடை, பாவனை, சிகை அலங்­கா­ரங்­க­ளெல்லாம் மாறி­வி­டு­கின்­றன. இந்த நேசத்தை விடுத்து நமது முன்­மா­தி­ரி­க­ளான உத்­தம நபி­களார் அவர்­க­ளது தோழர்கள், இஸ்­லாத்தை எமக்கு போதித்த இமாம்கள், முன்­னோர்கள், நல்­லோர்­களின் அன்பை எம்­மிலும் எமது சிறார்கள், இளை­ஞர்­களின் இத­யங்­க­ளிலும் உண்டு பண்ண நாம் முயற்­சிக்க வேண்டும்.

அல்­லாஹ்­வுக்­காக நட்புக் கொள்­ப­வர்கள், அவ­னுக்­காக மாத்­திரம் நேசம் கொள்­ப­வர்­க­ளுக்கு கிடைக்­கின்ற சுப­சோ­ப­னங்­களும் வெகு­ம­தி­களும் விலை மதிக்க முடி­யா­தவை, அதனை உலகின் அற்ப சுக­போ­கங்­க­ளுக்கும் இலா­பங்­க­ளுக்கும் விற்று விடக்­கூ­டாது.

நபி­களார் (ஸல்) அவர்கள் கூறி­னார்கள்: அல்லாஹ் மறுமை நாளில் எனக்­காக நேசம் வைத்துக் கொண்­ட­வர்கள் எங்கே? என்­னு­டைய நிழலைத் தவிர வேறு நிழல் இல்­லாத இந்­நாளில் நான் அவர்­க­ளுக்கு எனது நிழலைத் தரு­கிறேன் என்று கூறுவான்.

அறி­விப்­பவர்: அபூ­ஹு­ரைரா (ரழி)
நூல்: முஸ்லிம் (4655)

அல்­லாஹ்வின் அடி­யார்­களில் சிலர் இருக்­கி­றார்கள். அவர்கள் நபி­மார்­களும் அல்ல. இறை­வனின் பாதையில் உயிர் நீத்­த­வர்­களும் அல்ல. இவர்­க­ளுக்கு அல்­லாஹ்­வி­டத்தில் கிடைக்கும் அந்­தஸ்த்தைப் பார்த்து நபி­மார்­களும் தியா­கி­களும் பொறா­மைப்­ப­டு­வார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறி­னார்கள். மக்கள் அவர்கள் யார் என எங்­க­ளுக்குக் கூறுங்கள் அல்­லாஹ்வின் தூதரே என்று கேட்­டார்கள். அதற்கு நபி­ய­வர்கள் தங்­க­ளுக்­கி­டையே இரத்த உற­விற்­கா­கவோ, கொடுத்து வாங்கிக் கொள்ளும் செல்­வங்­க­ளுக்­கா­கவோ அல்­லாமல் அல்­லாஹ்­வுக்­காக ஒரு­வ­ரை­யொ­ருவர் நேசித்துக் கொண்­ட­வர்கள். அல்­லாஹ்வின் மீது சத்­தி­ய­மாக நிச்­ச­ய­மாக அவர்­க­ளு­டைய முகங்கள் ஒளி­யாக இருக்கும். அவர்கள் ஒளியின் மீது இருப்­பார்கள். மக்கள் அஞ்சும் போது அவர்கள் அஞ்­ச­மாட்­டார்கள். மக்கள் கவ­லைப்­படும் போது அவர்கள் கவ­லைப்­பட மாட்­டார்கள் என்று கூறி விட்டு அல்­லாஹ்வின் நேசர்­க­ளுக்கு எந்த பயமும் இல்லை. அவர்கள் கவ­லைப்­ப­டவும் மாட்­டார்கள் என்ற வச­னத்தை படித்­துக்­காட்­டி­னார்கள்.

அறி­விப்­பவர்: உமர் பின் ஹத்தாப் (ரழி)
நூல்: அபூ­தாவூத் (3060)

நபி­களார் (ஸல்) அவர்கள் கூறி­னார்கள்:

“அல்லாஹ் தன்­னு­டைய (அர்ஷின்) நிழலைத் தவிர வேறு நிழலே இல்­லாத மறுமை நாளில் தன்­னு­டைய நிழலில் ஏழு பேருக்கு நிழல் கொடுப்பான்.

1.நீதி­மிக்க ஆட்­சி­யாளர்.

2.இறை வணக்­கத்­தி­லேயே வளர்ந்த இளைஞன்.

3.தனி­மையில் அல்­லாஹ்வை நினைத்து அவ­னு­டைய அச்­சத்தில் கண்ணீர் சிந்­திய மனிதன்.

4.பள்­ளி­வா­ச­லுடன் எப்­போதும் தொடர்பு வைத்துக் கொள்ளும் இத­ய­மு­டை­யவர்.

5.அல்­லாஹ்­வுக்­காக நட்புக் கொண்ட இருவர்.

6.அந்­தஸ்தும் அழகும் உடைய ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்த போது ‘நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்’ என்று கூறியவர்.

7.தம் இடக்கரம் செய்த தர்மத்தை வலக்கரம் கூட அறியாத வகையில் இரகசியமாக தர்மம் செய்தவர்.

அறிவிப்பவர் அபூஹுரைரா (ரழி) நூல்
புஹாரி 6806)

தகாத உறவுமுறைகளுக்கு நாகரிகமான பெயர்களை சூட்டிக்கொள்வதனால் அவை ஒரு போதும் அனுமதிக்கப்பட்டதாக ஆகிவிடப்போவதில்லை, அவை எம்மை மானக்கேடான விடயங்களை நோக்கி நகர்த்தி இம்மையிலும் மறுமையிலும் எம்மை இழிநிலைக்கு அழைத்துச் சென்று விடும், அந்த விடயத்தில் மிகக்கவனமாக நாம் செயல்பட வேண்டும், வஹியின் வழிகாட்டலுக்குள் நின்று நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அது போன்றே உலகியல் நோக்கங்களுக்காக நட்புக்கொள்வதனையும் நேசம் பாராட்டுவதனையும் விட்டு விட்டு இறைவனின் பொருத்தத்துக்காகவும் அவனது உயர்ந்த சன்மானங்களுக்காகவும் அன்பு கொண்டு, நேசம் பாராட்டக்கூடிய மனிதர்களாக வாழ முயற்சிப்போம்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.