ஐரோப்­பிய இஸ்­லா­மி­யர்­களும் யூதர்­களும் இணையும் புள்ளி எது?

0 712

ஐரோப்­பாவின் இஸ்­லா­மி­யர்­களும், யூதர்­களும் இதற்­குமுன் ஒன்று சேராமல் இருந்­தி­ருக்­கலாம். ஆனால் சமீப கால­மாக தங்­க­ளு­டைய மத நம்­பிக்கை சுதந்­தி­ரத்தைப் பாதிக்கும் சட்­டங்­களை எதிர்ப்­ப­தற்கு அவர்கள் ஒன்று சேர்ந்­தி­ருக்­கி­றார்கள்.

பெல்­ஜியம் நாட்டில் ஜன­வரி 1ஆம் திக­தி­யி­லி­ருந்து அமு­லுக்கு வந்­துள்ள சட்டம் சமீ­பத்­திய சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. விலங்­கு­களைக் கொல்­வதைப் பாதிக்கும் வகையில் இது அமைந்­துள்­ளது. கோஷெர் மற்றும் ஹலால் மாமி­சத்­துக்கு உரிய நம்­பிக்­கை­களை இது பாதிக்­கி­றது.

விலங்­குகள் உரிமை இயக்­கத்­தினர் நீண்­ட­கா­ல­மா­கவே இந்தச் சட்டம் வேண்டும் என்று வலி­யு­றுத்தி வந்­தனர். ஆனால் சுதந்­தி­ரத்­துக்­கான செயற்­றிட்டம் என்ற பெயரில் இது யூதர்­க­ளுக்கு விரோ­த­மா­னது, இஸ்­லா­மி­யர்­க­ளுக்கு விரோ­த­மா­னது என்று அவர்கள் கூறு­கின்­றனர்.

ஜெர்­ம­னியில் நாஜி ஆட்சிக் காலத்தில் விலங்­கு­களை உணர்­வற்ற நிலைக்கு கொண்டு செல்­லாமல் வெட்டக் கூடா­தென்று தடை விதித்து 1933இல் இதே­போன்ற விவா­தத்தை உரு­வாக்­கினார் அடால்ஃப் ஹிட்லர்.

விலங்­குகள் உரி­மையும் மத சுதந்­தி­ரமும்

விலங்­கு­களை மாமி­சத்­துக்­காக கொல்­வ­தற்கு முன்­ன­தாக அவற்றை உணர்­வற்ற நிலைக்கு உட்­ப­டுத்த வேண்­டு­மென்று ஐரோப்­பிய சட்டம் கூறு­கி­றது. இவ்­வாறு செய்­வதால் இறக்­கும்­போது அவை துய­ரப்­ப­டாமல் அல்­லது வலியை உண­ராமல் இருக்கும் என்று சொல்­லப்­பட்­டுள்­ளது.

விலங்­கு­களை கொல்­வ­தற்கு முன்னால், அவற்றை அசை­வற்ற நிலைக்கு அல்­லது சுய­நி­னை­வற்ற நிலைக்கு கொண்டு செல்லும் நடை­மு­றைதான், உணர்­வற்ற நிலை எனப்­ப­டு­கி­றது.

ஆனால், மத­வ­ழக்­கப்­படி கொல்­வ­தற்கு, ஒரே முறை தொண்­டையில் துல்­லி­ய­மாக வெட்டிக் கொலை செய்­வதைக் கட்­டா­ய­மாக்கும் நடை­மு­றைக்கு அந்த நாடுகள் விலக்­க­ளிக்­கலாம்.

விலங்­குகள் இறக்­கும்­போது தேவை­யில்­லாமல் துன்­பத்தை அனு­ப­விக்கும் நிலை ஏற்­ப­டு­கி­றது என்று விலங்­குகள் நல ஆர்­வ­லர்கள் கூறு­கின்­றனர். ஆனால் தங்­க­ளுடை மத வழக்­கத்­தின்­படி செய்­வது வலி ஏற்­ப­டுத்­தாத நடை­முறை என்று மதத் தலை­வர்கள் கூறு­கின்­றனர்.

உட­ன­டி­யாக மரணம் ஏற்­ப­டு­கி­றது என்றும் விலங்­குகள் துய­ரப்­ப­டு­வதைத் தடுக்கும் வகையில் பல நூற்­றாண்­டு­க­ளாக இந்த உத்தி கையா­ளப்­ப­டு­கி­றது என்றும் அவர்கள் தெரி­விக்­கின்­றனர்.

