இலங்கையில் அனர்த்தங்களுக்கான வாய்ப்புகள் அதிகரித்து செல்கின்றன

0 3,781

பொறியியலாளர் அஸ்லம் சஜா தற்போது தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றுகிறார். 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் பின்னர் பல தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து அனர்த்த முகாமைத்துவப் பணிகளில் ஈடுபட்ட அனுபவத்தைக் கொண்டவர். சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு சரியாக 14 ஆண்டுகள் பூர்த்தியாகும் இன்றைய நாளில் அனர்த்த பாதுகாப்பு தொடர்பில், பொறியியலாளர் அஸ்லம் சஜா, ‘விடிவெள்ளி’ க்கு வழங்கிய நேர்காணலை இங்கு தருகிறோம்.

 

Q உலகின் பல பாகங்­க­ளி­லு­முள்ள    நாடு­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் இலங்கை அதிக அனர்த்த பாதிப்­புக்­குள்­ளா­கக்­கூ­டிய நாடாக கணிப்­பி­டப்­பட முடி­யுமா?

இலங்­கையின் மக்கள் தொகையில் 17 வீத­மா­ன­வர்கள் அனர்த்­தங்­க­ளினால் மிகக்­க­டு­மை­யாகப் பாதிக்­கப்­ப­டக்­கூ­டிய பகு­தி­களில் வாழ்­கின்ற அதே­நேரம், 70 வீத­மான மக்கள் அனர்த்­தங்­க­ளினால் பாதிப்­புக்கள் அதி­க­ரித்து வரக்­கூ­டிய ‘ஹாட்ஸ்பாட்’ நிலை­மை­களில் வாழ்­கின்­றனர் என சமீ­பத்­திய உலக வங்கி அறிக்கை சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. நில­ந­டுக்கம் மற்றும் நிலப்­ப­கு­தி­களில் இருந்து வெகு தொலை­வி­லுள்ள நாடென இலங்கை நம்­பப்­பட்­டாலும் முழு இலங்கைத் தீவும் இந்­தியப் பெருங்­கடல் சுனா­மியால் மற்றும் பெரிய அள­வி­லான வெப்ப மண்­டல சூறா­வ­ளி­களால் அச்­சு­றுத்­தப்­ப­டக்­கூ­டி­ய­தாக காணப்­ப­டு­கின்­றன. அவ்­வா­றான சுனாமி அனர்த்தம் மீண்டும் ஏற்­ப­டு­மானால் 2004 ஆம் ஆண்­டைப்போல் ஒரு பேர­னர்த்­தத்­தையே சந்­திக்க நேரிடும். ஆனால், இவ்­வா­றான மிக அரி­தாக நிக­ழக்­கூ­டிய பாரிய தாக்­கத்தை விளை­விக்­கக்­கூ­டிய சுனாமி அனர்த்­தங்­களை விட நாளாந்த வாழ்வில் வெள்­ளங்கள், வறட்சி, நிலச்­ச­ரி­வுகள் மற்றும் சூறா­வ­ளிகள் வரு­டந்­தோறும் மிகப்­பெ­ரிய தாக்­கத்­தினை ஏற்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கின்­றன. இலங்கைத் தீவின் எந்த ஒரு நிலமும் இந்த மிகச்­சி­றிய அள­வி­லான கால­நிலை மாற்­றத்­தி­லி­ருந்தும் அனர்த்த நிலை­மை­யி­லி­ருந்தும் பாது­காப்­பாக இருப்­ப­தாகத் தோன்­ற­வில்லை. 2017இல் மாத்­திரம் உலகின் பல நாடு­களில்  அனர்த்­தங்­க­ளினால் ஏற்­பட்ட பாதிப்­புக்­களை மைய­மாக வைத்து ஜேர்மன் நிறு­வனம் கால­நிலை மாற்­றங்­க­ளினால் ஏற்­ப­டக்­கூ­டிய ஆபத்­துக்கள் தொடர்­பான உலக நாடு­களின் தர வரி­சை­யினை வெளி­யிட்­டுள்­ளது.  இத்­த­ர­வ­ரி­சையில் உல­க­ளா­விய ரீதியில் இலங்கை இரண்­டா­வது இடத்தை அடைந்­தி­ருப்­பது எதிர்­கா­லத்தில் இலங்கை பல அனர்த்­தங்­களை எதிர்­கொள்­ளக்­கூ­டிய ஆபத்தை மேலும் வலுப்­ப­டுத்­து­கி­றது.

