தேசிய அணியில் இடம்பிடிப்பேன்

0 1,041

நேர்­காணல் : பஸ்னா பாயிஸ், மட­வளை

கண்டி, மட­வளை மதீனா கிரிக்கட் அணியின் முன்னாள் வலது கை வேகப் பந்து வீச்­சாளர் சிராஸ் ஷஹாப், அயர்­லாந்து அணிக்­கெ­தி­ரான உத்­தி­யோ­க­பூர்­வ­மற்ற டெஸ்ட் தொடரின் மூலம் முதல் தட­வை­யாக இலங்கை ‘ஏ’ அணிக்­காக விளை­யாடும் வாய்ப்பைப் பெற்­றுள்ளார்.

BRC கிரிக்கட் கழ­கத்­திற்­காக தற்­போது விளை­யாடும் சிராஸ் ஷஹாப், இந்த பருவ காலத்­திற்­கான இலங்கை கிரிக்கட் சபையின் மேஜர் எமர்ஜிங் லீக் முதல் தர கிரிக்கட் தொடரில் இது­வ­ரையில் 4 போட்­டி­களில் பங்­கேற்று 17 விக்­கட்­டுக்­களை கைப்­பற்­றி­யி­ருக்­கிறார்.இதே­வேளை கடந்த ஆண்டு நடை­பெற்ற வர்த்­தக நிறு­வ­னங்­க­ளுக்­கி­டை­யி­லான ரி20 கிரிக்கட் தொடரில் ஜோன் கீல்ஸ் அணிக்­காக 2 போட்­டி­களில் மாத்­திரம் விளை­யா­டி­யி­ருந்த இவர், அவற்றில் 5 விக்­கட்­டு­களை தன­தாக்கிக் கொண்டார் .

அதே நேரம் கடந்த ஆண்டு 23 வய­துக்கு கீழ்ப்­பட்ட மாகாண அணிகளுக்­கி­டை­யி­லான கிரிக்கட் தொடரில் மத்­திய மாகாண அணிக்­காக விளை­யாடி 26 விக்­கட்­டுக்­க­ளுடன் குறித்த தொடரில் அதிக விக்­கட்­டுக்­களை கைப்பற்­றிய வீர­ரா­கவும் சாத­னையை நிலை நாட்­டினார். இப் பின்­ன­ணி­யி­லேயே இவர் தற்­போது இலங்கை ‘ஏ’ அணிக்­காக விளை­யாடும் வாய்ப்பைப் பெற்­றுள்ளார். சிராஸ் ஷஹாபின் இந்த அடைவு குறித்து ‘விடி­வெள்ளி’ அவரை சந்­தித்துப் பேசி­யது.

Q உங்­களைப் பற்றி சுருக்­க­மாக அறி­மு­கப்­ப­டுத்த முடி­யுமா?

13.02.1995 இல்  மட­வ­ளையில் பிறந்தேன்.  ஆரம்பம் முதல் உயர்­கல்வி வரை மட­வளை மதீ­னாவில் தான் கல்வி கற்றேன். ஒரு நடுத்­தர வர்க்க குடும்­பத்தை சேர்ந்­தவன். எனது குடும்­பத்தைப் பொறுத்­த­மட்டில் தந்தை எம்.எச். ஷஹாப், தாய் ஜே.யு ஸரீகா. ஒரு சகோ­த­ரனும் சகோ­த­ரியும் இருக்­கி­றார்கள்.

Q கிரிக்கட் விளை­யாட்டில் ஈடு­பாடு எவ்­வாறு வந்­தது?

எனது சிறு­வ­ய­தி­லேயே நான் விளை­யாட்டு என்ற ரீதியில் முதலில் விளை­யாடப் பழ­கி­யது கிரிக்கட் தான். அதுவும் நண்­பர்­க­ளுடன் பொழுது போக்­கிற்­காக  விளை­யா­டினேன். பாட­சா­லையில் கற்கும் காலங்­களில் பாட­சாலை அணியில் எவ்­வா­றா­யினும் இணைய வேண்டும் என்­ப­தற்­காக வெகு­வாக கஷ்­டப்­பட்டேன். தீவிர முயற்­சி­களின் மூலமும் பயிற்­சி­களின் மூலமும் அந்த வாய்ப்பு கிடைத்­தது . எனது பய­ணத்­திற்­கான களமும் கிடைத்­தது. பங்­கு­பற்­றிய ஒவ்­வொரு போட்­டியும் என்னுள் ஆர்­வத்தைத் தூண்­டி­யது. இன்னும் முயற்­சிக்க  வேண்டும், என்னால் இன்னும் முடியும் என்ற எண்­ணத்தை என்னுள் தோற்­று­வித்­தது. அந்த வகை­யில்தான் இப்­போது ஏ அணியில் சந்­தர்ப்பம் கிடைத்­தி­ருக்­கி­றது.