இந்த இரு­த­ரப்பு வாதங்­க­ளுக்­கி­டையில் சமன்­பாட்டை ஏற்­ப­டுத்தும் வகையில், நெதர்­லாந்து, ஜெர்­மனி, ஸ்பெயின், சைப்ரஸ் போன்ற ஐரோப்­பிய நாடுகள், மத சம்­பி­ர­தாய அடிப்­ப­டை­யி­லான இறைச்­சிக்­கூ­டங்­க­ளுக்கு கடு­மை­யான விதி­களை அமுல்­ப­டுத்­தி­யுள்­ளன.

ஆஸ்­தி­ரியா, கிரீஸ் போன்ற நாடுகள் விலங்­குகள் வெட்­டப்­பட்­டதும் உணர்­வற்ற நிலைக்கு உட்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்று கூறி­யுள்­ளன. பெல்­ஜி­யத்தின் மூன்று பகு­தி­களில் – பிளாண்டர்ஸ் மற்றும் வலோ­னியா – என்ற இரண்டு பகு­திகள், டென்மார்க், ஸ்வீடன், ஸ்லோவே­னியா, நோர்வே, ஐஸ்­லாந்து நாடு­க­ளுடன் இணைந்து, வெட்­டு­வ­தற்கு முன்­ன­தாக உணர்­வற்ற நிலைக்கு உட்­ப­டுத்த விலக்­க­ளிக்­காமல் உள்­ளன.

உண­வுக்­காக விலங்­கு­களைக் கொல்­வது மட்டும் மத சம்­பி­ர­தாய அடிப்­ப­டையில் ஐரோப்­பாவின் யூதர்கள் மற்றும் இஸ்­லா­மி­யர்­களை ஒன்று சேர்க்­க­வில்லை. வேறு சில வட்­டங்­க­ளிலும் இது விமர்­ச­னங்­களை உரு­வாக்­கி­யுள்­ளது.

சுன்னத் செய்­வதும் குழந்­தைகள் உரி­மையும்

கடந்த ஐந்­தாண்­டு­க­ளுக்கு முன்பு ஐஸ்­லாந்து நாட்டில் மருத்­துவக் கார­ணங்­க­ளுக்­காக அல்­லாமல் சுன்னத் செய்­வ­தற்குத் தடை செய்யும் மசோதா முன்­மொ­ழி­யப்­பட்டு, கடும் எதிர்ப்பு கார­ண­மாக ஐஸ்­லாந்து நாடா­ளு­மன்­றத்தில் கைவி­டப்­பட்­டது. யூதர்­களும், இஸ்­லா­மி­யர்­களும் சுன்னத் செய்து கொள்­கி­றார்கள்.

நான்கு வயது இஸ்­லா­மிய சிறு­வனின் உடலில் நிரந்­த­ர­மான மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வது, அவ­னு­டைய மத நம்­பிக்­கை­களை முடிவு செய்யும் குழந்­தைகள் உரி­மையைப் பாதிக்கும் செயல் என்று நீதி­மன்றம் கூறி­ய­தை­ய­டுத்து 2012இல் ஜெர்­ம­னியில் சிறிது காலம் சுன்னத் தடை செய்­யப்­பட்­டி­ருந்­தது.

“மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற முடி­யாத அள­வுக்கு உட­ல­மைப்பில் கடு­மை­யான மாற்றம் செய்­வதை பெற்­றோ­ரு­டைய உரி­மை­களோ அல்­லது மத சுதந்­தி­ரமோ நியா­யப்­ப­டுத்த முடி­யாது” என்று நீதி­மன்றம் கூறி­யி­ருந்­தது.

அந்தத் தீர்ப்பு ஆறு மாதங்­களில் ரத்து செய்­யப்­பட்­டது. ஆனால் அந்தச் சட்டம் தங்­க­ளு­டைய நம்­பிக்­கை­க­ளின்­ப­டி­யான செயற்­பாட்­டுக்குத் தடை விதிப்­ப­தாக இருந்­தி­ருக்கும் என்று இஸ்­லா­மி­யர்­களும், யூதர்­களும் வாதங்­களை முன்­வைத்­தனர்.

அர­சியல் செயல் திட்டம்’

வல­து­சாரி தேசி­ய­வாத கட்­சிகள் இது­போன்ற முயற்­சி­களைப் பொது­வாக ஆத­ரிக்­கின்­றன என்ற உண்மை, இந்த சர்ச்­சை­க­ளுக்கு உள்ள அர­சியல் கண்­ணோட்­டத்தைச் சேர்க்­கி­றது.

