அரசியலை உதைப்பந்தாட்டத்துடன் முடிச்சுப்போடத் தேவையில்லை

கட்டார் தெரிவிப்பு

0 624

ஐக்­கிய அரபு அமீ­ர­கத்தில் ஆரம்­ப­மா­க­வுள்ள 2019 ஏ.எப்.சி. ஆசிய கிண்ண உதை­ப்பந்­தாட்டப் போட்­டி­களில் பங்­கேற்­ப­தற்­கான ஆயத்­தங்­களை கட்டார் மேற்­கொண்­டுள்ள அதே­வேளை, அய­லி­லுள்ள வளை­குடா நாடு­க­ளு­ட­னான இரா­ஜ­தந்­திர முரண்­பா­டுகள் விளை­யாட்டு மைதா­னத்­திற்கு வெளியே இருக்க வேண்­டு­மென கட்டார் நாட்டின் தேசிய அணி எதிர்­பார்க்­கின்­றது.

ஒரு மாத­காலம் நடை­பெ­ற­வுள்ள இப்­போட்­டிக்­காக 25 பேர் கொண்ட கட்டார் விள­யாட்டு வீரர்­களைக் கொண்ட அணி, பயிற்­று­விப்­பா­ளர்கள் மற்றும் அதி­கா­ரிகள் அடங்­கிய குழு தனிப்­பட்ட ஜெட் விமா­னத்தில் குவைத் ஊடாகப் பய­ணித்து அமீ­ரக நக­ரான அல்-­ – அய்னை கடந்த சனிக்­கி­ழமை வந்­த­டைந்­தது.

அர­சியல் பதற்ற நிலைமை மைதா­னத்­திற்கு வெளியே இருந்­த­போ­திலும், புதன்­கி­ழ­மை­யன்று தமது முத­லா­வது போட்­டி­யினை லெப­னா­னுக்கு எதி­ராக விளை­யாடி போட்­டி­யினை ஆரம்­பிப்­ப­தற்கு ஆவ­லாக இருப்­ப­தாக கட்டார் உதை­ப்பந்­தாட்டச் சங்­கத்தின் ஊடக அதி­காரி அலி அல்-­சலாத் தெரி­வித்தார்.

‘அவர்கள் விளை­யாட்டு வீரர்கள், அவர்கள் உதைப்­பந்­தாட்­டத்தில் ஈடு­ப­டப்­போ­கி­றார்கள், அர­சி­யலை உதை­ப்பந்­தாட்­டத்­துடன் முடிச்­சுப்­போடத் தேவை­யில்லை.

இறு­தியில் விளை­யாட்டு சமா­தா­னத்­திற்­கான செய்­தியைக் கொண்­டுள்­ளது. எனவே இத­னைத்தான்  நாம் செய்யப் போகின்றோம். நல்­ல­மு­றையில் இந்தச் சுற்­றுப்­போட்­டியில் நாம் எமது நாட்டை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்த விரும்­பு­கின்றோம்’ எனவும் அலி அல்-­சலாத் தெரி­வித்தார்.

கட்டார், குழு ஈ இல் இடம்­பெற்­றுள்­ளது, இதே அணி­யி­லேயே கட்­டாரின் எதிரி நாடான சவூதி அரே­பி­யாவும் காணப்­ப­டு­கின்­றது. இது தவிர வட கொரியா மற்றும் லெபனான் ஆகி­ய­னவும் இடம்­பெற்­றுள்­ளன.

மிகவும் ஆவ­லோடு எதிர்­பார்க்­கப்­படும் கட்டார் மற்றும் சவூதி அரே­பி­யா­வுக்­கி­டை­யி­லான போட்டி ஜன­வரி மாதம் 17 ஆம் திகதி அபு­தா­பியின் ஸெயிட் விளை­யாட்டு நகர விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெ­ற­வுள்­ளது.

இதற்கு முன்­ன­ரான நான்கு தட­வை­களில் காலி­று­தி­யினை ஒரு­போதும் தாண்­டி­ய­தில்லை.

ஒரு மாத காலம் நடை­பெ­ற­வுள்ள இவ்­வி­ளை­யாட்டு நிகழ்வில் வளை­குடா நெருக்­க­டியின் நிழல் காணப்­ப­டு­கி­றது என்­பது கடந்த வியா­ழக்­கி­ழமை கட்டார் உதை­ப்பந்­தாட்டச் சங்­கத்தின் உப தலைவர் சாஒட் அல்-­மோ­ஹன்­னடி ஐக்­கிய அரபு அமீ­ர­கத்­தினுள் நுழை­வ­தற்கு அனு­மதி மறுக்­கப்­பட்­டதன்  மூலம் தெரிய வந்­தது. இறு­தி­யாக வெள்­ளிக்­கி­ழ­மையே அவர் ஐக்­கிய அரபு அமீ­ர­கத்தை வந்­த­டைந்தார்.