Q இலங்­கையின் தேசிய  கிரிக்கட் ‘ஏ’  அணியில் இடம்­பி­டித்­தி­ருப்­பது பற்றி?

எத்­த­னையோ போட்­டி­களில் இதற்கு முன் கலந்­து­கொண்டு விளை­யா­டி­யி­ருக்­கிறேன். எனினும் ஏ அணி மூலம் இப்­போட்­டியில் பங்கு பற்ற வாய்ப்பு கிடைத்­தி­ருப்­பது மகிழ்ச்­சி­யாக இரு­கின்ற அதே வேளை ஒரு வகை­யான பதற்­றத்­தையும் உணர்­கின்றேன். இந்த செய்­தியை நான் தெரிந்து கொண்ட போது  அடைந்த மகிழ்ச்­சியை விட பெற்­றோ­ரிடம் அதனைப் பகிரும் போது ஏற்­பட்ட மகிழ்ச்­சியை வார்த்­தை­களால் வர்­ணிக்க முடி­யாது.  இதற்­காக எனக்கு உத­விய அனை­வ­ரையும் இந்த இடத்தில் நன்­றி­யுடன் நினைவு கூரு­கிறேன்.

ஆனாலும் இதனை ஒரு சாதனை என்றோ இதுதான் எனது இலக்கு என்றோ கூற விரும்­ப­வில்லை. இதனை எனது கிரிக்கட் வாழ்க்­கையின் ஆரம்பம் என்றே  கரு­து­கிறேன்.

 

Q கிரிக்கட் துறையில் தேசிய அணி வரை மேலும் முன்­னே­று­வதில் உள்ள சவால்­க­ளாக எவற்றைக் கரு­து­கி­றீர்கள்?

கிரிக்கட் விளை­யாட்டு என்­பதே சவால்­க­ளுடன் கூடிய விளை­யாட்டு தான். தேசிய அணியில் இடம் பெற வேண்டும் என்றால் தொடர்ந்து முயற்­சிக்க வேண்டும். இலங்­கையின் தேசிய ‘ஏ’ கிரிக்கட் அணியில்  விளை­யாட கிடைத்­தி­ருக்கும் வாய்ப்பு  எனது திற­மையை வெளிப்­ப­டுத்த கிடைத்­துள்ள மிகச் சிறந்த சந்­தர்ப்­ப­மாகும். அந்த வகை­யிலும் எல்லா சவால்­க­ளையும் முறி­ய­டித்து தேசிய அணியில் இடம்­பி­டிப்பேன். இன்ஷா அல்லாஹ்.

 

Q இத்­து­றையில் பய­ணிக்கும் போது எப்­போ­தா­வது மனம் சோர்ந்­த­துண்டா?

நிறைய சந்­தர்ப்­பங்கள் இருக்­கின்­றன. பாட­சா­லையில் கற்கும் காலங்­களில்  கிரிக்கட் பயிற்­சி­க­ளில் காட்­டிய ஆர்­வத்தை கல்வி கற்­பதில் செலுத்த முடி­ய­வில்லை.  ஒரு போராட்­டத்­துடன் தான் இரண்­டையும் எதிர் கொண்டேன்.  சில போட்­டி­களில் விளை­யா­டும்­போது தலை குனிய வேண்­டிய நிலை­மை­களும் ஏற்­பட்­டி­ருக்­கின்­றன. அச்­சந்­தர்­ப்பங்­களில் பயிற்­று­விப்­பா­ளர்­களின் ஊக்­கு­விப்­புக்­களே எனக்கு பக்க பல­மா­கவும் உந்­து­சக்­தி­யா­கவும் அமைந்­தன.

நான் ஒரு வேகப் பந்து வீச்­சாளர் என்ற வகையில் உடல் சார்ந்த உபா­தை­க­ளுக்கும் உள்­ளா­கி­யி­ருக்­கிறேன்.  அச் சந்­தர்ப்­பங்­களில் சற்று மனம் தளர்ந்து விடு­வ­து­முண்டு. பின்னர் நானே மனதை திடப்­ப­டுத்திக் கொண்டு போட்­டி­களில் கள­மி­றங்­குவேன்.  தற்­போது வெற்­றி­யையும் தோல்­வி­யையும் ஏற்றுக் கொண்டு முன்­னேக்கிப் பய­ணிக்­கின்ற அள­வுக்கு நான் பக்­கு­வ­ம­டைந்­துள்ளேன் என நினைக்­கிறேன்.

Q கிரிக்கெட் துறையில் நீங்கள் முன்­மா­தி­ரி­யாக கருதும் வீரர் யார்?

நுவன் குல­சே­கர

 

Q நுவன் குல­சே­க­ரவை நீங்கள் முன்­மா­தி­ரி­யாக கரு­து­வ­தற்­கான காரணம்?