விலங்­குகள் நல உரிமை மற்றும் குழந்­தைகள் நல உரிமை ஆர்­வ­லர்­களின் ஆத­ரவைக் கருத்தில் கொண்டு, குடி­யேற்­றத்­துக்கு எதி­ரான நாட்­டங்­க­ளுக்கு உதவும் வகையில் அர­சி­யல்­வா­திகள் வெற்­றி­களைப் பெற முடியும்.

பெல்­ஜியம் நாட்டில், பிளாண்டர்ஸ் பிராந்­தி­யத்தில் தேசி­ய­வாத சார்­பு­டைய விலங்­குகள் நலத்­துறை அமைச்சர் பென் வெயிட்ஸின் முயற்­சியால் இந்தத் தடை விதிக்­கப்­பட்­டது.

2017இல் இந்த மசோதா பிராந்­திய நாடா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்ட போது, “பெரு­மைக்­கு­ரிய விலங்­குகள் நல அமைச்சர், ஃபிளெமிஷ் (டச்சு மொழியின் ஃபிளெமிஷ் வட்­டார வழக்கைப் பேசு­பவர்) ஆக இருப்­பதில் பெருமை” என்று வெயிட்ஸ் ட்விட்­டரில் பதிவு செய்தார்.

பெல்­ஜி­யத்தில் 2014இல் நடந்த நாஜி­க­ளுடன் இணைந்து செயற்­பட்­டவர் ஒரு­வரின் 90ஆவது பிறந்­தநாள் விழாவில் கலந்து கொண்­ட­போது அவ­ருக்கு எதி­ராகக் கடு­மை­யான விமர்­ச­னங்கள் எழுந்­தன.

ஆண்ட்வெர்ப் பகு­தியைச் சேர்ந்த ரப்பி யாக்கோவ் டேவிட் ஸ்ச்மஹல் நியூயோர்க் டைம்ஸ் பத்­தி­ரி­கைக்கு அளித்த பேட்­டியில், “ஜெர்­ம­னியில் இந்தச் சட்­டங்கள் அறி­முகம் செய்­யப்­பட்ட, இரண்டாம் உலகப் போருக்கு முந்­தைய அதே சூழ்­நி­லை­களை இது கொண்டு வந்­தி­ருக்­கி­றது” என்று கூறினார்:

களங்கம் ஏற்­ப­டுத்தும் முயற்­சியா?

விலங்­கு­களைப் பாது­காப்­ப­தை­விட, சில மதக் குழுக்­க­ளுக்கு எதி­ராக களங்கம் ஏற்­ப­டுத்தும் மறை­மு­க­மான முயற்­சிதான் இந்தத் தடை உத்­த­ரவு நட­வ­டிக்கை என்று இஸ்­லா­மிய அமைப்­பு­களின் வழக்­க­றிஞர் ஜூஸ் ரோயட்ஸ், டைம்ஸ் இத­ழுக்­குக்கு அளித்த பேட்­டியில் கூறி­யுள்ளார்.

ஆனால், பெல்­ஜிய விலங்­குகள் உரிமைக் குழு­வான Global Action in the Interest of Animals அமைப்பு, இது­போன்ற குற்­றச்­சாட்­டு­களை ட்விட்­டரில் மறுத்­துள்­ளது.

மத சம்­பி­ர­தா­யப்­படி விலங்­கு­களைக் கொல்­வதைத் தடை செய்யும் வகையில் பெல்­ஜி­யத்தின் சட்டம் உள்­ளது என்­ப­தையும் அந்தக் குழு நிரா­க­ரித்­துள்­ளது.

தொண்டையை அறுக்கும் போது – அந்த விலங்கு கொல்லப்படாமல் – மயக்கநிலைக்கு கொண்டு செல்லப்பட்டால் – அது ஏற்புடையது என்று கருதப்படும் மத சம்பிரதாயப்படி விலங்குகளைக் கொல்லும் நிகழ்வுகள் உள்ளன என்று அந்தக் குழு தெரிவித்துள்ளது.

ஆனால், இந்த விளக்கத்தை இஸ்லாமிய மற்றும் யூத மதத் தலைவர்கள் எப்போதும் ஏற்றுக்கொள்வதில்லை. ஐரோப்பிய சட்டங்கள் மற்றும் மாண்புகளுடன் உரசலைக் கொண்ட மத சம்பிரதாயங்களில் விரிவான கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக அரசியல்வாதிகள் மற்றும் வெற்றிபெற்று வரும் ஆர்வலர்களுக்கிடையில், இந்த விவாதங்கள் சற்றுக் குறைந்து வருவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.

நன்றி : பி.பி.சி. தமிழ்
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.