ஐக்­கிய அரபு அமீ­ரக அதி­கா­ரி­க­ளி­ட­மி­ருந்து அனு­மதி கிடைக்­கா­ததால் விமா­னத்தில் ஏறு­வ­தற்கு அவர் அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை என விமான சேவை அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர்.

கட்­டாரைத் தள­மாகக் கொண்ட சில ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கும் அமீ­ர­கத்­திற்குச் சென்று செய்தி சேக­ரிப்­ப­தற்கு அனு­மதி மறுக்­கப்­பட்­டுள்­ள­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

துபாய் விமான நிலை­யத்தில் சுமார் 13 மணித்­தி­யா­லங்கள் காத்­தி­ருந்த பின்னர் தோஹா­வுக்குத் திரும்­பி­யுள்­ளனர்.

எங்­க­ளுடன் அல் காஸ் மற்றும் பீஇன் ஸ்போட்ஸ் ஆகி­ய­வற்றைச் சேர்ந்த ஊட­க­வி­ய­லா­ளர்கள் இருக்­கின்­றனர், எனினும், உள்ளூர் பத்­தி­ரி­கை­களின் ஊட­க­வி­ய­லா­ளர்கள் வர­வில்லை என சலாத் தெரி­வித்தார்.

இரா­ஜ­தந்­திர நெருக்­கடி ஆரம்­பிக்­கப்­பட்ட பின்னர் கடந்த ஜூன் 2017 இல் கட்­டாரைத் தள­மாகக் கொண்ட பீஇன் ஊட­கத்­திற்கு அமீ­ரகம் தற்­கா­லிகத் தடை விதித்­தது.

பெப்­ர­வரி முதலாம் திகதி வரை நடை­பெ­ற­வுள்ள இப்­போட்­டி­களின் பிரத்­தி­யேக ஒளி­ப­ரப்­பா­ள­ராக பீஇன் செயற்­ப­ட­வுள்­ளது.

இத­னி­டையே, எம்­மிடம் இளம் தலை­மு­றை­யினர் இருக்­கின்­றனர், அணி­யி­லுள்­ள­வர்­களின் சரா­சரி வயது 24 ஆகும், 24 நாடுகள் பங்­கு­பற்றும் ஆசியக் கிண்ணப் போட்டி 2022ஆம் ஆண்டு கட்­டாரில் நடை­பெ­ற­வுள்ள உலகக் கிண்ணப் போட்­டிக்­கான அனு­ப­வங்­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கும் உலகக் கிண்­ணத்­திற்கு தம்மை தயார் படுத்திக் கொள்­வ­தற்­கான பயிற்­சி­யா­கவும் அமையும் என சலாத் குறிப்­பிட்டார்.

2010 ஆம் ஆண்டு அவுஸ்­தி­ரே­லியா, ஜப்பான், தென் கொரியா, மற்றும் ஐக்­கிய அமெ­ரிக்கா ஆகிய நாடு­களைத் தோற்­க­டித்து உலகக் கிண்ணப் போட்­டி­களை நடத்தும் முத­லா­வது அரபு நாடு எனும் அந்­தஸ்த்தை கட்டார் பெற்­றது.

கட்டார் பயங்­க­ர­வா­தத்­திற்கு ஆத­ர­வ­ளிப்­ப­தா­கவும் வளை­குடா ஒத்­து­ழைப்பு நாடு­களின் அங்­கத்­த­வர்­க­ளுடன் 2014 ஆம் ஆண்டு செய்­து­கொள்­ளப்­பட்ட உடன்­ப­டிக்­கை­யினை மீறியதாகவும் குற்றம்சாட்டி கடந்த 2017 ஜூன் மாதம் 05 ஆம் திகதி சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் தமது கட்டாருடனான இராஜதந்திர மற்றும் வர்த்தகத் தொடர்புகளை தரை, வான் மற்றும் கடல் மார்க்கங்களை தடை செய்தன.

இந்தத் தடைகள் 20 ஆவது மாதத்தை எட்டியுள்ள வேளையில் இச் சுற்றுப்போட்டி இடம்பெறவுள்ளது.

கட்டார் இந் நான்கு நாடுக ளினதும் குற்றச்சாட் டுக்களை தொடர்ச்சியாக மறுத்து வருகின் றமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.