எனக்கு சிறு­வ­யதில் இருந்தே பந்து வீச்சில் ஓர் ஆர்வம் இருந்­தது. அவரைப் பின்­பற்றி பந்து வீசவும் கற்­றுக்­கொண்டேன். தற்­போது அவரைப் பின்­பற்றி பந்து வீசு­வது இல­கு­வாக உள்­ளது. நம் நாட்டு வீரர் என்­ற­வ­கையில் நான் பங்­கு­பற்­றிய கழ­கத்தின் மூலம் அவ­ருடன் இணைந்து விளை­யா­டு­வ­தற்­கான வாய்ப்பு கிடைத்­தது. இதன்­போது அவ­ரது அனு­ப­வங்­க­ளையும் என்­னுடன் பகிர்ந்து கொண்டார்.அறி­வு­ரை­க­ளையும் வழங்­கினார்.வரும் காலத்தில் நுவன் குல­சே­கர போன்று ஒரு வேகப் பந்து வீச்­சா­ள­ராக தேசிய அணியில் இடம் பிடிப்­பதே எனது கன­வாகும்.

 

Q உங்­க­ளது கிரிக்கெட் பய­ணத்தில் மறக்க முடி­யாத நாட்கள் பற்றி?

நான் தேசிய கிரிக்கட் ‘ஏ’ அணியில் போட்­டி­யி­டு­வ­தற்­காக தெரிவு செய்­யப்­பட்­டுள்ளேன் என்ற செய்­தியை அறிந்து கொண்ட அன்­றைய நாள்.  மற்றும் Mobital  36 th  OBSERVER  school boy cricketer of the  year -2014 இல் நான் முத­லிடம் பெற்றுக் கொண்­ட­போது அந்த வெற்­றியை எனது முழு ஊரும் சேர்ந்து கொண்­டா­டிய தினம். இவ்­விரு தினங்­க­ளிலும் நான் அடைந்த மகிழ்ச்சி எல்­லை­யற்­றது. நிச்­ச­ய­மாக இவ்­விரு தினங்­க­ளையும் என் வாழ்­நாளில் மறக்க முடி­யாது.

 

Q சிறு­பான்மை இனத்­த­வர்கள் தேசிய அணியில் இடம்­பி­டிப்­பது இல­கு­வா­ன­தல்ல. இன ரீதி­யான பாரா­பட்­சங்­களை எதிர்­கொள்ள வேண்டி வரும் என்ற ஒரு பொது­வான அபிப்­பி­ராயம் நில­வு­கி­றது. உங்­க­ளது அனு­ப­வத்தில் இதனை எப்­படிப் பார்க்­கி­றீர்கள் ?

நிச்­ச­ய­மாக இல்லை. இதனை முற்­றாக மறுக்­கிறேன். பொது­வா­கவே சக­லரும் என்­னிடம் கேட்கும் கேள்­வியும் இது தான். இது வரை காலமும் நான் பங்­கு­பற்­றிய போட்­டி­க­ளா­கட்டும், பயிற்­று­வித்த பயிற்­று­விப்­பா­ளார்­க­ளா­கட்டும் என்­னிடம் எவ்­வித பாகு­பாட்­டையும் காட்­டி­ய­தில்லை. என்னைப் பொறுத்­த­மட்டில் என்னால் முடி­யு­மான முயற்­சி­களைச் செய்து கொண்­டுதான் இருக்­கின்றேன். எனது திற­மையை வெளிப்­ப­டுத்தும் சந்­தர்­பத்தில் எனக்­கான இடம் கிடைக்கும் என்ற நம்­பிக்கை இருக்­கின்­றது.

 

Q உங்கள்  எதிர்­கால இலட்­சியம் என்ன?

ஒரு வேகப் பந்து வீச்­சா­ள­ராக இலங்கை தேசிய அணியில் இடம்­பெற்று தாய் நாட்­டுக்­காக விளை­யாடும் வாய்ப்பை பெற­வேண்டும். அதன் மூலம் எனது நாட்­டுக்கு பெருமை சேர்க்க வேண்டும்.

 

Q இச் சந்தர்ப்பத்தில் யாருக்காவது நன்றி செலுத்த வேண்டும் என நினைக்கின்றீரா?

நிச்சயமாக. முதற்கண் இறைவனுக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளேன். எனது பெற்றோர், என்னை பயிற்றுவித்த பயிற்றுவிப்பாளர்கள், எனது குடும்பத்தினர் ,எனது நண்பர்கள் , மதீனாவின் ஆசிரியர்கள்,  மேலும் எனது ஊர் மக்கள் சகலருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றி கூற வேண்டும்.

உண்மையாக கூறுவதானால் எனது வெற்றியின் பக்க பலமாக இருந்தவர்களுக்கு நன்றி செலுத்துவற்கான சந்தர்ப்பம் இதுவரை கிடைக்கவில்லை. இந்த நேர்காணல் ஊடாக அவர்களுக்கு எனது நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.