Q மிக அண்­மித்த காலப்­ப­கு­தியில் ஏற்­பட்ட அனர்த்­தங்கள், அதற்கு முந்­திய காலங்­க­ளை­விட பாரிய பொரு­ளா­தார இழப்­பினை ஏற்­ப­டுத்தி வரு­வ­தாக கூறப்­ப­டு­கி­றதே. இது பற்றி உங்கள் கருத்து என்ன?

கடந்த பல தசாப்­தங்­க­ளாக உலகம் முழு­வதும் பேர­ழிவு நிகழ்­வுகள் பல சமூ­கங்­களை அழித்­தன. இயற்கை பேர­ழி­வுகள் கார­ண­மாக கடந்த இரண்டு தசாப்­தங்­க­ளுக்கு மேலாக 600,000 பேர் உயி­ரி­ழந்­தனர். 4.1 பில்­லியன் மக்கள் காய­ம­டைந்­தனர் அல்­லது வீடற்­ற­வர்கள் மற்றும் அவ­சர உதவி தேவைப்­பட்­ட­வர்­க­ளாக மாறினர். பொரு­ளா­தாரம் மற்றும் சமூக உட்­கட்­ட­மைப்­பு­களில் கணி­ச­மான முத­லீ­டுகள் பெரு­ம­ளவில் பேர­ழி­வு­களால் சேத­ம­டைந்­துள்­ளன என சமீ­பத்­திய அனர்த்த ஆய்­வுகள் காட்­டு­கின்­றன. 2017 ஆம் ஆண்டு மொத்த இயற்கை பேர­ழி­வுகள், இறப்­புக்கள் மற்றும் அனர்த்­தங்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் தொகை அதற்கு முந்­திய வரு­டங்­க­ளுடன் ஒப்­பிடும் போது சற்று குறை­வ­டைந்­தி­ருந்­தாலும் 2017 ஆம் ஆண்டு பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு அதி­க­மான பொரு­ளா­தார இழப்­புக்கள் ஏற்­பட்­டன. முந்­தைய பத்­தாண்­டு­களில் (2007–-2016) ஒப்­பி­டும்­போது அனர்த்­தங்­க­ளினால் ஏற்­பட்ட பொரு­ளா­தார இழப்­புக்கள் கிட்­டத்­தட்ட 50 வீதத்­தினால் அதி­க­ரித்­துள்­ளன.

Q இலங்­கையில் கடந்த சில ஆண்­டு­களில் ஏற்­பட்ட அனர்த்­தங்கள் பற்­றியும் அவற்­றினால் ஏற்­பட்ட பொரு­ளா­தார பாதிப்­புக்கள் பற்­றியும் குறிப்­பிட முடி­யுமா?

இலங்­கையில் 2017 ஆம் ஆண்டு மே மாதம் ஏற்­பட்ட வெள்ளம் மற்றும் நிலச்­ச­ரிவு 25 மாவட்­டங்­களில் 15 மாவட்­டங்­களை பாதித்­தன. அத்­துடன் 203 பேரை கொன்­ற­துடன் 96 பேர் காணாமல் போயி­ருந்­தனர். 9000 வீடுகள் அழிக்­கப்­பட்­டன. 75,000 மக்கள் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர். 2017 வெள்ளம் மற்றும் நிலச்­ச­ரி­வினால் ஏற்­பட்ட சேதங்கள் மற்றும் இழப்­புகள் விவ­சாயம், போக்­கு­வ­ரத்து, தொழில் மற்றும் வர்த்­தகம் போன்ற முக்­கிய துறை­களை பாதிப்­புக்குள்­ளாக்­கி­யது. இவ்­வி­ழப்­புக்­களின் பெறு­மதி இலங்கை நாண­யப்­பெ­று­ம­திப்­படி 70 பில்­லியன் ரூபா­க்­க­ளையும் தாண்­டி­விட்­ட­தாக இவ்­வ­னர்த்­தங்­களின் பின்னர் மேற்­கொள்­ளப்­பட்ட மதிப்­பீ­டுகள் குறிப்­பி­டு­கின்­றன. கடந்த 20 ஆண்­டு­களில் பேர­ழி­வுகள் கார­ண­மாக அதி­கப்­ப­டி­யான தாக்கம்  ஆசிய கண்­டத்­தி­லேயே ஏற்­பட்­டுள்­ளது. உல­கிலே மொத்­த­மாக பாதிக்­கப்­பட்ட மக்­களில் 85 வீதம் ஆசிய கண்­டத்தில் உள்­ளனர். அதேபோல் உல­கிலே ஏற்­பட்ட மொத்த இழப்­புக்­களில் 78வீத பொரு­ளா­தார பாதிப்­பையும் பேர­ழிவு நிகழ்­வு­களில் 62 வீதத்­தையும் மற்றும் 69 வீத இறப்பு எண்­ணிக்­கை­யையும் ஆசிய கண்­டமே பதிவு செய்­துள்­ளது.

2002ஆம் ஆண்­டி­லி­ருந்து அனர்த்­தங்­க­ளினால் ஏற்­பட்ட தர­வு­களின் அடிப்­ப­டையில் பார்க்­கும்­போது மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, கொழும்பு, கம்­பஹா ஆகிய மாவட்­டங்கள் வெள்­ளத்­தினால் அதி­க­மாக பாதிக்­கப்­பட்­டுள்­ளன. அதே­வேளை வரட்­சி­யினால் குரு­நாகல், ஹம்­பாந்­தோட்டை, புத்­தளம், அநு­ரா­த­புர மாவட்­டங்கள் அதி­க­மாக பாதிக்­கப்­பட்­டி­ருந்­தன. இதே போக்கு எதிர்­கா­லத்­திலும் காணப்­படும். கால­நிலை மாற்­றத்­தினால் கடந்த காலங்­க­ளை­விட எதிர்­வரும் வரு­டங்­களில் குறு­கிய காலப்­ப­கு­தியில் அதிக வரட்­சியும் மற்­றுமோர் குறு­கிய காலப்­ப­கு­தியில் – அத­ாவது பரு­வப்­பெ­யர்ச்சி காலப்­ப­கு­தியில் அதிக மழை­வீழ்ச்­சியும் ஒரே ஆண்டில் ஒரே பிர­தே­சத்தில் ஏற்­ப­டு­கின்­றன.

இவை தவிர சூறா­வளி, நிலச்­ச­ரிவு, அதிக வெப்ப அலைகள் என்­ப­னவும் ஒவ்­வொரு ஆண்டும் ஏற்­ப­டக்­கூ­டிய சந்­தர்ப்­பங்கள் அதி­க­ரித்துக் கொண்டே செல்­கின்­றன. இலங்கை தொடர்ந்தும் புதிய பொரு­ளா­தார அபி­வி­ருத்தி திட்­டங்­களை அறி­மு­கப்­ப­டுத்தி வரும் இந்­நி­லையில் குறிப்­பாக நகர்ப்­பு­றங்­களின் பொரு­ளா­தார, சமூக செயற்­பா­டுகள் அதி­க­ரிப்­ப­தனால் அனர்த்த ஆபத்­திற்கு இட்­டுச்­செல்­லக்­கூ­டிய செயற்­பா­டு­களில் பொது­மக்­களும் அரச தனியார் நிறு­வ­னங்­களும் ஈடு­ப­டு­வ­தனால் தொடர்ந்தும் கடந்த காலங்­க­ளை­விட எதிர்­கா­லத்தில் ஏற்­ப­டக்­கூ­டிய அனர்த்­தங்கள் அதிக பொரு­ளா­தார பாதிப்­புக்­களை ஏற்­ப­டுத்­தக்­கூடும்.

Q அனர்த்­தங்­க­ளினால் ஏற்­படும் பாதிப்­புக்­களை குறைப்­ப­திலும் அபி­வி­ருத்தி விட­யங்­களில் அனர்த்த ஆபத்தை குறைக்­கக்­கூ­டிய விட­யங்­களை உள்­வாங்­கு­வ­திலும் அரச மற்றும் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் வகி­பாகம் எவ்­வாறு காணப்­ப­டு­கி­றது?

இந்த தீவி­ர­மான கால­நிலை நிகழ்­வு­களை எதிர்த்து பிராந்­திய மற்றும் உல­க­ளா­விய அணு­கு­மு­றைகள் மற்றும் பல திட்­டங்கள் பிரே­ரிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. இலங்­கையில் தேசிய ரீதியில் இக்­கொள்­கை­க­ளுக்­க­மைய அனர்த்த முகா­மைத்­துவ அமைச்சின் கண்­கா­ணிப்பில் “பாது­காப்­பான இலங்கை” எனும் தொனிப்­பொ­ருளில் இலங்கை தேசத்­திற்­கான அனர்த்த முகா­மைத்­துவ திட்டம் 2013-–2018 மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது. சர்­வ­தேச அனர்த்த ஆபத்து குறைப்­பிற்­கான 2015-–2030 வரை­யான மூலோ­பா­யங்­களை வலி­யு­றுத்தும் அதே­வேளை, அதி­க­ரித்து வரும் பேர­ழிவு மற்றும் கால­நிலை அபா­யங்கள் பாதிக்­கப்­ப­டக்­கூ­டிய மக்கள் மீது ஒரு பெரிய தாக்­கத்தை ஏற்­ப­டுத்தி வரு­வதால் உள்ளூர் நட­வ­டிக்­கைகள் மிக முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றன. அனர்த்த ஆபத்து உணர்­தி­ற­னுள்ள அபி­வி­ருத்தி அணு­கு­முறை, அனர்த்­தங்­களை எதிர்­கொள்ளும் சமூக வலு­திறன் மற்றும் நிலை­யான அபி­வி­ருத்தி செயற்­பா­டு­களை உள்ளூர் மற்றும் தேசிய மட்­டங்­களில் கொள்கை வகுப்­பா­ளர்­களும் அரச, அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களும் முன்­னி­றுத்தி செயற்­ப­ட­வேண்டும். அனர்த்த ஆபத்து குறைப்பு நட­வ­டிக்­கை­களில் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளி­னதும் உறுப்­பி­னர்­க­ளி­னதும் பங்­க­ளிப்பு மிகவும் பின்­தங்­கிய நிலை­யி­லேயே உள்­ளன. குறிப்­பாக நகர, மாந­கர சபைகள் நாம் எதிர்­நோக்­கி­யி­ருக்கும் அனர்த்த அபாய அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு முன்­கூட்­டியே தேவை­யான ஆதா­ரங்­களை திரட்டி மக்­களை தயார்­ப­டுத்த முயற்­சிப்­ப­தில்லை. நாடெங்­கி­லு­முள்ள நகர மற்றும் மாந­கர கவுன்­சில்கள் கழிவு மேலாண்மை மற்றும் சுற்­றுச்­சூழல் பாது­காப்பு போன்ற பெரிய நெருக்­க­டிக்கு இட்­டுச்­செல்லும் நாளாந்த பிரச்­சி­னை­களைத் தீர்க்கும் போராட்­டத்தில் தமது காலத்­தையும் வளத்­தையும் செல­வ­ழிப்­பதால் அனர்த்த அபாய தயார்­ப­டுத்தல் செயற்­பா­டு­களில் தமது கவ­னத்தை குவிப்­பதில் பாரிய சிர­மங்­க­ளையும் வளப்­பற்­றாக்­கு­றை­க­ளையும் கொண்­டுள்­ளன.

இந்­தோ­னே­சி­யாவின் சுலா­வே­சியில் அண்­மையில் நில­ந­டுக்கம் மற்றும் சுனாமி ஆகி­யவை உலகின் அனர்த்­தங்­களை முன்­கூட்­டியே அறி­யக்­கூ­டிய, மக்­க­ளுக்கு அறி­விக்­கக்­கூ­டிய புது­மை­யான தொழில்­நுட்ப முறைகள் மற்றும் விரை­வான பதி­ல­ளிப்பு வியூ­கங்­க­ளுக்­கான தேவை­களை மீண்டும் நினை­வு­ப­டுத்­தி­யது. எல்லாத் துறை­க­ளிலும் எங்கள் வழக்­க­மான பணியின் ஒரு பகு­தி­யாக அனர்த்த ஆபத்து குறைப்பு நட­வ­டிக்­கை­களை ஒருங்­கி­ணைத்து  தனியார் மற்றும் சிவில் சமூக அமைப்பு முறை­களை ஒன்­றாக ஒருங்­கி­ணைக்க ஒரு பொறி­மு­றையை உரு­வாக்கி அனர்த்த முகா­மைத்­துவ குழுக்கள் பயிற்­சி­ய­ளிக்­கப்­ப­ட­வேண்டும்.

Q உல­க­ளா­விய அனர்த்த ஆபத்து குறைப்பு கொள்கை  தொடர்­பான முக்­கிய விட­யங்­களை கூற முடி­யுமா?

அதி­க­ரித்­து­வரும் சனத்­தொகை மற்றும் மக்­க­ளி­னது நகர வாழ்வை நோக்­கிய இடம்­பெ­யர்வும் வறுமை மற்றும் உணவுப் பாது­காப்­பின்­மையின் தொடர்ச்­சி­யான அதி­க­ரிப்­பி­னாலும் கால­நிலை மாற்­றத்தின் தாக்­கங்­க­ளுக்கு மிகவும் பாதிக்­கப்­படும் பகு­தி­களில் தெற்­கா­சிய நாடு­களே முன்­னணி வகிக்­கின்­றன. 2018 சர்­வ­தேச  அனர்த்த குறைப்பு  தினத்­திற்­கான வரி­சையில் ‘ பேர­ழி­வு­க­ளினால் ஏற்­படும் பொரு­ளா­தார இழப்­புக்கள்  பற்­றிய புதிய அறிக்­கை­யொன்று வெளி­யி­டப்­பட்­டது. 2015–-2030 உலக அனர்த்த குறைப்பு கட்­ட­மைப்பு ஏழு உலக இலக்­கு­க­ளையும் மற்றும் நான்கு முன்­னு­ரிமை நட­வ­டிக்­கை­க­ளையும் கொண்­டுள்­ளன. நான்கு முன்­னு­ரிமை நட­வ­டிக்­கை­களில் முத­லா­வது அனர்த்த  ஆபத்தை விளங்­கிக்­கொள்ளல், இரண்­டா­வது அனர்த்த ஆபத்து  குறைப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்­கான நிர்­வா­கத்தை வலுப்­ப­டுத்தல், மூன்­றா­வது அனர்த்த அபா­யத்தை குறைப்­பதில் முத­லீடு செய்தல், நாலா­வ­தாக அனர்த்­தங்­களை எதிர்­கொள்­வ­தற்­கான தயார்­நி­லை­களை மேம்­ப­டுத்­துதல் என்­பன உள்­ள­டங்கும்.

Q எதிர்­கா­லங்­களில் இலங்­கைத்­தீவு எதிர்­கொள்­ளக்­கூ­டிய அனர்த்த ஆபத்து நிலை­யினைப் பற்­றிய உங்கள் கருத்து என்ன?

வெள்ள அபா­யங்கள், கரை­யோரப் பகு­திகள், வறண்ட நிலங்கள் மற்றும் இதர உயர் இடர் பகு­தி­களை நாங்கள் ஆக்­கி­ர­மித்­துள்ளோம். அவை இயற்கை சம­நி­லை­களில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்தி அனர்த்த பாதிப்­புக்­களை அதி­க­ரிக்­கச்செய்கின்றது. இலங்­கையில் எமது செய்தி ஊட­கங்­களில் தின­சரி செய்தித் தலைப்­பு­களைப் பார்க்­கும்­போது இயற்கை அனர்த்­தங்கள் தவிர்ந்த ஏனைய அனர்த்­தங்­க­ளையும் நாம் மறக்க முடி­யாது. – தின­சரி ஒவ்­வொரு மணி நேரத்­திலும் சாலை விபத்­துக்கள், யானை­யினால் தாக்­கப்­படல், மற்றும் சிறு­நீ­ரக நோய்கள்  டெங்கு மற்றும் சூழல் மாச­டைதல் கார­ண­மாக ஏற்­படும் இறப்பு போன்­ற­வற்றை குறிப்­பிட முடியும். 2009இல் முடி­வ­டைந்த மூன்று தசாப்த கால யுத்தம் கார­ண­மாக ஏற்­பட்ட அழி­வு­களை விடவும் மேற்­கு­றிப்­பிட்ட அனர்த்­தங்­களால் ஏற்­படும் அழி­வுகள் அதி­க­ரித்­த­வண்­ண­முள்­ளன.

Q இன்­றைய தினம் இலங்­கையில் 2004ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தம் ஏற்­பட்ட நாளை ஞாப­கப்­ப­டுத்தும் அதே­வேளை, இலங்கை அரசு தேசிய பாது­காப்பு தின­மா­கவும் பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்­ளது. இதில் பொதுமக்களுக்கு ஞாப­க­மூட்­டப்­பட வேண்­டிய விடயம் என்ன?

தேசிய பாது­காப்பு தின­மா­னது டிசம்பர் 26 ஆம் திகதி இலங்கை உட்­பட 12 நாடு­களில் 200,000 க்கும் அதி­க­மான உயிர்­களைக் காவு­கொண்ட 2004 சுனாமி பேர­ழிவை நினை­வு­ப­டுத்­து­கி­றது. அதி­க­ரித்­து­வரும் பேர­ழிவு மற்றும் கால­நிலை அபா­யங்கள் ஆகி­ய­வற்­றிற்குத் தயார்­செய்ய இந்த நாட்­களை நினை­வு­ப­டுத்­து­வதன் மூலம் எதிர்­கால அனர்த்த பாதிப்­புக்­க­ளி­லி­ருந்து எம்மை தயார்­ப­டுத்தும் ஒரு சந்­தர்ப்­ப­மாக காணப்­ப­டு­கின்­றது. நாங்கள் அதிகம் பேசலாம், எழு­தலாம், விவாதம் செய்­யலாம். ஆனாலும் இறு­தி­யாக செயற்­பாடே விளை­வு­களை தரும். ஆகக்­கு­றைந்­தது நமது சமூ­க-­சுற்­றுச்­சூ­ழலில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதற்கு முன்னர் அச்செயற்பாடு அனர்த்த ஆபத்தை அதிகரிக்குமா என்பதை சிந்தித்து செயற்படவேண்டும்.

அனர்த்தம் மற்றும் காலநிலை அபாய உணர்வோடு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வது அதிகாரிகளுக்கு மட்டுமல்ல மக்களுக்கும் மிக முக்கியமாகும். இவ்வாறு மக்களும் அரச அதிகாரிகளும் எதிர்கால அனர்த்த ஆபத்தினை உணர்ந்து தமது அபிவிருத்தி செயற்பாடுகளை செய்யும்போது எமது சமூகங்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை குறைக்கின்றன. எங்கள் குழந்தைகள் மற்றும் அடுத்த தலைமுறை இளைஞர்களின் வருங்காலத்திற்காக வாழும் நகரங்களையும் கிராமங்களையும் நாம் இன்னும் காணவில்லை.

எம்மில் புரையோடிப்போயிருக்கும் மோசமான அரசியல் கலாசாரம் மற்றும் ஒரு பொறுப்பான குடிமகனாக நாங்கள் சரியான நேரத்தில் சரியான கொள்கையை சரியான பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான எங்கள் பொறுப்பற்ற தன்மைக்கும் நாங்களே பொறுப்புக்கூறவேண்டும். எங்கள் சொந்த வீடுகளிலிருந்தும், எங்கள் குழந்தைகளிடமிருந்தும் எங்கள் பாடசாலைகள், அலுவலகங்களிலிருந்தும் சிறிய செயற்பாடாக ஆரம்பிக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். எமது செயற்பாடுகளில் நாம் தாமதிக்கும்போது இன்னும் பல அழிவுகளை சந்திக்கவேண்டியேற்படும். அனர்த்தங்களின் பின்னர் கைவிரிப்பதை விட அவை ஏற்பட முன்னர் சற்று சிந்தித்து சிறு செயல்பாடுகளிலாவது ஒவ்வொருவரும் கவனம் செலுத்த வேண்டும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.